tag:blogger.com,1999:blog-53253512988997650012024-03-05T03:34:34.979-08:00கீரனூர் ஜாகிர்ராஜாஒடுக்ககப்பட்ட மானுடத்தின் வலியும் வேதனையும் என் எழுத்துக்களாய்...கீரனூர் ஜாகிர்ராஜாhttp://www.blogger.com/profile/16821172975494211862noreply@blogger.comBlogger52125tag:blogger.com,1999:blog-5325351298899765001.post-5556952907473100862013-03-28T03:48:00.000-07:002013-03-28T03:48:08.063-07:00மகேந்திரன் உருவாக்கிய மௌனம்<div style="text-align: justify;">
<br />மகேந்திரனை இன்றளவும் நினைத்துப் பார்க்கத் தக்க நல்ல விளைவுகள் சிலவற்றை அவர் தமிழ் சினிமாவிற்குள் நிகழ்த்திக் காட்டியிருப்பது என்னை இந்தத் தொடரில் அவருடைய Ôசினிமாவும் நானும்Õ புத்தகம் குறித்த அபிப்ராயங்களை எழுதத் தூண்டியது. மகேந்திரனுக்கு சற்று முன்னர் தமிழில் பாரதிராஜாவின் வருகை சில நல்ல விளைவுகளை உருவாக்கியிருந்ததை ஒப்புக் கொள்ள வேண்டும். புதுமைகள் எல்லாமும் நீர்க்குமிழ்களைப் போல ஒருநொடியில் உருவாகிக் கலைந்து போவன அல்ல. காலம் தான் எது புதுமை என்பதைத் தீர்மானிக்கிறது. சினிமாவைப் போன்ற கலை வடிவங்களில் நேற்றைக்கான புதுமைகளை, நாளைக்கு கடந்து செல்லும் தருணங்கள் வாய்த்தபடி இருக்க வேண்டும். அவ்வாறு சம்பவிக்கிற போது மட்டுமே கலை வடிவம் எதுவாயினும் உயிர்ப்புடன் இருக்க முடியும். மகேந்திரன் இவ்வாறு சிலவற்றை அனாயசமாகக் கடந்து வந்தவர். அவரால் தமிழ் சினிமா சில அங்குலங்களேனும் நகர்ந்திருக்கிறது. <br /> பாரதிராஜா ஒரு ஆரவாரமான தெற்கத்தி கிராமத்தை தமிழ்த்திரையில் காட்சிப்படுத்தினார். குறிப்பிட்ட சமூகம் மொழி கலாச்சாரக் கூறுகள், விதவிதமான மானுடரூபங்கள், முரண்கள், நேசம், காதல் என தனது பிந்தைய படங்களில் இன வரைவியல் ஒன்றை காட்சி மொழியில் எழுதிக்காட்டும் நுட்பம் அவருக்கு கைகூடி வந்தது. அவரைப் போன்ற ஒருவர் செய்யவே கூடாத தவறுகள் சிலவற்றையும் பின்னாட்களில் அவர் செய்தார். அது இன்னொரு பக்கம். <br /> மகேந்திரனின் கிராமங்களில் நமக்குத் திகட்டுகிற மாதிரி மண்வாசனை வீசக்காணோம். அவர் தம் படைப்புகளில் ஏதாவதொரு சமூகத்தை மையப்படுத்துகிற கதைக்களங்களையும் அமைப்பதில்லை. (சாசனம் உள்ளிட்ட சில படங்கள் விதிவிலக்கு) எப்படி யோசித்தாலும் எனக்கு மகேந்திரன் ஒரு பெரிய மௌனியாகவே புலப்படுகிறார். திரையில் அவர் உருவாக்கும் மௌனம் அசாத்தியமானது. காட்சி தரும் ஆழ்ந்த நிசப்தத்தில் கதாபாத்திரங்களை உடல்மொழியால் பார்வையாளர்களுடன் உரையாட வைக்கிறார். இளையராஜாவின் வாத்தியங்கள் கூட அவருடன் சேர்ந்து ஒரு வினோதமௌனத்தைக் கடைப்பிடித்தது வியக்கத்தக்க விஷயம். தமிழ் சினிமாவில் சம்பவித்த இந்த மௌனம் தான், முக்கியத்துவமானது. ஸ்ரீதர், பாலசந்தர் போன்றவர்களையும் இதற்கு முன் உதாரணங்களாக சொல்ல முடியும் என்றாலும் மகேந்திரன் உருவாக்கிய விசேஷமான மௌனத்தை நாம் வியந்துதான் சுட்ட முடியும். முள்ளும் மலரும், நெஞ்சத்தை கிள்ளாதே, உதிரிப்பூக்கள், ஜானி, பூட்டாத பூட்டுகள், கைகொடுக்கும் கை என்று நிறைய உதாரணங்களை அடுக்கிக் கொண்டே செல்லலாம். இந்த மௌனம்தான் பாலுமகேந்திரா, மணிரத்னம் என வேறுவேறு தருணங்களில் தமிழ் சினிமாவில் நீட்சி கண்டது.<br /> ஒரு காலத்தில் வாத்தியங்கள் இசைக்காத, வசனங்களற்ற காட்சிகளில் பார்வையாளர்கள் உடனடியாக எதிர்வினையாற்றுவார்கள். உய்ய்... என்ற விசில் ஒளிகள் கிளம்பும், கெட்ட வார்த்தைகள் நாராசமாக வெளியேறும். மகேந்திரனின் காட்சிமொழிதான் முதல் முதலாக அவனைப் போன்ற சகிப்புத் தன்மையற்ற பார்வையாளனை மௌனத்தை அங்கீகரிக்கத் தயார் செய்தது. இங்கிருந்துதான் மகேந்திரன் என்னும் படைப்பாளியை நாம் உரசிப் பார்க்க வேண்டும். குறிப்பிட்ட அந்த விசேஷமான மௌனத்தை திரைமொழியில் பரீட்சார்த்தம் செய்து பார்க்க மகேந்திரன் கடந்து வந்திருக்கிற தொலைவும், கொடுத்திருக்கிற விலையும் அதிகம். <br /> மகேந்திரன் எம்.ஜி.ஆரின் கண்டுபிடிப்பு. அவரால் திரைத்துறைக்கு அழைக்கப்பட்டு பல படங்களுக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதிப் பயிற்சி பெற்றவர். நான் சிறு வயதில் விரும்பிப் பார்த்த பல ஜனரஞ்சகப் படங்கள் மகேந்திரனால் எழுதப்பட்டவை என்பதைப் பின்னாளில் அறிந்தபோது ஆச்சரியம் கொண்டேன். உதிரிப்பூக்கள், முள்ளும் மலரும் தந்த மகேந்திரனா, இதையெல்லாம் எழுதியது என்றும் திகைத்துப் போயிருக்கிறேன். தங்கப் பதக்கம், நிறைகுடம், மோகம் முப்பது வருஷம், ஆடு புலி ஆட்டம், பகலில் ஒரு இரவு, கங்கா இப்படிப் பல படங்கள். வாழ்க்கை குறித்த கவலைகள் ஏதுமின்றி சுதந்திரமாகத் திரிந்த காலத்தில் விமர்சனப் பார்வை துளியும் இல்லாமல் நான் பார்த்து அனுபவித்த படங்கள் இவை. இவற்றையும் வெறும் பொழுதுபோக்குப் படங்கள் என முத்திரையிட்டுப் புறக்கணித்து விட இயலாத அளவிற்கு ஒவ்வொன்றும் சில விசேஷ அம்சங்கள் கொண்டவையாக இருந்ததையும் நினைத்துக் கொள்கிறேன். ஆனால் இந்த அனுபவங்களைக் குறித்து மகேந்திரன் இப்படி எழுதுகிறார். ÔÔபடிக்கிற காலத்தில் தமிழ் சினிமாவில் நான் கண்டு வெறுத்த குறைகளையே, இப்போது நானும் செய்து ஜெயித்துக் கொண்டிருக்கிறேன் என்ற குற்ற உணர்வு என்னை சவுக்கால் அடித்துக் கொண்டேயிருந்தது. துக்ளக் பத்திரிகையில் சினிமா விமர்சனம் எழுதி வந்த நான் தமிழ்ப்படங்களை எப்படியெல்லாம் விமர்சித்திருக்கிறேன்? நானா இப்போது அதே தவறுகளைச் செய்கிறேன்?ÕÕ<br />இதுபோன்ற சுயவிமர்சனங்களிலிருந்துதான் மகேந்திரன் இந்தப் புத்தகத்தை உருவாக்குகிறார். அவருடைய ஆளுமையில் என்னை வெகுவாகக் கவர்ந்த அம்சம் அவர் இலக்கியங்களைப் படமாக்கிய விதம். குறிப்பாக இலக்கியப் படைப்பொன்றை எவ்வித நெருடலும் இன்றி அவர் தன் சுயவிருப்பத்திற்கு மாற்றி திரைக்கதையாக்கும் வித்தை. உமா சந்திரனின் முள்ளும் மலரும் நாவலில் இருந்து அவர் இந்த உத்தியைக் கையாளத் தொடங்கியிருக்கிறார். தொடர்ந்து புதுமைப்பித்தனின் சிற்றன்னை சிறுகதை, சிவசங்கரியின் நண்டு, பொன்னீலனின் உறவுகள், இப்படி சில நாவல்கள்; கடைசியாக கந்தர்வனின் சாசனம் சிறுகதை. இலக்கியங்களைப் படமாக்குவதற்கான உந்துதலை அவர் சத்யஜித்ரேயிடம் இருந்து பெற்றுள்ளதாக நான் கருதுகிறேன். ரே இயக்கிய புகழ் பெற்ற திரைப்படங்களான பதேர் பாஞ்சாலி, அபராஜிதா, அபுசன்சார் மூன்றும் வங்கமொழி எழுத்தாளர் பிபூதிபூஷன் எழுதிய நாவல்களை அடிப்படையாகக்கொண்டு திரைக்கதையாக்கப்பட்டவை என்பதையும் இவ்விடத்தில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.<br />உமாசந்திரனின் முள்ளும் மலரும் நாவலை வாசித்துக் கொண்டிருந்தபோது காளி கதாபாத்திரத்தின் கை முறிந்து போகும் அத்தியாயத்துடன் மேற்கொண்டு வாசிக்காமல் நாவலை மூடி வைத்துவிட்டதாக மகேந்திரன் குறிப்பிடுவதை கவனத்தில் கொள்ளலாம். முள்ளும் மலரும் நாவலை வாசித்தவர்களும், முள்ளும் மலரும் படம் பார்த்தவர்களும் நம்மில் இருக்கிறார்கள். அந்த நாவல் வெகுஜனதளத்தோடு நின்றுபோன ஒரு பிரதி. அது தீவிரவாசகர்களை வந்து அடையவே இல்லை. இரண்டையுமே அணுகிய ஒரு சிலர் உண்டு. மகேந்திரன் பல விஷயங்¢களை இவ்வாறு பரீட்சார்த்தம் செய்து பார்த்திருப்பதை இரண்டையுமே அணுகியவர்கள் அறிந்திருக்கக்கூடும். ஒரு வாசகனாக திருப்தியோ, அதிருப்தியோ கொண்ட மனம் பார்வையாளனாக மிகுந்த திருப்தியை மட்டுமே கொண்டிருக்க வேண்டும் அதுதான் கதையை செதுக்கி செதுக்கி காட்சிமொழியாக்கிய மகேந்திரனின் ஆளுமை.<br /> பலநூறு பக்கங்கள் கொண்ட ஒரு நாவலை வாசித்துக் கொண்டிருக்கும்போது 50 பக்கத்திலேயே ஒரு இயக்குனருக்குத் தேவைப்படும் முக்கிய அம்சம் கிடைத்துவிடும். அது போதும் திரைக்கதைக்கு... என்று சொல்லும் மகேந்திரனை நம்மில் பலரும் வியந்து பார்க்க வாய்ப்பிருக்கிறது. <br />புதுமைப்பித்தனின் சிற்றன்னையை மகேந்திரன் கையாண்ட விதத்தைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். அவர் பள்ளி இறுதி வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது வாசித்த அந்தக் கதையை ÔÔஅப்போதே தூக்கிப் போட்டு விட்டேன் ஆனால் மனதிலிருந்து அல்லÕÕ என்று சொல்லுமிடத்தில் இருந்து நாம் உதிரிப் பூக்கள் என்னும் உலகத்தரத்திற்கு நிகரான ஒரு தமிழ்த்திரைப்பட உருவாக்கத்தை அசைபோட்டுப் பார்க்க வேண்டும். ÔÔகுழந்தைகள் ராஜா, குஞ்சு இருவரையும் நான் மனதால் பார்த்துக் கொண்டேயிருந்தேன். அவர்கள் எனது அருகிலேயே எப்போதும் இருந்தார்கள்ÕÕ என்று தொடர்ந்து சொல்கிறார் மகேந்திரன். எப்படி சார் முடியும் உங்களால்... அந்தக் குழந்தைகள் தானே உதிரிப்பூக்கள்? என்று நாம் அவரை திருப்பிக் கேட்கலாம்.<br /> சிற்றன்னை கதையில் குழந்தைகளின் தாய் இறந்துவிட்டாள் என்ற செய்தியை மேலும் வளர்த்து அவள் எப்படி இறந்தாள் என்பது மட்டுமின்றி அவளின் தங்கை, தந்தை, என உபகதாபாத்திரங்களை சிருஷ்டித்தது மட்டுமே மகேந்திரன் உருவாக்கிய திரைக்கதையின் சிறப்பு அல்ல. சிற்றன்னையில் சித்தரிப்புப் பெற்ற கல்லூரிப் பேராசிரியரான சுந்தர வடிவேலு என்னும் நேர்மையான கதாபாத்திரத்தை எதிர்மறையாக உருமாற்றியதுதான் திரைக்கதையில் நிகழ்த்திய உச்சபட்ச செயல்பாடு. இதற்கு மிகுந்த துணிச்சல் வேண்டும்.<br />மகேந்திரன் ஏற்கெனவே வரையப்பட்ட சித்திரத்தின் ஒரு பக்கத்தை கலைத்து அதை வேறொரு புதிய சித்திரமாக மாற்றுகிறார். ஏற்கெனவே இருந்த சித்திரத்தை வரைந்தவர் தமிழ் இலக்கிய உலகின் ஒரு குறியீடாக மதிக்கப்பட்டவர். புதுமைப்பித்தன் உயிருடன் இருந்திருந்தால் இந்த மாற்றத்திற்கு சம்மதித்திருப்பாரா என்றெல்லாம் கேள்விகள் எழுப்ப இயலாத அளவிற்கு கால ஓட்டத்தில் நெடுந்தூரம் கடந்து வந்தாயிற்று. கிட்டத்தட்ட உதிரிப்பூக்களும் கூட இன்றைக்கு தமிழ் சினிமாவின் ஒரு குறியீடாக மாறிவிட்டது.<br /> ÔÔமுள்ளும் மலரும் படப்பிடிப்பு முடிந்தபிறகு மூடி வைத்த இடத்திலிருந்து உமா சந்திரனின் நாவலை வாசிக்கத் தொடங்கினேன். அதிர்ச்சியாக இருந்ததுÕÕ என்கிறார் இந்நூலின் ஒரு இடத்தில் மகேந்திரன். ஆக அவர் வாசித்தவரைக்குமான நாவலை கணிசமான அளவிற்கு மாற்றியும், நிறைய சேர்த்தும், திரைக்கதையாக்கியது புலப்படுகிறது. நான் படம் பார்த்துவிட்டு நாவலையும் வாசித்தவன் என்கிற முறையில் மகேந்திரனின் கவர்ந்து கொள்ளும் திறனை, காட்சி ஊடகத்திற்கேற்ப வளைத்து, நௌ¤த்து நீக்கிச் சேர்க்கிற உத்திகளை எண்ணி வியக்கத்தான் முடிகிறது. <br /> மகேந்திரனின் இந்தப் புத்தகம் ஒரு கலைஞனின் தன் வரலாறாகவும் சுவாரஸ்யமான சம்பவங்களைக் கொண்ட விறுவிறுப்பான திரைக்கதையைப் போலவும் அமைந்திருக்கிறது. துக்ளக் இதழில் மகேந்திரன் பணியாற்றிய சந்தர்ப்பமொன்றில் ஜிமிஜிஙிமிஜிஷி என்கிற ஆங்கில மாத இதழில் யிளிபிழிகீகிசீழிணி என்ற ஹாலிவுட் நடிகர் போலீஸ் உடையில் துப்பாக்கி ஏந்தி குதிரையில் உட்கார்ந்திருக்கும் படத்தைப் பார்க்கிறார். அந்த நடிகரின் ஒரு கண் கருப்புபட்டையால் மூடப்பட்டிருக்கிறது. அந்த யிளிபிழிகீகிசீழிணி தான் மகேந்திரன் 1970களில் உருவாக்கிய புகழ் பெற்ற கதாபாத்திரமான எஸ்.பி.சௌத்ரிக்கு (தங்கப்பதக்கம்) உந்துதல்.<br />ÔÔஎதிர்பாராத தற்செயல் நிகழ்ச்சிகள்தான் என் வாழ்வில் நான் பயணிக்கும் பாதையை தீர்மானித்திருக்கின்றனÕÕ என்னும் வரிகளை அதற்குப் பொருத்தமான பல சம்பவங்களைக் கூறி ஒரு சுலோகம் போல உச்சரிக்கிறார் மகேந்திரன். ஏற்கெனவே கதை சொல்லி முடிவாகியிருந்த நெஞ்சத்தைக் கிள்ளாதே படத்திற்கு புதுமுகங்களைத் தேர்வு செய்யும் பொருட்டு மும்பைக்குச் சென்று கடற்கரையையட்டிய விடுதியில் அறை எடுத்துத் தங்கிய மகேந்திரன், நிறைய புதுமுகங்களைப் பார்த்து சலித்து அன்றைய இரவை சிந்தனையுடன் களிக்க வேண்டியதாகிறது. மறுநாள் அதிகாலை எழுந்து விடுதி ஜன்னல்கதவுகளைத் திறக்கிறார். ஒரு யுவதி ஜிஸிகிசிரி ஷிஹிமிஜில் கடல் அலைகளின் ஓரமாய் ஓடுகிற காட்சி அவர் கண்களுக்குப் படுகிறது.ÔÔஇன்று தன் உடல் ஆரோக்கியத்திற்காக இப்படி ஓடுகிற பெண் திருமணத்திற்கு பின் வாழ்க்கை தரும் நிர்ப்பந்தங்களின் காரணமாக எதற்கெல்லாம் ஓட வேண்டியிருக்கும்?ÕÕ என்று பளீரென ஒரு மின்னல் கீற்று அவர் மனதில் வெட்டுகிறது. நெஞ்சத்தை கிள்ளாதே கதையும் அந்தநேரத்தில் உருவாகிறது. <br /> ஒளிப்பதிவாளருக்கு உதவியாளராக சுகாசினி வேலை செய்து கொண்டிருந்தபோதுதான் அவரை நடிகையாக மகேந்திரனால் பார்க்க முடிந்திருக்கிறது. அதாவது அசோக் குமாருக்கு உதவியாளராக இருந்த சுகாசினியைத் தான் அவர் நெஞ்சத்தைக் கிள்ளாதே படத்தில் நாயகியாக அறிமுகம் செய்கிறார். இவ்வாறு அவருடைய திரைவாழ்வில் நிகழ்ந்த பல வினோதமான சம்பவங்களை இந்நூல் நெடுகிலும் அவர் சொல்லிப் பார்க்கிறார். வணிக இதழ் ஒன்றுக்கு அவர் அளித்த நேர்காணலில், ÔÔஇந்த டூயட் பாடல்களை தூக்கி எறிந்தாலே சினிமாவில் நல்ல மாற்றம் வரும்ÕÕ என்கிறார். பாடல்காட்சிகளை அவர் மிகையின்றி நேர்த்தியாகப் படமாக்கியுள்ள விதத்தை நாம் இந்த இடத்தில் அசை போட்டுப் பார்க்கிறோம். <br />எல்லாவற்றிற்கும் மேலாக மகேந்திரன் உதவி இயக்குனர்களுக்கு சொல்லும் ஒரு ஆலோசனை என்னை ரொம்பவும் சிந்திக்க வைத்தது. ÔÔஒரு வேலையைத் தேடிக் கொள்ளுங்கள். பசியில்லாமல் சென்று வாய்ப்புக் கேளுங்கள். அது ஆரோக்கியமாக இருக்கும். தயக்கமோ, கூச்சமோ இருக்காது. வாய்ப்புக் கிடைக்காவிட்டாலும் சோர்ந்து போகமாட்டீர்கள் இன்னொருவரைத் தேடி கம்பீரமாகச் செல்வீர்கள்ÕÕ வாழ்க்கையைப் பணயம் வைத்து சினிமாவில் போராடும் இளைஞர்கள் இந்த வரிகளை மனதில் இருத்திக் கொள்ளலாம்.<br /> மகேந்திரனை ஒரு விரிவான நேர்காணல் எடுக்கத்தான் நான் திட்டமிட்டிருந்தேன். அதற்கான அவகாசம் இல்லாமல் நாட்கள் கடந்து கொண்டே இருந்தன. எனவே இத்தொடரில் எழுதி அந்த மனக்குறையை சமன் செய்து கொண்டேன்.<br />¥ பொன்னியின் செல்வனை படமாக்கத் தமிழில் எவ்வளவோ முயற்சிகள் நடந்து முடியாமல் போனது. எம்ஜிஆருக்காக நீங்கள் எழுதிய பொன்னியின் செல்வன் திரைக்கதைப் பிரதி இன்னும் உங்களிடம் உள்ளதா?<br />¥ பூட்டாத பூட்டுக்கள் தோல்வியடைந்தபோது ÔÔவாழ்வின் அருவருப்பான பகுதிகளைக் கிளறிப்பார்ப்பது கலைஞனின் செயல் அல்லÕÕ என்று புரிந்து கொண்டதாக சொல்லியிருக்கிறீர்கள். இதில் எந்தளவிற்கு நியாயம் இருக்கிறது?<br />¥ குறைமாத குழந்தையாய் ஏழு மாதத்தில் பிறந்த உங்களைத் தன் அடிவயிற்று கதகதப்பில் காப்பாற்றிய டாக்டர் சாராம்மாவின் புகைப்படத்தை தேடிக் கொண்டிருந்தீர்களே, கிடைத்ததா?<br /> ¥ ஒரு திரைக்கலைஞனின் வாழ்க்கையில் ஏற்ற இறக்கங்கள் சகஜம். நுட்பமான படைப்புகளைத் தந்து தமிழ் சினிமாவிற்கு மாற்று அடையாளத்தை உருவாக்கிய உங்களால் இடையில் ஏற்பட்ட சரிவிலிருந்து ஏன் கடைசிவரை மீள முடியவில்லை? <br />இது போன்ற சில எளிய கேள்விகள் என்னிடம் மீந்து இருக்கின்றன. மகேந்திரன் என் இருதயத்திற்கு மிக மிக நெருக்கமானவர். எப்போது வேண்டுமானாலும் நான் அவரைப் பார்க்கலாம். மகேந்திரனின் உபசரிக்கும் பண்பும், உரையாடும் தோரணைகளும் (அவருடைய ஓவியத்திறன் உட்பட) விசேஷமாக குறிப்பிட்டு சொல்லத்தக்கவை. இப்போது வாய்ப்பில்லை என்றாலும் இன்னொரு சந்தர்ப்பத்தில் அந்த கம்பீரத்தைக் குறித்தும் கொஞ்சம் எழுத வேண்டும்.<br /></div>
கீரனூர் ஜாகிர்ராஜாhttp://www.blogger.com/profile/16821172975494211862noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-5325351298899765001.post-68727075327307258942013-03-28T03:46:00.001-07:002013-03-28T03:46:12.875-07:00ஜின்னா என்கிற இந்தியன்<div style="text-align: justify;">
<br />ஜின்னாவின் டைரி என்றொரு நாவலை நான் எழுதத் தொடங்கி, அதற்கான விளம்பர அறிவிப்பு பத்திரிகையில் வெளிவந்த போது, எனது நண்பர்களில் சிலர் தலைப்பு பயங்கரமாக இருக்கிறது ஜாகிர்ÕÕ என்றனர். உண்மையில் நான் எழுத முயற்சித்தது நண்பர்கள் கருதிக் கொண்டது போல ஒரு அரசியல் வரலாற்று நாவலை அல்ல. ஆனாலும் ஜின்னா என்னும் பெயர் அவர்களுக்கு அப்படியான யூகத்தைத் தந்திருந்ததில் வியப்பதற்கு ஏதுமில்லைதான். <br /> என் பள்ளிப் பிராயத்தில் இந்திய வரலாற்றின் மேல் எனக்கு மிகப் பெரிய ஈர்ப்பு ஏற்பட்டிருந்தது. என் கல்வியையும் வரலாறு சார்ந்ததாக உருவாக்¢கிக் கொண்டு, அதைக் குறித்த தேடல்களுடனேயே பயணித்திருப்பேனேயானால் ஒரு வேளை என் தலைவிதி வேறுவிதமாக மாறியிருக்கக்கூடும். ஆனாலும் இன்றைய என் நிலையில் பெருமளவு அதிருப்தி இல்லை. நான் எதை நினைத்தேனோ அதுவாகவே ஆகியிருக்கிறேன்.<br /> 1980களில் பள்ளிக்கூட நாட்களில் என் தாத்தா தன் தவச்சாலையான எங்கள் வீட்டு மாடியில் அமர்ந்து கொண்டு முகமது அலி ஜின்னா என்னும் பெயரைத் தனது சக நண்பர்களுடனான உரையாடல்களின் வழியே அடிக்கடி உச்சரிக்கக் கேட்டிருக்கிறேன். ஜின்னாவைக் குறித்த சில ஆங்கிலப் புத்தகங்களையும் அவர் புரட்டிக் கொண்டிருந்த நினைவு இருக்கிறது. எனக்கு அப்போது ஜின்னாவைக் குறித்த எவ்விதப் புரிதலும் கிடையாது. அதிகபட்சமாக அது ஒரு இஸ்லாமியப் பெயர் என்பதைத் தவிர்த்து. என் பாடப் புத்தகங்களிலும் ஜின்னாவைக் குறித்த பதிவுகள் இருந்ததில்லை. இந்திய வரலாறு ஒரு மறைக்கப்பட்ட, திரிக்கப்பட்ட வரலாறு என்பதை என் வாசிப்பனுபவங்களின் வழியாக வெகுவாகப் பின்னால் நான் அறிந்துகொண்டு, அதிர்ச்சியும் கலவரமும் அடைந்திருக்கிறேன். வரலாற்றைக் கூட மறைக்க முடியும், அல்லது எழுதப்படுகின்ற வரலாற்றை சிலர் தங்களுக்குச் சாதகமாக எழுதிக் கொள்ள முடியும் என்பதே ஒரு இந்தியனாக நான் அறிந்து கொண்ட முதல் பயங்கரவாதம். இந்த அனுபவம் தந்த பேரதிர்ச்சியிலிருந்து நான் விடுபடுவதற்கு வெகுகாலம் பிடித்தது. பிறகு வரலாறு என்பதே ஒரு புளுகு மூட்டை, அதிகார வர்க்கங்களைத் தவிர்த்துவிட்டு மக்களால் எழுதப்படுகின்ற எதிர்வரலாறு, மாற்று வரலாறே நிஜமான வரலாறு என்பதை எளிதாகப் புரிந்து கொண்டேன். இப்போது அதிர்ச்சிகளும் பயங்கரங்களும் என்னிலிருந்து விடைபெற்றிருந்தன. எய்ட் இந்தியாவில் வேலைபார்த்து, கோபாலபுரத்தில் தங்கியிருந்த 2008ஆம் ஆண்டின் இளவேனிற்கால நாளன்றில் அகல் பதிப்பகம் பஷீர் அலுவலகத்தில் இந்த மாமனிதர் ஜின்னா புத்தகத்தைப் பார்த்தேன். திருநெல்வேலியைச் சேர்ந்த வழக்கறிஞரும், மார்க்சிய சிந்தனையாளருமான இரா.சி. தங்கசாமி என்பவர் எழுதியிருந்தார். அட்டை உள்ளிட்ட புறவடிவ வேலைப்பாடுகள் என்னை ஈர்க்காவிட்டாலும் உள்ளடக்கம் செறிவாக இருப்பதைப் புரட்டிப் பார்க்கையில் உணர்ந்து பஷீரிடம் கேட்டு புத்தகத்தைப் பெற்றுக் கொண்டேன்.<br />பிறகு அவ்வப்பொழுது அந்தப் புத்தகத்தை எடுப்பதும் தீவிரமாக எதையோ தேடுவதும் அடிக்கோடுகள் இடுவதுமாக நாட்கள் கடந்தன. <br /> ஜின்னாவின் இளமைப் பருவம் முதல், அவருடைய இறுதிநாட்கள் வரை சுமார் 15 அத்தியாயங்களாகப் பிரிக்கப்பட்டு ஆண்டு, நாள் உள்ளிட்ட ஆதார சுருதிகளுடன் எளிய மொழிநடையில் எழுதப்பட்டுள்ளது இந்த புத்தகத்தின் சிறப்பம்சமாக இருக்கிறது. ஜின்னாவின் கல்வி, வழக்கறிஞர் பணி, அரசியல் பிரவேசம், மணவாழ்க்கை, தேசப் பிரிவினையில் ஜின்னாவின் பாத்திரம் என அடுக்கடுக்காகப் பிரித்து எழுதப்பட்டிருந்தாலும் ஒட்டுமொத்த வாசிப்பில் எனக்கு இது காந்தி க்ஷிs ஜின்னா என்கிற இரு பெரும் தலைவர்களின் கருத்து மோதல்களையே மைய இழையாகக் கொண்டு பின்னப் பட்டிருப்பதாகத் தோன்றியது. <br />ÔÔமுதலில் நான் ஒரு இந்து. எனவே நான் ஒரு இந்தியன் என காந்தி கூறியபோது முதலில் நான் ஒரு இந்தியன் அதன் பிறகுதான் ஒரு முஸ்லிம் என தெளிவாகக் கூறிய ஜின்னா, அந்த வாக்கியத்தை தன் வாழ்வின் பல்வேறு சந்தர்ப்பங்களிலும் நிரூபணம் செய்து கொண்டேயிருந்திருக்கிறார். ஏனெனில் அவர் பிற இந்தியத் தலைவர்களைப் போல காந்தியால் ஆகர்ஷிக்கப்பட்டவரல்லர். 17 வயதிலேயே தாதாபாய் நவ்ரோஜியின் அரசியல் பள்ளியில் இணைந்து அவருடைய வழிகாட்டலின் மூலம் அரசியலில் பிரவேசித்தவர்.<br /> ஜின்னாவின் விசேஷகுணம் எனப் பிறர் கொண்டாடத்தக்க அளவிலிருந்தது அவருடைய கறாரான மதச்சார்பற்ற தன்மைதான் என்று நான் கருதுகிறேன். 1906இல் அகில இந்திய முஸ்லிம் லீக் தொடங்கப்பட்டபோது அதை மதநிறுவனம் என்று விமர்சித்த ஜின்னா லீக்கில் இணைவதற்கு பதிலாக காங்கிரஸில் இணைந்ததும், இஸ்லாமியர்களுக்கு தலைமை தாங்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டபோது தாட்சண்யம் ஏதுமின்றி நிராகரித்து நான் முஸ்லிம்களின் தலைவனல்ல இந்தியாவின் தேசியத் தலைவன். முஸ்லிம்களுக்காக மட்டும் நான் செயல்பட முடியாது என்று கர்ஜித்தவர்.<br /> தனிப்பட்ட வாழ்க்கையிலும் ஜின்னா இந்த கறாரான போக்கைக் கடைப்பிடித்தார் என்று புரிந்து கொள்ள முடிகிறது. அவருடைய நெருங்கிய நட்பு வட்டத்திலிருந்தவர்கள் எல்லோரும் இஸ்லாமியரல்லாதவர்களே. தாடி வைக்காமல், தொப்பி அணியாமல், ரமலான் காலத்தில் விரதம் மேற்கொள்ளாமல் விஸ்கியும், சிகரெட்டும் கையுமாக இருந்து மதத்தின் சகல சம்பிரதாயங்களையும் தவிர்த்த காரணத்தால் ஜின்னாவுக்கு காஃபிர் பட்டம் தேடி வந்தது. பொதுவாகவே அவருக்கு ஜாதி மதங்களின் மீதான தீவிரமான ஒவ்வாமை இருந்தது. எனவே நாத்திகன் என்றும் அவருடைய மூதாதையர்கள் இந்து மதத்திலிருந்து மாறியவர்கள் என்பதால் அதன் எச்சம் அவருக்குள் விழுந்திருப்பதாகவும் பல்வேறு விமர்சனங்களை ஜின்னா எதிர்கொண்டார்.<br />ஜின்னாவின் சுருக்கெழுத்தராக வேலை செய்தவர் பாலக்காட்டைச் சேர்ந்த அய்யர், சமையல்காரர் கோவாவைச் சேர்ந்த இந்து, கார் ஓட்டுநர் சீக்கியர், மருத்துவர் பார்சி இனத்தவர். இதை அவர் திட்டமிட்டுச் செய்ததாகவும் சொல்லப்பட்டதுண்டு. இருந்து விட்டுப் போகட்டுமே கொந்தளிப்பான அக்கால கட்டத்தில் இதுபோன்ற துணிச்சல் யாருக்கு வரும் என்றுதான் கேட்கத் தோன்றுகிறது எனக்கு. சட்டம் பயின்று 1897ல் வழக்குரைஞர் தொழில் செய்யப் பதிவு செய்துகொண்ட ஜின்னாவின் Ôவக்கீல் வாழ்க்கைÕ ஏற்ற இறக்கங்களும் விசேஷமான திருப்பங்களும் கொண்டது. குடும்பம் எதிர்பாராமல் சந்தித்த பொருளாதார வீழ்ச்சியுடன், கராச்சி தனக்கேற்ற களமல்ல, எனக் கருதி ஜின்னா பம்பாய்க்கு வந்து சேர்கிறார். அங்கே வந்த பின்பும் ÔÔஎங்க ஆத்துக் காரரும் கச்சேரிக்குப் போகிறார்ÕÕ என்கிற கதையாகத்தான் அவருடைய வக்கீல் பிழைப்பு இருந்திருக்கிறது. ஆனால் பம்பாய் அட்வகேட் ஜெனரல் சர்மக்பர்சனின் அலுவலகத்தில் கிடைத்தற்கரிய வாய்ப்பாக முக்கியமான சட்ட நூல்களை அவர் பயின்றதும் பிறகு தற்காலிக நீதிபதியாக ஆறுமாதங்கள் பணிபுரிந்து நிரந்தர நீதிபதியாகக் கிடைக்கவிருந்த வாய்ப்பை உதறித்தள்ளி தான் வாதாடும் வழக்குகளுக்கு ஒருநாள் கட்டணம் ரூ.1500 என நிர்ணயித்து எண்ணற்ற வழக்குகளில் ஆஜராகி வெற்றி கண்டது, 1926களில் இந்தியாவின் மிகப் பெரிய செல்வந்தர்களில் ஒருவரானது என கதாநாயகனொருவனின் சாகஸங்களுக்கு நிகரானது. ஜின்னாவின் நுட்பங்கள் கூடிய வாதாடும் திறன் அன்றைய பம்பாய் நீதிமன்றத் தாழ்வாரங்களில் பேசுபொருளாகின. ÔÔபண்பு, துணிவு, உழைப்பு, முயற்சி ஆகிய நான்கு தூண்களில்தான் மானிட வாழ்க்கை என்னும் கம்பீரமான கட்டிடம் எழுப்பமுடியும். தோல்வி என்பது வாழ்வில் நான் அறியாத சொல்ÕÕ இதைத்தான் தனது வெற்றியின் ரகசியம் என ஜின்னா நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார்.<br /> ஜின்னா அரசியலுக்கு வந்தபோதும் வந்த பின்பும் பாகிஸ்தான் பிரிவினை குறித்த எவ்விதமான முன் முடிவுகளும் திட்டங்களும் அவருக்கு இருந்ததில்லை. முஸ்லீம் லீக் தொடங்கப்பட்டபோது அதில் அவர் இணையவுமில்லை. தலைமை தாங்க அவர் மனப்பூர்வமாக விரும்பியதுமில்லை. சந்தர்ப்ப சூழ்நிலைகள்தான் அவரை அது போலாக்கியது. காங்கிரசையும் முஸ்லிம்லீக்கையும் இணைக்க வேண்டும் என்பதுதான் அவருடைய விருப்பமாக இருந்தது. இந்த இடத்தில் சட்டசபைக்கு முஸ்லிம்களுக்காக ஒதுக்கப்பட்ட பதவிக்கு ஜின்னா தேர்ந்தெடுக்கப்பட்டதை விமர்சிப்பவர்கள் உண்டு. அதேபோன்று முஸ்லிம் லீக்கைப் புறக்கணித்த அவர் அஞ்சுமன் -இ-இஸ்லாம் அமைப்பில் உறுப்பினரானது, முஸ்லிம் வஃக்பு சட்ட முன்வரைவை சட்டசபையில் தாக்கல் செய்தது போன்ற செயல்பாடுகளுக்காகவும் நடுநிலைவாதிகளால் விமர்சிக்கப்பட்டார். இவை சரியான பிரதிநிதித்துவமற்ற சிறுபான்மை சமூகத்திற்காக அவர் மேற்கொண்ட காரியங்கள் எனக் குறிப்பிடுகிறவர்களும் உண்டு.<br /> இந்திய அரசியலில் மதம் கலப்பதை அறவே விரும்பாத ஜின்னா இந்து-முஸ்லிம் ஒற்றுமை சாத்தியமானது என்று பெரிதும் நம்பியிருந்தார். தேசவிடுதலைக்கு முன்னதாக இதை நிறைவேற்றிக் காட்டவேண்டும் என்கிற வெறி அவரிடம் இருந்தது. ஆனால் மதச்சார்பற்ற தன¢மை, சாதுர்யமான செயல்பாடுகள் இவற்றால் காங்கிரஸில் முக்கியமான இடம் நோக்கி நகர்ந்து கொண்டிருந்த ஜின்னாவின் வேகமான வளர்ச்சி காங்கிரஸ் தலைமைக்கு உள்ளூற அச்சத்தை அளித்தபடியிருந்தது. ஜின்னாவின் வளர்ச்சியைத் தடுக்கிற மலினமான உத்திகளை காங்கிரசில் ஒரு பிரிவு தொடர்ந்து பிரயோகித்து வந்தது.<br /> தேசியநீரோட்டத்திலிருந்து ஜின்னாவை அகற்றுவதில் இந்துத்துவவாதிகளின் திட்டமும், முஸ்லிம் மக்களை வழிநடத்த ஜின்னாவைக் கவர்ந்திழுப்பதில் இஸ்லாமிய வகுப்புவாதிகளின் திட்டமும் ஒரே நேரத்தில் வெற்றிகரமாக நடந்தேறின. இவை இரண்டும் தேர்ந்த சதி, என்பதை நடுநிலையாளர்கள் அவதானித்து வந்தனர்.<br />காங்கிரஸில் தான் இரண்டாம் பட்சமாக நடத்தப்படுவதை உணர்ந்த ஜின்னா மெல்ல மெல்ல லீக்கைத் தழுவினார். (காந்தி தென்னாப்பிரிக்காவிலிருந்து வந்தபோது ஜின்னா காங்கிரஸின் முக்கியமான இடத்திலிருந்தது இந்த இடத்தில் கவனிக்கத்தக்கது) மேல்நாட்டுப் பாணியில் தைக்கப்பட்ட நாகரீக உடைகளை அணிந்தபடி, மேல் தட்டு வர்க்கத்தினமிடையே கலந்து பழகிய ஒரு வழக்கறிஞர், இஸ்லாமியர்களை அரசியல் இயக்கமாக ஒன்று திரட்டி, இந்து தேசிய இயக்கத்துக்கு அச்சுறுத்தலாக வளர்ந்துவிடுவார் என்று 1935ஆம் ஆண்டிற்கு முன்னர் காங்கிரசார் நினைத்துக் கூடப் பார்த்திருக்கமாட்டார்கள்ÕÕ என்று ஒருகட்டத்தில் இந்நூலாசிரியர் குறிப்பிடுவதை நாம் பொருட்படுத்தவேண்டியுள்ளது. இதையே தோழர் இ.எம்.எஸ் தனது இந்திய விடுதலைப் போராட்ட வரலாறு என்னும் நூலில் ÔÔஇந்திய அரசியலின் ஆரம்ப நாட்களில் ஒரு முற்போக்காளராகத் தனது அரசியல் வாழ்க்கையைத் துவக்கிய ஜின்னா பிற முஸ்லிம் தலைவர்களைப் போலன்றி ஒட்டுமொத்த இந்திய முதலாளி வர்க்கத்தின் நலனுக்காக வட்டமேசை மாநாட்டுக்காலம் வரையிலும் பாடுபட்டு வந்தார். தீவிர உணர்வு மிக்க ஒரு தேசியவாதியாக இருந்த இந்த முற்போக்கான அரசியல் தலைவர் முஸ்லிம் குறுங்குழுவாதத்தின் சிறந்த பிரதிநிதியாக இறுதியில் தம்மை மாற்றிக் கொண்டிருந்தார். முஸ்லிம் முதலாளி வர்க்கம் வளர்ச்சி பெற்றதும் இதன் விளைவாக முஸ்லிம்கள் மற்றும் முஸ்லிம்கள் அல்லாத முதலாளிவர்க்கப் பிரிவினருக்கிடையே ஏற்பட்ட மோதல்கள் இவற்றின் பின்னணியில் தான் ஜின்னாவின் அரசியல் வாழ்வில் ஏற்பட்ட இந்த மாற்றத்தை மதிப்பீடு செய்ய முடியும்Õ என்று குறிப்பிடுகிறார்.ÕÕ (பக்832)<br /> தோழர் இ.எம்.எஸ்.ஸின் கருத்துப்படி ஜின்னாவை வர்க்க கண்ணோட்டத்தில் அணுக மாமனிதர் ஜின்னா என்னும் இந்நூலில் எவ்விதமான சந்தர்ப்பமும் இல்லை. ஒரு சில இடங்களைத் தவிர்த்து இந்நூல் முழுக்கவும் தலைப்புக்கேற்ற விதத்தில் ஜின்னாவை மாமனிதராகச் சித்தரிக்கும் விதத்திலேயே தகவமைக்கப்பட்டுள்ளது..<br /> காந்திக்கு நிகரான காந்தியின் எதிரியாக ஜின்னா மட்டுமே விளங்கினார். பிரிட்டிஷ் அரசாங்கம் ஒரு கட்டம்வரை காந்தியை வலுவான எதிரியாக பாவிக்கவில்லை. மேலும் தென்னாப்பிரிக்காவிலிருந்து திரும்பிய சமயத்தில் காந்தி பிரிட்டிஷ் ஆட்சிக்கு ஆதரவான தொனியிலேயே செயல்பட்டார். ஜின்னாவின் முயற்சியால் அமைதிப்பட்டிருந்த இஸ்லாமிய வகுப்புவாதத்தை காந்தி கிலாபத் இயக்கத்திற்கு அளித்த ஆதரவின் மூலமாக (அலி சகோதரர்களை இணைத்துக் கொண்டு) கிளர்ந்தெழச் செய்ததையும் துருக்கியில் கிலாபத் இயக்கம் அமைதியுற்றதும் காந்தியும் கிலாபத் இயக்கத்தை இந்தியாவில் கைவிட்டு இஸ்லாமியரின் பிரச்சனைகளை இஸ்லாமியர்களே தீர்த்துக் கொள்ள வேண்டும் என அறிவித்ததும் பிரிவினைக்கு முந்தைய காந்தியின் கைங்கர்யங்கள் காந்தியின் கிலாபத் இயக்க ஆதரவுச் சறுக்கல்களும் அதற்கான ஜின்னாவின் கடுமையான எதிர்ப்பும் இந்நூலில் விரிவான முறையில் பதிவு பெற்றுள்ளன. மேலும் காந்தியின் மதம்சார்ந்த அரசியல் கோட்பாடுகள் இந்நூலின் பல பக்கங்களில் விவாதத்திற்கும் விமர்சனத்திற்கும் உள்ளாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.<br /> காங்கிரஸை விட்டுப் பிரிந்து சென்ற பின் 1946 இல் காங்கிரஸ் அமைத்த இடைக்கால அரசாங்கத்தில் நிதி மற்றும் வணிகத்துறைகளை இஸ்லாமியர்களுக்குப் பெற்றுத் தந்தது ஜின்னாவின் சாணக்கியத் தனம் என்று கூறப்பட்டது. 1946ல் தாக்கல் செய்யப்பட்ட அந்த பட்ஜெட்டில்தான் உப்புவரி முழுவதுமாக ரத்து செய்யப்பட்டது. அந்த பட்ஜெட்டைத் தாக்கல் செய்த லியாகத் அலிகான் அதை ஒரு ÔÔசோசலிஷ பட்ஜெட்ÕÕ என வர்ணித்தார். இதுவும் ஜின்னாவின் இடத்தை அகில இந்திய அளவில் உயர்த்தியது. காங்கிரஸ் அமைச்சர்கள் தங்கள் துறைகளுக்கான நிதி ஆதாரங்களுக்கு லியாகத் அலிகானை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலைமை நேரு, படேல் போன்ற தலைவர்களை உணர்ச்சிவயப்பட்ட நிலையில் யோசிக்க வைத்தது. இதனால் பாகிஸ்தானைப் பிரித்துத் தருவது, அதன் மூலமாக தங்களுக்குத் தடைக்கல்லாக நிற்கின்ற ஜின்னாவை இந்தியாவை விட்டு அப்புறப்படுத்துவது என ஒரு சமரசமற்ற திட்டம் அவர்களால் உருவாக்கப்பட்டது. மறுபக்கம் இஸ்லாமிய வகுப்புவாதிகள் ஜின்னாவின் மதச்சார்பற்ற செயல்பாடுகளினால் ஆத்திரமடைந்தவர்களாக பொறுமிக் கொண்டிருந்தனர். <br />பால்ய விவாகத்தைத் தடை செய்யும் வகையில் உருவாக்கப்பட்ட சாரதா சட்டம் இந்துக்களுக்கு மட்டுமானதாக இருந்ததை ஜின்னா கடுமையாக வாதாடி இஸ்லாமியர்களுக்குமானதாக மாற்றியதும், ஜின்னாவின் முயற்சியால் ஷரியத் சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டு உடலுறுப்புகளை வெட்டியும், கல்லெறிந்தும் கொல்வதுமான அரேபிய நாட்டின் காட்டுமிராண்டித்தன வழக்கத்திலிருந்து இந்தியாவிலுள்ள இஸ்லாமிய ஆண்களும், பெண்களும் காப்பாற்றப்பட்டது என ஜின்னாவின் மீதான அடிப்படைவாதிகளின் கோபம் அதிகரித்துக் கொண்டே வந்தது. முஸ்லீம் லீகிலிருந்து ஜின்னா பிற்போக்குவாதிகளை களையெடுத்துக் கொண்டேயிருந்தார். மவுலவிகள், மவுலானாக்களின் ஆதிக்கத்தை அடியோடு ஒழிக்க கங்கணம் கட்டிக் கொண்டு செயல்பட்டார்.<br /> 1946ஆம் ஆண்டு இறுதி வரையிலும் கூட ஜின்னா பிரிவினைக்கான சிந்தனையற்றிருந்ததாகவே வரலாற்றாளர்கள் சிலர் குறிப்பிடுகின்றனர். சுயராஜ்ய இதழில் இராஜாஜியும் இதைக் குறிப்பிடுகிறார். ஆனால் நேரு மிகத் தெளிவாக இருந்திருக்கிறார். ÔÔஇந்தியாவில் உள்ள பிரச்சனைகளில் ஜின்னா தொடர்ந்து தலையிடாமல் இருப்பதற்கும் அரசியலை விட்டு அவரை முற்றிலும் விலக்கி வைப்பதற்கும் பாகிஸ்தானை அல்லது ஏதாவது ஒரு பகுதியை உருவாக்கி விடுவது நல்லதுÕÕ என்றே அவரது நாட்குறிப்பும் கூறுகிறது.<br />விடுதலைக்குப் பிறகான இந்திய அரசாங்கத்தில் ஜின்னாவின் தலையீட்டை விரும்பாத காரணத்தால் காங்கிரஸே முன்னின்று பிரிவினையைச் செய்தது. வேறு வழியின்றிப் பாகிஸ்தான் பிரிக்கப்பட்டபோது அதை இரண்டு துண்டுகளாக மேற்கு பாகிஸ்தான் கிழக்கு பாகிஸ்தான் எனப் பிரித்து வாங்கியதற்காக கடைசியாக நடந்த முஸ்லீம் லீக் கூட்டத்தில் ஜின்னாவிற்கு துரோகிப் பட்டம் கிடைத்தது.<br />தேசப்பிரிவினைக்கு ஜின்னா ஒப்புக் கொண்டபோதும், பாகிஸ்தான் உருவாகி சில நாட்களிலும் ஜின்னாவிடம் பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விக்கு அவர் அளித்த பதில்கள் அவர் மதச்சார்பற்ற தன்மையிலிருந்து விலகாததை வெளிக்காட்டியது. மௌலவிகளின் வழி காட்டலில் புதிய இஸ்லாமிய அரசு பாகிஸ்தானில் அமையுமா என்று கேட்கப்பட்டபோது ÔÔமுட்டாள்தனமாகப் பேசாதீர்கள்ÕÕ என்று ஜின்னா நிருபர்களிடம் சீறியிருக்கிறார். புதிய அரசை இஸ்லாமிய ஷரிஅத் சட்டத்தை பின்பற்றச் சொல்லி சில உலமாக்கள் கேட்டுக் கொண்டபோது அப்படியான எண்ணம் இல்லை என்று உறுதியாகக் கூறியிருக்கிறார். அப்போதே ஜின்னாவை ஓரங்கட்டுகிற திட்டம் பாகிஸ்தானில் உருவாகியிருக்க வேண்டும். ஏனெனில் புதிய தேசத்தைக் கண்டவர்கள் அறிந்தோ அறியாமலோ இந்தியாவின் மீது வன்மத்தையும், பிரிந்ததால் வெற்றிப் பூரிப்பையும் கொண்டிருந்தார்கள். ஜின்னாவின் மனநிலை அப்படி ஒரு போதும் இல்லை என்பதுதான் உண்மை பாகிஸ்தானிலிருந்த சிறுபான்மையினர் (இந்தியர்) நலனில் ஜின்னா கொண்டிருந்த ஆர்வம் பாகிஸ்தானியர்களின் மனநிலைக்கு ஒவ்வாததாகவே இருந்தது. பழைய வெறுப்பிலேயே இந்தியர்கள் பார்க்கப்பட்டனர். 1948 இறுதியில் கராச்சியில் நடந்த கலவரத்தைக் கண்டு ஜின்னா திகைத்து தெம்பிழந்து போனார். இதற்கிடையில் அடிப்படைவாதிகளின் தூண்டுதலால் ஜின்னாவைக் கொலை செய்யும் முயற்சியும் நடந்தது. சிறுபான்மையினராகிய இந்துக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் தத்தளித்து இந்துக்களின் அகதிமுகாம் ஒன்றில் ஜின்னா கதறி அழுதது இந்தியாவரை எதிரொலித்தது. ஆதரவற்ற கையறு நிலையில் ஜின்னா இந்தியாவிற்கு திரும்பிச் செல்ல விரும்பியது வரலாற்றின் உச்சகட்டச் சோகம்.<br /> மன உளைச்சல்களாலும் தொடர்ந்து புகைப்பிடிக்கும் பழக்கத்தாலும் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு ஜின்னா 11.9.1948 அன்று இரவு மரணமடைந்தார். ஜமாத்- இ-இஸ்லாம் தலைவர் ஜின்னாவைப் போன்ற காஃபிருக்கு, நாத்திகருக்கு, மதவிரோதிக்கு இறுதிச் சடங்குகள் செய்யமாட்டேன் என மறுத்ததுடன் அவரது மரண தினத்தை மகிழ்ச்சிக்குரிய நாளாகக் கொண்டாடினார். <br /> ஜின்னாவைப் போல இத்தனை மோசமான துயரம் ஆசியக் கண்டத்தில் எந்தத் தலைவருக்கும் நேர்ந்ததில்லை. ஒரு மதத்தின் பிரதிநிதியாக விருப்பமின்றி தேர்ந்தெடுக்கப்பட்டவரை மதமே தீர்த்துக்கட்டியது. தனக்கு விசுவாசமில்லாதவரை மதம் ஈவுஇரக்கமற்ற முறையில் விழுங்கத் தயங்காது என்பதற்கு ஜின்னாவின் வாழ்க்கை ஒரு உதாரணம். மாமனிதர் ஜின்னா என்னும் இந்த 220 பக்க நூல் ஏற்கெனவே எழுதப்பட்ட இந்தியாவின் சரித்திரத்தை கேள்விக்குள்ளாக்குகிறது. இந்திய சுதந்திரப்போராட்ட வரலாற்றின் எந்தப் பக்கத்தில் ஜின்னா விருப்பு வெறுப்பற்ற முறையில் பதிவாகியிருக்கிறார்? இந்தக் கேள்வி தரும் உளைச்சல்தான் இந்த புத்தகத்தின் வாசிப்பனுபவம். ஜின்னா கடைசிவரை ஒரு பாகிஸ்தானியாக மாறவில்லை. அவர் ஒரு இந்தியனாகத்தான் வாழ்ந்தார். </div>
கீரனூர் ஜாகிர்ராஜாhttp://www.blogger.com/profile/16821172975494211862noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-5325351298899765001.post-29660813868137907672013-03-28T03:43:00.000-07:002013-03-28T03:43:23.064-07:00பஷீராக மாறுவது சுலபமில்லை<div style="text-align: justify;">
<br />பேப்பூர் சுல்தான் என்றழைக்கப்படும் வைக்கம் முகம்மது பஷீருக்கு 2013 ஜனவரி 21ம் தேதி 105-வது வயது பிறக்கிறது. இதை அறிந்த கணத்தில் என் மன வாகனம் சற்றும் தாமதிக்காமல் கள்ளிக்கோட்டைக்குப் புறப்பட்டுவிட்டது. <br />கள்ளிக்கோட்டை (கோழிக்கோடு) நமக்குப் புதிதில்லை. மிகவும் பரிச்சயப்பட்ட பூமிதான். எனவே அங்கிருந்து பேப்பூருக்குச் செல்வது அத்தனை சிரமமான காரியமாகப்படவில்லை. நான் சென்ற நேரம் பஷீர் பாட்டன் மும்முரமான உரையாடலில் இருந்திருக்க வேண்டும். அவருடைய வீட்டிலிருந்து அலையலையாக மக்கள் வெளியேறிக் கொண்டிருந்தனர். அரசியல்வாதிகள், அதிகாரிகள், எழுத்தாளர்கள், சினிமாக்காரர்கள், பாட்டாளிகள், மாணவர்கள், வியாபாரிகள், பைத்தியக்காரர்கள், பிச்சைக்காரர்கள், பாலியல் தொழிலாளிகள் மற்றும் திருடர்கள்... தினுசு தினுசான பலதரப்பட்ட முகங்கள். வெளியேறிய அந்த முகங்களில் உரையாடலின் திருப்தி மட்டும் நிரந்தரமாக வழிந்து கொண்டிருந்தது. அது எனக்கு முக்கியமாகப்பட்டது.<br /> ஒரு பூனையாகவோ, அணிலாகவோ, தாய்க்கோழிக்குப் பின்னே அலைகின்ற குஞ்சுகளில் ஒன்றாகவோ, ஆட்டுக்குட்டியாகவோ குருவியாகவோ எந்த வடிவெடுத்து பஷீரின் வீட்டுக்குள் நுழையலாமென நான் யோசிக்கிறேன். ஏனெனில் பஷீரின் வீட்டிற்குள் நுழைய மனிதர்களைக் காட்டிலும் ஏனைய நலிந்த ஜீவராசிகளுக்கே அதிகம் உரிமையுண்டு. பஷீரின் உரையாடலும் அவற்றோடுதான் மிக இணக்கமாக இருக்கும்.<br />முதலில் ஒரு ஆட்டுக்குட்டியாக நுழைந்து அவர் கண்ணெதிரில் வளர்ந்து நிற்கும் செடிகொடிகளை மேய்கிறேன். மங்குஸ்தான் மர நிழலில் சாய்வு நாற்காலியிலிருந்தவாறு ஏதோ வாசித்துக் கொண்டிருந்த அவர் என்னை நிமிர்ந்து பார்த்துவிட்டு மெல்லிய முறுவலுடன் மீண்டும் வாசிப்பைத் தொடர்கிறார். என்னை அவர் விரட்டுவாரானால் ÔÔசுல்த்தானே நான்தான் உங்கள் பாத்துமாவின் ஆடுÕÕ என்று கத்திவிட தீர்மானித்திருந்தேன். இப்போது பூனையாக உருமாறி அவருடைய சாய்வு நாற்காலியின் மேல் தாவிச் செல்கிறேன். கையிலிருந்த புகைந்த பீடியை அணைத்துவிட்டு என்னை மென்மையாக வருடித் தருகிறார். ஒருவேளை அவர் அந்த வருடலைத் தவிர்த்திருப்பாரானால் ÔÔநான்தான் உங்கள் மாந்திரீகப் பூனைÕÕ என்று குழைந்திருப்பேன். மெலிந்து தளர்ந்த அவருடைய கைகளின் ஸ்பரிசத்தில் சிலிர்த்துப்போய் அவர் எதிரில் மனித உருவமெடுத்து அமர்கிறேன். ப்பா..Ôஎன்ன கதை விடுவதற்கு ஒரு அளவு வேண்டாமா? இன்னுமா பஷீர் உயிரோடிருக்கிறார்Õ என நீங்கள் கேட்பது எனக்குப் புரிகிறது. ஏற்கனவே சொல்லிவிட்டேன். நான் பயணித்தது மன வாகனம் என்று. ஆகவே நண்பர்களே, நம்முடைய பஷீர் எப்போதும் ஜீவித்திருக்கிறார். அவருக்கு மரணமே இல்லை. எளிய மலையாளிகளின் சுவாசத்தில் அவர் விரும்பி அருந்துகின்ற சுலைமானி என்னும் கருப்புத் தேநீராக நிரந்தரமாகக் கலந்திருக்கிறார்.<br /><br />கடந்த சில நூற்றாண்டுகளில் தமிழை வேறெந்த மலையாள எழுத்தாளரும் இவ்வளவு தூரம் ஆக்கிரமித்ததில்லை. அனேகமாக 90சதவீதம் பஷீர் தமிழ்ப்படுத்தப்பட்டிருப்பார் என நினைக்கிறேன். வைக்கம் முகம்மது பஷீர் என்கிற பெயரைக் கண்டால் அது யாருடைய மொழிபெயர்ப்பாகவும் இருந்துவிட்டுப் போகட்டும், தமிழ் வாசகர்கள் அவரை செல்லமாகக் கைகளில் ஏந்திக் கொள்வார்கள். பஷீர் என்கிற மேதைமைக்கு, அவருடைய கதாபாத்திரங்களுக்கு அவ்வளவு முக்கியத்துவம் நம்மில் உண்டு. ஆயினும் பஷீரின் படைப்புகளை எவ்வளவு தூரம் இவர்கள் உள்வாங்கியிருப்பார்கள் என்கிற சந்தேகம் எனக்கு எப்போதுமே இருக்கிறது. சரி, பஷீர் என்கிற மகத்தான கதாபாத்திரத்தை, தனிமனித சொரூபத்தை மட்டும் எத்தனைபேர் புரிந்திருக்கக்கூடும்? அது எத்தனை சுலபமான காரியமாக இருப்பினும் கூட. ÔÔபடைப்பைப் பார், படைப்பாளியைப் பார்க்காதேÕÕ என்றல்லவா நமக்குச் சொல்லப்பட்டிருக்கிறது. அப்படியே பார்க்க பஷீர் என்ன ஆணழகனா? சினிமா நட்சத்திரமா?<br />நிர்வாணம் என்று சொல்லிவிட முடியாத அளவிற்கு ஒரு சிறிய வேட்டியை மட்டும் இடுப்பில் செருகிக்கொண்டு திரிந்த அந்தக் கிழத்திற்குத்தான் தனது வாசகிகளின் கடிதங்களை ÔÔகாதல் கடிதங்கள்ÕÕ என்று சொல்ல ஆண்மை இருந்தது. சபைகளில் உரையைத் தொடங்கும் முன் அவர் கடவுளிடம் வேண்டுவது ÔÔபெண்களுக்கு அதிகம் அழகு கிடைக்க வேண்டுகிறேன். ஆண்களுக்கு இப்போது இருக்கும் அழகெல்லாம் போதும்ÕÕ ஏ அப்பா! என்ன ஒரு கிண்டல்?<br /> இந்த சந்தர்ப்பத்தில் பஷீரை நான் வேறொரு கோணத்தில் அறிமுகப்படுத்தி நினைக்கிறேன். அவருடைய படைப்புகளைத் தாண்டிய படு சுவாரஸ்யமான குணசித்திரம் அது.<br />அது எந்த இந்திய எழுத்தாளருக்கும் வாய்க்காதது. வித்தியாசமென்றால் அது எளிமையிலும் சிறந்த பேரெளிமையிலிருந்து உருவாகுவது. கரணமடித்தாலும் நமக்கெல்லாம் வாய்க்காதது. எழுத்தாளன் என்கிற இருமாப்புடன் நெஞ்சுயர்த்தி மீசை முறுக்கி உரத்த குரலில் கூவி இன்னும் கூடாத தமாஷ்களெல்லாம் செய்து கொண்டிருப்பவர்கள்தானே நாம்?<br /> பஷீர் தோற்றத்தில் மிக சாதாரணம்தான். பிரமாதம் என்று சொல்லத் தக்கவையாவும் அவருடைய விசேஷமான வெளிப்பாடுகள்தாம். அதிலும் அவருடைய அந்த நகைச்சுவையுணர்வு உலகபிரசித்தம். கலைஞர்களுக்கே உரித்தான மனப்பிறழ்வும் இயல்பாகவே சேர்ந்து கொண்டதால் அவ்வெளிப்பாடுகள் எல்லாமும் மிகையற்ற யதார்த்தம் சொட்டுபவை.<br />எப்படிப்பட்ட எழுத்தாளனுக்கும் இப்படி ஒரு தைரியமிருந்ததில்லை. என்னவென்று கேளுங்கள். பஷீரைக் காண வருகிறவர்களை அவர் ஆசீர்வதிப்பதுண்டாம். ஆண்களானால் கையுயர்த்தி ÔÔலோகா ஸமஸ்தர் ஸ¨தினோ பவந்துÕÕ பெண்களானால் ÔÔதீர்க்க சுமங்கலிபவÕÕ திருடர்களானால் ÔÔசுக திருடல்ÕÕ<br /> <br />பஷீரைக் குறித்த இந்த நூலை எழுதிய எம்.என். காரச்சேரியிடம் பஷீர் ஒருமுறை சொல்லியிருக்கிறார்,<br />ÔÔமுகமது நபி தன் மகள் பாத்திமா, மருமகன் அலியுடன் என்னைப் பார்க்க வந்தார்ÕÕ <br />இது கேட்டுத் திடுக்கிட்டுப்போன காரச்சேரி Ôநபி வந்ததற்கு ஏதேனும் ஆதாரமுண்டாÕ என கேட்கிறார். உடனே பஷீர் தன் அருகில் இருந்த இரண்டு செடிகளை காண்பிக்கிறார். ஒரு செடியில் அழகான சிவப்பு நிற மலர் மலர்ந்திருக்கிறது. மற்றொரு செடி வாடிக் கருகி நிற்கிறது.<br />ÔÔபூ மலர்ந்த செடி நபி நட்டது. வாடிய செடி அவருடைய மருமகன் அலி நட்டதுÕÕ<br />பஷீர் சொன்ன இந்த வார்த்தைகளில் தான் எத்தனை உள்ளர்த்தம் பொதிந்திருக்கிறது? இதை நீங்கள் யோசிக்க வேண்டுமானால் கண்டிப்பாக ஒரு இடைவெளி விடுகிறேன்.<br /> <br />அலாதியானதொரு இசைப்பிரியர் பஷீர். இசையில் ஆழ்ந்து கிறங்கிப்போன அனேக சம்பவங்கள் அவர் வாழ்க்கையில் நிறைந்திருக்கின்றன. ஒரு எழுத்தாளரான அவர் அதிகமும் பாதுகாத்து வைத்திருந்தவை புத்தகங்கள் அல்ல. ஒரு பழைய கிராமஃபோனும், ஏராளமான இசைத்தட்டுகளும்தான். இலக்கியக் கூட்டங்களில் கலந்து கொள்வதைத் தவிர்த்த பஷீர் இசைக் கச்சேரிகளில் முன் வரிசையில் அமர்ந்து தலையாட்டிக் கொண்டிருந்ததை காரச்சேரி வியந்து எழுதுகிறார். இசையை வெறுக்கிற அல்லது புறக்கணிக்கிற இஸ்லாம் சமூகத்தில் பிறந்த பஷீர் இசையில் தோய்ந்து, உச்சக்கட்டமாக சொன்ன வார்த்தைகள் <br />ÔÔஇசைதான் இறைவன்ÕÕ<br />1985-களில் ஷா பானு பிரச்சனை இந்தியாவை உலுக்கிக் கொண்டிருந்த நேரத்தில் பஷீர் ÔÔஇப்படியெல்லாம் தலாக் கொடுப்பவன்களின் ஆண் இயந்திரத்தை வெட்டித் தோளில் தொங்கவிட வேண்டும்ÕÕ என்று விமர்சித்திருக்கிறார்.<br />பஷீருக்கு Ôபத்வாÕ கொடுக்கிற துணிச்சல், கடைசிவரை கேரளத்தில் எவருக்கும் இருந்ததில்லை. சீரழிவின் எழுத்தாளன், செக்ஸ் ரைட்டர் என்று வேண்டுமானால் விருப்பத்துக்குத் திட்டித்தீர்த்திருக்கிறார்கள்.<br /> <br />பஷீரின் இயற்பெயர் கொச்சு முகம்மது. வைக்கம் முகம்மது பஷீர் என்பது பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கெதிராக அரசியல் கட்டுரைகள் எழுதியபோது சூட்டிக் கொண்ட புனைப் பெயர். பஷீரின் அரசியல் ஈடுபாடுகள் நாம் அதிகம் அறிந்திராத பக்கங்கள். பதினாறு வயதுகளில் பஷீருக்கு காதல் மோகமும் அரசியல் தாகமும் சேர்ந்தே வந்திருக்கிறது. தந்தை பெரியார் ஈடுபட்ட வைக்கம் போராட்டம் தான் அவரைக் கவர்ந்த முதல் அரசியல் நிகழ்வு.<br />1925-ஆம் ஆண்டு வைக்கம் போராட்டத்திற்கு வந்த மகாத்மா காந்தியின் வலது தோள்பட்டையை பஷீர் தொட்டதுதான் அவருடைய வாழ்க்கைச் சரிதத்தில் மிக முக்கியமான சம்பவமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. பல நூற்றாண்டுகளுக்கு மனித சமூகத்திற்கு கிடைத்த நிகரற்ற நறுமணமாகவும் கேட்கக் கிடைத்த ஜீவனுள்ள இசையாகவும் காந்தியை அவர் வர்ணித்திருக்கிறார். பின்னாட்களில் காந்தியின் செயல்பாடுகளில் அவர் முரண்பட்டதும் உண்டு. உப்பு சத்தியாக்கிரகத்தில் பங்குபெற்றதற்காக கோழிக்கோட்டிலும் ÔÔபாக்கியம் கெட்ட என் நாடுÕÕ என்ற கட்டுரை எழுதியதற்காக பிரிட்டிஷாரால் தேசத்துரோக குற்றம் சுமத்தப்பட்டு இரண்டரை ஆண்டுகாலம் திருவனந்தபுரத்திலும் சிறைவாசம் அனுபவித்திருக்கிறார். <br />பஷீருக்குள் ஒரு கம்யூனிஸ இதயம் எப்போதுமே இயங்கி வந்திருக்கிறது. 1937ல் பஷீர் எழுதிய Ôகாரல்மார்க்ஸ்Õ என்கிற சிறந்த கட்டுரை உலகெங்கிலுமுள்ள ஏழைப்பாட்டாளி வர்க்கத்தின் மீது மார்க்ஸ் கொண்டிருந்த பேரன்பையும், பரிவையும் அந்த மாமனிதனின் உன்னத செயல்பாடுகளையும் மலையாளிகளுக்கு அடையாளப்படுத்திய ஆவணமாகும். கே.சி.ஜார்ஜ், கே.தாமோதரன், கோவிந்தன் நாயர் உள்ளிட்ட கேரளத்து இடதுசாரித் தலைவர்களுடன் பஷீர் இணக்கமும் நெருக்கமும் கொண்டிருந்தார். பகத்சிங்கைத் தன் ரோல்மாடலாக, ஆதர்ஷ புருஷராகவே கருதிய பஷீர், மாணவர்களையும், இளைஞர்களையும் சேர்த்துக் கொண்டு வானரசேனை என்றொரு தீவிர அமைப்பையும் உருவாக்கி அரைக்கால் டிராயரும் முறுக்கிய மீசையுடன் தொப்பியும் ஷ§வுமணிந்து பகத்சிங்கின் நகலாகவே நடமாடிய காலங்கள் இருந்திருக்கின்றன. இவ்வாறான ஆர்வக்கோளாறான மனநிலைகளிலிருந்து தான் பஷீர் மகோன்னதமான மனிதராக, கலைஞனாக உருமாறியிருக்கிறார்.<br />கூலித்தொழிலாளியாக, குறி சொல்பவனாக, ஓட்டல் சர்வராக, மருந்து அரைப்பவனாக, பிட்டராக, மந்திரவாதி ஒருவனின் கையாளாக, டியூஷன் மாஸ்டராக, விற்பனைப் பிரதிநிதியாக, பத்திரிகையில் புரூப் பார்ப்பவராக, பரதேசியாக, இந்து துறவிகளில் ஒருவராக, சூஃபியாக ....அப்பப்பா வாழ்க்கை என்னும் மேடையில் பஷீர் தரித்த வேடங்கள் கணக்கிலடங்காதவை. எனவே அவர் படைத்த கதாபாத்திரங்களதிகமும் பாவப்பட்ட விளிம்புநிலைப் பிரஜைகளாகவே இருந்ததில் நாம் ஆச்சரியம் கொள்ள ஏதுமில்லை. <br />சிறந்த வாசகராக நான் மதிக்கும் என் நண்பர் ஒருவர் ஒரு சந்திப்பின்போது என்னிடம் ÔÔஉங்கள் எழுத்து ஈர்த்த அளவுக்கு பஷீரின் எழுத்துக்கள் ஏனோ என்னை பெரிய அளவுக்கு ஈர்க்கவில்லைÕÕ என்று சொன்னார். எனக்கு கோபமும் சிரிப்பும் சேர்ந்தே வந்தது. பஷீர் காட்டும் உலகத்தைப் புரிந்துகொள்ள முதலில் பஷீராக நீங்கள் மாறவேண்டும். அது சுலபமல்ல. தமிழ்வாசகர்கள் அவர்கள் நவீன இலக்கிய வாசகர்களானாலும் இங்குள்ள ஒருவித எழுத்து மாயைக்கு, சிக்கலான மொழிப் பிரயோகத்திற்கு பழகிப்போயிருக்கிறார்கள். பஷீரை மொழி பெயர்ப்பவர்கள் பஷீரின் ஆன்மாவை மொழி பெயர்ப்பவர்கள் அல்லர். அவர் பிரயோகிக்கிற கொச்சை மலையாளமும், வழக்குச் சொற்களும் அகராதிகளுக்குள் நீச்சலடித்தால் அகப்படாதவை. அந்த வகையில் தமிழ் வாசகர்கள் துரதிர்ஷ்டசாலிகள்.<br />பஷீரின் கதை சொல்லும் பாங்கு இங்குள்ள அதி நவீனர்கள் சிலருக்கு எரிச்சலூட்டக்கூடும். அதிகமும் சுயசரிதைத் தன்மை கொண்ட Ôநான்Õ எழுத்து அவருடையது. ஒன்றுக்கு இரண்டு Ôநான்Õ போட்டால் நம்மவர்கள் கொதித்துப் போவார்கள். ஸ்டேட்மென்ட் என்றும் தட்டை என்றும் குற்றம் சுமத்துவார்கள்.<br /> புத்தூஸ், படுக்கூஸ், டுங்குடுதஞ்சி, பப்ளிமூஸ்குண்டி, பளுங்கூஸன், ஹ¨ந்தராப்பி, புஸ்ஸாட்டோ, லுட்டாப்பி என்றெல்லாம் அவர் பயன்படுத்துகிற மலையாள முஸ்லிம் நாட்டார் வழக்கையும், ஆனவாரி பொன்குரிசு, ஒத்தக்கண்ணன் போக்கர், மண்டன் முத்தபா, தொரப்பான் அவரான் போன்ற அவருடைய கதாபாத்திரங்களின் பெயர்களையும் ஹீத்தினஹா லிட்டலித்தாப்போ என்று அவர் எழுதிய பாடலையும் கேட்டால் முகம் சுளிப்பார்கள்.<br />பஷீரின் நாவலொன்றில் நாயகன் துயரம் தாங்காமல் தற்கொலை செய்துகொள்ளும் பொருட்டு ஒரு ரயில் தண்டவாளத்தில் தலை வைக்கிறான். ரயில் அந்த தண்டவாளத்தில் ஓடாமல் பக்கத்து தண்டவாளத்தில் சீறிப் பாய்ந்து செல்கிறது. மற்றொரு கதையில் நாயகன் பேரழகியாக நினைக்கிற நாயகிக்கு காற்றுப்பிரிகிறது. நாயகனுக்கோ அவள் மீதுள்ள அபிமானம் உடைந்து சிதறுகிறது. கதையின் பெயரே பர்ர்ர்... இந்த இரண்டு விஷயங்களையுமே தமிழ் சினிமாக்காரர்கள் லபக்கியிருக்கிறார்கள். <br />பஷீரின் வாழ்க்கையையும் ஒரு சுவையான திரைக்கதையாக்க முடியும். மலையாளிகள் ஏனோ இதை செய்யத்தவறியிருக்கிறார்கள்.<br /> இந்த நூலை மொழி பெயர்க்க சாகித்ய அகாடமி, தோப்பில் முஹம்மது மீரானை அழைத்தது மிகச் சிறந்த தேர்வு. ஏனெனில் தோப்பிலுக்குள் எப்போதும் பஷீர் உண்டு. அவரும் தன் பணியை மிக அனுபவித்துச் செய்திருக்கிறார். ஆனால் சில இடங்களில் மலையாள வார்த்தைகளை அப்படியே பயன்படுத்துகிறார். இது மலையாளமறியாத தமிழ் வாசகர்களுக்கு மிரட்சியூட்டக்கூடும். மற்றொன்று பிரதி முழுக்கவுமே மெய்ப்புத் திருத்தம் செய்யப்படவில்லை பக்கத்துக்கு இருபது பிழைகள். சும்மா நோக்கத்துக்கு விரவிக்கிடக்கிறது. சாகித்ய அகாதமி போன்ற பொறுப்புள்ள நிறுவனங்கள் இதில் கவனம் செலுத்தாதது ஆச்சரியமேற் படுத்துகிறது. இந்நூலிலுள்ள விஷயங்களை மட்டுமே எடுத்துக் கொண்டு என்னால் இருநூறு பக்கங்களுக்கு பஷீரைக் குறித்த ஒரு சுவாரசியமான உரையாடலைத் தரமுடியும். அது காரச்சேரியின், தோப்பிலின் வெற்றி!<br />இறுதியாக... எங்கள் வாப்பூப்பாவை, மூதாதையை, அத்தாவுக்கு அத்தாவாகிய ராத்தாவை, தாத்தனைப் பாட்டனை, வாப்பாக்களையும் உம்மாக்களையும் முதன் முதலாக இலக்கியத்தில் பதிவு செய்த பிரம்மாவை, ச.த. பாணியில் சொல்வதானால் எங்கள் குலசாமியை ஒரு பெரிய சலாம் வைத்து வணங்குகிறேன்.<br /></div>
கீரனூர் ஜாகிர்ராஜாhttp://www.blogger.com/profile/16821172975494211862noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-5325351298899765001.post-80762331887277305532013-03-28T03:41:00.001-07:002013-03-28T03:41:56.229-07:00ஒரு மீன் வியாபாரி கவிதைகள் விற்கிறான்<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
நீயும் குழந்தைகளும் என்றென்றைக்கும் என்னுடையவர்கள் மட்டும் தானென்று நான்நம்பவில்லை. இதுபோன்ற துர்விதி என்னை வேட்டையாடுமென்றால் நாளை உங்களை ரட்சிப்பதற்கான எனது கடைசி தந்திரமும் தவறிப்போகும் பட்சத்தில் உனக்கு விருப்பமில்லை என்றாலும் உனது இதயம் வேறு ஒருவனுடைய சூடு தேடிச் செல்லும். அவன் பரிசாய்த் தருகின்ற இனிப்புப் பலகாரங்களிலும் விளையாட்டுச் சாதனங்களிலும் நமது குழந்தைகள் சந்தோஷத்தில் மூழ்கிப் போவார்கள். </div>
<div style="text-align: justify;">
பிறகு... பிறகு... அர்த்தமற்ற இந்த வாழ்க்கையின் வெள்ளரித் தோட்டத்தில் நான் வெறும் சோளக் கொல்லை பொம்மைதான்.ÕÕ</div>
<div style="text-align: justify;">
-பவித்ரன் தீக்குன்னி (மலையாளம்)</div>
<div style="text-align: justify;">
தமிழும் மலையாளமும், சகோதர மொழிகள் என நாம் கூறிவந்தாலும், திராவிட மொழி இனங்களில் மலையாளத்துக்கென்று சில தனித்த பண்புகள் உள்ளன. மிகப் பழமை வாய்ந்த இலக்கண நூலான தொல்காப்பியத்தின் இலக்கண விதிகளுக்கேற்ற சொல்லாட்சிகள் மிகுதியாக மலையாளத்தில் மட்டுமே புழக்கத்தில் இருக்கின்றன. எண்ணற்ற திராவிட சொற்களை தமிழர்களாகிய நாம் நிகண்டுவின் துணை கொண்டுதான் பொருள் உணர முடிகிறது. ஆனால் மலையாளத்தில் அவை Ôவழக்குச் சொற்களாகவேÕ நீடிக்கக் காணலாம். மூல திராவிட மொழியிலிருந்து பிரிந்த மலையாளத்தில் செந்தமிழும், சமஸ்கிருதமும், இரண்டறக் கலந்திருக்கின்றன. இப்படி கலப்பான மொழியைக் கொண்டு ஒரு இலக்கிய நடையை உருவாக்கி அதற்கு Ôமணிப்பிரவாளம்Õ என்றும் பெயரிட்டனர். முன்பு நவீனத் தமிழ் எழுத்தாளர்களில் சிலர் மணிப்பிரவாள நடையில் எழுதினார்கள். அதற்கு தனித்தமிழ்வாதிகளின் எதிர்ப்பும் விமர்சனமும் தீவிரமாக இருந்தது. ஆனால் மலையாளத்திலும், சமஸ்கிருதத்திலும் ஈடுபாடு உள்ளவர்களுக்கு அந்த Ôபிரவாள நடையில்Õ ஒரு கிறக்கம் உண்டு. எழுதத் தொடங்கிய புதிதில் மணிப்பிரவாள நடையில் எழுதமுயன்று வாங்கிக்கட்டிக் கொண்ட அனுபவம் எனக்கிருக்கிறது. </div>
<div style="text-align: justify;">
பவித்ரன் தீக்குன்னியை நான் உங்களுக்கு அறிமுகப்படுத்தும்போது இந்தப் பீடிகைகள் தேவையற்றவை என்றே தோன்றுகிறது. ஏனெனில் இலக்கியப் பாரம்பரியப் பெருமிதமோ, வம்சாவழிக் கசடுகளோ, இவர் மேல் பதிந்து கிடக்கக் காணோம். வாழ்க்கை இவர் மேல் நிர்ப்பந்தித்த கொடூரங்கள் யாவற்றையும் எதிர்கொண்டு இன்றுவரை அவரால் எப்படி ஒரு கவிஞனாக தன்னுடைய இருப்பை அடையாளப்படுத்திக் கொள்ள முடிகிறது என்பதில் தான் தீக்குன்னியின் சாகசம் வெளிப்படுகிறது. </div>
<div style="text-align: justify;">
ஆம்! நிச்சயமாக இது ஒரு சாகசம்தான்! சில மாதங்களின் முன்னர் நான் பவா செல்லத்துரையின் ஒரு கட்டுரைத் தொகுப்பை வாசிக்கையில் மலையாளக் கவிஞர் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு குறித்த அவரின் பதிவு ஒன்று எனக்கு மிகுந்த மனசஞ்சலத்தை அளித்தது. இன்றைக்கு தீக்குன்னியை வாசிக்கும்போது, அந்த சஞ்சலம் பலநூறு மடங்குகளானதாக உணர்கிறேன். எனினும் சுள்ளிக்காடும், தீக்குன்னியும் இரு வேறு துருவங்கள். இருவருக்குமான வாழ்க்கை இடர்பாடுகள் வேறு வேறுவிதமானவை. </div>
<div style="text-align: justify;">
ஒரு படைப்புக் கலைஞன் வறுமையை எதிர்கொள்வது இலக்கியத்திற்கு புதிய செய்தி இல்லைதான். தமிழில் பாரதியும், புதுமைப்பித்தனும் பெரும் முன்னுதாரணங்கள். இவர்கள் மட்டும் தானா என்றால் இல்லை. இவர்களுக்கு முன்னாலும், புலமைப் பாரம்பரியம் தரித்திர வயப்பட்டதாகவே இருந்திருக்கிறது. அதனால்தான் ÔÔசேர்ந்தே இருப்பது வறுமையும் புலமையும்ÕÕ என்று எழுதி வைத்தனர்.</div>
<div style="text-align: justify;">
நம்முடைய சமகால எழுத்தாளர்கள் இதைக் காட்டிலும் துன்ப துயரங்கள் படுகின்றனர். வாழ்க்கை இவர்களைப் பார்த்து பரிகசிப்பது பிறர் கண்களுக்குத் தெரிவதே இல்லை. தெரிந்தோ தெரியாமலோ இவர்கள் கலைஞர்களாக சபிக்கப்பட்டுவிட்டனர். சாபத்தை வரமாக்கிக் கொண்டு எவரிடத்தும் சமரசம் செய்துகொள்ள முடியாதவர்களாக தமிழின் உன்னதமான சிருஷ்டிகர்த்தாக்களில் பலரும் உள்ளடுங்கி ஒதுங்கி வாழும் அவலம் இன்றளவும் தொடர்கிறது.</div>
<div style="text-align: justify;">
மலையாளம் கலைஞனை மதிக்கத் தெரிந்த உலகம் என்று பேசிக்கொண்டிருக்கிறோம். பவித்ரன் தீக்குன்னியின் அனுபவங்களை வாசிக்கும்போது அச்சமும், பீதியும் நம்மையும் அறியாமல் நம்மேல் வந்து கவிந்து கொள்கிறது. 1974ல் கோழிக்கோடு மாவட்டத்தில் தீக்குன்னி என்னுமிடத்தில் பிறந்த பவித்ரனின் தாய் ஒரு பாலியல் தொழிலாளி. தந்தை மனம் பிறழ்ந்தலைபவர். ஒரு பச்சையான அயலை மீனைக் கடித்துத் தின்று கொண்டிருந்த தன் தந்தையின் வாயிலிருந்து அந்த மீனின் செவிலும், குடலும், வெளியே தொங்கிக் கொண்டிருந்த காட்சியை எவ்வித அருவருப்பும் இல்லாமல் ÔÔஒரு மீன் வியாபாரி கவிதைகள் விற்கிறான்ÕÕ என்னும் தன்னுடைய முன்னுரையில் தீக்குன்னி குறிப்பிடுகிறார். தீக்குன்னிக்கும் கூட மீன் வியாபாரம்தான். உபரியாக லாட்டரி டிக்கெட் விற்பனையும் நடத்தும் இவர் தேர்தல் காலத்தில் கம்யூனிஸ்டு இயக்கத்துக்காக மைக்கைப் பிடித்துக் கொண்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபடுவார். </div>
<div style="text-align: justify;">
சமீபமாக வாசிக்கின்ற கவிதைத் தொகுப்புகளி லெல்லாம் அபூர்வமான சில முன்னுரைகளைக் கவிஞர்கள் எழுதிவிடுகின்றனர். கவிதைகளைக் கடந்து அவை மனதை அசைத்துப் பார்த்துவிடுவது ஆச்சரியமாகவே இருக்கிறது. 79 பக்கங்களில் முடிந்துவிடும் இத்தொகுப்பில் பவித்ரன் தீக்குன்னி 22 பக்கங்களைத் தன்னுடைய முன்னுரைக்காக மட்டுமே எடுத்துக் கொள்கிறார். அந்த முன்னுரையில் அவருடைய வாழ்க்கை அவலங்கள் அப்படியே அட்சரங்களாக குற்றுயிரும், குலையுயிருமாகச் சிதறிக் கிடக்கின்றன. அவற்றை வாசிக்கும்போது பவித்ரன் பட்ட பாட்டுக்கு முன்னால் நம் துன்பம் கொஞ்சம் என்றுதான் எல்லோருக்கும் நினைக்கத் தோன்றும். </div>
<div style="text-align: justify;">
ÔÔஅம்மா ஒரு மோசமான பெண் என்று என்னிடம் யார்யாரோ சொன்னது உண்டு. அப்போதெல்லாம் எனக்கு ஒன்றுமே விளங்கவில்லை. என்றாலும் நான் ஐந்து வயது முதலே அம்மாவை வெறுக்கத் தொடங்கி விட்டேன். வெறுப்பு அதிகமானபோதெல்லாம் யாருடைய கண்களிலும் படாமல் எங்கெல்லாமோ அலைந்து திரிந்தேன். ஆனாலும் ஓயாமல் அடித்துப் பொழிகின்ற ஒரு ஆடி மாத மழையைப் போல அம்மா இன்னும் என் மனசுக்குள் இருக்கிறாள்ÕÕ என்று அவர் எழுதும்போது அம்மா பிள்ளை பாசம் குறித்து வலிந்து வலிந்து எழுதப்படுகின்ற நம் எழுத்துக்கள் எல்லாமும், பஸ்பமாகி விடுவதைப் போன்ற உணர்வு ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை. இவ்விடத்தில் எனக்கு தி.ஜானகிராமனின் Ôஅம்மா வந்தாள்Õ நாவலின் அப்பு நியாபகத்திற்கு வரவே செய்தான். அப்புவிற்கேனும் சுழித்துக்கொண்டோடும் காவிரியின் படித்துறையில் அமர்ந்து அழ வாய்த்தது. </div>
<div style="text-align: justify;">
ஒரு ஓணம் பண்டிகை நாளில் கடன் தொல்லை தாளமாட்டாமல் திருச்சூர் ரயில்நிலைய தண்டவாளத்தில் படுத்து தீக்குன்னி தன் மனைவி மக்களுடன் தற்கொலைக்கு முயற்சித்த அந்த கசப்பான பக்கங்களை உங்களிடம் விவரித்துச் சொல்ல எனக்கு மன தைரியம் போதவில்லை. ஆதலால் இம்மட்டிலும் அதை முடித்துக்கொள்கிறேன்.</div>
<div style="text-align: justify;">
ஒரு பட்டினி நாளில் தன் மகளை எடுத்து இடுப்பில் வைத்துக் கொண்டு கோயில் வாசலில் பிச்சை எடுக்கப்போகிறான் கவிஞன். Ôகவிஞன்Õ Ôகவிஞன்Õ என்று தன்னைக் கூவிக்கொண்டாலும் பிச்சை விழவில்லையே? மகளை நன்றாகக் கிள்ளிவிட்டு வலியால் அவள் வாய்விட்டுக் கதறி அழுதவுடன் தான் கொஞ்சம் போல மனிதமனம் இரங்குகிறது. சில சில்லறை நாணயங்கள் சிதறி விழுகின்றன. அதில்தான் அன்றைக்கு உணவு.</div>
<div style="text-align: justify;">
மலையாளிகள் ஏன் இத்தனை அப்பட்டமாக எழுதுகின்றனர்? அவர்களுக்கு ஏன் ஒளிவு மறைவாகப் பூசிமெழுகி எழுதத் தெரியவில்லை? என்.டி.ராஜ்குமார் ஏன் இதைத் தேர்ந்தெடுத்து மொழிபெயர்க்க வேண்டும்? இப்படியெல்லாம் எனக்கு கேட்கத் தோன்றுகிறது.</div>
<div style="text-align: justify;">
அலையடங்கிய கடலின் அவஸ்தையோடு தான் நாங்கள் இருக்கிறோம். கவிதைகளுக்குள் அதே அவஸ்தைதான் தோன்றுகிறது. நெஞ்சுக்குள் அடங்கிக் கிடக்கும் தீயைப் போல</div>
<div style="text-align: justify;">
என்று பவித்ரன் எழுதுகிறார்; மகத்தான கவிதையன்றும் நான் எழுதியதில்லை என்று சொல்லிக் கொண்டே. </div>
<div style="text-align: justify;">
வழிநெடுகத் தொடரும் வாதைகளோடும், Ôகிறுக்கனுக்க மகன்Õ என்னும் அடைமொழியோடும், தீக்குன்னி நடந்தாலும் கவிதைகள் எழுதுவதை மட்டும் நிறுத்தவில்லை. தனக்கான ஒரே Ôபாதுகாப்பு வளையம்Õ என்று அவர் கவிதைகள் எழுதுவதைத் தான் குறிப்பிடுகிறார். இந்த நெஞ்சுரம்தானே தேவை ஒரு கலைஞனுக்கு? </div>
<div style="text-align: justify;">
கவிதைகளை எளிமைப்படுத்தி விட்டார் என்றும் தன் வரலாறைக் கவிதையாக முன் வைக்கிறார் என்றும், கவிதைக்கான இறுக்கத்தைத் தரக்கூடிய சமஸ்கிருத எல்லைகளைத் தவிர்த்துவிட்டார் என்றும் இவர்மேல் ஒருபாடு குற்றச்சாட்டுகள். இந்த குற்றச்சாட்டுகள் வழியே இதுகாறும் மலையாளக் கவிதைகளின் சுயம் என்னவாக இருந்தது என நம்மால் உணர்ந்து கொள்ள முடியும். குற்றவாளிக் கூண்டில் நிற்கும் இவர்தான் இப்போதைக்கு மலையாளக் கவிதைகளின் ரட்சகன் என்று நம்மால் தீர்ப்பளித்துக் கொள்ள முடியும். </div>
<div style="text-align: justify;">
பவித்ரனின் இந்த நீண்ட முன்னுரை, அவருடைய தொகுப்புக்கு பலவீனமா, பலமா என்று சொல்லத் தெரியாமல் தத்தளிக்கிறேன். முன்னுரையைப் படித்துவிட்டு கவிதைகளை முழுமையாக அனுபவிக்க முடியாத நிலையை முதல் முதலாக இத்தொகுப்பில் தான் அடைந்தேன். பிறகு என்னை நானே தேற்றிக் கொண்டு மீண்டும் மீண்டும் கவிதைகளை வாசித்தேன். குற்றியாடி பேருந்து நிலையத்து வேசிகள் சுண்ணாம்பு தேய்த்து வெற்றிலையிட்டு சிவப்பாக்கிக் கொண்ட உதடுகளுடன் என்னை முத்தமிடத் துரத்திக் கொண்டே வருகிறார்கள். முல்லைப் பூவும் வியர்ப்பும் கலந்த விசித்திர மணத்திலிருந்து கண்ணீரின் மொழியில் ஒவ்வொரு வேசியும் ஒவ்வொரு கதை சொல்லத் துவங்குகிறாள்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
**</div>
<div style="text-align: justify;">
அழுவதற்கு கண்ணீர் கூட இல்லாத</div>
<div style="text-align: justify;">
மனைவியின் கைகளில்</div>
<div style="text-align: justify;">
இளம் சூடுள்ள இதயத்தைக்</div>
<div style="text-align: justify;">
கொடுத்து விட்டு</div>
<div style="text-align: justify;">
நான் அந்த கிணறை நோக்கி நடக்கின்றேன்</div>
<div style="text-align: justify;">
மீன் குட்டையை கழுவுவதற்கு</div>
<div style="text-align: justify;">
**</div>
<div style="text-align: justify;">
செவிள் களைந்து துண்டுகளாக்கி</div>
<div style="text-align: justify;">
கீறி மிளகு தேய்த்து எண்ணெயிலிட்டு</div>
<div style="text-align: justify;">
பேராசையோடு அவளென்னை</div>
<div style="text-align: justify;">
எவ்வளவு சீக்கிரம்</div>
<div style="text-align: justify;">
அகப்பையிலெடுக்கிறாள்.</div>
<div style="text-align: justify;">
**</div>
<div style="text-align: justify;">
ஒவ்வொரு வேசியின் நெஞ்சுக்குள்ளும்</div>
<div style="text-align: justify;">
வயது முதிர்ந்தவர்களின் மகா சமுத்திரங்கள்</div>
<div style="text-align: justify;">
அடக்கி வைக்கப்பட்டிருக்கின்றன.</div>
<div style="text-align: justify;">
கண்களில் தோல்விகளின் சவக்கல்லறைகள்</div>
<div style="text-align: justify;">
மறைத்து வைக்கப்பட்டிருக்கின்றது.</div>
<div style="text-align: justify;">
உதட்டிலும் நெற்றியிலும் வாழ்க்கையின்</div>
<div style="text-align: justify;">
கறைபடிந்திருக்கின்றது</div>
<div style="text-align: justify;">
அவற்றின் மேல் எதுவும் அறியாமல் நாங்கள்</div>
<div style="text-align: justify;">
முத்தமிட்டு திமிர்பிடித்து அலைகின்றோம். </div>
<div style="text-align: justify;">
** </div>
<div style="text-align: justify;">
இவையெல்லாம் தீக்குன்னி கவிதைகளின் சில தெறிப்புகள். பவித்ரன் தீக்குன்னியின் கவிதைகளில் வாழ்க்கையைத் தவிர வேறெதுவும் இல்லை. அது சரி... வாழ்க்கையைத் தவிர்த்து வேறென்ன வேண்டும் கவிதை எழுத?</div>
<div style="text-align: justify;">
எழுத்துப்பிழைகள் வஞ்சகமின்றி விரவிக்கிடக்கும் தொகுப்பு இது. இப்படி ஒரு படைப்புக்கு முன்னால் இது மாதிரி குறைகளெல்லாம் சாதாரணமானவைகள் தான். என்.டி.ஆர். இதை அற்புதமாக மொழி பெயர்த்திருக்கிறார் என்று சொல்வது மிக்க அலங்காரமான வார்த்தையாகிவிடும். பவித்ரனின் அசாதாரணமான வலிகளை தன்னுடையதாகவே பாவிக்க முடிந்த ஒருவரால் மட்டுமே செய்ய முடிந்த காரியம்இது.</div>
<div style="text-align: justify;">
ÔÔதான் ஒரு நல்ல கவிஞனான பிறகும் ஜீவிதம் என்பது நெஞ்சிலும் இலக்கிய அரசியல் என்பது புறமுதுகிலும் குத்திக் குத்தி எப்போதுமே இவரை புண்படுத்திக்கொண்டிருக்கிறது. சொல்லப்போனால் இங்கிருந்துதான் இவரது கவிதையே ஆரம்பமாகிறதுÕÕ என ஒரு சில வரிகளில் சுட்டி விடும் ராஜ்குமாருக்குள் பவித்ரன் தீக்குன்னி ஒரு பச்சை அயிலைமீனாக செவிலும், குடலுமாக இறங்கி வெகுநாட்களாகியிருக்க வேண்டும்.</div>
கீரனூர் ஜாகிர்ராஜாhttp://www.blogger.com/profile/16821172975494211862noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5325351298899765001.post-29182539165465017752013-03-27T02:15:00.002-07:002013-03-27T02:15:40.026-07:00கந்தாடை நாராயணசாமி சுப்ரமணியம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: center;">
ஊருக்கு உவக்காததைச் சொல்ல</div>
<div style="text-align: center;">
ஒருவனுக்குத் தனிநரகம் உண்டென்றால்</div>
<div style="text-align: center;">
அங்குதான் ஜீவிப்பேன் நான்... </div>
<div style="text-align: center;">
−க.நா.சு.</div>
<div style="text-align: center;">
<br /></div>
<div style="text-align: justify;">
மறைந்த எழுத்தாளர் க.நா.சு.வின் நூற்றாண்டு இது என்பதால் தமிழின் பெரும்பாலான சிறு பத்திரிகைகள் அவரைக்குறித்த கட்டுரைகளைக் கேட்டு எழுதி வாங்கி வெளியிட்டு ஓய்ந்திருக்கின்றன. ஒரு எழுத்தாளரின் நூற்றாண்டை இப்படி எல்லாம் விமர்சையாக கௌரவிக்க வேண்டும்தான். இயன்றால் இன்னும் அதிகமாகக் கொண்டாட வேண்டும்தான். க.நா.சு.வும் இந்தப் புகழுரைகளுக்குத் தகுதியானவரே. எனக்கும் கூட கா.ந.சு.வை எழுதவேண்டும் எனத் தோன்றியதில் ஒருவித நியாயம் இருக்கிறதுதான். ஓரளவு அவருடைய எழுத்துக்களை வாசித்தவனாக, அவருடைய இலக்கியப் பங்களிப்பைக் குறித்து அறிந்தவனாக, அவருடன் நீண்டகாலம் பழகி நிழல்போல் தொடர்ந்து சென்றதால் அவருடைய Ôவால்Õ என்று வர்ணிக்கப்பட்ட தஞ்சை ப்ரகாஷ் என்பவருடன் இருந்து, அவர் வாய்ஓயாமல் க.நா.சு.வைக் குறித்துப் பேசியதை எல்லாம் காதுகொடுத்துக் கேட்டவனாக இருந்ததால் நெருடல்கள் எதுவுமின்றி இதை எழுத முடிந்தது.</div>
<div style="text-align: justify;">
எனது பிராயத்தில், கலை கலைக்காகவா, கலை மக்களுக்காகவா என்கிற இரண்டு முக்கியமான கேள்விகளுக்கு முன், நான் சிறிதுகாலம் கலை கலைக்காகவே என்கிற வீராப்புடனும், (எனக்குப் போதித்தவர்களின் பாதிப்புகளால்) பிறகு ÔÔகலை கலைக்காகவும், கலை மக்களுக்காகவும்ÕÕ என நானே உருவாக்கிக் கொண்ட ஒருவித இரண்டும் கெட்டான் நிலைப்பாட்டுடனும், (இது Ôவிசித்ரன்Õ என்கிற பெயரில் ஆர்வக்கோளாறுடன் கையெழுத்துப் பத்திரிகை நடத்தியபோது, அதன் முகப்புக்கென நான் உருவாக்கிய ஸ்லோகம்.) பிறகு தெளிந்து, கலை இலக்கியம் யாவும் மக்களுக்கானதே என்னும் இறுதியான கொள்கைப்பிடிப்பிற்கும் வந்துசேர்ந்தவன். இம்மூன்று நிலைகளிலும் க.நா.சுவை என்னால் வேறுவேறு மாதிரியாக அணுகமுடிந்ததில்லை. என்பதுதான் ஆச்சரியம். அவர் எனக்கு எப்போதும் ஒரே மாதிரிதான் இருந்திருக்கிறார். க.நா.சு.வை குறித்த உச்சபட்ச சிலாகிப்புகளையும், காட்டமான விமர்சனங்களையும், ஒருங்கே கேட்டு வளர்ந்தவனாக நான் இருந்திருக்கிறேன்.</div>
<div style="text-align: justify;">
க.நா.சு. விமர்சனமாக எதையும் அணுகவில்லை. அவர் சிக்ஷீவீtவீநீ கிடையாது. தனது ஆழ்ந்த வாசிப்பின் வழியே ரசனை வெளிப்பாடாகத்தான் தன் கருத்துக்களை முன்வைத்தார் என்று இப்போது தமிழ்ச் சூழலில் எல்லோரும் பேசிக் கொள்கின்றோம். ஆனால் ப்ரகாஷ் எழுதுவதைப்போல் அவரை சிம்மசொப்பனமாகக் கருதியவர்கள் இங்கே இருக்கவே செய்தனர் என்பதும் உண்மைதான்.</div>
<div style="text-align: justify;">
ÔÔக.நா.சு.விற்கு கவிதை வராது. க.நா.சு.விற்கு விமர் சனம் தெரியாது. க.நா.சு. எழுதுவது இலக்கியம் அல்ல... அது சரி... அந்த என் கவிதையைப் பற்றி க.நா.சு. என்ன சொல்லியிருக்கிறார்?ÕÕ இப்படித்தான் பலரும் அப்போது அவரை வெறுத்தபடி அவருடைய அபிப்பிராயத்தை அறிந்து கொள்ளத் துடித்தனர்.</div>
<div style="text-align: justify;">
தனது எழுத்து வாழ்க்கையில் அவர் விடாது கடைப்பிடித்த சில நல்லனவற்றை, இளம் எழுத்தாளர்கள் தங்களுக்கு சாதகமாக எவ்வாறெல்லாம் உள்வாங்கிக்கொள்ளலாம் என்பதுதான் இந்தத் தொடரில் நான் க.நா.சு.வைப் பேச வந்ததன் நோக்கம். நீயோ கலை இலக்கியம் யாவும் மக்களுக்கானது என்கிறாய். அவரோ அதற்கு மாறான பாதையில் வாழ்ந்து காட்டிச் சென்றிருக்கிறார். முரணாக இருக்கிறதே? இதில் என்ன நல்லது கெட்டது?ÕÕ என்றும் ஒரு சிலர் வாதிக்கலாம். இப்படித்தான் ஒருமுறை ஒரு பெரிய எழுத்தாளரின் படைப்புகள் குறித்து நான் வியந்து பேசப்போக, நண்பர் ஒருவர் வெகுண்டு ÔÔகழிப்பறைப் பீங்கானில் சோறுண்ண முடியாது தம்பிÕÕ என்று உக்கிரமான மறுமொழி தந்தார். எல்லோருடைய ரசனையும் ஒன்றுபோல இருப்பதில்லை, இருக்காது. எதிரியானாலும் அவரிடமுள்ள நல்லவற்றை வியக்கத் தோன்றும். இது என் குணம்.</div>
<div style="text-align: justify;">
க.நா.சு.வைக் குறித்து எழுத அவருடைய பிரதான சிஷ்யரான ப்ரகாஷ் இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசையில் சாகித்திய அகாதமிக்காக எழுதிய Ôக.நா.சுப்ரமண்யம்Õ என்னும் புத்தகத்தையே தேர்ந்து கொண்டிருக்கிறேன். இது ஒரு வசதிக்காக, அவ்வளவுதான். இந்த புத்தகத்தில் ப்ரகாஷ் க.நா.சு.வைக் குறித்து பல பக்கங்களில் வியந்து வியந்து எழுதியிருக்கிறார். கூர்மையாக சீவப்பட்ட ஒரு பென்சில் முனையைக் கண்டால் கூட எத்தனை நறுவிசாக சீவியிருக்கிறான் பார் என்று பாராட்டும் உள்ளம் ப்ரகாஷடையது. அதுவே க.நா.சு. ஆனால் கேட்கத் தேவையில்லை. தமிழில் இதுவரை க.நா.சு.வைக் குறித்து எழுதப்பட்டுள்ள பல்வேறு கட்டுரைகளில் பதிவுபெறாத சில பூடகமான, அந்தரங்கமான விஷயங்கள் இந்த புத்தகத்தில் இடம் பெற்றுள்ளதாக நான் கருதுகிறேன்.</div>
<div style="text-align: justify;">
க.நா.சு. வாழ்வில் நிகழ்ந்த பல ருசிகரமான சம்பவங்களை, அவருடைய இலக்கியப் பயணம் நெடுகப் பதித்த சுவடுகளை, வறுமையை, வைராக்கியத்தை, விடாமுயற்சியை ஒவ்வொன்றையும் ஆதாரங்களைத் திரட்டி வைத்துக் கொண்டு ஒப்பிக்கிற மாணவன் போலல்லாது, ஒரு கதைசொல்லிக்குரிய தோரணையில், உணர்ச்சி மேலிட்டுக் குரல்கம்ம சொல்லிச் செல்கிறார் ப்ரகாஷ். இப்படி வேறொருவரால் சொல்லிவிட முடியாது. அறிவின்வழி நின்றும், மொழியின் துணை கொண்டும், உணர்ச்சியற்றும், வறட்டுத் தொனியிலுமே பிறரால் இதை எழுதியிருக்கமுடியும். ப்ரகாஷ் இதை எழுதவில்லை, பேசியிருக்கிறார்.</div>
<div style="text-align: justify;">
நம் எல்லோரையும் போலத்தான் பால்ய காலத்தில் நட்சத்திரங்கள் இறைந்து கிடக்கும் பின்னிரவுக் காலங்களில் ஜானுப்பாட்டியிடம் கதை கேட்பவராக க.நா.சு. வளர்ந்திருக்கிறார். கதைகேட்டு வளர்ந்தவர்களால்தான் தங்களுக்கானதொரு கற்பனா லோகத்தையும் சிருஷ்டித்துக் கொள்ள முடியும் என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம்.</div>
<div style="text-align: justify;">
ஆங்கிலத்தில் எழுதி உலகப்புகழ் பெற்று இலக்கியத்தின் கொடுமுடிகளை எட்டிவிட ஆசை கொண்டிருந்தவர்தான் அவருடைய அப்பா நாராயணசாமி அய்யர். எனவே ÔÔதமிழில் எழுதி நீ உருப்படாமல் போகாதே. ஆங்கிலமே உலகாளும் மொழி. ஆங்கிலத்தில் தான் உலக இலக்கியம் என்று ஒன்று இருக்கிறதுÕÕ என்று தன் பிள்ளைக்கு புத்திமதிகள் சொல்கிறார்.</div>
<div style="text-align: justify;">
எல்லா எழுத்தாளர்களும் பிராயத்தில் தம் பெற்றோரிடம் ஏதோ ஒரு இடத்தில் முரண் பட்டவர்கள்தாம். ÔÔஎழுத்தாளர்கள் பெற்றோர் இட்ட பெயரைத் துறந்து புனைப் பெயர் சூட்டிக்கொள்வது ஏன் தெரியுமா? தங்கள் தனித்த ஆளுமையை வெளிப்படுத்திக் கொள்ளும் பொருட்டுதான்ÕÕ என்று எனக்குச் சொல்லப்பட்டிருந்தது. நானும் இதுகுறித்து சிந்தித்துள்ளேன். ஓரளவு இந்தக் கருத்தில் உடன்பட்டும் இருக்கிறேன். ஆனால் க.நா.சு., க.நா.சுப்ரமணியம் என தூய தமிழில் தன்னுடைய முழுப் பெயருடனும், பிறகு அதன் சுருக்கமான க.நா.சு. எனவும், பின்பு ஆங்கிலத்தில் எழுத நேர்ந்தபோதுகூட ரிணீ.ழிணீணீ.su. என்றும் தான் எழுதி வந்திருக்கிறார். அதற்கு முன்புவரை கே.என். சுப்ரமணியம், கே.என்.எஸ்., என்று எழுதிக் கொண்டிருந்தவரை இப்படி மாற்றிக் காட்டியவர் Ôஅக்ரஹாரத்து அதிசயம்Õ வ.ரா.</div>
<div style="text-align: justify;">
திருமணம் எல்லாம் நடந்து முடிந்திருந்த நிலையில் Ôஎழுதிப் பிழைப்பது; அதுவும் தமிழில்Õ என்று முடிவு செய்துகொண்ட க.நா.சு., தன் அப்பாவின் முன் சென்று நிற்கிறார். இருவருக்குமான உரையாடல் தொடங்குகிறது. </div>
<div style="text-align: justify;">
என்ன?</div>
<div style="text-align: justify;">
சென்னைக்குப் போகிறேன்?</div>
<div style="text-align: justify;">
பொண்டாட்டி</div>
<div style="text-align: justify;">
அவளை பிறந்தாத்தில், சிதம்பரத்தில் விட்டு விட்டுப் போவேன்?</div>
<div style="text-align: justify;">
நான் சொன்னதைக் கேட்க மாட்டாயா?</div>
<div style="text-align: justify;">
தமிழில் எழுதப் போகிறேன்?</div>
<div style="text-align: justify;">
எழுதி சம்பாதிக்க முடியாது?</div>
<div style="text-align: justify;">
அதையும் பார்ப்போம்? </div>
<div style="text-align: justify;">
முடிவில் கையில் ஒரு டைப் ரைட்டர், கத்தைகத்தையாகக் காகிதங்கள், மொழிபெயர்ப்புகள் இவற்றோடு சென்னைக்கு ரயிலேறினார் க.நா.சு. ஆனால் க.நா.சு.வின் 76வது வயதில் தகழி சிவசங்கரன் பிள்ளை இவரை சந்தித்தபோது இப்போது எழுத்துக்கு எவ்வளவு ரூபாய் வாங்குகிறீர்ÕÕ என்று கேட்க, அவர் அளித்த பதில் ÔÔஅய்ம்பது ரூபாய்!ÕÕ</div>
<div style="text-align: justify;">
ஒரு நாளைக்கு குறைந்தது 10 பக்கங்கள் தமிழில் சுயமாக எழுதுவது, 15 பக்கங்களேனும் தமிழுக்கு மொழிபெயர்ப்பது... இது க.நா.சு. தனக்குத்தானே வரித்துக்கொண்ட விரதம். இதை வாழ்நாள் முழுக்க அவர் கடைப்பிடித்திருக்கிறார் என்பதுதான் அதிசயம். இளம் எழுத்தாளர்கள் அவருடைய இந்த உறுதியை நடைமுறைப்படுத்திப் பார்ப்பதில், நஷ்டம் எதுவும் ஏற்படப் போவதில்லை என்று எனக்குத் தோன்றுகிறது.</div>
<div style="text-align: justify;">
க.நா.சு.வின் பத்திரிகையாசிரியர் அவதாரமும் தோல்வியில்தான் முடிந்தது. அந்தக் காலத்தில் கு.ப.ரா. நடத்திய Ôகிராம ஊழியன்Õ, சாலிவாஹனின் ÔகலாமோஹினிÕ, எம்.வி. வெங்கட்ராமின் ÔதேனீÕ, சீத்தாராமனின் ÔசிவாஜிÕ ஆகிய இதழ்களுக்கு மத்தியில், தனது தீராத வறுமைக்கிடையில் க.நா.சு. துணிச்சலாகப் பத்திரிகை நடத்திப் பார்த்திருக்கிறார். ÔசூறாவளிÕ Ôசந்திரோதயம்Õ ஆகிய பெயர்களில் இதழ்களை நடத்தி பொருள் இழப்பைத்தான் சந்தித்துள்ளார். இது அப்போதைய அவருடைய கஷ்ட ஜீவிதத்திற்கு ஒவ்வாத காரியமே! ஆனாலும், இதழ் நடத்த வேண்டும் என ஆசைப்படாவிட்டால் இலக்கியவாதியாய் வாழ்ந்து என்ன புண்ணியம்? இதழ் நடத்தி காயம்பட்டு பின்னாட்களில் அந்த வீரத் தழும்புகளைத் தடவிப் பார்த்துக் கொள்வதில்தான் எத்தனை சுகம்? </div>
<div style="text-align: justify;">
தீவிரமான மொழிபெயர்ப்பாளரான க.நா.சு. தான் வியர்வை சிந்தி தமிழ்ப்படுத்தியதை எல்லாம் தூக்கிக்கொண்டு ஒவ்வொரு பதிப்பகமாக ஏறிஇறங்கித் திரிந்ததை வாசிக்கும்போது மனம் கனக்கிறது. ÔÔநான்கு திசைகளிலும் எதிர்ப்பு எனும் காலாக்னி. காலூன்றி நிற்கும் பூமிக்கடியிலோ எரியும் தணல். நிரந்தரமான பணியின்மை. ஒழுங்கான மாதச் சம்பளமின்மை. கையில் முதலின்மை, வானத்திலோ எரிக்கும் வறுமைச் சூரியன். இந்த ஷடாக்னியில் எரிந்து பொசுங்கியபடியே தன் குடும்பத்தைப் பற்றி பிரக்ஞையே இல்லாது நண்பர்கள் என்னும் எதிரிகளோடும் ஆதரவாளர்கள் என்னும் அயோக்கியர்களோடும் க.நா.சு. வாழ்ந்து வந்தார்ÕÕ என்று ப்ரகாஷ் மேலும் எழுதுகிறார்.</div>
<div style="text-align: justify;">
ÔÔநான் எழுதுவது விமர்சனமல்ல, எனக்கு விமர்சனத்தின் மேல் நம்பிக்கை இல்லைÕÕ என்று சொன்னவர்தான் க.நா.சு.! அவர் எப்படி விமர்சகர் ஆக நேர்ந்தது?</div>
<div style="text-align: justify;">
அவர் கம்யூனிச எதிரியாகப் பார்க்கப்பட்டாலும் தொ.மு.சி. ரகுநாதன் என்னும் ஒரு கம்யூனிஸ்ட் எழுதிய Ôஇலக்கிய விமர்சனம்Õ என்னும் நூல்தான் முதன் முதலில் அவரை உலுக்கியிருக்கிறது. ÔÔதமிழில் வந்த முதல் அடிப்படை விமர்சன நூல்ÕÕ என்று க.நா.சு. அதைப் பாராட்டி எழுதுகிறார். அதற்குப் பிறகுதான் தனது பிரபலமான Ôவிமர்சனக் கலைÕ என்ற நூலையும் எழுதி முடிக்கிறார்.</div>
<div style="text-align: justify;">
வ.விஜயபாஸ்கரன் நடத்திய கம்யூனிச இதழான Ôசமரன்Õ அவரே நடத்திய இலக்கிய இதழான Ôசரஸ்வதிÕ ஆகியவற்றில் க.நா.சு. வின் கட்டுரைகள் விமர்சனங்கள் தொடர்ந்து வெளியாகியுள்ளன. ÔÔமாற்றுக்கருத்தை மதிக்கிற மனப்பண்பு இலக்கியப் பண்பாடு கம்யூனிஸ்டுகளிடம்தான் உருவாகி இருந்ததுÕÕ என்று ப்ரகாஷ் இதைப்பற்றி எழுதுகிறார். </div>
<div style="text-align: justify;">
Ôஇலக்கிய வட்டம்Õ அமைப்பின் மூலமாக Ôஎதற்காக எழுதுகிறேன்Õ, Ôஎன்ன படிக்கிறேன்Õ போன்ற தலைப்புக்களில் இலக்கியக் கூட்டங்களை ஆரோக்கியமான வழியிலே நிகழ்த்திக் காட்டியதும் அவருடைய பணிகளுள் குறிப்பிடத் தக்கது.</div>
<div style="text-align: justify;">
ÔÔஎல்லாவற்றையும் ஒரே வெட்டில் வெட்டி வீழ்த்தி, தான் மட்டுமே அவதாரம் எடுத்திருப்பதாக ஒரு மாயையை உருவாக்கி, தமிழ் இலக்கியப் போக்கை சவுக்கடி கொண்டு வீசிச்சுழற்றி 1950களில் வெளிவந்த சுதேசமித்திரன் தீபாவளி மலரில் அவர் எழுதிய நவீனத் தமிழ் இலக்கியத்தின் தாக்கம், தேக்கம், வீக்கம் என்ற மகத்தான கட்டுரை...ÕÕ என்று ப்ரகாஷ் ஓரிடத்தில் எழுதுவதை நாம் கூர்ந்து கவனிக்க வேண்டியுள்ளது. ÔÔஎல்லாவற்றையும் ஒரேவெட்டில் வெட்டி வீழ்த்தி தான் மட்டுமே அவதாரம் எடுத்திருப்பதாக ஒரு மாயையை உருவாக்கி...ÕÕ</div>
<div style="text-align: justify;">
தமிழில் சுமார் 20 நேரடி நாவல்களை க.நா.சு. எழுதியிருக்கிறார். ஒரு நாள், அசுரகணம், பொய்த்தேவு, கோதை சிரித்தாள், தாமஸ் வந்தார், அவதூதர், பித்தப்பூ போன்றவை நுட்பமான வாசகர்களின் தேடலுக்குக் கிடைத்தவை. பித்தப்பூ நாவலை ப்ரகாஷே தன் சொந்த செலவில் வழக்கமான பாணியில் அச்சுப் பிழைகளுடன் வெளியிட்டார்.</div>
<div style="text-align: justify;">
இவற்றுள் எல்லாம் தலையாய பணி என்று நான் கருதுவது, நோபல்பரிசு பெற்ற நாவல்களாகத் தேடிப்பிடித்து க.நா.சு. தமிழில் மொழிபெயர்த்துத் தந்ததுதான். இதை அவரைத்தவிர வேறெவரும் செய்ததில்லை. நிலவளம், மதகுரு, பாரபஸ், தாசியும் தபசியும் போன்ற அயல்மொழி நாவல்கள் இப்பட்டியலில் அடங்கும். மயன் என்கிற தனது புனைப்பெயரில் க.நா.சு. எழுதிய கவிதைகள் Ôமயன் கவிதைகள்Õ எனப் பதிப்பிக்கப்பட்டுள்ளன.</div>
<div style="text-align: justify;">
அழகி, தெய்வஜனனம், மணிக்கூண்டு என அவருடைய சிறுகதைத் தொகுப்புகளும் அடுத்தடுத்து வெளிவந்திருக்கின்றன. பின்னாளில் இவை ÔÔக.நா.சு. கதைகள்ÕÕ என தொகுக்கப்பட்டுள்ளது.</div>
<div style="text-align: justify;">
ÔÔபல கதைகள் கதைகளாகவே தோன்றாது. நிகழ்ச்சிகளாகவும்,செய்திகளாகவுமே தோற்ற மளிக்கும். அவைகளுக்கு ஒன்றுமில்லாதது போன்ற தோற்றமுண்டு. ஆனால் மிக ஆழமான முக்குளிப்பில்தான் இது தெள்ளத் தெளியவரும்?ÕÕ என்று அபிப்ராயம் எழுதும் ப்ரகாஷ் சில கதைகளைக் கோடிட்டுக்காட்டி அதன் உள்ளடக்கத்தைச் சிலவரிகளிலேயே கூறும்போது நமக்கும் முக்குளிக்கத்தான் தோன்றுகிறது.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
க.நா.சு.வின் இலக்கியப் படைப்புகள் குறித்து முழுமையாக ஆய்வு செய்து ஒரு விமர்சன நூல் எழுதுவதும்கூட முக்கியமானதுதான்.</div>
<div style="text-align: justify;">
புதிய நூல்கள் வெளிவந்தவுடன் அதை வெளியிட்ட பதிப்பகத்துக்கே சென்று, வாங்கிவந்து, விமர்சனமும் எழுதுவார் க.நா.சு. என்றறியும்போது, கிணற்றில் போட்ட கற்களாகத் தூங்கும்.. சமகாலத் தமிழ்நூல்களின் கையறு நிலையை நான் நினைத்துப் பார்த்துக் கொண்டேன். பெருமூச்சொன்று வெளிவந்தது.</div>
<div style="text-align: justify;">
ÔÔஅவர் எழுதிய பல்லாயிரக்கணக்கான பக்கங்கள் இன்னும் அச்சேறவில்லை.ÕÕ என்று ப்ரகாஷ் ஆதங்கப்பட்டிருக்கிறார். க.நா.சு.வின் நூல்கள் நாட்டுடமையாக்கப்பட்டவுடன் இடதுசாரிப் பதிப்பகங்கள் நீங்கலாக பல பதிப்பகங்கள் ஏற்கெனவே வெளிவந்த அவருடைய பல நூல்களையும் ரொட்டியைத் திருப்பிப்போடுவதுபோல திருப்பிப் போட்டனவே தவிர, புதிய அச்சேறாத அவருடைய எழுத்துக்களைத் தேடிப் பயணிக்கவில்லை என்பது வேதனைக்குரிய சங்கதி. தமிழின் துர்ப்பாக்கியம் இதுதான். </div>
<div style="text-align: justify;">
க.நா.சு கடைசிவரை வெளிப்படையாகக் கம்யூனிச எதிர்ப்பைக் காட்டியவர். இந்தப் புத்தகம் முழுக்க இது சாகித்ய அகாடமி வெளியீட்டிற்காக எழுதுவது என்பதையும் கடந்து ப்ரகாஷ§ம் கம்யூனிஸ்ட்கள் கம்யூனிஸ்ட்கள் என்று பக்கத்துக்கு பக்கம் எழுதித் தள்ளியிருக்கிறார். க.நா.சு. மீது நமக்கு முழுக்க விமர்சனங்கள் உண்டு. ஆனால் அதைப் பேசுவதற்கான இடம் இதுவல்ல.</div>
<div style="text-align: justify;">
நான் ஏற்கெனவே குறிப்பிட்டதைப் போல, இந்த இடத்தில் தமிழ் இலக்கியத்திற்கு அவர் ஆற்றியுள்ள நல்லனவற்றை மட்டுமே கருத்தில் கொள்வோம். </div>
<div style="text-align: justify;">
ÔÔஏறத்தாழ 40 ஆண்டுகள் அவருடன் பழகிய உங்களை, உங்கள் படைப்புகளை ஏன் க.நா.சு. பாராட்டவில்லை?ÕÕ என்று ஒரு சந்தர்ப்பத்தில் தஞ்சை ப்ரகாஷிடம் ஒரு எழுத்தாளர் கேட்க நேர்ந்தது. ப்ரகாஷ் அதற்கு ÔÔஅப்படிப் பாராட்டும் விதமாக என் எழுத்தில் எந்தவிதமான சிறப்பையும் க.நா.சு. காணவில்லை என்பதுதான் உண்மையாக இருக்கும்ÕÕ என்று சொல்கிறார்.</div>
<div style="text-align: justify;">
அவர்தான் க.நா.சு.!</div>
<div style="text-align: justify;">
***</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
க.நா.சுப்ரமண்யம்/ தஞ்சை ப்ரகாஷ்</div>
<div style="text-align: justify;">
சாகித்திய அக்காதெமி, சென்னை- 600 018.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
கீரனூர் ஜாகிர்ராஜாhttp://www.blogger.com/profile/16821172975494211862noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5325351298899765001.post-72307077219521569712013-03-27T02:10:00.003-07:002013-03-27T02:10:43.570-07:00பயனற்ற கண்ணீர்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
எழுதவந்த எல்லோரும் கவிதையிலிருந்துதான் எழுத்து வாழ்க்கையைத் துவக்குகிறோமாயிருக்கும். அது சிறு டைரிக்கிறுக்கலாகவே இருந்தாலும் எழுத வேண்டும் எனும் முதல் உந்துதலை எழுதுகிறவனுக்குத் தருவது கவிதைதான். தயக்கம், குழப்பம், மயக்கம் எல்லாமும் கொண்ட தொடக்ககால எழுத்தாளனைக் கவிதாமோகினி தான் கரம்பற்றி அணைத்து பயம் தெளிவித்து அழைத்து வருகிறாள். பதின்வயது மனம் எப்போதும் அதன் அலைபாயும் குணாம்சங்களுடன் மொழியின் மீதும் மெல்லிய மோகமுற்றுத் தவிக்கிறது. கொஞ்சம் காதல் கொஞ்சம் சமூகக் கோபங்கள், லட்சிய தாகம், எல்லா வேகங்களும் கலந்த கலவைதான் அவன். இவ்வுலகின் மீதான முதல்பதிவை, அல்லது முதல் விமர்சனத்தை கவிதையாகத்தான் அவனால் உருவாக்க முடிகிறது. அது கவிதையா இல்லையா என்பது குறித்து யாரும் அபிப்ராயம் கூற முடியாது. கூறினாலும் அதைக்குறித்து அவனுக்கு லட்சியமில்லை.</div>
<div style="text-align: justify;">
எழுத்தின் பக்கமே அண்டாத சாதாரண மனிதனும் கவிதை என்கிற பெயரில் எதையாவது எழுதிக் கொண்டுதான் இருக்கிறான். அதிகபட்சமாக அதன் வாசகனாகவும் அவனே இருக்கிறான். இப்படிப்பட்ட அந்தரங்க எழுத்துக்காரர்கள் எங்கும் நீக்கமற நிறைந்து இருக்கின்றனர். அவர்களுக்குப் பிரசுரம், பத்திரிகை, பதிப்பு, வாசகர்கள் என்னும் பிரச்சனைகளில்லை. </div>
<div style="text-align: justify;">
பாரதி பெருங்கொண்ட தைரியத்துடன் Ôஎமக்குத் தொழில் கவிதைÕ என்று முழங்கினான். எல்லோராலும் இப்படிச் சொல்லிவிட முடியாது. ஏனெனில் கவிதை வடிவம் எல்லோருக்கும் இலகுவாக வசப்படுவதில்லை. கவிதை எழுத இலக்கணப் பயிற்சி அவசியமாக இருந்தது அந்தக் காலத்தில்! எப்போதும் மரபுக் கவிதைக்கு இலக்கணப் பயிற்சி தேவைதான். கற்பனையே ஆனாலும் கடவுள் எழுதிய கவிதையிலேயே குற்றம் கண்டு பிடித்த பெரும் புலமைப் பரம்பரை நம்முடையது. Ôசொல்லில் குற்றமா அல்லது பொருளில் குற்றமாÕ என்று கேட்க, Ôசொல்லிற் குற்றமில்லை இருப்பினுமது மன்னிக்கப்படலாம், பொருளில்தான் குற்றம்Õ என கீரன் கூற ஏற்பட்ட அமளிதுமளிகளுக்கிடையில் மன்னன் பதற்றத்துடன் எழுந்து கேட்டுக் கொள்வான் ÔÔபுலவர்களே சாந்தமாக உரையாடுங்கள்ÕÕ </div>
<div style="text-align: justify;">
கவிதை குறித்த மோதல்கள் காலம் தோறும் நடைபெறுகின்றன தான். இலக்கியத்தில் சர்ச்சைகள் தான் சுவாரஸ்யம். சர்ச்சைகளில்லாது போனால் இலக்கிய உலகம் ஸ்தம்பித்துப் போய்விடும். ஆனால் தனிப்பட்ட காழ்ப்பின் காரணமாக எழும் சர்ச்சைகளில் இல்லை எவ்வித சுவாரஸ்யமும். தமிழின் முக்கியக் கவியாகக் கருதப்படும் பிரமிளின் கவிதைகளை முன் வைத்து வெங்கட்சாமிநாதனுக்கும் தமிழவனுக்கும் ஒருகாலத்தில் யுத்தம் நடந்தது. பிரமிளின் பல புகழ்பெற்ற படிமங்களை மாயக் கோவ்ஸ்கி, டி.எஸ்.எலியட், பாப்லோ நெரூடாவின் பாதிப்புகள் என்றார் தமிழவன். Ôஇரவினுள் புதைந்து முடங்கிக் கிடக்கும் நிழல்கள்Õ என்னும் பிரமிளின் வரி மாயக்கோவ்ஸ்கியின் விமீஸீ ணீக்ஷீமீ ஷ்மீபீரீமீபீ றீவீளீமீ sலீணீபீஷீஷ்s, கண்ணாடிப் பாலை மீது நடுக்கம் பிறக்கிறதுÕ பாப்லோ நெருடாவின் ஜிலீமீக்ஷீமீ ணீக்ஷீமீ னீவீக்ஷீக்ஷீஷீக்ஷீs tலீமீஹ் னீust லீணீஸ்மீ ஷ்மீஜீt யீஷீக்ஷீ sலீணீனீமீ ணீஸீபீ யீக்ஷீவீரீலீt, இழந்த படிமங்களைக் கணக்கில் வைÕ எலியட்டின் ணீ லீமீணீஜீ ஷீயீ தீக்ஷீஷீளீமீஸீ வீனீணீரீமீs என்று ஒப்பிட்டுச் சொன்னார் தமிழவன். ஆனாலும் பிரமிள் இன்றளவும் தமிழின் முக்கியக் கவியாகவே மதிக்கப்படுகிறார்.</div>
<div style="text-align: justify;">
1970-80களில் பல கல்லூரி மாணவர்களுக்கு மனப்பாடமாக இருந்த மு.மேத்தாவின் கண்ணீர்ப் பூக்கள் தொகுப்பை வாசித்து ÔÔஇவர் இதுவரை கவிதைகளே எழுதவில்லை. இனி எப்போதாவது எழுதலாம். இந்தியாவில் பிறந்த ஒவ்வொருவரும் குடியரசுத் தலைவர் ஆகலாம் என்கிற மாதிரிÕÕ என்று காட்டமாக விமர்சித்தார் வெங்கட்சாமிநாதன். கண்ணீர்ப் பூக்களின் அடுத்த பதிப்பில் மு.மேத்தா வெ.சா.வின் இந்த விமர்சனத்தையும் சேர்த்துக் கொண்டார். இது ஒரு எதிர்வினையாகவும் அமைந்தது. தஞ்சாவூர் பெரியகோவில் புல்வெளி இலக்கிய சந்திப்புகளில் அப்போதுதான் எழுதி ஈரம் உலர்வதற்கு முன் வாசிக்கப்பட்ட சில புதிய நண்பர்களின் கவிதைகளை “திணீறீறீs றிஷீமீtக்ஷீஹ்” என்று சொல்லி ப்ரகாஷ் மட்டையடியாக நிராகரித்ததைக் கண்டு நான் பதறிப் போயிருக்கிறேன்.</div>
<div style="text-align: justify;">
ஒரு படைப்புக்கான விமர்சனம், எதிர்வினை, மறுவினை இவை எல்லாம் இலக்கிய உலகில் சகஜம். நன்றாக இல்லை என்று சொல்லி விடுவார்களோ என அஞ்சி ஒரு எழுத்தாளன் படைக்காமல் நிறுத்திவிடுவதில்லை.</div>
<div style="text-align: justify;">
புதுக்கவிதை இயக்கம் வலுப்பெற்ற பிறகு மரபிலக்கணம் குறித்து கவலைப்படாமல் எவர் வேண்டுமானாலும் கவிதை எழுதலாம் என்கிற நிலை உண்டானது. இதைப் பயன்படுத்திக்கொண்டு நிறைய குப்பைகள் சேர்ந்தன, உண்மைதான். ஆனால் புதுக்கவிதையை உரிய இடத்திற்கு உயர்த்தியவர்களுக்கு மரபுப் பரிச்சயமுமிருந்தது. ந.பிச்சமூர்த்திக்கு மரபு தெரியாது என்று சொல்லமுடியாது. வானம்பாடிகளில் பலரும் தமிழை முறையாகக் கற்றவர்கள்தான். கல்யாண்ஜி, கலாப்ரியாவும், விக்ரமாதித்யனும் அப்படித்தான். அது அவர்களுக்கு கூடுதல் பலமாக இருந்தது. ஆனால் மரபுப் பரிச்சயமிருந்துதான் புதுக்கவிதை எழுதவேண்டும் என்கிற நிலை இல்லை. புதுக்கவிதை நவீன கவிதையாகப் பரிணாமம் அடைந்தபிறகு எழுதிய பலருக்கும் மரபு தெரிந்திருக்கவில்லை. அப்படியரு அவசியமுமில்லை. ஆனால் மரபுக் கவிதையைப் போல நிறையக் கவிதைகளை, அதன் வரிகளை ஞாபகத்தில் வைத்திருக்க முடிவதில்லை. நவீன கவிதையின் ஓசையைத் துறந்த தன்மைதான் இதற்கு காரணம். இது தான் நவீன கவிதையின் சுயம்</div>
<div style="text-align: justify;">
***</div>
<div style="text-align: justify;">
சிவகாமியின் Ôபயனற்ற கண்ணீர்Õ கவிதைத் தொகுப்பை வாசித்தேன். இந்தத் தலைப்பு என்னை மிகவும் ஈர்த்தது. கண்ணீருக்கான பயன் இருக்க வேண்டும். பயனற்ற கண்ணீரால் எதுவும் நேர்ந்துவிடப் போவதில்லை என்று உணர்த்துவதைப் போன்ற தலைப்பு. சிவகாமி ஒரு பெண் என்பதாலும் என்னை அதிகம் யோசிக்க வைத்த தலைப்பு. பெண்களின் ஆயுதமே கண்ணீர்தான் என்று நமக்கு சொல்லப்பட்டிருக்கிறது. லௌகீஹ வாழ்க்கையை முன்வைத்து உதிர்க்கப்பட்ட சம்பிரதாயமான வார்த்தை அது. மட்டுமல்ல, ஆணாதிக்க மனோபாவத்திலிருந்து தோன்றும் பல்வேறு சொல்லாடல்களில் இதுவும் ஒன்றுதான்.</div>
<div style="text-align: justify;">
முக்கியமாக சிவகாமி இந்தத் தொகுப்பின் மூலமாகப் பேச வருவது சமகாலப் பெண்கவிஞர்கள் எழுதிச் செல்லும் உடலரசியல் அல்ல. அரசியல்!</div>
<div style="text-align: justify;">
சிவகாமியின் கவிதைகளைக் காட்டிலும் அவர் எழுதியிருக்கின்ற முன்னுரை மிக முக்கியமானது. இதனால் அவருடைய கவிதைகளைக் குறைத்து மதிப்பிடுவதாக நீங்கள் கருதக்கூடாது. அண்மையில் பெண்கவிகள் எழுதிய எந்தத் தொகுப்பிலும் இப்படி ஒரு அர்த்தச் செறிவுள்ள முன்னுரையை நான் வாசிக்கவில்லை. உதாரணத்துக்கு இரண்டு பத்திகளைச் சொல்ல முடியும்.</div>
<div style="text-align: justify;">
1. ÔÔபார்ப்பன எதிர்ப்பு தமிழில் சரியாக விளங்கிக் கொள்ளப்பட்ட அளவு சாதி ஒழிப்பு விளங்கிக் கொள்ளப்படவில்லையெனில் இதில் மொழியின் குறைபாடு என்ன? பூர்வ பௌத்தர்கள் என்றறியப்பட்ட தலித் மக்கள் இந்து ஒடுக்குமுறைக்கெதிராக தங்களை இந்துக்கள் அல்ல என்று அறிவித்துக் கொண்டது போல, சாதியத்தை வேரறுக்கத் தமிழரில்லை என அறிவித்துக் கொள்ள இயலுமா? இந்தக் கேள்வியில் மொழிக்கான அத்தனை முக்கியத்துவமும் சரிந்து தரைமட்டம் ஆகி, ஆவியாகிக் கரைவதைப் பார்க்கையில் மொழியின் போதாமை கையறு நிலைக்கு என்னைக் கொண்டு செல்கிறதுÕÕ</div>
<div style="text-align: justify;">
2. ÔÔஉரை நடையில் எளிதாக விரித்து எழுதுகின்ற விஷயங்களை இடமற்ற கவிதைச் சிமிழுக்குள் அடைக்க பொருத்தமான வார்த்தைகளைத் தேடி அலைகின்றேன். எத்தனை குறைவானது எனது அகராதி என்பதை திரும்பத் திரும்ப முன்னுக்கு வந்து நிற்கின்ற சில சொற்கள் மூலம் அறிகின்றேன். பிறகுதான் புலப்படுகின்றது அவை சொற்களல்ல. திரும்ப அசைபோட்டு உருவாக்கி வைத்துள்ள உணர்வுகளென...ÕÕ</div>
<div style="text-align: justify;">
சிவகாமி எனக்குப் புனைவெழுத்தின் வழியே நாவலாசிரியராகத்தான் முதலில் அறிமுகம். எனது வாசிப்பனுபவத்தின் வாயிலாக அவருடைய Ôபழையனகழிதலும்Õ நாவல் அவரைக் குறித்த வலுவான சித்திரத்தை என்னுள் வார்த்து வைத்திருந்தது. கௌரி என்கிற பெண்ணிற்கும் காத்தமுத்து என்கிற தந்தைக்கும் இடையிலான நேசம், பின்பு முரணாகி கண்ணெதிரில் காத்தமுத்துவின் நாயகன் பிம்பம் கலைந்து போவதை கலாபூர்வமாகச் சித்தரித்திருப்பார் சிவகாமி. அதிகமும் சுயவிமர்சனம் செய்துகொண்டு எழுதப்பட்ட தலித் படைப்பாக இதை நான் இன்றைக்கும் மதிக்கிறேன். குறுக்குவெட்டு, ஆனந்தாயி உள்ளிட்ட அவருடைய பிற புதினங்களும் இதே மதிப்பீட்டில் வைத்துப் பார்க்கத்தக்கனவே.சிவகாமியின் முதல் கவிதைத் தொகுப்பு என் வாசிப்புக்கு கிடைக்கவில்லை. எனவே பயனற்ற கண்ணீரே நான் வாசித்த அவருடைய முதல் தொகுப்பு.</div>
<div style="text-align: justify;">
ÔÔஅரசியலை அழகின் மேன்மை குறையாது மக்கள் முன்பு நீதியின் கூண்டில் நிறுத்திடும் ஆசை மேலிடுகிறது. அரசியலைக் கவிதையிலிருந்து நீக்கம் செய்தல் தாழி உடைத்து வெண்ணெய் வழிப்பது போலிருக்கிறதுÕÕ</div>
<div style="text-align: justify;">
என முன்னுரையில் எழுதிச் செல்லும் சிவகாமி அவ்வழி நின்றே 66 கவிதைகளையும் படைத்துள்ளார். ஒவ்வொரு கவிதையையும் அதனதன் அரசியல் அழகியலோடு விரிவாகப் பேச வேண்டும். அதற்கு இன்னொரு சந்தர்ப்பம் வாய்க்கும் என்று நம்புகிறேன்.</div>
<div style="text-align: justify;">
Ôசிறுமிகளின் சடலங்களில் கருணைÕ என்கிற தலைப்பில் அவர் எழுதியுள்ள கவிதையின் கடைசி வரிகளை மட்டும் பெரும் மனப்பதற்றத்துடன் இங்கே முன் வைக்கிறேன்.</div>
<div style="text-align: justify;">
முட்புதர்களில் ஒளித்து வைக்கப்பட்டு</div>
<div style="text-align: justify;">
வல்லுறவு கறைகளுடன் கிடந்த</div>
<div style="text-align: justify;">
பூக்களின் கடைவாய்ப் பற்களில்</div>
<div style="text-align: justify;">
முழுதும் தின்று முடிக்காத</div>
<div style="text-align: justify;">
பாதி சாக்லேட்டைப் பார்க்கும்போது</div>
<div style="text-align: justify;">
கதறி அழுகிறது கருணை</div>
<div style="text-align: justify;">
அதன் நேரம் குறைக்கப்பட்டதென்று.</div>
<div style="text-align: justify;">
***</div>
<div style="text-align: justify;">
நண்பரின் கவிதைகளுக்கு முன்னுரை எழுதுவது சுகானுபவம். மதிப்புரை தருவது கடினம். வே.பாபு சேலத்துக்காரர். தக்கை என்னும் இலக்கிய அமைப்பையும் அதே பெயரில் இதழையும் நடத்தி வருகிறார். சேலம் மாவட்ட தமுஎகசவிலும் பாபு ஒரு முக்கியஸ்தர். டிராவல்ஸ் ஒன்றின் நிறுவனர். விருந்தோம்பலில் சிறந்தவர். அதிர்ந்து பேசமாட்டார் அத்திபூத்தாற்போல கவிதைகள் எழுதுவார். அதுவும் ரத்தினச் சுருக்கமாக, ஆனால் கவிதையாக.</div>
<div style="text-align: justify;">
38 வயதாகும் பாபு ஒரு பிரம்மச்சாரி. திருமணம் செய்து கொள்ளாதவர். அப்படி ஒரு எண்ணமும் இல்லாதவர். எங்கள் முந்தைய சந்திப்பிலும் இதை அவர் உறுதிப்படுத்தினார். கவிதை சரியா, பழுதா என்பதைச் சொல். இதை எல்லாம் இங்கே ஏன் எழுதுகிறாய் என்று நீங்கள் கேட்கலாம். ஆனால் எழுதித்தான் ஆக வேண்டும். பாபுவின் கவிதைகளை வாசிக்கையில் uஸீபீமீக்ஷீ நீuக்ஷீக்ஷீமீஸீt ஆக ஓடிக் கொண்டிருக்கிற பல்வேறு பிரச்சனைகளுக்கும் இந்த பிரம்மச்சர்யத்துக்கும் தொடர்பிருப்பதாகவே நான் கருதுகிறேன். இது என்னுடைய ஒருவரி விமர்சனம்.</div>
<div style="text-align: justify;">
Ôமதுக்குவளை மலர்Õ என்று அவர் வைத்திருக்கிற தலைப்பே விநோதம். குவளை மலர்களை மட்டுமறிந்தவர்களுக்கு இது சற்றுக் குழப்பம். பாபுவின் தொகுப்பே மொத்தத்தில் ஒரு விநோத ரஸ மஞ்சரிதான். இப்போது பாபு பதிப்பாளராகவும் அவதாரமெடுத்திருக்கிறார். சூல்ச்சிக்கணும் பாபே! (கவனமாக இருங்கள் பாபு) அவர் பதிப்பித்த 3 புத்தகங்களுக்கும் சென்ற மாதம் சென்னையில் வைத்து ஒரு விமர்சனக் கூட்டம் நடந்தது. பாபுவின் கவிதைகளைக் குறித்து விமர்சனக் கட்டுரை வாசித்த ஒருவர் பாபுவின் தமுஎச, இடதுசாரி இயக்கத் தொடர்பு குறித்து சற்றுக் கிண்டல் தொனிக்கப் பேசினார். ஏற்புரையின்போது பாபு பதில் சொன்னார். அதுவும் அத்தனை சாந்தமாக, புன்னகையுடன் ஆனால் அழுத்தமாக ÔÔநீங்கள் எதுவேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளுங்கள் நான் எப்போதும் கம்யூனிஸ்ட்தான். தமுஎகச தான்ÕÕ சபாஷ் பாபு! இடதுசாரிகளைக் கிண்டலிப்பது தமிழ்நாட்டில் இப்போது ஒரு ஃபேஷன். இது அவர்களையே கிண்டல் செய்துகொள்வது தானன்றி வேறென்ன?</div>
<div style="text-align: justify;">
தொகுப்பெங்கும் அம்மு என்கிற பெண் வெற்றிலையின் மத்தியில் ஓடும் நரம்பு மாதிரி நெடுகப் பரந்திருக்கிறாள். பாபுவின் சுவாசப்பை அந்தப் பெண்ணின் கக்கத்திலிருக்கிறது. கவிதையின் தொடக்க வரிகளை பாபு அனாயசமாக எழுதிச்செல்லும் முடிப்பில் எப்போதும் ஒரு அதிர்வைத் தந்துவிடுவதில் குறியாக இருக்கிறார்.</div>
<div style="text-align: justify;">
ஒரு சின்னஞ்சிறு பூ என் மதுக்கோப்பையினுள் வந்து விழுகிறது அது அம்முதான்... மதுவோடு இலையைக் குடிப்பவன் பிறகு கிளையை மரத்தை குடிக்கிறான் இறுதியாக ஒரு வனத்தை... இலட்சத்தில் ஒருவனுக்குத்தான் அபூர்வ மலர் கிடைக்கிறது அது உதிரும் தறுவாயில்... ஒருநொடி இறந்தவனின் கண்கள் திறந்து மூடுகின்றன... அதிர்விலிருந்து மீளாதொரு நிலையில் கண்டேன் வண்ணத்துப் பூச்சியின் உடலை எறும்புகள் இழுத்துச் செல்வதை.. ஒரு கணம் ஒளி மிகுந்ததாய் மாறி சட்டென மூழ்குகிறது கனத்த இருளுக்குள் வீடு... பறவைகளில்லா கூண்டுகள் மிக அழகானவை..</div>
<div style="text-align: justify;">
இவ்வாறு வெவ்வேறு கவிதைகளின் முடிப்பு வரிகளை எழுதும் இவர் ஓரிடத்தில் எழுதுகிறார் ÔÔமுடிவுகளைப் பற்றி இருவருக்குமே தெரியும். நம் பிரச்சனைகளெல்லாம் ஆரம்ப வரிகளைப் பற்றித்தான்.ÕÕ</div>
<div style="text-align: justify;">
நான் மீண்டும் மீண்டும் வாசித்தபோது கண்டடைந்தது இவருள் இயங்கும் ஒருவித உளவியல் கூறுகளுள்ள கவிதா மனோபாவத்தைத் தான். மனுஷ்யபுத்திரனின் தொடக்ககாலக் கவிதை மனம் பாபுவிற்குள் இயங்குகிறது என்றும்கூட சொல்வேன். இதை அவர் வளர்த்தெடுக்க வேண்டுமென்பது என் ஆசை. ஆனால் அவரை இன்றைக்கு எழுதுகின்ற எல்லா இளைஞர்களுடனும் ஒப்பிட்டுவிட முடியாது. தன்னுடைய மேதைமை குறித்த பெரிய எதிர்பார்ப்புகளில்லாத மனிதன். தோன்றும்போது எழுதி, தானே பல நாட்கள் அதை அசைபோட்டு ரசித்து, வாய்க்குமானால் வாசகனுக்கும் பாவிக்கத் தரும் ஒருமாதிரியான பரபரப்பில்லாத தன்மை.. சித்தன் போக்கு!</div>
<div style="text-align: justify;">
கொண்டாட்டங்களையும், குமுறல்களையும் உலர்ந்த வரிகளால் எழுதுகிறார் பாபு. ÔÔநீ சொல்லியபடி வரைந்தபடி இல்லை பறவைகள் நேரில் பார்த்தபோது பறவைகளாக இருந்தன பறவைகள்ÕÕ என்பன போன்ற குறுங்கவிதைகள் வெறுமனே ஆரவாரமின்றி நம்மை நோக்கிப் பாய்ந்து வந்து கணநேரத்தில் வேறொரு அர்த்ததளத்திற்கு கொண்டு போய் நிறுத்துகின்றன. இது ஆகாச ராட்டினப் பெட்டியின் மேலிருந்து விருட்டென அந்தரத்தில் பரவுகின்ற உணர்வைத் தந்துவிடுகிறது. </div>
<div style="text-align: justify;">
சிலவற்றைத் தவிர்த்திருக்கலாமோ எனத் தோன்றுகையில் இப்படிச் சொல்வது நியாயம்தான் என்றும் தோன்றுகிறது. முழுக்கவும் தானே விரும்பி வழி நடத்தும் ஒற்றையடிப் பாதையிலேயே நகர்வதால் சமூகப் பிரச்சனைகளைக் கையாளும்போது கவிஞன் நிராயுதபாணியாக நிற்கிறான், இதுபோன்ற தொகுப்புகளில் இப்படி நிகழும்தான், தவிர்க்க முடியாது.</div>
<div style="text-align: justify;">
***</div>
<div style="text-align: justify;">
கூப்பு ரோட்லே</div>
<div style="text-align: justify;">
கையில கெடாய்த்தும்</div>
<div style="text-align: justify;">
இருளனெ வெலாக்கி</div>
<div style="text-align: justify;">
தூக்கி பெணாங்கி மெதிச்சான்</div>
<div style="text-align: justify;">
எச்சாவோ நிந்த</div>
<div style="text-align: justify;">
காண்ரீட்டுகாரனே--</div>
<div style="text-align: justify;">
ராஜா</div>
<div style="text-align: justify;">
இப்படித்தான் புதிராகத் துவங்குகிறது லட்சுமணனின் Ôஒடியன்Õ கவிதைத் தொகுப்பு. கூப்பு ரோடு -- காட்டில் வெட்டிய மரங்களை எடுத்துப்போக வனத்துறைபோடும் சாலை, கெடாய்த்தும் கிடைத்தும், வெலாக்கி -- விலக்கி, பெணாங்கி- - சபித்து, எச்சாவோ நிந்த -- எங்கேயோ நின்ற, ராஜா - -யானை இவ்வாறு கவிதையை வாசிக்கிற பலருக்குப் பிடிபடாமலிருக்கிற இருளர் மொழிக்கு அந்தந்தப் பக்கத்திலேயே மெனக்கெட்டு விளக்கங்களையும் தருகிறார் லட்சுமணன்.</div>
<div style="text-align: justify;">
ÔÔஎனக்கு அறிமுகமான இருளர் பழங்குடி மக்கள் பற்றிய கவிதைகளை அவர்கள் மொழியான இருளர் மொழியிலேயே எழுதியிருப்பது வாசகனை சித்திரவதைப்படுத்தும் நோக்கத்திலல்ல, அவர்களிடம் கேட்டதை, கேட்டபடி, எழுத்து வடிவம் இல்லாத அவர்கள் மொழியிலேயே கொடுப்பதுதான் சரியாக இருக்கும் என்பதாலும் தான்ÕÕ என்று முன்னுரையில் நியாயப்படுத்தும் லட்சுமணனுக்கு இதைச் செய்யவேண்டிய நிர்பந்தம் என்ன? அவரே அதற்கான பதிலையும் தருகிறார். ÔÔபழங்குடி மக்களுக்கென்று மொழிகள் இருக்கின்றன. அவை நமது தமிழ் போலவே அன்பையும், கோபத்தையும், வெறுப்பையும், நேசத்தையும் வன்மையுடன் வெளிப்படுத்தும் ஆற்றலும், ஆழமும் கொண்டவை. அம்மொழிகளை தமிழக மக்கள் அறிமுகம் செய்துகொள்வது அந்த மண்ணையும் மலைகளையும் வெறும் கேளிக்கை இடங்களாக பார்க்காமலிருக்க உதவும்ÕÕ</div>
<div style="text-align: justify;">
இக்கவிதைகளுக்கு அணிந்துரை எழுதியிருக்கின்ற நண்பர் Ôசோளகர் தொட்டிÕ நாவலாசிரியர் ச.பாலமுருகன் கோவன் பதி என்றழைக்கப்பட்ட கோயமுத்தூரின் பூர்வீக வரலாற்றுடன், மலைகள் சூழ்ந்த அந்த வனப் பகுதியை ஆண்ட இருளர் பழங்குடிகளின் வரலாற்றையும், லட்சுமணணின் கவிதைகளில் பதிவாகியுள்ள அம்மக்களின் வாழ்வில் பின்னிப் பிணைந்திருக்கின்ற தொன்மங்களையும் குறிப்பிடுகிறார். முயல்கள் குடியிருப்புகளுக்கு அருகில் வந்து புல்கடிப்பதும், சகுனாகுருவி கத்துவதும், செம்போத்து குறுக்கே போவதும், பாம்புகளைக் காண்பதும் அம்மக்களுக்கு துர்சகுனங்கள். பெருமாட்டி குருவி கத்துவது, இருள்கவியும் நேரத்தில் வாசலில் வந்து கிளிகத்துவது நற்சகுனங்கள். இப்படி இப்படி நிறைய.</div>
<div style="text-align: justify;">
கோவமூப்பன் இருளர் மக்களின் தலைவன், அவனே கோவை வனப்பகுதியைக் கட்டி ஆண்டவன். ஒரு கட்டத்தில் சோழ மன்னனின் நாடு பிடிக்கும் ஆசைக்கு பலியாக நேர்கிறது. கோவமூப்பன். பழங்குடி அரசு வீழ்கிறது. பூர்வகுடிகள் வனங்களடர்ந்த மலைகளின் மேல் விரட்டப்பட்டனர். இவர்களுக்குத் துணையாக பழங்குடித் தெய்வம் மட்டுமே நின்றது... இந்தக் கதையைச் சொல்லும் நண்பர் பாலமுருகனிடம் நான் கோருவது.... இதை ஒரு நாவலாக எழுதுங்கள் பாலா!</div>
<div style="text-align: justify;">
லட்சுமணன் இத்தொகுப்பை காடு, நகரம் என இரண்டாகப் பிரிக்கிறார். காடுதான் வாசகனுக்குப் பெரும் புதிராகவும், புதராகவும், பார்க்கப் பார்க்கத் தீராத விருட்சங்களுடனும், நடக்க நடக்க முடிவுறாத மர்மப் பாதையாகவும், கேட்க கேட்க சங்கீதமாகிற மொழி வளத்துடனும் உள்ளது. பழங்குடி இருளர் மக்களின் மொழியைக் கூர்ந்து கவனிக்கையில் அதில் தமிழும், பிற திராவிட மொழிகளின் கலப்பும், மலை மக்களுக்கேயுரிய குறியீட்டுச் சொற்களும் விரவிக் கிடப்பதை நம்மால் அறிந்து கொள்ள முடியும். அவர்களின் அதீத நம்பிக்கைகளை பகுத்தறிவுக் கண்ணாடியணிந்து ஒவ்வாதவையென இன்றைக்கு நாம் மதிப்பீடு செய்தாலும் ஒரு காலத்தில் நம் மூதாதையர்களும் இப்படித்தான் வாழ்ந்திருக்கின்றனர் என்னும் யதார்த்தத்தையும் உணர¢ந்து கொள்ள முடியும்.</div>
<div style="text-align: justify;">
சுள்ளி எடுத்தா அடிக்கே</div>
<div style="text-align: justify;">
காட்டுக்குள்ளே போனா புடிக்கே</div>
<div style="text-align: justify;">
தேனெடுத்தா பாதி கேக்கே</div>
<div style="text-align: justify;">
தானிக்காய் பொரித்தா பாக்கே</div>
<div style="text-align: justify;">
எல்லாமே நிம்த்துதுங்கே</div>
<div style="text-align: justify;">
எனக்கொன்றும் பெரிய வித்தியாசப்படவில்லை இம்மொழி, இதன் தொனி, இக்கவிதைகள் உணர்த்தும் அரசியல். பாஷை புரியவில்லையென எவரும் சொன்னால் அது வெறும் பாசாங்கு.</div>
<div style="text-align: justify;">
தமிழ் இலக்கியச்சூழலில் எப்போதாவது இப்படிப்பட்ட அபூர்வங்கள் நிகழ்கின்றன. நமக்கு வெகு தொலைவிலிருந்து பரிச்சயமற்ற ஒரு உலகைக் கண்டு இலக்கியமாக்குவது ஆகச்சிறந்த பணி. லட்சுமணனும் பாலமுருகனும் நமக்குக் கிடைத்த பெரும் பேறுகள்.</div>
<div style="text-align: justify;">
கடைசியாக ஒரு வார்த்தை. ஒடியன் என்றால் தாயின் கர்ப்பத்திலிருந்து சிசுவை எடுத்து தைலம் செய்யும் மந்திரவாதி என்று பொருளாம். மார்க்குவேஸையே எதிர்கொள்ளும் மாந்திரீக யதார்த்தங்கள் நம் வனங்களிலும் மலைகளிலும் உறைந்து கிடக்கின்றன. உருக்கிப் புட்டியில் தர நமக்கு லட்சுமணன்கள்தான் வேண்டும்.</div>
<div style="text-align: justify;">
</div>
<div style="text-align: justify;">
• பயனற்ற கண்ணீர் </div>
<div style="text-align: justify;">
சிவகாமி | உயிர்மை, சென்னை</div>
<div style="text-align: justify;">
• மதுக்குவளை மலர்</div>
<div style="text-align: justify;">
வே. பாபு | தக்கை, சேலம்</div>
<div style="text-align: justify;">
• ஓடியன்</div>
<div style="text-align: justify;">
<br /></div>
</div>
கீரனூர் ஜாகிர்ராஜாhttp://www.blogger.com/profile/16821172975494211862noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5325351298899765001.post-28017760844730539042013-03-27T02:08:00.001-07:002013-03-27T02:08:50.464-07:00விட்டல்ராவும் பழைய புத்தகக் கடைகளும்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<div style="text-align: justify;">
</div>
தொண்ணூறுகளின் தொடக்கத்தில், தீவிர வாசிப்பில் ஈடுபட்டிருந்த தருணத்தில் நான் அசோகமித்திரனுடன் இணைத்து விட்டல்ராவையும் வாசித்துக் கொண்டிருந்தேன். சென்னைப் பெருநகர வாழ்க்கையை எழுதிப் பார்த்த கைகளுள் விட்டல்ராவிற்கு ஒரு பிரதான பங்கிருக்கிறது. என்னுடைய வாசக அவதானிப்பில் அசோகமித்திரனின் நிழலாக நான் விட்டல்ராவைக் கருதுவதுண்டு.<br />
ஒரு காலத்தில் சக பயணியாக கூடவே வந்து, இன்றைக்கு பல்வேறு காரணங்களால் எழுத்தைத் துறந்து வாழ்கின்ற தஞ்சாவூர் நண்பர் இளங்கோ, எனக்கு விட்டல்ராவின் கதைகள் குறித்த ஈர்ப்பை ஏற்படுத்தினார். இளங்கோவைப் போலவே நட்சத்ரன், கவிஜீவன், புத்தகன் என தஞ்சாவூரிலிருந்து மிக நுட்பமான கதை சொல்லிகளாக அடையாளம் பெற்றிருக்க வேண்டிய ஒரு பட்டாளமே ஏதேதோ காரணங்களால் எழுதுவதை நிறுத்திக்கொண்டது துரதிர்ஷ்டவசமானது. இதில் புத்தகன் என்கிற சிங்காரவேலு, சமீபத்தில் எதிர்பாராத விதமாக இறந்து போனார். இவர்கள் எல்லோரும் சுபமங்களா காலத்திலிருந்து எழுதிக் கொண்டிருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. விட்டல்ராவைப் பேச வந்த இடத்தில் தஞ்சாவூர் நண்பர்களைக் குறித்தும் மெல்லிய கோடிட்டுக் காட்ட வாய்த்தது ஆறுதலாக இருக்கிறது.<br />
Ôவாழ்வின் சில உன்னதங்கள்Õ என்று விட்டல்ராவ் ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். கி கீக்ஷீவீtமீக்ஷீs லிவீtமீக்ஷீணீக்ஷீஹ் விமீனீஷீவீக்ஷீ என்று அதைக் குறிப்பிட்டுள்ளார்கள். ஆனால் விட்டல்ராவின் படைப்புகளைக் குறித்த விமர்சனங்களோ மதிப்புரைகளோ அதில் கிடையாது. முழுக்கவும் அவர் பழைய புத்தகக்கடைகளில் விலைக்கு வாங்கிய புத்தகங்களைக் குறித்த விவரணங்கள்! பழைய புத்தகக் கடையில் வாங்கியது என்றாலும், அனைத்தும் தரமான பாதுகாக்கத்தக்க புத்தகங்கள். எல்லாம் தேடித் தேடிக் கண்டெடுத்த பொக்கிஷங்கள்! இதன்மூலம் ராவ் பழைய புத்தகக் கடைகள் குறித்த வரலாறு ஒன்றை எழுதியிருக்கிறார். அப்படித்தான் எனக்கு சொல்லத் தோன்றுகிறது. பழைய புத்தகங்களை விற்பவர்கள், ஒரு புதினத்தில் இடம் பெறும் கதா பாத்திரங்களைப் போல இந்நூலில் முக்கியத்துவம் பெறுகிறார்கள். அவர்களுடைய உள்ளிட்ட குணாதிசயங்கள் எளிமையான வாழ்க்கை, அகந்தை, சிடுசிடுப்பு, பேரன்பு, அழுக்கும் தூசியும் படிந்த இருப்பிடங்கள் என எல்லாவற்றையும் புத்தக அறிமுகங்களுக்கு ஊடாக ராவ் சுவாரஸ்யமாக விவரித்துச் செல்கிறார்.<br />
ஒரு காலத்துச் சென்னையில் பிரசிதித்தி பெற்றிருந்த மூர் மார்க்கெட்டில் அவர் சந்தித்த நாயக்கர், முதலியார், ஐரே, மௌண்ட்ரோடு தர்காவுக்கு வெளியில் மரத்தடியில் கடை பரப்பியிருந்த அப்துல்கரீம், சேலம் நடேச ஆச்சாரி, ஆழ்வார்பேட்டை மூர்த்தி, லஸ்கார்னர் முருகேசன், ஆழ்வார், எல்.ஐ.சி.கட்டடத்தை அடுத்த நடைபாதைக் கடை ஊமையன், நங்கநல்லூர் எத்திராஜு... இப்படி விதம் விதமான பழைய புத்தக வியாபாரிகளை, விட்டல்ராவ் இந்த நூலில் தனக்கே உரித்த மொழியில் அறிமுகப்படுத்துகிறார்.<br />
மூர்மார்க்கெட் முதலியாரிடமிருந்து ஆனந்தரங்கம் பிள்ளை தினப்படி சேதிக் குறிப்புகள் 12 புத்தகங்கள், கோர்தான்ஹார்னர் எழுதிய <br />
திஷீக்ஷீ ஹ்ஷீu tலீமீ கீணீக்ஷீ வீs ஷீஸ்மீக்ஷீ போன்ற முக்கியமான புத்தகங்களை அவர் வாங்கியிருக்கிறார். இதில் திஷீக்ஷீ ஹ்ஷீu tலீமீ கீணீக்ஷீ வீs ஷீஸ்மீக்ஷீ நூலை எழுதிய கோர்தான்ஹார்னர் இரண்டாம் உலகப்போர்க் கைதி. அது ஒரு யுத்த சேதி சித்திரக் குறிப்பு. யுத்த அனுபவங்களுடன், கைதி முகாம் நாட்களையும் இணைத்து மிகச் சிறந்த கோட்டோவியங்கள் மற்றும் நீர் வண்ண ஓவியங்களுடன் படைக்கப்பட்டுள்ள அழகியல் அம்சம் நிறைந்த நூல் என்று அதைக் குறிப்பிடும் ராவ் அந்த ஓவியங்களையும் பக்கத்துக்குப் பக்கம் இடம் பெறச் செய்திருக்கிறார். கவசமோட்டார் தாக்குதல், ஜெர்மானிய ஒற்றன், இத்தாலிய அதிகாரி மற்றும் போர்க்காட்சிகள் என உண்மையில் அந்த ஓவியங்கள் நமக்கு பிரம்மிப்பூட்டுகின்றன. விட்டல்ராவ் ஒரு சிறந்த ஓவியர் என்பதும் நாமறிந்த செய்தி.<br />
நேருவின் சுயசரிதை, தி டிராயிங்ஸ் ஆஃப் லியனார்டோ டா வின்சி, இந்தியாவில் தடை செய்யப்பட்ட Ôஇராமனுக்கு ஒன்பது மணிநேரம்Õ (ழிவீஸீமீ லீஷீuக்ஷீs tஷீ ஸிணீனீணீ) மாப்பசான் கதைகள், கா.ஸ்ரீ.ஸ்ரீ.யின் முதல் நாவல், டிரேசி டைகர், மை நேம் இஸ் ஆரம் போன்ற புத்தகங்களையும், கோலியர்ஸ், தி சாட்டர்டே ஈவ்னிங் போஸ்ட், லைஃப், ஆப்ஜர், என்கவுன்ட்டர், இம்பிரின்ட், தி சண்டே டைம்ஸ், தி இல்லஸ்ட்ரேட்டட் லண்டன் நியூஸ், இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி ஆஃப் இந்தியா போன்ற இதழ்களையும் ராவ் பழைய புத்தகக் கடைகளில் வாங்கியிருக்கிறார்.<br />
நம்முடைய எழுத்தாளர்கள் பெரும்பாலும் பழைய புத்தகக் கடைகளைக் குறித்த அனுபவங்களை எழுதுவதில்லை. பிரபஞ்சன் திருவல்லிக்கேணி நடைபாதை புத்தகக் கடைகளைக் குறித்து எழுதியிருக்கிறார். சிலர் போகிற போக்கில் குறிப்பிட்டுச் சென்றுள்ளனர். ராவ் அந்த அனுபவங்களை ஒரு நூல் முழுக்க எழுதிப் பார்த்திருக்கிறார். அவருடைய வாசிப்பின் ருசி வாழ்வின் சில உன்னதங்கள் என்னும் இந்தப் புத்தகத்தின் ஒவ்வொரு பக்கத்திலும் கசிந்திருக்கிறது.<br />
Ôமூர்மார்க்கெட் எரிந்து முடிந்ததுÕ என்கிற பத்தாவது அத்தியாயம் சென்னையின் ஒரு கால கட்டத்து வரலாற்று சோகத்தை நம்முடன் பகிர்ந்து கொள்கிறது.<br />
ÔÔஎது சங்கமேஸ்வர ஐயரின் புத்தகக் கடை இருந்த இடம்? எது நாயக்கர் கடையிருந்த இடம்? என்றெல்லாம் அடையாளம் சட்டென்று கண்டு கொள்ள முடியாதபடி எல்லாம் கரி, எல்லாம் கருப்பாய்... ஓவென்று வானத்தைப் பார்த்துக் கத்திக் கதறித் தத்தித் தரிகடம், தத்தரிகிடம், தத்தரிகிடம் தித்தோம்....ÕÕ<br />
என்று ராவ் எழுதும்போது மனம் வலிக்கிறது.<br />
விட்டல்ராவின் இந்த புத்தகம் தமிழி¢ல் ஒரு புதிய முயற்சி என்று கூறுமிடத்து, எனக்கும் பழைய புத்தக வியாபாரிகளுக்குமான உறவை ஒற்றை வார்த்தையில் சொல்லப் போனால் அது... ஏழாம் பொருத்தம்! அவர்கள் மௌனிகள், கர்விகள், ஒரு தங்கச் சுரங்கத்தை கட்டி மேய்ப்பதான பாவனை அவர்களே அறியாமல் அவர்களிடத்தில் ஒட்டிக் கொண்டிருக்கிறது. இது குறித்து நான் பலமுறை யோசித்து வியந்திருக்கிறேன். ஒரு போதும் சண்டை சச்சரவு இல்லாமல் எங்களுக்கு பேரம் நிகழ்ந்ததில்லை. Ôபேரம் இல்லாமல் பழைய புத்தகம் வாங்குவது எனக்கு அனாச்சாரம்Õ என்கிறார் ஓரிடத்தில் ராவ். வெளியீட்டு விழா முடிந்த ஒரு சில மணி நேரங்களில் பழைய புத்தகக் கடைகளுக்கு வந்து சேர்ந்த புத்தம் புதிய சூடு தணியாத புத்தகங்களை எல்லாம், பார்த்து நான் மிரண்ட சம்பவங்கள் உண்டு. இது குறித்து இன்னும் சொல்ல நிறைய இருக்கிறது. மறுபடியும் பேசுவோம்.<br />
***<br />
சாகித்திய அகாதமி வெளியிட்டுள்ள சில நூல்களைச் சமீபத்தில் வாசித்து முடித்தேன். யாழ்ப்பாணப் புகையிலை, பாகிஸ்தான் போகும் ரயில், தென் காமரூபத்தின் கதை இப்படிச் சில. இந்த வரிசையில் நிர்மலா மோகன் தொகுத்த Ôதமிழ்ச் சித்தர் இலக்கியம்Õ என்னை வெகுவாக ஈர்த்தது. சித்தர் பாடல்களை உதிரியாகப் பல நூல்களிலிருந்து திரட்டி வைத்திருந்த எனக்கு, பதினெண் சித்தர்களின் முக்கியப் பாடல்கள் ஒரே நூலில் இருக்கக் கண்டதும் மகிழ்ச்சி! சித்தர்கள் மீதான வியப்பும் பிடிப்பும் எனக்குச் சிறுவயது முதலே இருந்து வந்திருக்கிறது. போகர் என்னும் சித்தன் வாழ்ந்த தென்பழனி மலைக்கருகில் பிறந்ததால் எனக்கு இந்த சித்தர்பித்து பிடித்திருக்கலாம் என்று தோன்றுகிறது. எனது பிராயத்தில் எங்கள் ஊரில் நோய் கண்டால் சித்தவைத்தியம் செய்வது மிகப் பிரபலம். இன்றைக்கும் பழனியிலுள்ள மலையப்பசாமி வைத்தியசாலை உள்ளிட்ட சில நிறுவனங்களால் சித்த வைத்தியம் பாவிக்கப்படுகிறது.<br />
சித்தர்கள் அழியாத உடலும் சாகாத நிலையும் பெற்றவர்கள் என்பதெல்லாம் சற்று மிகையெனப்பட்டாலும் அவர்கள் பற்றற்றவர்கள்; வெயில், மழை, காடு, மேடு என எதைக் குறித்தும் கவலை கொள்ளாமல் தன் வழியே பயணித்தவர்கள், மெய்ஞானிகள் என்பதில் எவருக்கும் இரண்டு கருத்துகள் இருக்க முடியாது. திருமூலர், சிவவாக்கியர், பட்டினத்தார், பத்திரகிரியார், பாம்பாட்டிச் சித்தர், இடைக்காட்டுச் சித்தர், அகப்பேய்ச் சித்தர், குதம்பைச் சித்தர், கடுவெளிச் சித்தர், அழுகணிச் சித்தர், கொங்கண நாயனார், சட்டைமுனி, திருவள்ளுவர், அகத்தியர், சுப்பிரமணியர், வால்மீகி, இராமத்தேவர், கருவூரார் என பதினெட்டுச் சித்தர்களின் முக்கியமான பாடல்களையும் வாழ்வையும் இந்த நூல் நமக்கு விளம்புகிறது.<br />
Ôசித்தமலம் அறுவித்துச் சிவமாக்கி எனையாண்ட அத்தன்Õ என்கிறார் மாணிக்க வாசகர். இதில் Ôஅத்தன்Õ என்கிற பிரயோகத்திற்கு தலைவன், தலைமை தாங்குபவர் என்னும் பொருள் உண்டு. அத்தனைத்தான் அத்தாவாக்கி, தமிழ் முஸ்லிம்கள் அப்பா என்னும் சொல்லுக்கு மாற்றாகப் பயன்படுத்துகின்றனர். மாணிக்கவாசகர் மட்டுமல்ல நம்முடைய மகாகவி பாரதியும் தன்னைச் சித்தனாகக் கருதியதுண்டு.<br />
ÔÔஎனக்கு முன்னே சித்தர்பலர் இருந்தார் அப்பா<br />
யானும் வந்தேன் ஒரு சித்தன் இந்த நாட்டில்ÕÕ<br />
என்று அவர் பாடியிருக்கிறார்.<br />
சித்தர்களை வைதீகத்திற்கு ஆதரவாளர்களாகச் சித்தரிக்கும் முயற்சிகள் தமிழ்ச் சூழலில் நடந்திருக்கிறது. ஆசைகளைத் துறக்க வலியுறுத்தும் பாடல்களை உதாரணங்காட்டி அவநம்பிக்கைவாதிகளாக்கிப் பார்த்தவர்கள் உண்டு.<br />
நட்ட கல்லைத் தெய்வமென்று<br />
நாலு புட்பம் சாத்தியே <span class="Apple-tab-span" style="white-space: pre;"> </span><br />
சுற்றி வந்து மொணமொணென்று<br />
சொல்லுமந்திரம் ஏதடா<br />
நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்<br />
சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோÕÕ<br />
என்று சித்தர் சிவவாக்கியர் வலுவாகக்கேட்கிறார்.<br />
ÔÔஆலயத்துள் நின்ற ஆறு சமயத்தோரும்<br />
காயத்துள் நின்ற கடவுளைக் காண்கிலர்ÕÕ<br />
என்கிறார் திருமூலர். எனவே கலாநிதி கைலாசபதி கூறியதைப்போல சித்தர்களைக் கலகக்காரர்கள் என்று நாம் ஒப்புக் கொள்ளலாம். மக்களிடம் படிந்திருக்கிற குறைகளைக் களைவது மட்டுமன்று; ஜாதி மதங்களை நோக்கியும் சரமாரியாகக் கேள்விக்கணைகளைத் தொடுத்தவர்கள் சித்தர்கள்.<br />
பறச்சியாவது ஏதடா பணத்தியாவது ஏதடா<br />
இறைச்சிதோல் எலும்பிலும் இலக்கமிட்டு இருக்குதோ<br />
பறைச்சி போகம் வேறதோ பணத்திபோகம் வேறதோ<br />
என்கிற சித்தர் சிவவாக்கியர் குரலில் சாதிய சனாதனத்தை ஏற்றத்தாழ்வுகளை வன்மையாகச் சாடும் தொனி பொதிந்திருக்கிறது.<br />
இஸ்லாம் சமூகத்திலும் சித்தர்கள் பலர் வாழ்ந்திருக்கிறார்கள். அவர்கள் சூஃபிகள் என்றழைக்கப்படுகின்றனர். குணங்குடி மஸ்தான், தக்கலை பீர்முகமது அப்பா போன்ற ஆண் சித்தர்களுடன், தென்காசி ரசூல்பீவி, ஆசியாம்மா உள்ளிட்ட பெண் சித்தர்களும் அங்கே இருந்ததுண்டு. சித்தர் உலகம் ஆழமானது. தத்துவார்த்தச் சுழலில் நம்மை சிக்க வைத்து, சித்தம் தெளியவைப்பது.<br />
***<br />
நட்பு, காதல், அரசியல், கலை இலக்கியம் என எல்லா வெளிகளிலும் நண்பர்களில் சிலர் தங்களின் சுயசாதி அடையாளத்தை தருணம் பார்த்து வெளிப்படுத்திக் கொள்வது, அதற்காக பெருமிதப்படுவது போன்ற அநாகரீகச் செயல்களில் ஈடுபடுவதை பல சந்தர்ப்பங்களில் கண்டு நான் அருவருப்படைந்திருக்கிறேன். எங்கெல்லாம் திறமை புறக்கணிப்புக்குள்ளாகி அவ்விடத்தை பிரிதொன்று வலிய அபகரித்துக் கொள்கிறதோ, அங்கே சாதி, மதம், பணம் இவற்றில் ஏதோ ஒன்று தம் பங்கை செவ்வனே செய்திருக்கிறது என சாமானியனும் புரிந்து கொண்டிருக்கும் காலமிது. ஆனால் இதற்கான எதிர்வினை எதுவுமற்று எல்லாவற்றிற்கும் சமரசமாகிக் கொள்ளும் ஒருவித மழுங்கைத் தனத்திற்கு நம்மை ஒப்படைத்து விட்டு ‘ஙே’ என்று நிற்கிறோம். ஒவ்வொரு தனிமனிதனும் தன்னைச் சுற்றிப் படிந்துள்ள சாதியின் ஒரு துரும்பைக் கூட அசைக்க முடியாமல் வெறுமனே கோஷம் எழுப்பிக் கொண்டிருப்பதில் நான் அவநம்பிக்கை கொள்கிறேன். திரைப்படங்கள், தெருக்கள் மற்றும் மாவட்டத் தலைநகரங்களின் பெயர்களில் சாதியை நீக்க முடிந்தது மட்டுமே இந்த முதுகெலும்பற்ற அரசுகளின் உச்சபட்ச சாதனையாக இருந்திருக்கிறது. ஆனால் காலகாலமாக நம் உள்ளத்தில் படிந்துள்ள சாதிக் கசடை எந்த உத்தரவின் மூலமாக அகற்றப்போகிறோம்? பேராசிரியர். நா. வானமாமலை எழுதிப் பல பதிப்புகள் கண்ட Ôதமிழ்நாட்டில் சாதிசமத்துவப் போராட்டக் கருத்துக்கள்Õ என்றொரு புத்தகம் வாசித்தபோது எனக்கு இது போன்ற அபிப்ராயங்கள் எழுந்தன.<br />
இருபதாம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் ஏற்கெனவே கட்டமைக்கப்பட்டிருந்த எல்லா சாதிகளைச் சேர்ந்த செல்வந்தர்களும் தத்தமது சாதியைப் பிரதானப்படுத்த ஆளுக்கொரு நூல் எழுதுவிக்கிற பணியில் இறங்கியிருக்கிறார்கள். 1901ல் வெளியான வருணசிந்தாமணி வேளாளர் சமூகத்துப் பெருமைகளைப் பேசுகிறது. வேளாளர் சைவ சமயத்தவர் என்பதால் அவர்கள் பிராமணரைவிட மேலானவர்கள் என்று நிரூபிக்க இந்நூலாசிரியர் வேதங்களையும் பழந்தமிழ் நூல்களையும் துணைக்கு அழைத்துக் கொள்கிறார். 1904ல் கிராமணிகள் தங்கள் சாதியை உயர்த்திக் கொள்ள க்ஷத்திரியகுல விளக்கம் என்றொரு நூலை வெளியிட்டிருக்கிறார்கள். க்ஷத்திரியரான ஜனகனிடமிருந்து தான் பிராமணர்கள் பிரம்மஞானம் என்கிற அறிவைப் பெற்றனராம். எனவே க்ஷத்திரியர்கள் பிராமணர்களுக்கு குரு முறையாவார்கள் என்று அந்த நூல் கூறுகிறது. 1937ல் வெளிவந்த Ôநாடார் மன்னரும் நாயக்கர் மன்னரும்Õ என்னும் மற்றொரு நூல் நாடார் சாதிப் பெருமைகளை வியந்தோதுகிறது.<br />
பஞ்ச திராவிட முதல்வன்<br />
பரம்பரை பாண்டிய நாடன்<br />
கல்விச் சங்கமுடையவன்<br />
காசு முத்திரை விடுத்தவன்<br />
சப்தகன்னி புத்திரன்<br />
தமிழைக் குறுமுனிக் குரைத்தவன்<br />
இது அந்த நூலில் காணப்படும் நாடார் மகாஜனங்களைக் குறித்த குலப் பெருமைப் பாடல்.<br />
1909ல் வெளியான பரவர் புராணம் பரதவர்களின் உயர்வைப் பாடுகிறது. சந்திர வம்சத்தில் தோன்றிய அர்ச்சுனன் பரதகுலமன்னரின் மகள் சித்திராங்கதையை மணந்து பாண்டியவம்சம் தோன்றியது போன்ற இதிகாச நிகழ்வுகளைப் புனைந்து அவற்றுடன் தம் சாதியைத் தொடர்புபடுத்திக் கொள்ளும் போக்கு இந்நூலில் வெளிப்படுகிறது. கார்காத்தார் சாதி உயர்வைப் பேசும் Ôகிளை வளப்ப மாலைÕ என்கிற நூலும் இதே காலக்கட்டத்தில் எழுதப்பட்டிருக்கிறது.<br />
இந்நூல்களின் ஓங்கி ஒலிப்பது ஒற்றைக்குரல்தான். அதாவது பிராமணர்கள் உயர்ந்த சாதியினர் என்பதை இந்நூலாசிரியர்கள் அனைவரும் மறுக்கின்றனர். ஆனால் வருணாசிரமப் பிரிவுகளை இவர்களில் எவரும் எதிர்க்கவில்லை என்பது கூர்ந்து கவனிக்கத்தக்கது. வருணாசிரமத்தில் தங்கள் சாதிகளுக்கு அளிக்கப்பட்ட தாழ்ந்த நிலைகளைத்தான் இவர்கள் விமர்சிக்கிறார்கள் என்று பேராசிரியர் நா.வா. தெளிவாகத் தனது ஆய்வுரையில் வெளிப்படுத்துகிறார். 48 பக்கங்களே கொண்ட இந்த சிறிய புத்தகம் தமிழ்நாட்டில் சாதிகள் கட்டமைக்கப்பட்ட விதத்தை ஒருவித தீவிரத் தன்மையுடன் பேசுகிறது.<br />
இதை வாசிப்பதும் பிறகு விவாதிப்பதும் கூட சாதியத்துக்கு எதிரான ஒரு முக்கிய செயல்பாடுதான் என்று எனக்குத் தோன்றுகிறது.<br />
<br />
• வாழ்வின் சில உன்னதங்கள்<br />
நர்மதா பதிப்பகம், சென்னை- \- -17<br />
• தமிழ்ச் சித்தர் இலக்கியம்<br />
சாகித்திய அகாதெமி, புதுடெல்லி.<br />
• தமிழ்நாட்டில் சாதி சமத்துவப் போராட்டக் கருத்துகள்<br />
பாரதி புத்தகாலயம், சென்னை-- \ 18<br />
<div>
<br /></div>
<br />
</div>
கீரனூர் ஜாகிர்ராஜாhttp://www.blogger.com/profile/16821172975494211862noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5325351298899765001.post-21372570498745248292012-09-12T23:16:00.000-07:002012-09-12T23:16:34.612-07:00முடிந்ததை போல முடியாத ஒரு சூட்சமத்தை புதைத்த புனைவு<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<div class="separator" style="background-color: white; clear: both; color: #504945; font-family: Tahoma, 'century gothic', Arial, verdana, sans-serif; font-size: 13px; line-height: 20px; margin: 0px; padding: 0px; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh3cEtnW14mRiQB6GhSRvzk8hY1ZDGOrCw89Lcn6ZiVbaDWM1_H6NYYqF9iSRmKe2aEW2ioUopKhErbSk2bfDRpBpHBVcrLJL9mmGbAFkOPKHfTljgFdUVsIU_jweA2Po1lIVwbF5GEGzW8/s1600/alima.JPG" imageanchor="1" style="background-color: transparent; color: #ac0604; margin: 0px 1em; outline: none; padding: 0px; text-decoration: none;"><img border="0" height="640" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh3cEtnW14mRiQB6GhSRvzk8hY1ZDGOrCw89Lcn6ZiVbaDWM1_H6NYYqF9iSRmKe2aEW2ioUopKhErbSk2bfDRpBpHBVcrLJL9mmGbAFkOPKHfTljgFdUVsIU_jweA2Po1lIVwbF5GEGzW8/s640/alima.JPG" style="border: 0px; margin: 0px; padding: 0px;" width="410" /></a></div>
<br style="background-color: white; clear: left; color: #504945; font-family: Tahoma, 'century gothic', Arial, verdana, sans-serif; font-size: 13px; line-height: 20px; text-align: justify;" /><span style="background-color: white; color: #504945; font-family: Tahoma, 'century gothic', Arial, verdana, sans-serif; font-size: 13px; line-height: 20px; text-align: justify;"> (கீரனூர் ஜாகிர்ராஜாவின் வடக்கேமுறி அலிமா நாவலை முன்வைத்து...)</span><br style="background-color: white; clear: left; color: #504945; font-family: Tahoma, 'century gothic', Arial, verdana, sans-serif; font-size: 13px; line-height: 20px; text-align: justify;" /><br style="background-color: white; clear: left; color: #504945; font-family: Tahoma, 'century gothic', Arial, verdana, sans-serif; font-size: 13px; line-height: 20px; text-align: justify;" /><span style="background-color: white; color: #504945; font-family: Tahoma, 'century gothic', Arial, verdana, sans-serif; font-size: 13px; line-height: 20px; text-align: justify;"> யமுனாநதிக்கரையில் காண்டவ வனத்தில் வாழ்ந்த நாகர்களை யாராளும் வெல்லமுடியாது. அவர்கள் அந்த காட்டை சூரையாட யாரையும் அனுமதிக்க மாட்டார்கள். ஏனெனில் அது அவர்கள் வாழ்விடம் மட்டுமல்ல தாய்மடியும் கூட. அவர்கள் இருக்கும் வரை அந்த இடத்தில் எந்த விதமான புதிய நகரத்தையும் நிர்மாணிக்க முடியாது என்று அறிந்த பாண்டவர்கள் அவர்களை கூண்டோடு அழிக்க முடிவு செய்தனர். அவர்கள் யாவரும் வெளிவராத நாளில் அந்த வனத்தைச் சுற்றி நெருப்பிட்டனர். கானகம் பற்றி பெருநெருப்பு சூழ்ந்து வெப்பம் கூடியதும் மழைபெய்யத் துவங்கியது. மழை நீர் நெருப்பை அனைக்காமல் இருக்க யமுனாநதிக்கரை ஓரங்களிலிருந்து அர்சுனனும், கிருஷ்னனும் அம்புகளால் மழையை திசை திருப்பினர். பற்றி எரிந்த பெரு நெருப்பில் கானகம் வெந்து தனிந்தது. அதில் தப்பி அபயம் கேட்ட ஒரே உயிர் மயன் என்ற மனிதன் மட்டுமே. கடுமையான தீக்கயங்களுடன் அர்சுனன் அமைத்த தீவிழாப்பாதையின் வழியே தப்பினான். தப்பியவனுக்கு இது இயல்பாய் எழுந்த தீ அல்ல. கானகத்தை அழிக்க மூட்டப்பட்டது. அதுவும் திட்டமிட்டு பாண்டவர்களால் மூட்டப்பட்டதென புரிந்தது. </span><br style="background-color: white; clear: left; color: #504945; font-family: Tahoma, 'century gothic', Arial, verdana, sans-serif; font-size: 13px; line-height: 20px; text-align: justify;" /><span style="background-color: white; color: #504945; font-family: Tahoma, 'century gothic', Arial, verdana, sans-serif; font-size: 13px; line-height: 20px; text-align: justify;"> தன் இனவாசிகளுக்கும் தன் வாழிடமான வனத்திற்கும் ஏற்பட்ட அழிவிற்கு பழி தீர்த்துக்கொள்ள, பாண்டவ வம்சத்தை அழிக்க தன்னால் தீ மூட்ட முடியும் என மயன் நம்பினான். வடிவ சாஸ்த்திரத்தையும் சிற்ப மரபையும் கற்றிருந்த மயன் என்ற மாய தச்சன் பாண்டவர்கள் அனுமதியுடன் அவர்களுக்கு பரிசளிக்க நுட்பத்துடன் சூட்சுமங்களை இழைத்து மணிமண்டப மாளிகையை உருவாக்கினான். எரிந்து தனிந்த காண்டவ வனத்தில்தான் அந்த மாளிகை உருபெற்றது. உண்மை போல தெரியும் பொய்களும் பொயாய் தோன்றும் உண்மைகளும். முடிவது போல் தெரியும் பாதை முடியாத சுழலாய் தொடர்வதும் என இயற்கையையும் புனைவையும் கொண்டு அவன் கட்டிய அந்த மாளிகையில்தான் துரியோதனன் விழுந்தான். பொய்தோற்றத்தில் அவன் தவறி விழுந்ததை பார்த்து பாஞ்சாலி சிரித்தாள். அதன் பிறகுதான் அவர்களுக்குள் ஆயிரமாயிரமாய் அழிவுகள் ஆரம்பமானது. </span><br style="background-color: white; clear: left; color: #504945; font-family: Tahoma, 'century gothic', Arial, verdana, sans-serif; font-size: 13px; line-height: 20px; text-align: justify;" /><span style="background-color: white; color: #504945; font-family: Tahoma, 'century gothic', Arial, verdana, sans-serif; font-size: 13px; line-height: 20px; text-align: justify;"> மயனின் காண்டவ வனங்களாக இன்றைக்கு பெண்கள் காட்சி தருகின்றனர். தொலைகாட்சிகளில், பத்திரிக்கைகளில், சமூக பழக்கவழக்கங்களில் பெண்களின் ஒப்புதல் இல்லாமல் அவர்கள் சூறையாடப்படுகின்றனர். நடந்ததை உணர்ந்து அவர்கள் தப்பிக்கும் வழிகள் அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்ற அம்புகளால் அழிக்கப்படுகிறது. குடும்பம் என்பது அர்சுனன் அமைத்த தீவிழாப்பாதை போல் பாதுகாப்பு அளித்தாலும் அங்கும் அவளின் நிலை இரண்டாம் பட்சம்தான். ஆழிசூழ் உலகில் மனித சமூகம் இப்படி பல காண்டவ வனங்களை அழித்துக்கொண்டே இருக்கிறது. தனது இச்சையின் தீரா பசிக்கு முதல் பலியாக பெண்களை கேட்கும் ஆண்கள் சமூகத்திற்கு எதிராக புனைவின் வழியே எழுந்து நிற்பவள்தான் அலிமா. வடக்கேமுறி அலிமா?</span><br style="background-color: white; clear: left; color: #504945; font-family: Tahoma, 'century gothic', Arial, verdana, sans-serif; font-size: 13px; line-height: 20px; text-align: justify;" /><span style="background-color: white; color: #504945; font-family: Tahoma, 'century gothic', Arial, verdana, sans-serif; font-size: 13px; line-height: 20px; text-align: justify;"> இதிகாச புனைவைப்போல நிகழ்கால நடப்பை புனைவாய் உருகொண்டு வடக்கேமுறி அலிமா என்ற இந்த நாவல் எழுந்து நிற்கிறது. கீரனூர் ஜாகிர்ராஜா அலிமா என்ற பாத்திரத்தின் மூலம் ஆண்கள் அழித்து துடைத்து எரிந்த பல காண்டவ வனங்களின் மாய தச்சனாக அலிமாவை எழுந்து நிற்க வைக்கிறார். பைத்தியம், திருடி, கஞ்சா விற்பவள், விபச்சாரி, கொலைகாரி, சி.ஐ.டி ஆபீஸர், வாழ்ந்து கெட்டவள், காதலானால் வஞ்சிக்கப்பட்டவள், தலாக் கொடுக்கப்பட்டவள், எயிட்ஸ் நோயாளி, அரபு ஷேக் கைவிட்ட கேஸ், மாந்தரீகம் செய்பவள், சினிமா வாய்ப்புத் தேடி சோரம் போனவள் என இந்த நாவலில் அலிமாவை அறிமுகம் செய்கிறார். பாவம் நாவலாசிரியருக்கு அவளைப்பற்றி முழுமையாய் தெரியவில்லை. அவள் மயனின் மாளிகையைப் போல புரிந்துக்கொள்ள முடியாதவள். படைப்பாளியின் படைப்பை மீறி அவள் எழுந்து நிற்கிறாள். அவள் சிறுகதை எழுத்தாளர், கட்டுரையாளர், நாவல் ஆசிரியர், ஒரு கடைநிலை ஊழியனின் துன்பம் புரிந்தவள், மனிதர்களின் ஆழம் புரிந்தவள், திமிரி எழுபவள், தண்ணீரைப் போல விழும் இடங்களில் ஒன்றுபவள், மின்னலைப் போல அதிர்ச்சியளிப்பவள், ஒரு பெண்ணில் உள்ள ஆண் தண்மையை உணர்ந்தவள்</span><br style="background-color: white; clear: left; color: #504945; font-family: Tahoma, 'century gothic', Arial, verdana, sans-serif; font-size: 13px; line-height: 20px; text-align: justify;" /><span style="background-color: white; color: #504945; font-family: Tahoma, 'century gothic', Arial, verdana, sans-serif; font-size: 13px; line-height: 20px; text-align: justify;">இப்படி அடுக்கிக்கொண்டே செல்லலாம். </span><br style="background-color: white; clear: left; color: #504945; font-family: Tahoma, 'century gothic', Arial, verdana, sans-serif; font-size: 13px; line-height: 20px; text-align: justify;" /><span style="background-color: white; color: #504945; font-family: Tahoma, 'century gothic', Arial, verdana, sans-serif; font-size: 13px; line-height: 20px; text-align: justify;"> இந்த நாவலில் காலவரிசையில் தொடர் பயணம் இருக்காது. புட்டைப் பிசைகையில் அலிமாவின் கைகள் காலத்தைப் புரட்டிப் போடுவது போல நாவல் கலைந்து பயணிக்கும். ஒரு நாடோடியின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களில் தொகுப்பு இந்த நாவல். அவள் கால்கள் நடக்கும் திசைகளில் எதிர்படும் கழிப்பறைகளில் அவளது வாழ்க்கையை பதிந்துச்செல்கிறாள். 3800 கழிப்பறைகளில் அவள் எழுதியதை "என்டெ யாத்ரா" என்ற சுயசரிதை கோழிக்கோடன் என்ற பதிபாளரால் வெளியிடப்பட்டுள்ளது. அந்த சுயசரிதையின் பலபகுதிகளும் அதில் இல்லாத அவளது வாழ்வும் ஊடாடி இந்த நாவல் பயணிக்கிறது. பெண்கள் படும் துயரங்களை அதன் பல பரிமாணங்களை இப்படி ஒரே பாத்திரத்தை வைத்து இதுவரை யாரும் சொன்னதாக எனக்கு தெரியவில்லை. அப்படி சொல்ல அலிமா என்ற பாத்திரம் மிகவும் காத்திரமாய் படைக்கப்பட்டுள்ளது. நீங்கள் நாவலை படித்து முடிக்கின்றவரை அவள் குறித்த ஒரு பிம்பத்திற்கு வரமுடியாது. படித்து முடித்த பின்னரும்தான். அதனால்தான் அவள் காண்டவ வனத்தின் மாளிகையாய் காட்சியளிக்கிறாள்.</span><br style="background-color: white; clear: left; color: #504945; font-family: Tahoma, 'century gothic', Arial, verdana, sans-serif; font-size: 13px; line-height: 20px; text-align: justify;" /><span style="background-color: white; color: #504945; font-family: Tahoma, 'century gothic', Arial, verdana, sans-serif; font-size: 13px; line-height: 20px; text-align: justify;"> "உன்னை மனநலக் காப்பக உரிமையாளரின் புத்திரி என்று அறிந்துகொள்ள அரைமணி நேரம் போதுமானதாயிருந்தது. அந்த காப்பகத்தில் அடைப்பட்டிருந்த ஸ்திரீகளில் உனக்கு மட்டுமளிக்கப்பட்ட ஒரு சில மௌனம் அரும்பிய சௌகரியங்களுக்குள் நெளிந்து கொண்டிருந்தது அந்த விலாசம்" என அவள் கடிதம் எழுதுகிறால் எனில் மனநலக் காப்பகத்தில் அடைக்கப்பட அவள் எவ்வுளவு நுட்பமானவள் என்பதற்கு வேறு உதாரணம் வேண்டுமா என்ன? இயலாமையின் பிம்பமாய் காட்சியளிக்கும் பெண்கள் மீதான வன்முறைகள் தினமும் தொடர்ந்துக்கொண்டுதான் இருக்கிறது. பல பெண்கள் இவைகளை எதிர்த்துத் தங்கள் வாழ்வின் ரூபத்தில் பதிலளித்துக்கொண்டுதான் இருக்கின்றனர். பெண்களின் எதிர்வினைகள் கலவரமாக, அடங்கதா தன்மையென, மோசமான செயலாக சித்தரிக்கப்படுகிறது. இந்த சித்தரிப்புகள் பெரும்பாலும் ஆண்களின் கண்ணோட்டத்தில் தீர்மாணிக்கப்படுவதாகும். இந்த நாவல் அலிமாவின் உருவில் சமூக பொதுவெளியை நோக்கி நிறைய கேள்விகளை எழுப்புகிறது.</span><br style="background-color: white; clear: left; color: #504945; font-family: Tahoma, 'century gothic', Arial, verdana, sans-serif; font-size: 13px; line-height: 20px; text-align: justify;" /><span style="background-color: white; color: #504945; font-family: Tahoma, 'century gothic', Arial, verdana, sans-serif; font-size: 13px; line-height: 20px; text-align: justify;"> "அவள் புறப்பட்டிருந்தாள். அவள் உமிழ்ந்து செல்லும் புகை அந்தரத்தில் சுவடுகளைப் போல பதிந்து மறைந்தது". இப்படி வாசகனை வசீகரிக்கும் உவமைகள் நிறைந்து கிடக்கும் இந்த நாவல் படிக்கின்ற வாசகர்களுக்கு நிச்சயம் ஒரு புதிய அனுபவத்தை கொடுக்கும். சைடு, அப்பர், லோயர், முன், பின் நவீனத்துவவாதிகளை நைய்யப்புடைக்கும் எழுத்துப்பாங்கு இது. நையாண்டியாய் பல விஷயங்களை கேள்விக்குள்ளாக்குகிறார் ஜாகிர்ராஜா. விருதுகளின் அரசியலை முட்டைச் சிம்னி விருது, கட்டஞ்சாயா விருது, ஏத்தன் பழம் விருது என அலிமாவின் மூலம் பகடி செய்கிறார். நாவலின் இடையில் நாவல் எழுத்தாலுனுக்கும் படிக்கும் வாசகனுக்கும் இடையில் ஒரு விவாதம் நடக்கிறது. மொத்த கதையையும் அலிமாவின் பெரியப்பா வனத்தில் குட்டி ஹபீபல்லா அவளின் பிறப்புக்கு முன்பே எழுதியது போல ஒரு திருப்பமும் உள்ளது.</span><br style="background-color: white; clear: left; color: #504945; font-family: Tahoma, 'century gothic', Arial, verdana, sans-serif; font-size: 13px; line-height: 20px; text-align: justify;" /><span style="background-color: white; color: #504945; font-family: Tahoma, 'century gothic', Arial, verdana, sans-serif; font-size: 13px; line-height: 20px; text-align: justify;"> "அக்கம்மா இதைகுறித்து நீ பெரிதாக அலட்டிக்கொள்ள வேண்டாம். இந்த லோகத்தில் நிர்கதியான விளிம்புநிலைப் பெண்கள் எங்கெல்லாம் இருக்கின்றனரோ அங்கெல்லாம் ஆண்கள் சுதந்திரமாக நடத்துகின்ற காரியங்கள் தானே இவை?" என அலிமா தனது மனநலக் காப்பக நட்புக்கு எழுதும் கடித்தத்தில் வினா எழுப்புகிறாள். இந்த நாவல் முழுவதும் இந்த கேள்வியின் எதிர்ப்புகுரலாய் அலிமா அலைந்து திரிகிறாள். அவள் கபுறுகளின் மீது அதாவது இஸ்லாமிய கல்லரைகள் மீது பால்ய வயதில் நடத்திய விசாரனையின் தொடர்ச்சி இது. </span><br style="background-color: white; clear: left; color: #504945; font-family: Tahoma, 'century gothic', Arial, verdana, sans-serif; font-size: 13px; line-height: 20px; text-align: justify;" /><span style="background-color: white; color: #504945; font-family: Tahoma, 'century gothic', Arial, verdana, sans-serif; font-size: 13px; line-height: 20px; text-align: justify;"> 144 ஆம் பக்கத்தில் நாவல் முற்று பெருகிறது. அல்லது முற்றுபெறாமல் தொடர்கிறது. எப்படி என உங்களால்தான் தீர்மாணிக்கமுடியும். வடக்கேமுறி அலிமாவை சந்திக்காமல் அது சாத்தியமல்ல! படித்து தீர்மாணியுங்களேன்.</span>
<br />
<span style="background-color: white; color: #504945; font-family: Tahoma, 'century gothic', Arial, verdana, sans-serif; font-size: 13px; line-height: 20px; text-align: justify;"><br /></span>
<span style="background-color: white; color: #504945; font-family: Tahoma, 'century gothic', Arial, verdana, sans-serif; font-size: 13px; line-height: 20px; text-align: justify;"><br /></span>
<span style="font-size: x-small;"><b><span style="background-color: white; color: #504945; font-family: Tahoma, 'century gothic', Arial, verdana, sans-serif; line-height: 20px; text-align: justify;">நன்றி: </span>மானுட விடுதலை...</b></span></div>
கீரனூர் ஜாகிர்ராஜாhttp://www.blogger.com/profile/16821172975494211862noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5325351298899765001.post-8401023888870426182012-08-04T02:00:00.000-07:002012-08-04T02:00:30.177-07:00மிர்தாதின் புத்தகம் முதல் அன்னா தஸ்தயேவ்ஸ்கி வரை<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<div style="font-family: arial; font-size: small; text-align: justify;">
நாங்கள் தஞ்சை ப்ரகாஷிடம் இலக்கியம் பயின்ற காலத்தில் கவிதையில் நான் என்கிற சொல் களையப்பட வேண்டியதன் அவசியம் குறித்து ஒரு நாள் அவர் நீண்ட சொற்பொழிவாற்றினார். எங்களுக்குப் பெரிய வியப்பைக் கொடுத்த உரையாக அப்போது அது இருந்தது. மிகெய்ல் நைமியின் மிர்தாதின் புத்தகம் முதல் அத்தியாயத்தில் முடிந்தவரை நான் என்ற சொல்லைத் தவிர்த்துவிட வேண்டும் என்ற விதி நெடுங்காலமாக அந்த மடாலயத்தில் நிலவி வந்ததுÕÕ என்னும் வரிகள் இடம் பெற்றிருப்பதைக் கண்டு ஆச்சரியம் கொண்டேன். அது ஒரு மடாலயம். மடாலயத்தின் மூத்தவரான சமாதம் தன்னுடைய சாதனைகளைப் பற்றி மிகவும் பெருமையடித்துக் கொள்கிறார். அப்போது, விலக்கப்பட்ட Ôநான்Õ என்கிற வார்த்தையைப் பலமுறை பிரயோகிக்கிறார். பிறகு, அதன் மீது விவாதம் நடைபெறுகிறது. யார் என்ன சொல்கிறார்கள் என்பதை விளங்கிக் கொள்ள முடியாத நிலை. ஆதித் தந்தை நோவா நான் என்கிற வார்த்தையின் மேல் முதன் முதலாகத் தடை விதித்தார். இல்லை இல்லை முதல் மடாலயத் தோழர் சேமா தான் இதற்கு காரணம் என்றெல்லாம் வாதப் பிரதிவாதங்கள். சமாதம் இந்தச் சிக்கலைத் தீர்த்து வைக்க மிர்தாத்தால் முடியும் என்று ஏளனமாகக் கூறுகிறார். மடாலயத்தால் விதிக்கப்பட்ட ஏழாண்டு மௌனத்தைத் துறந்து மிர்தாத் பேசத் தொடங்குகிறார். ÔÔதுறவிகளே, Ôநான்Õ என்பதே படைப்பாற்றல் மிக்க சொல். எல்லாப் பொருள்களின் மூலாதாரமும் மையமும் நான் என்பதே என்று நீண்டு செல்கிறது மிர்தாதின் உரை. ஒரு கட்டத்தில் கடவுளைப் போலவே மனிதனும் ஒரு படைப்பாளி. நான் என்பதே அவன் படைப்பு. அப்படியிருக்க அவன் ஏன் கடவுளைப் போல சமநிலையில் இல்லை என்றும் கேட்கிறார். இப்படியான புதிர்ச் சங்கிலிகளாக இந்நூலின் அத்தியாயங்கள் நீள்கின்றன. தத்துவங்களில் திளைக்கும் போது மனம் ஒரு அலாதியான நிலையை அடைகிறது. அதை விவரிக்க வார்த்தைகளே இல்லை.</div>
<div style="font-size: small; text-align: justify;">
<span style="font-family: arial; text-align: left;">‘‘If this rascal Would not have Written this book I would have written this’’</span><span style="font-family: Arial, Helvetica, sans-serif;"> </span><span style="font-family: arial;">(இந்த அயோக்கியப் பயல் இதை எழுதியிருக்காவிட்டால் நான் எழுதியிருப்பேன்) என்கிறார் சென்ற நூற்றாண்டின் முக்கியமான சிந்தனையாளர்களில் ஒருவரான ஓஷோ ரஜனீஷ். Ôமிர்தாதின் புத்தகம்Õ அப்படி என்னதான் விசேஷங்கள் கொண்டது? படித்துப் பாருங்கள்....</span></div>
<div style="font-family: arial; font-size: small; text-align: justify;">
* * *</div>
<div style="font-family: arial; font-size: small; text-align: justify;">
சமீபமாகத் திரைப்படங்கள் குறித்து நிறையப் புத்தகங்கள் வந்து குவிகின்றன. எழுத்தாளர்களால் திரைப்படம் குறித்த தொடர்கள் சிறு பத்திரிகைகளில் நிறைய எழுதப்படுகின்றன. காட்சிப் பிழை, படப் பெட்டி என மாற்று சினிமா குறித்த இதழ்களும் புதிது புதிதாய் வரத் தொடங்கியிருப்பது ஆரோக்கியமான விஷயம்தான். இந்த வரிசையில், உலகத்திரைப்படங்களில் கனமான பாத்திரங்களை ஏந்தியிருக்கும் சிறுவர் சிறுமியரின் வாழ்வு, அக் கதாபாத்திரங்களின் அரசியல், அழகியல் மன ஓட்டங்கள் குறித்து கே.பாலமுருகன் எழுதிய தொடர் தீர்ந்து போகாத வெண்கட்டிகள் என்னும் பெயரில் நூலாக வெளிவந்துள்ளது.</div>
<div style="font-family: arial; font-size: small; text-align: justify;">
தாய்லாந்து, இந்தோனேசியா, ஹாங்காங், சீனா, பிரேசில், ஜப்பான், ஆஸ்திரேலியா, இந்தியா என உலகின் பல்வேறு நாடுகளில் தயாரிக்கப்பட்ட சிறுவர்களுக்கான படங்களைக் குறித்து அவர் எழுதியிருக்கிறார். அவற்றுள் பலவும் முக்கியமான திரைப் படங்கள். இந்தப் பட்டியலில் ஒரு தமிழ்ப் படமும், இந்திப் படமும்கூட இடம் பெற்றுள்ளது விசேஷமானது.</div>
<div style="font-family: arial; font-size: small; text-align: justify;">
வீட்டை விட்டு விடுதிக்கு அழைத்துச் செல்லப்படும் ஒரு மாணவனின் ஏக்கங்களைப் பிரதிபலிக்கும் <span style="text-align: left;"> DORM </span> என்ற தாய்லாந்து சினிமாவிலிருந்து இந்தக் கட்டுரை தொடக்கம் பெறுகிறது. இதுதான் நான் வீட்டை விட்டுப்போகும் முதல்நாள். இன்று தான் என் எல்லா சுதந்திரமும் பறிபோகும் முதல் நாளும் கூட என்று அந்தச் சிறுவனின் குரல் துயருடன் ஒலிப்பது நம் பள்ளி விடுதிகளில் அடைந்து கிடக்கும் ஆயிரக்கணக்கான சிறுவர்களின் குரலை எதிரொலிக்கிற மாதிரியே இருக்கிறது.</div>
<div style="font-family: arial; font-size: small; text-align: justify;">
<span style="text-align: left;">Hikikanam </span> என்றொரு தாய்லாந்துப் படத்தைக் குறித்து பாலமுருகன் எழுதுகிறார். ஜப்பானிய சிறுவர்களை ஒரு கால கட்டத்தில் தொற்றியிருந்த வினோதப் பழக்கம் குறித்து இத்திரைப்படம் நமக்கு அறிமுகப்படுத்துகிறது. பிவீளீவீளீணீஸீணீனீ என்று ஜப்பானிய அரசால் அழைக்கப்பட்ட இந்த சுயவதைக்காரர்கள் ஆண்டுக் கணக்கில் வீட்டுத் தனிமையிலிருந்தபடி பள்ளிக்குச் செல்ல விருப்பமில்லாமல் பிற மனிதர்களைச் சந்திக்காமல் தங்கள் காலத்தைக் கழிப்பார்களாம். ஒன்பது வருடத்திற்கு மேலாகக் கூட ஒரு சிறுவன் தனி அறைக்குள் அடைந்து கிடப்பான் என்கிற தகவல் நம்மை அதிர்வுக்குள்ளாக்குகிறது. இந்தத் திரைப்படம் குறித்து மேலதிகமாக எழுதிச் செல்லும் பாலமுருகன் இக்கட்டுரையின் முத்தாய்ப்பாக சில வரிகளைப் பதிவு செய்கிறார்.</div>
<div style="font-family: arial; font-size: small; text-align: justify;">
Ôகுழந்தைகளின் அறைக்குள்ளிருந்து தனிமையின் சுவாசம் கேட்டுக் கொண்டிருக்கிறது. அவர்களின் வன்மையான மனநிலை சுவரில் கொடூரமாகக் கிறுக்கப்பட்டு சிதைக்கப்பட்டிருக்கும் ஓவியங்களில் தெரிகிறது.Õ</div>
<div style="font-family: arial; font-size: small; text-align: justify;">
இந்த வரிகளும் நம்மை அச்சுறுத்தவே செய்கின்றன. குழந்தைகளின் உளவியல் நுட்பமானது. நாம் குழந்தைகள் என நினைத்து அவர்களை அணுகுவதை அவர்கள் விரும்புவதே இல்லை. அவர்களுக்குத் தேவை அவர்களை அதிகாரத்தாலும், அளவான அன்பாலும் கட்டுப்படுத்தும் பெற்றோர்களல்ல. சமமாகப் பாவிக்கின்ற நண்பர்களே. இந்த உண்மையைப் புரிந்து கொள்ளும் வரை நாம் குழந்தைகளின் உளவியலைக் கண்டுபிடிப்பது அரிது.</div>
<div style="font-family: arial; font-size: small; text-align: justify;">
பாலமுருகன் ஒவ்வொரு படத்தின் கதைக்கும் தொடர்புள்ள தன்னுடைய வாழ்க்கை நிகழ்வொன்றையும் சேர்த்து நமக்கு வாசிக்கத் தருகிறார். அது நம்மை வேறு தளத்துக்கு நகர்த்திச் செல்கிறது. இந்தப் புத்தகம் இந்திய சினிமாக்கள் அடைய வேண்டிய மாற்றங்களை வலியுறுத்துவதாகவே எனக்குத் தோன்றுகிறது.</div>
<div style="font-family: arial; font-size: small; text-align: justify;">
குழந்தைகளுக்கான மிகச்சிறந்த திரைப்படங்கள் இன்றைக்கு ஈராக், ஈரான், சீனா, இந்தோனேசியா நாடுகளிலிருந்துதான் தயாரிக்கப்படுகின்றன. இந்தியா இந்தப் பட்டியலில் இடம் பெற வேண்டிய அவசியம் இருக்கிறது.</div>
<div style="font-family: arial; font-size: small; text-align: justify;">
* * *</div>
<div style="font-family: arial; font-size: small; text-align: justify;">
எழுத்தில் மிகுந்த ஆச்சாரத்தையும், ஒழுக்கத்தையும் எதிர்பார்க்கிற நல்லவர்களுக்கு நான் என் புத்தகங்களை வாசிக்கத் தருவதில்லை என்றொரு கொள்கையை வைத்திருக்கிறேன். ஏனெனில் அவர்கள் எதிர்பார்க்கிற ஒழுக்கம் என் புத்தகங்களில் கிடையாது. மீறி அவர்களாகத் தேடி வாசித்துவிட்டு என்னைக் குறித்த பிம்பங்களைக் கலைத்துக் கொள்வதில் எனக்கொன்றும் அபிப்ராயம் இல்லை. இந்த Ôஒழுக்க எழுத்தைÕ நான் வெறுக்கிறேன். வாழ்க்கை இவர்கள் நினைக்கிற மாதிரி ஒழுக்கச் சட்டகத்துக்குள் அடங்கி இல்லை. ஒழுக்கவாதிகள் மட்டுமே எழுத வேண்டுமானால் இந்த உலகில் ஒரு நல்ல எழுத்தாளன்கூட இருக்க முடியாது. அதற்காக வலிந்தெழுதும் ஆபாசத்தை நான் ஒப்புக் கொள்ளவும் மாட்டேன். எழுத்து சுதந்திரமானது. அதற்குத் தடைகள் எதுவும் இருக்கக்கூடாது. இவ்வகையில் பெருமாள் முருகன் எழுதியுள்ள கெட்டவார்த்தை பேசுவோம் நூலை நாம் வரவேற்க வேண்டியுள்ளது. பெருமாள் முருகன் இதை வலிந்து செய்யவில்லை. கட்டமைக்கப்பட்டுள்ள பொய்மைகளைத் தகர்க்க வேண்டுமெனும் நோக்கத்துடன் இது எழுதப்பட்டிருக்கிறது என்று வேண்டுமானால் சொல்லலாம். கெட்ட வார்த்தைகளை வலிந்து பயன்படுத்திப் பிரபலம் பெறுவதோ, பாலியல் சார்ந்து எழுதி நிலைநிறுத்திக் கொள்வதோ எனக்கு அவசியமற்றவை என்று அவர் முன்னுரையில் பேசுகிறார். இது ஒரு ஆய்வு. சகமனிதர்களின் இயல்பான உரையாடல்களை, அவை வெளிப்படும் தருணங்களை, அதன் கொச்சை அழகை, கவித்துவத்தை, தமிழ் இலக்கியங்களிலிருந்தும், நாட்டார் கதையாடல்கள், வாய்மொழி வழக்காறுகள், கூத்துகள் எனப் பல்வேறு வடிவங்களிலிருந்தும் வாசித்துப் பார்த்து வெளிப்படுத்தியுள்ள ஆய்வு.</div>
<div style="font-family: arial; font-size: small; text-align: justify;">
* * *</div>
<div style="font-family: arial; font-size: small; text-align: justify;">
யோ.கர்ணன் சமீபமாகத் தனது கதைகளின் மூலமாக அதிர்வலைகளை உருவாக்கிக் கொண்டிருக்கும் இளம் ஈழ எழுத்தாளர். ஏற்கெனவே இவருடைய தேவதைகளின் தீட்டுத்துணி தொகுப்பு வெளிவந்திருக்கிறது. சேகுவேரா இருந்த வீடு இரண்டாவது தொகுப்பு. பொதுவாக ஈழ எழுத்தாளர்களை இரண்டு விதமாகப் பிரிக்கலாம். ஒரு சாரார் ஈழத் தமிழ் மக்களின் பண்பாடு கலாச்சாரம் ஜாதி வர்க்க ரீதியான பிரிவுகள், மோதல்கள் இவற்றைத் தம்படைப்புகளில் பிரதிபலிப்பவர்கள். இவர்கள் மூத்த தலைமுறையைச் சேர்ந்தவர்கள். மற்றொரு சாரார் இளைய தலைமுறையினர். விடுதலைப் போராட்டம் தீவிரத்தை அடைந்த யுத்தகளத்திலிருந்து நேரடி சாட்சியாகத் தம் படைப்புகளை முன் வைப்பவர்கள். யோ.கர்ணன் இரண்டாம் வகையைச் சார்ந்தவர். பெரும்போக்காகவுள்ள யுத்த சாட்சியத்திலிருந்தும் அவர் துலக்கமாக விலகிச் செல்கிறார். ஆனால் ஒரு முழுமையான யுத்த சாட்சியம் என்று வரும்போது அதன் தவிர்க்கப்படவியலாத ஒரு கூறாக அவர் காணப்படுகிறார்ÕÕ என்று நிலாந்தன் இவரைக் குறித்து அபிப்ராயப்படுகிறார்.</div>
<div style="font-family: arial; font-size: small; text-align: justify;">
தொகுப்பிலுள்ள முதல் கதையான திரும்பி வந்தவனை வாசித்து முடித்ததும் யாரோ நம் முகத்திலறைகிற உணர்வேற்படுகிறது. யதார்த்தம் எப்போதுமே கசப்பாகவும் ஜீரணிக்க முடியாததாகவுமே இருக்கும் என்பதுபோல. எல்லாக் கதைகளுக்கும் ஈழப்போராட்டமும், இயக்கச் செயல்பாடுகளும்தான் களம். விமர்சனத்துக்கு அப்பாற்பட்டதென இங்குள்ள தமிழ்மக்களுக்கு கற்பிக்கப்பட்டிருக்கும் ஓரிடத்திலிருந்து கொண்டு விருப்பு வெறுப்பற்ற நடுநிலைத் தன்மையுடனும், நவீன கதைகளுக்கேயுரிய கூறுகளுடனும் கதை சொல்லும் கர்ணன் 13 கதைகளிலும் தன்னையும், தன் போராட்டத்தையும், தங்களது பெண்களையும், ஆண்களையும், தலைவர்களையும் சுய விமர்சனம் செய்து கொள்கிறார். எந்த இடத்திலும் தோற்றுப் போனோம் என்கிற கழிவிரக்கம் கொப்பளிக்கவில்லை. இதனாலேயே இவருடைய கதைகள் தனித்துவம் பெறுகின்றன.</div>
<div style="font-family: arial; font-size: small; text-align: justify;">
* * *</div>
<div style="font-family: arial; font-size: small; text-align: justify;">
தமிழ் நவீன இலக்கியவாதிகளால் அடிக்கடி நினைவு கூறப்படும் அயல் எழுத்தாளர்களில் தஸ்தயேவ்ஸ்கி முக்கியமானவர். அடுத்த கணத்தில் நிறைவேற இருந்த மரண தண்டனையிலிருந்து தப்பித்துக் கொண்ட அதிர்ஷ்டசாலியாக அவர் இருந்தாலும், வாழ்வின் எல்லைவரை துயரங்களை எதிர்கொண்டு போராடிய கலைஞனாகவும் இருந்தார். எழுத்தாளர்கள் வலிய நிறுவிக்கொள்ளும் ஒழுக்க விதிகளைப் புறந்தள்ளி சூதாடியாக, வலிப்பு நோயாளியாக, தீராத கடனாளியாக வாழ்க்கையை வாழ்ந்து பார்த்த அவருடைய படைப்புலகிலிருந்து, குற்றமும் தண்டனையும், கரமசோவ் சகோதரர்கள், இடியட், வெண்ணிற இரவுகள் உள்ளிட்ட உலகப் புகழ்பெற்ற படைப்புகள் வெளிவந்தன.</div>
<div style="font-family: arial; font-size: small; text-align: justify;">
தஸ்தயேவ்ஸ்கியின் ஒரு புதிய நாவலைப் பிரதி எடுக்கும் நிமித்தமாகச்சென்ற இளம்பெண் அன்னா, தஸ்தயேவ்ஸ்கியின் அன்புக்கும், காதலுக்கும் பாத்திரமாகி அவருடைய இறுதிக்காலம் வரை வாழ்க்கைத் துணையாக இருக்கிற வாய்ப்பைப் பெறுகிறார். அன்னா தஸ்தயேவ்ஸ்கி எழுதிய நினைவுக்குறிப்புகள் என்னும் இந்நூல் தஸ்தயேவ்ஸ்கி ஒரு நாவலைச் சொல்லி அதை அன்னா பிரதி எடுத்துத் தருவது வரைக்குமான குறுகிய கால சம்பவங்களைக் கூறுவதாக இருப்பினும் தஸ்தயேவ்ஸ்கி என்கிற மகா கலைஞனது வாழ்க்கை நிகழ்வுகளின் குறுக்கு வெட்டுத் தோற்றமாகவும் இது நமக்குப் புலனாகிறது.</div>
<div style="font-family: arial; font-size: small; text-align: justify;">
மாபெரும் எழுத்து மேதைக்கும், இளம் பெண்ணுக்குமான அப்பழுக்கற்ற உறவைச் சித்தரிக்கின்ற குறுநாவலைப் போலவும் இதை வாசித்தெடுக்கலாம். யூமா.வாசுகியின் நேர்த்தியான மொழிபெயர்ப்பு இவ்வனுபவத்தை நமக்கு வழங்குகிறது.</div>
<div style="font-family: arial; font-size: small; text-align: justify;">
“வலிப்பின் நேரத்தில் நான் சொர்க்கத்திலிருந்தேன். இந்த உலகத்தின் மற்ற அனைத்து இன்பங்களையும் தருகிறேனென்று சொன்னாலும் இந்த சொர்க்கத்தை நான் யாருக்கும் விட்டுக் கொடுக்க மாட்டேன்” என்று கூறும் தஸ்தயேவ்ஸ்கியைத் தாக்கியது பரவச வலிப்பு நோய் என்று மருத்துவர் பி.இக்பால் ஒரு கட்டுரையில் குறிப்பிடுகிறார். தஸ்ததயேவ்ஸ்கி படைத்த வலிப்பு நோயுள்ள கதாபாத்திரங்களையும் அவர் அதில் பட்டியலிடுகிறார்.</div>
<div style="font-family: arial; font-size: small; text-align: justify;">
“ஒரு கணம் மேலெழுந்து வந்த அதிருப்தி அத்துடன் இல்லாமற் போனது” என்று அன்னா குறிப்பிடுகிற ஒரு வரி நினைவுக்குறிப்புகளின் ஒன்பதாவது அத்தியாயத்தின் கடைசி பாராவில் வருகிறது. இந்த வரியை நான் நீண்ட நேரம் அசைபோட்டுக் கொண்டிருந்தேன். அந்த அதிருப்தி மட்டும் மேலெழுந்து தீவிரம் பெற்றிருந்தால் ஒருவேளை தஸ்தயேவ்ஸ்கியும் அன்னாவும் வாழ்க்கையில் இணைந்திருக்க வாய்ப்பில்லாமலேயே போயிருக்கும்.</div>
<div style="font-family: arial; font-size: small; text-align: justify;">
தஸ்தயேவ்ஸ்கியின் காதல் குறித்து எழுதப்பட்டுள்ள கட்டுரையை வாசிக்கையில் பொங்கி வந்த கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறிப் போனேன். “சில நேரம் தஸ்தயேவ்ஸ்கி அன்னாவின் உடைகளைக்கூடப் பணயம் வைத்துச் சூதாடுவார். ஆனால் சூதாட்டம் அவருக்கு எழுதுவதற்கான உட்தூண்டலாக இருப்பதால், அவள் ஒருபோதும் அதை எதிர்த்ததில்லை. தஸ்தயேவ்ஸ்கி அனைத்தைவிடவும் மேலாக அன்னாவை நேசித்திருந்தார். சில நேரங்களில் நாட்கணக்காகப் பட்டினி கிடக்க வேண்டி வரும்போது, அல்லது இருப்பிலிருந்த, அன்னாவின் கடைசி உடையையும் சூதாடித் தோற்கும்போது, ஒரு களங்கமற்ற சின்னஞ்சிறுவனைப்போல அவர் அவள் காலடியில் குமுறி அழுவார்”. </div>
<div style="font-family: arial; font-size: small; text-align: justify;">
எழுத்தாளர்கள் மட்டுமல்ல, எழுத்தாளர்களின் மனைவிகளும் ஒருமுறை வாசித்துப் பார்க்க வேண்டிய புத்தகமாக இந்த நினைவுக்குறிப்புகளை நான் உணர்கிறேன்.</div>
</div>கீரனூர் ஜாகிர்ராஜாhttp://www.blogger.com/profile/16821172975494211862noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-5325351298899765001.post-74030702420367710802012-04-13T01:57:00.001-07:002012-04-13T02:00:14.418-07:00கீரனூர் ஜாகிர்ராஜாவின் "பெருநகரக் குறிப்புகள்”<div style="text-align: justify; font-weight: bold;"><span style="font-size:100%;">எழுத்தும் வாழ்க்கையும் வேறுவேறு அல்ல என்று வெகு காலமாய் சொல்லிக்கொண்டே வருவதை மரபாகக் கொண்டிருந்தாலும் ஒரு எழுத்து என்பது நேர்மையான வாழ்வைப் பிரதிபலிக்க வேண்டும். ஒரு நல்ல மனிதனாக, நேயமுள்ள குடும்பத்திற்குப் பொறுப்பானவனாக இருந்து விட்டால் எழுத்து தேவையில்லை. அப்படி வாழ்ந்தால் போதுமானதே. இந்தப் போதாமையால்தான் அவரவர் சமூகத் தேவைக்கேற்பவும் சூழலுக்கேற்பவும் எழுத்தைக் கைக்கொள்ள வேண்டிய கடப்பாடு ஒவ்வொரு படைப் பாளனுக்கும் நேர்கிறது. எனவேதான் எழுத்தும் வாழ்க்கையும் வேறுவேறு அல்ல என்பதை சொல்லித்தீர வேண்டிய நிர்ப்பந்தம் நிகழ்கிறது. ஜாகிரைப் பொறுத்தளவில் தன்னுடைய வாழ்வின் ஒவ்வொரு துளியையும் கூர்ந்து கவனித்து அதைப் படைப்புக்குள் பதிவுசெய்து கொண்டே போவதை இத்தொகுப்பின் சிறுகதைகளில் உள்ள ஒவ்வொரு சொல்லும் தெளிவாகக் காட்டுகிறது. வாழ்வதையே படைப்பாகக் காட்டி வாழ்கிறார்.<br />காய்ந்து கிடக்கிற நதியில் எல்லாமும் கிடக்கின்றன. அதுகுறித்து நதியிடம் எந்தவிதமான கருத்தோ கோபமோ ஆனந்தமோ இருப்பதாகத் தெரியவில்லை. ஆனாலும் நீர் நிறைந்து கரைமேவி ஓடுகையில் நதியின் அழகு சொல் லொண்ணா எண்ணக்குவியலை மனத்துள் விதைக்கிறது. சாதாரண மனிதன் குளிக்க இறங்கி ஆனந்தம் கொள் கிறான். நீச்சல் தெரிந்த குழந்தைகள் ஆசையில் அலுப்பு தீருமட்டும் நதியில் விளையாடி களைக்கின்றன களிப்பில். நீச்சல் தெரியாதவன் நதியைப் பார்க்கையில் பயத்துடன் எதிர்கொள்கிறான். கவிஞனுக்கு நதி ஆயிரம் சொல்லித் தருகிறது. பல்லாயிரம் படைப்புகளில் நதி நுரைத்துப் பொங்கி ஓடிக்கொண்டுதானிருக்கிறது. இப்படிப்பட்ட நதி காய்ந்து கிடக்கும் காலங்களில் பார்க்க வலி பொங்குகிறது. எல்லாமும் அதில் கொட்டப்படும் போது ஆத்திரம் வருகிறது. இதற்கும் நதி எதுவும் சொல்வதில்லை. இப்படித்தான் வாழ்க்கை எல்லோர் வாழ்விலும் நதியைப்போல வறண்டும் நிறைந்தும் கிடக்கிறது. வாழ்கிற நிலைப் பாட்டில்தான் எல்லாமும் சமன்படுகிறது.<br /><br /></span>அவரவர் தன்மைக்கேற்ப அல்லது அமைந்துவிடுகிற சூழலுக்கு ஏற்ப இந்த நிலைப்பாட்டை சமன் செய்கிற அல்லது சமன் செய்துவிட்டதான திருப்தியில் வாழ்க்கை முடிந்துபோகிறது. இங்கே இந்த நிலைப்பாட்டிற்காக காயங்களும் மகிழ்ச்சியும் உருவாக்கம் கொள்கின்றன. இவற்றின் உருவாக்கத்தில் மதமும் இனமும் ஜாதியும் பேதங்களும் வேராக நிற்கின்றன. இது சாதாரண மனிதனை அவஸ்தைப்படுத்துகிறது. படைப் பாளனுக்குச் சவாலாக அமைகிறது. தன்னுடைய சமன்பாட் டிற்காகவும் தன்னைப்போன்றோரின் சமன்பாட்டிற்காகவும் இந்தச் சவாலை ஏற்கும் கட்டாயத்தை அவன் பிறந்து வளர்ந்த சமூகமே அவனுக்கு விதிக்கும்போது காயங்களால் தாக்கப்பட்டும் அவமானங்களால் உணர் வூட்டப்பட்டும் வலிகளின் வெப்பத்தில் உருகுகிறான். படைப்பாளனாகக் களத்தில் நிற்பவன் இவ்வெப்பத்தைப் படைப்புக்குள் பரப்பி அதை எல்லோருக்கு மான வலியாக உணர்த்தி நிற்கிறான். ஜாகிர்ராஜாவும் இப்படித்தான்.<br /><br />எப்போதும் ஏராளமான காயங்களையும் உணர்வுச் சிதைவுகளையும் அவமானங்களையும் சந்தித்த வடு மாறாமல் தொடர்வதை மனம் கசிவோடு ஒவ்வொரு கதையிலும் உணர முடிகிறது. எனவே புனைகதையின் ஒரு முக்கியக் கூறாக இருக்கும் சிறுகதை புனையப்படும் கதை எனும் பொருண்மைக்கு அழுத்தமான பொருளாக வாழ்க்கையை உள்ளது உள்ளபடி புனைதல் எனும் நிலையில் "பெருநகரக் குறிப்புகள்” தொகுப்பை வாசித்து முடிக்கையில் மனம் நனைகிறது. ஒரு சமூகம் என்பது அதில் அடங்கியுள்ள மக்கள் கூட்டத்தை வைத்து அடையாளப்படுத்துவது அதன் பொருளாக அறியப்படுவது. எனவே அதன் பொறுப்பு என்பது பொதுமையானது, சமமானது, நலம் பயக்குவது என்பதைத் தாண்டி, காக்க வேண்டிய சமூகமே நசுக்கிச் சிதைப்பதைச் சிறுவயது முதல் கவனித்து அதை மறக்க முடியாமல் மன்னிக்கவும் தயாராக இல்லாமல் கடுமையாக விமர்சித்து ஒவ்வொரு கதையிலும் நெஞ்சு நிமிர்த்தும் ஜாகிர் எனும் படைப்பாளனின் தெளிவு அதிசயமானது, ஆச்சர்யமானது, பாராட்டுக்கு மிக உரியதும்கூட. ஒவ்வொரு சிறுகதைக்குள்ளும் சொல்லும் விதமும் உணர்த்தும் விதமும் மொழிநடையும் எதார்த்தமும் அழிக்கமுடியாத அழுத்தம் கொண்டு லபக்கென்று விழுங்குவதுபோல வாசிக்கிற மனசுக்குள் போகிறது. இருப்பினும் சில கதைகளில் சிறுவயது நிகழ்வுகளில்கூட இடையிடையே இன்றைய வயது ஜாகிர்ராஜா கருத்துச் சொல்வது யதார்த்தம் மீறியது என்றாலும் அது பட்டுக் காய்த்துப்போன வடுவின் உறுத்தல் எனும் நிலையில் ஏற்றுக்கொள்ளவே தோன்றுகிறது.<br /><br />இத்தொகுப்பு மட்டுமல்ல ஜாகிர்ராஜாவின் கதைகள் முழுக்கவே ஒரு சிறப்பான அம்சமாகப் பார்ப்பது அவற்றில் எந்தத் திணிப்பும் இல்லை. வலிகளுக்கான அறிவுரை மருந்தும் இல்லை. தனக்குத் தன்னுடைய பிறந்த சமூகம் விதித்ததை, அதனால் பட்ட இன்னல்களை சிறுவயது முதலே மனத்தில் அழிக்கமுடியாத காய பிம்பமாக உள் வாங்கிப் பின்பருவத்தில் படைப்பு மனமாக உருக்கொண்ட நிலையில் படைப்பில் அதனைக் கொட்டுகிறார். படிப்போர்க்கு நீதி சொல்வதல்ல இக்கதைகளின் நோக்கம். ஒரு சமூக வலியை காட்சிப்படுத்துவதில் இவை சிறப்புறுகின்றன. மேலும் சமூகத்தை எதிர்ப்பது அல்லது போர்க்கொடி உயர்த்துவதும் நோக்கமல்ல. ஆனால் தான் பட்ட வலியை தன் சாதியைச் சேர்ந்த ஆண்களும் பெண்களும் பட்ட அவமானங்களையும் படும் வேதனை களையும் மாற்றி சமூகம் மாறிக்கொள்ள வேண்டும் என்பதை உறுத்தலோடு உணர்த்துவது தன்னுடைய படைப்பு நோக்கமாக ஜாகிர் கொண்டிருக்கிறார் என்றே உணர முடிகிறது. இஸ்லாமியச் சமூகத்தின் சடங்குகளையும் மரபுகளையும் தேவைப்படும் சூழல்களில் கதைகளில் இயல்பாகச் சொல்லும் போக்கில் அவர் கொண்டிருக்கும் பற்றும் தெளிவுறத் தெரிகிறது. ஒரு தாய் அல்லது தந்தை தவறு செய்யும்போது அதை வயதில் குறைந்த மகன் சுட்டுவிரல் நீட்டிக் குற்றத்தை உணர்த்தும்போது அதைத் தாங்கிக்கொள்ள இயலாத மனோபாவத்தைத் தவிர்த்து சமூகம் ஜாகிரின் படைப்பு மனத்தைக் கருதவேண்டும் என்றே தோன்றுகிறது. குற்றங்களைக் கண்டிக்கும் உரிமை ஒரு மகனுக்கு உண்டு என்பதைக் கட்டாயம் ஏற்க வேண்டும். இதைத்தான் ஜாகீர் சிறுகதைகள் உணர்த்துகின்றன.<br />காதலின் நுட்பமும் நேயமும் உணரப்படாமை, மனித மதிப்பீடுகள் அலட்சியப்படுத்தப்படுதல், மனம் சிதைத்தல், பசியின் தாகம், நட்பின் அழுத்தம், உறவின் மேன்மை, வாழ்வதற்காக அலைக்கழிக்கபடும் வாழ்க்கை, சடங்குகளின் பெயரால் சாதிகளின் பேதத்தால் மிருகமெனப் பாயும் மேலாதிக்கங்கள், அதற்கான போராடுதல்கள், அவற்றின் தோல்வியும் அவமானங்களும், இதைப் பொறுத்துக்கொள்ள முடியாத நிலையில் நிகழும் மன வெடிப்புகள் போன்றவை இவரது கதைகளின் கருக்களங்களாக நுரைத்துக் கிடக்கின்றன. சக்கிலி மத்தை, (மந்தைய எங்களுக்குன்னு ஒதுக்கிக் குடுக்கற வரைக்கும் நாங்க யாரும் எடுப்பு கக்கூஸ் அள்றதுக்கு வர மாட்டோம்), மழை - மகனைப் புரிந்துகொள்ளாத தந்தை (....அங்கேயே சென்ட்ரல் தண்டவாளத்திலேயோ கூவத்திலோ விழுந்து உயிரைப் போக்கிக்கொள்ளலாம். உன் தீதார்கூட எங்களுக்குத் தேவையில்லை..... நல்லவர்களுக்கொல்லாம் சீக்கிரமாய் மௌத் வந்துவிடுகிறது. வேணும் ஸலாம். நாயன் துணை), மனத்தை உருக்கும் வெம்மை (....மனதுக்குள் சுடர்விட்ட வண்ண வண்ண மெழுகுவர்த்திகளை அவன் தன் பிஞ்சு வாயால் ஊதி ஊதி அணைக் கிறான்.<br /><br />ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பாலிருக்கும் அவனுக்கு இந்த சிறைச்சாலையின் நெடிய சுவர்களுக்குள்ளிருந்து நான் கூறும் வாழ்த்துகள் கேட்கவா போகிறது), சுவடுகள் வாழ்வின் அவலத்தை மிக நெருப்போடு உணர்த்தி வலிக்கச் செய்கிறது (....நெடுஞ்சாலைகளும் எல்லாவிதமான சீதோஷ்ணங்களும், யாசகக் குரல்களும், புறக்கணிப்பும் அத்தாவுக்கு ரத்தத்தில் கலந்தவை.) அறைச்சுவர்கள் சிரிக்கின்றன, (....அவர்களுக்கு உடமையான பெட்டிகளிலிருந்து மேலும் பல ஜாதிப் பாம்புகள் எட்டிப் பார்க்கின்றன....சற்றுமுன் நிகழ்ந்த வாதங்கள் மறந்து கண்களுக்கு முன்னால் பானம் நிறைந்த குவளை தோன்றவும் குளிர்ந்துபோனான்), அடையாளம் - பசியின் மகத்துவத்தை, மேன்மையை அடையாளப்படுத்துவது (....பள்ளி வாசல் வீதியில் அவள் கிழக்கும் மேற்குமாய் அலைந்ததைக் கண்டு ராவுத்தப் பசங்கள் சிரியாய்ச் சிரிப்பார்கள்...... நம்மளப் போல ஏழைக்கி பட்டினி கெடக்குற நாளெல்லாம் நோம்புதா) இவையெல்லாம் தொகுப்பின் மீண்டும் மீண்டும் வாசிக்க வேண்டிய கதைகள். வாழ்வை ஒருமுறைக்கு நூறு முறையாகப் பரிசீலித்து வாழ வேண்டிய தேவையை உணர்த்துபவை.<br /><br />தேர்ந்த எழுத்தாளுமையை ஒவ்வொரு கதையும் வெளிக்காட்டுகிறது. தடையற்ற பிரவாகம் சொற்களினூடாக பாம்பு செல்வதுபோல அமைந்திருப்பது படிப்பதற்கான ஆர்வத்தை குறைக்காது காக்கிறது. என் வாழ்க்கையும் அதன் மீது கொட்டப்பட்ட சமூகத்தின் ஆதிக்கக் குப்பையும் அதனைப் பற்றவைத்து நெருப்புக் காட்டிய சாதியப் பிரிவும் தவிர வேறு வேண்டியதில்லை என்பதான ஜாகிரின் எழுத்து அதன் மூலம் ஒரு பொதுமையான சமூக அவலத்தை, அசிங்கத்தை உரித்துக் காட்டுவது இக்கதைகளின் சாகா வெற்றியாகக் கருதிக்கொள்ளலாம். கதைகளின் மொழிநடை தேர்ந்த நடையாக உள்ளது. அவற்றிலும் எளிமையும் இயல்பும் அதேசமயம் செழுமையான அழுத்தமும் கொண்டு மைந்துள்ளது. சிலவற்றைச் சான்று காட்டலாம்.<br /><br />நான் இங்கு கொட்டும் பனியிலும், மழையிலும் வம்பாடு பட்டு தொகை தொகையாக அனுப்பினால் தின்று தெறித்து ஊரைச் சுற்றுவது உன் வழக்கமாகிவிட்டது. மானம், ரோஷம் என்பது மருந்துக்குக்கூட இல்லாத மழுங்கைதான் நீ.<span style="text-decoration: underline;"><br /><br /></span>....தணிக்கவியலாத வெம்மை... அதன் இறுக்கமான பிடி மலைப் பாம்பின் நெரிப்பென எலும்புகளை முறிக்கிறது.<br /><br />யாசகக் குரல். அதுவும் அக்காவின் சோகம் ததும்பிய யாசகக் குரல் எத்தனை துன்பமானது. ஒரு நாளேனும் அத்தா இதை உணர்ந்ததில்லை. புவ்வாவின் ஆல்பம் குட்டை மர பீரோவுக்குள் இருக்கிறது. ஆல்பத்தில் கணக்கற்ற கன்னிகள் நீந்துகிறார்கள். அது பெருமூச்சுகளின் சமுத்திரம் என மாறுகிறது... விதவிதமான பெண்களின் நீண்டகால கனாக்கள் ஆழத்தின் ஆழத்துள் பாறைப் பாசியாய் படர்ந்து கிடக்கிறது. அபிலாஷைகளின் இழைகளால் நெருக்கி நெய்யப்பட்டது அவர்களின் ரூபங்கள்.<br /><br />வாழ்வின் உண்மைகளுக்குள் நீந்திக்கொண்டிருக்கிற படைப்பாளனின் உணர்வுபூர்வமான இத்தொகுப்பும் படைப்பாளனும் கவனத்தில் கொள்ளப்படவேண்டும். இத்தொகுப்பை வாசித்துவிட்டு எதுவும் பேசலாம். இடமிருக்கிறது. வாசிக்கிற ஒவ்வொருவரும் ஏதாவதொரு சிறுகதையில் வாழ்வதற்கான சாத்தியங்களை இத்தொகுப்பு கொண்டிருப்பதை இத்தருணத்தில் சொல்வதில் மகிழ்ச்சி கொள்கிறேன்.<br /><br /><br /></div>கீரனூர் ஜாகிர்ராஜாhttp://www.blogger.com/profile/16821172975494211862noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5325351298899765001.post-47693761236667718912012-04-05T22:17:00.005-07:002012-04-05T22:48:12.665-07:00இருதயச் சுவர்களில் எழுதிச் சென்ற கலைஞன்<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEikdSmHccTji6dgcUzd4Cj6z1DVxPLAU6B13-QOouOQ361R_LmtdoxWCnFFgQLyNnBIiNgH-7S5QVgLHdq9S-iNDXYPhnlLB-WBC4mXp12FmPsRAouHWB_uBIfS1MzFuqOYj9F3d68CfxV6/s1600/678.tif"></a><span ><b><br /></b></span><img src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgbvhqNuJVyxk7orRyKzVQF4TbQ6VNlVBzChpNHMuPaRIoM8RQANp4JJ11lWa_UHu-qB2oK_VIreHOOzkgE-A_q0o8VZpau1YBwgC0ZWZPik5PbUokMPvpfcuIWatUj8zHMUbOtVQVIutB_/s320/suva.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5728159017385863106" style="color: rgb(0, 0, 238); float: right; margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 10px; margin-left: 10px; cursor: pointer; width: 218px; height: 320px; " /><div><br /></div><div><span ><b>கீரனூர் ஜாகிர்ராஜா</b></span></div><div style="font-family: Georgia, serif; font-style: normal; font-variant: normal; font-weight: normal; line-height: normal; "><span ><br /></span></div><div style="font-family: Georgia, serif; font-style: normal; font-variant: normal; font-weight: normal; line-height: normal; "><span >புத்தகச் சந்தைகள் இம்மண்ணில் காலூன்றி வலுப்பெற்ற பிறகு புதிய புத்த</span><span style="font-size: small; ">கங்களின் வரவு கணிசமாகப் பெருகியுள்ளது. கலை இலக்கியம் மட்டும்தான் என்றில்லை; வி</span><span style="font-size: small; ">தம்விதமான தலைப்புகளுடன் வகை பல மாதிரி</span><span style="font-size: small; ">யான நூல்கள் அச்சாகிக் குவிந்த வண்ணமுள்ளன. வாங்குகிற எல்லோருமே வாசிக்கிறார்களா என்பதைத் துல்லியமாகக் கண்டுபிடிக்க இயலவில்லையாயினும், புத்தகங்கள் நாலா திசைகளிலும் சிதறிப் பரவலாகியுள்ளதை மட்டும் அனுமானிக்க முடிகிறது.</span></div><div><div style="font-family: Georgia, serif; font-style: normal; font-variant: normal; font-weight: normal; line-height: normal; "><span ><br /></span></div><div style="font-family: Georgia, serif; font-style: normal; font-variant: normal; font-weight: normal; line-height: normal; "><span >கடந்த பத்தாண்டுகளில் தமிழ் பதிப்புத்துறை வியத்தகு வளர்ச்சி கண்டுள்ளதும், வாழும் ஆளுமைகளின் ஆக்கங்கள் மட்டுமின்றி வாழ்ந்து மறைந்தவர்கள் விட்டுச் சென்ற பதிவுகளெல்லாம் அச்சாகி நினைவுகளை நெஞ்சகத்தில் மீட்டிப் பார்க்கும்படியான நெகிழ்வான சந்தர்ப்பங்கள் உருவாகியுள்ளதும் முக்கியமானது. அவ்வகையில் பெரியார் திராவிடர் கழகத் தோழர் வெ. ஆறுச்சாமியின் முயற்சியில் அவ்வியக்க வெளியீடாக ‘சுவரெழுத்துப் புரட்சியாளர் சுவரெழுத்து சுப்பையா - சிந்தனைப் பொறிகள்’ நூல் வடிவம் பெற்றுள்ளது.</span></div><div style="font-family: Georgia, serif; font-style: normal; font-variant: normal; font-weight: normal; line-height: normal; "><span ><br /></span></div><div style="font-family: Georgia, serif; font-style: normal; font-variant: normal; font-weight: normal; line-height: normal; "><span >தமிழகத்தின் நீண்ட அரசியல் வரலாற்றில் சுவரெழுத்தை ஒரு பிரச்சார உத்தியாகப் பயன்படுத்திக் கொண்டதில் பெரும்பங்கு பொதுவுடமை இயக்கங்களுக்கும் திராவிட இயக்கங்களுக்குமானது. மேல்தட்டு, மத்தியதர வர்க்கத்தினரின் பத்திரிகை வாசிப்புகளைத் தாண்டிய வெகுமக்கள் கவன ஈர்ப்பு சுவரெழுத்துகளுக்கு உண்டு.</span></div><div style="font-family: Georgia, serif; font-style: normal; font-variant: normal; font-weight: normal; line-height: normal; "><span ><br /></span></div><div style="font-family: Georgia, serif; font-style: normal; font-variant: normal; font-weight: normal; line-height: normal; "><span ><div>சுவரெழுத்தைக் கலையாக மாற்றுவது ஒருவகையில் நம் குழந்தைகள் தான். குழந்தைகளுள்ள ஒவ்வொரு வீட்டுச் சுவர்களும் கண்டிப்பாக பென்சில் கிறுக்கல் களைக் கண்டிருக்க வேண்டும். இவையே குழந்தைமையின் ஆதி மனப்பதிவுகள்.</div><div><br /></div><div>எங்கள் வீட்டுப் புழக்கடைச் சுவரில் விறகுக்கரி கொண்டு நானெழுதிய வாசகங்களும் வரைந்து கிறுக்கிய சித்திரங்களும்தான் என் எழுத்து வாழ்க்கைக் கான தொடக்கப்புள்ளியாக இருக்கக்கூடும்.</div><div>கோடையின் வெறிச்சோடிய தெருச்சுவரொன்றில் ‘பச்சை ரத்தம் குடிக்கும் பூசாரி பாலிடால் குடித்துக் காட்டுவானா’ என்கிற குருவிநீலம் கரைத்தெழுதப்பட்ட வாசகங்கள் தீடீரெனப் பதிந்திருக்க அதை திகைத்துப் படித்த கணத்தை இன்னும் மறக்க முடியவில்லை.</div><div><br /></div><div><img src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEikdSmHccTji6dgcUzd4Cj6z1DVxPLAU6B13-QOouOQ361R_LmtdoxWCnFFgQLyNnBIiNgH-7S5QVgLHdq9S-iNDXYPhnlLB-WBC4mXp12FmPsRAouHWB_uBIfS1MzFuqOYj9F3d68CfxV6/s320/678.tif" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5728159778648756818" style="color: rgb(0, 0, 238); font-family: 'Times New Roman'; font-size: medium; float: left; margin-top: 0px; margin-right: 10px; margin-bottom: 10px; margin-left: 0px; cursor: pointer; width: 187px; height: 320px; " /><br class="Apple-interchange-newline">இன்றைக்கு சுவரெழுத்து வழக்கொழிந்து வருகிறது. பெரிய ஜவுளி நிறுவனங்களின் விளம்பரங்கள் மட்டுமே சுவர்களை ஆக்ரமித்திருக்கின்றன. நவீன ஃப்ளெக்ஸ் கலாச்சாரம் வந்து எல்லாத்தெரு முனைகளிலும் பவிசு காட்டி நிற்கிறது. நடந்து முடிந்த சட்ட மன்றத் தேர்தல் நேரத்திலும் கூட சின்னங்கள் வரையப்படாத சுவர்களே அதிகம். </div><div><br /></div><div>1980 களின் மத்தியில் கோவையில் சுற்றித்திரிந்த காலக்கட்டத்தில் வெங்கிட்டாபுரம் நண்பர்கள் ரவி, கந்தசாமி ஆகியோருடன் ஒரு நிகழ்வில் சுவரெழுத்து சுப்பையாவை சந்தித்துள்ளேன். அந்த நேரத்தில் சுப்பையாவின் திறன்களைத் தாண்டி அவருடைய ஆக எளிமையான தோற்றத்தின் மீதுதான் என் கவனம் குவிந்திருந்தது. பல வருஷங்களுக்குப் பின் சுப்பையாவின் எண்ணங்கள் நூலாகி அதற்கொரு அபிப்பிராயத்தைப் புத்தகம் பேசுது வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வேனென கனவிலும் நினைத்ததில்லை.</div><div><br /></div><div>சாலை அமைக்கப் பயன்படும் தார் எடுத்துக் காய்ச்சி சூடு ஆறிய பின் அதில் மண்ணெண்ணெய் ஊற்றி கையை விட்டுக் கலக்கி சுருட்டி வைத்த மெல்லிய துணியால் தொட்டுத் தொட்டு சுவரில் எழுதும் முறை சுப்பையாவுடையது. தமிழகமெங்கும் இப்படித்தான் பெரியாரின் கருத்துகளை சுப்பையா பதிவு செய்திருக்கிறார். ஆரம்பக் கல்வியைக் கூட முறையாகப் பெற்றிராத இவர் பெரியாரிசத்தை தரவாகக் கற்று ஊர் ஊராய் சுற்றிச் செய்திருக்கும் பணிகளை நினைக்க மலைப்பாய் இருக்கிறது. இதற்கென இவர் நன்கொடை ஏதும் பெற்றதில்லை. பழகிய தோழர்களிடம் அவர் கேட்டுப் பெற்றது பழைய டைரிகளை மட்டுமே.</div><div><br /></div><div>சுப்பையாவின் சிந்தனைப் பொறிகளை வாசிக்கையில் சூடான மிளகாய் பஜ்ஜியை காரத்துவையலில் தோய்த்துச் சாப்பிட்ட மாதிரி உறைப்பாயிருக்கிறது. குப்பைத் தொட்டியைக் காட்டி‘இதில் எழுதுங்கள் அண்ணே’ என்றால் சுப்பையா உடனே “புராணத்தை இதிலே போடு” என்றெழுதுவாராம். பெரியார் வித்து.</div><div><br /></div><div>நூலில் சுமார் 600 பக்கங்கள் கட்டெறும்பு ஊர்ந்து செல்வது போன்ற அவருடைய கையெழுத்தில் அத்தனையும் பகுத்தறிவுத் தெறிப்புகள். இந்துப் புராணங்களை ‘ஒரு கை’ பார்க்கும் சுப்பையா, கிறிஸ்துவத்தையும், இஸ்லாத்தையும் விட்டு வைக்க வில்லை.</div><div><br /></div><div>‘‘கோயிலில் குழப்பம் விளைவித்தேன்.......’’ என்ற மு. கருணாநிதியின் புகழ்பெற்ற பராசக்தி படவசனத்தை மெச்சிப் பேசாத திராவிட இயக்கத்தினர் இருக்க முடியாது. ஆனால் கறாரான கொள்கைப் பிடிப்புள்ள சுப்பையா “கோயில் கூடாது என்பதற்காக அல்ல என்றால் கடவுள் இருப்பதாக நம்புகிறாயா? இது பெரிய அயோக்கியத்தனம்” என்று விமர்சனம் செய்வாராம். ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்னும் தி.மு.கவினரின் நழுவல்களை சுப்பையா போன்ற பிடிப்புள்ள நாத்திகர்களால் ஜீரணிக்க முடியாதுதான்.</div><div><br /></div><div>சுப்பையாவுடன் பழகிய பலரும் இந்நூலில் அவருடனான தங்களின் அனுபவங்களை விளம்புகின்றனர். அவை பல தகவல்களை நமக்குத் தருகின்றன.</div><div><br /></div><div>ஸ்ரீமான் ராமசாமி நாயக்கர், தோழர் ஈ.வெ.ராமசாமி, பெரியார் ஈ.வெ.ராமசாமி, தந்தை பெரியார், அய்யா போன்ற பல விதமான விளிப்புகளில் பெரியாருக்கே விருப்பமானது ‘தோழர் ஈ.வெ. ராமசாமி’ என்பதுதான். “தோழர் என்றே விளியுங்கள்” இது பெரியார் எழுதிய குடி அரசு தலையங்கம்.</div><div><br /></div><div>சொற்பொழிவாற்ற வரும்போது பெரியார் தனக்குச் சேரும் பெருங்கூட்டத்தைப் பார்த்து வியந்து போய் “நேற்று சுப்பையா வந்தாரா” என்று கேட்பாராம். பெரியார் பேசவுள்ள ஊர்களுக்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாகச் சென்று தம்பட்டமடித்தவர் சுப்பையா.</div><div><br /></div><div>இப்படிப்பட்ட செயல்வீரர் தன் அந்திம காலத்தில் மயிலாடுதுறை ரயில்நிலையத்தில் அனாதைப் பிணமாகக் கிடந்தார் என்பதும், திராவிடர் கழகத் தலைமை இவர் போன்ற பெரியார் பெருந்தொண்டரின் புகைப்படத்தைக்கூட வைத்திருக்கவில்லை என்கிற தகவலும் நம்மைக் கலங்கடிக்கிறது. </div><div><br /></div><div>எனது வடக்கேமுறி அலிமா நாவலில் அதன் நாயகி கழிவறைகளில் எழுதிச் செல்வதும் அதே நாவலில் வரும் கரிக்கோடன் என்னும் சுவரெழுத்துக் கலைஞன் குறித்த புனைவும் சுப்பையாவுடன் தொடர்புடையதாக இருப்பது குறித்து இந்த சந்தர்ப்பத்தில் மகிழ்ச்சியடைகிறேன். </div><div><br /></div><div>ஈடுபாடுமிக்க சுவரெழுத்துப் பிரச்சாரகர்கள், இயக்க மேடைகளில் உரத்த குரலெடுத்து நிகழ்வைத் தொடங்கி வைக்கும் பாடகர்கள், கூச்சமில்லாமல் தெருப்புழுதியில் புரண்டு நடிக்கும் கலைஞர்கள் இவ்வாறான அடித்தள உறுப்பினர்களால் மட்டுமே ஒரு இயக்கத்தின் அஸ்திவாரம் உறுதியாகக் கட்டப்படுகிறது.</div><div><br /></div><div>இன்றைக்கு சுப்பையாவிற்கு தருவதற்கென பழைய டைரிகள் நம்மிடம் நிறைய இருக்கின்றன. சுப்பையாதான் இல்லை. அவருடைய வடிவில் இனிவரப்போகும் சுவரெழுத்துக் கலைஞர்களுக்காக அந்தப் பழைய டைரிகளை நாம் பொத்திப் பாதுகாத்து வைப்போம்.</div></span></div></div>கீரனூர் ஜாகிர்ராஜாhttp://www.blogger.com/profile/16821172975494211862noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-5325351298899765001.post-51068406928538545942012-04-04T22:47:00.005-07:002012-04-05T22:17:41.992-07:00தேய்பிறை இரவுகளின் கதைகள் -- விமர்சனம்<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhdg174bvm_RRCgwcWibCA-AW1kP8YX6zK8mddfNhzNYrnO8iuQOCWZfIr1wRX3ghXqNogqiMeSksiNleMZ717ZHLKDq1XP7TzG6ZfdMiSDI1qGul1NLLgvDi8PmVUA9A27WiilR_n8mMCk/s1600/theipirai+copy.jpg" style="font-size: 100%; " onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}"><img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 223px; height: 320px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhdg174bvm_RRCgwcWibCA-AW1kP8YX6zK8mddfNhzNYrnO8iuQOCWZfIr1wRX3ghXqNogqiMeSksiNleMZ717ZHLKDq1XP7TzG6ZfdMiSDI1qGul1NLLgvDi8PmVUA9A27WiilR_n8mMCk/s320/theipirai+copy.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5727797592774737362" border="0" /></a><meta name="ProgId" content="Word.Document"><meta name="Generator" content="Microsoft Word 11"><meta name="Originator" content="Microsoft Word 11"><link rel="File-List" href="file:///C:%5CDOCUME%7E1%5Cuser%5CLOCALS%7E1%5CTemp%5Cmsohtml1%5C01%5Cclip_filelist.xml"><!--[if gte mso 9]><xml> <w:worddocument> <w:view>Normal</w:View> <w:zoom>0</w:Zoom> <w:punctuationkerning/> <w:validateagainstschemas/> <w:saveifxmlinvalid>false</w:SaveIfXMLInvalid> <w:ignoremixedcontent>false</w:IgnoreMixedContent> <w:alwaysshowplaceholdertext>false</w:AlwaysShowPlaceholderText> <w:compatibility> <w:breakwrappedtables/> <w:snaptogridincell/> <w:wraptextwithpunct/> <w:useasianbreakrules/> <w:dontgrowautofit/> </w:Compatibility> <w:browserlevel>MicrosoftInternetExplorer4</w:BrowserLevel> </w:WordDocument> </xml><![endif]--><!--[if gte mso 9]><xml> <w:latentstyles deflockedstate="false" latentstylecount="156"> </w:LatentStyles> </xml><![endif]--><style> <!-- /* Font Definitions */ @font-face {font-family:Latha; panose-1:2 0 4 0 0 0 0 0 0 0; mso-font-charset:1; mso-generic-font-family:auto; mso-font-pitch:variable; mso-font-signature:1048576 0 0 0 0 0;} /* Style Definitions */ p.MsoNormal, li.MsoNormal, div.MsoNormal {mso-style-parent:""; margin:0in; margin-bottom:.0001pt; mso-pagination:widow-orphan; font-size:12.0pt; font-family:"Times New Roman"; mso-fareast-font-family:"Times New Roman"; mso-bidi-font-family:"Times New Roman"; mso-bidi-language:AR-SA;} h3 {mso-margin-top-alt:auto; margin-right:0in; mso-margin-bottom-alt:auto; margin-left:0in; mso-pagination:widow-orphan; mso-outline-level:3; font-size:13.5pt; font-family:"Times New Roman";} a:link, span.MsoHyperlink {color:blue; text-decoration:underline; text-underline:single;} a:visited, span.MsoHyperlinkFollowed {color:purple; text-decoration:underline; text-underline:single;} @page Section1 {size:8.5in 11.0in; margin:1.0in 1.25in 1.0in 1.25in; mso-header-margin:.5in; mso-footer-margin:.5in; mso-paper-source:0;} div.Section1 {page:Section1;} --> </style><!--[if gte mso 10]> <style> /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin:0in; mso-para-margin-bottom:.0001pt; mso-pagination:widow-orphan; font-size:10.0pt; font-family:"Times New Roman"; mso-ansi-language:#0400; mso-fareast-language:#0400; mso-bidi-language:#0400;} </style> <![endif]--> <h3 style="font-size: 100%; "><a name="448398745458223110"></a><a href="http://s-arshiya.blogspot.in/2011/11/blog-post.html"><span lang="TA" style="font-family:Latha;">கோடை வெயிலில் ஈரக்காற்றை உணர்த்திய உன்னத தருணம்!</span></a> <o:p></o:p></h3> <p class="MsoNormal"><span ><o:p> </o:p><span lang="AR-SA" style="font-family: Latha; ">எஸ்.அர்ஷியா </span><o:p></o:p></span></p> <p class="MsoNormal" style="text-align: justify; "><o:p><span > </span></o:p></p><p class="MsoNormal" style="text-align: justify; "><o:p><span ><br /></span></o:p></p> <p class="MsoNormal" style="text-align: justify; "><span ><o:p> </o:p><span lang="AR-SA" style="font-family:Latha;">தேய்பிறை</span><span lang="AR-SA"> </span><span lang="AR-SA" style="font-family:Latha;">இரவுகளின் கதைகள் கீரனூர் ஜாகிர் ராஜாவின் பதினேழு ஆண்டுகாலத் தனிமையை</span><span lang="AR-SA"> </span><span lang="AR-SA" style="font-family:Latha;">நம்மிடம் பகிர்வதாக இருக்கின்றன. தன்னை தனது சுற்றுச் சூழலை நேர்மையானப்</span><span lang="AR-SA"> </span><span lang="AR-SA" style="font-family:Latha;">படைப்பாளியாகக் கேள்விகளுக்கு உட்படுத்துவதுடன் தன் படைப்புகள் மூலம்</span><span lang="AR-SA"> </span><span lang="AR-SA" style="font-family:Latha;">ஆத்மசோதனையும் சுய உணர்தலும் கொள்கிறார். வாழ்வின் மீது தீராத பற்றும் சக</span><span lang="AR-SA"> </span><span lang="AR-SA" style="font-family:Latha;">மனிதர்கள் மீது இனிய தோழமை அன்பும் கொண்டிருக்கும் இந்தப் படைப்பாளி</span><span lang="AR-SA"> </span><span lang="AR-SA" style="font-family:Latha;">அதன்மூலம் தான் அறிந்த மிகவும் எளிய மனிதர்களைப் பற்றி மிகச் சரளமான</span><span lang="AR-SA"> </span><span lang="AR-SA" style="font-family:Latha;">மொழியில் சாதாரணமாகச் சொல்லிக் கொண்டே போகிறார்.</span><span lang="AR-SA"> </span><o:p></o:p></span></p> <p class="MsoNormal" style="text-align: justify; "><o:p><span > </span></o:p></p> <p class="MsoNormal" style="text-align: justify; "><span ><span lang="AR-SA" style="font-family:Latha;">வழக்கமாக</span><span lang="AR-SA"> </span><span lang="AR-SA" style="font-family:Latha;">இஸ்லாமியச் சிறுகதைகள் ஏகன் இறைவனின் கருணையையும் நபி பெருமான் அவர்களின்</span><span lang="AR-SA"> </span><span lang="AR-SA" style="font-family:Latha;">பராக்கிரமங்களையும் ஊரில் பெரிய மனிதராகக் கணிக்கப்பட்டவர் ஹஜ் பயணம்</span><span lang="AR-SA"> </span><span lang="AR-SA" style="font-family:Latha;">புறப்படும் ஏற்பாடுகளைப் பற்றியோ அல்லது அவர் ஊர் திரும்பும் கொண்டாட்டம்</span><span lang="AR-SA"> </span><span lang="AR-SA" style="font-family:Latha;">பற்றியதாகவோ இருக்கும். தொழச் சொல்லியும் ஜக்காத் கொடுக்கச் சொல்லியும்</span><span lang="AR-SA"> </span><span lang="AR-SA" style="font-family:Latha;">வலியுறுத்தும் கதைகளுக்குப் பஞ்சம் இருந்ததில்லை. அப்படிச் செய்தால்</span><span lang="AR-SA"> </span><span lang="AR-SA" style="font-family:Latha;">வாழ்க்கை வளம்பெறும் என்று பயான்கள் செய்யப்படுவதுண்டு. தொழப்போகாமல்</span><span lang="AR-SA"> </span><span lang="AR-SA" style="font-family:Latha;">தூங்கிக்கொண்டிருப்பவன் வாய்க்குள் இப்லிஷ் மூத்திரம் மோண்டுவிடும்</span><span lang="AR-SA"> </span><span lang="AR-SA" style="font-family:Latha;">பயமூட்டல் கதைகள் மட்டுமே இஸ்லாமியக் கதைகள் என்று அடையாளம்</span><span lang="AR-SA"> </span><span lang="AR-SA" style="font-family:Latha;">காட்டப்பட்டும் எழுதப்பட்டும் வந்திருக்கின்றன.</span><span lang="AR-SA"> </span><o:p></o:p></span></p> <p class="MsoNormal" style="text-align: justify; "><o:p><span > </span></o:p></p> <p class="MsoNormal" style="text-align: justify; "><span ><span lang="AR-SA" style="font-family:Latha;">அப்படித்</span><span lang="AR-SA"> </span><span lang="AR-SA" style="font-family:Latha;">தொழப்போயும் ஏழை எளியவர்கள் ரம்ஜான் குத்பாவுக்கு புதுத்துணி வாங்க</span><span lang="AR-SA"> </span><span lang="AR-SA" style="font-family:Latha;">முடியாமல் கஷ்டப்படுவதையும் பிறை பார்த்து ஊரெல்லாம் கொண்டாட்டத்தில்</span><span lang="AR-SA"> </span><span lang="AR-SA" style="font-family:Latha;">இருக்கும்போது சோர்ந்து வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கும் அவர்களுக்கு</span><span lang="AR-SA"> </span><span lang="AR-SA" style="font-family:Latha;">யாரோ வழிப்போக்கர் புத்தாடைகளைக் கொடுத்துவிட்டு மறைந்துபோகும்</span><span lang="AR-SA"> </span><span lang="AR-SA" style="font-family:Latha;">அற்புதங்கள் நிறைந்தக் கதைகள் ரம்ஜான் மாதத்தில் வணிகப் பத்திரிகைகளிலும்</span><span lang="AR-SA"> </span><span lang="AR-SA" style="font-family:Latha;">இஸ்லாமியப் பிரச்சாரப் பத்திரிகைகளிலும் பிரசுரமாவதுண்டு. தொழுதலுக்கானப்</span><span lang="AR-SA"> </span><span lang="AR-SA" style="font-family:Latha;">பரிசு என்று அதை வியந்தோதியும் வந்தார்கள். அந்தக்கதைகளும்கூட முந்திய</span><span lang="AR-SA"> </span><span lang="AR-SA" style="font-family:Latha;">ஆண்டு எழுதிய அதே எழுத்தாளர் பாத் திரங்களின் பெயர் ஊர் மாற்றி எழுதியதாக</span><span lang="AR-SA"> </span><span lang="AR-SA" style="font-family:Latha;">எனக்கு ஞாபகம் இருக்கிறது. சிலவேளைகளில் பிறை தெரியாத அவஸ்தைக் கதைகளும்</span><span lang="AR-SA"> </span><span lang="AR-SA" style="font-family:Latha;">வந்ததுண்டு. பக்ரீதுக்கு இருக்கவே இருக்கிறது ஆடுகளும் அதுகுறித்த</span><span lang="AR-SA"> </span><span lang="AR-SA" style="font-family:Latha;">வதைகளும்.</span><span lang="AR-SA"> </span><o:p></o:p></span></p> <p class="MsoNormal" style="text-align: justify; "><o:p><span > </span></o:p></p> <p class="MsoNormal" style="text-align: justify; "><span ><span lang="AR-SA" style="font-family:Latha;">இவையெல்லாம்</span><span lang="AR-SA"> </span><span lang="AR-SA" style="font-family:Latha;">இல்லாமல் எளிய மக்களின் பாடுகளையும் வாழ்க்கையின் முரண்களையும் பொருளாகக்</span><span lang="AR-SA"> </span><span lang="AR-SA" style="font-family:Latha;">கொண்டு ஒன்றிரண்டு கதைகள் எப்போதாவது வந்ததுண்டு. நிச்சயமாக இஸ்லாமியப்</span><span lang="AR-SA"> </span><span lang="AR-SA" style="font-family:Latha;">பத்திரிகைகளில் அவை அச்சானதில்லை. அதை எழுதியவர்கள் அவற்றை ஏன் தொடரவில்லை</span><span lang="AR-SA"> </span><span lang="AR-SA" style="font-family:Latha;">என்ற கேள்வி எனக்குள் இருந்துகொண்டே இருந்தது. கேள்விக்கு பதிலாக ஒருசிலர்</span><span lang="AR-SA"> </span><span lang="AR-SA" style="font-family:Latha;">நட்சத்திரங்களாகத் தோன்றியதுமுண்டு. அப்படித் தோன்றியவர்களில் கீரனூர்</span><span lang="AR-SA"> </span><span lang="AR-SA" style="font-family:Latha;">ஜாகிர்ராஜாவிடம் கூடுதல் ஒளி தென்படுகிறது.</span><span lang="AR-SA"> </span><o:p></o:p></span></p> <p class="MsoNormal" style="text-align: justify; "><o:p><span > </span></o:p></p> <p class="MsoNormal" style="text-align: justify; "><span ><span lang="AR-SA" style="font-family:Latha;">முப்பால்போல</span><span lang="AR-SA"> </span><span lang="AR-SA" style="font-family:Latha;">தேய்பிறை இரவுகளின் இந்தக்கதைகள் மூன்று வகைமைகளைக் கொண்டதாக இருக்கின்றன.</span><span lang="AR-SA"> </span><span lang="AR-SA" style="font-family:Latha;">அதை அவர் எழுதிய காலத்தின் அடிப்படையிலும் இடங்களின் சூழலிலும் கதைகளின்</span><span lang="AR-SA"> </span><span lang="AR-SA" style="font-family:Latha;">தன்மையிலும் பகுக்கலாம். எப்படிப் பகுத்துக் கொண்டாலும் அதை</span><span lang="AR-SA"> </span><span lang="AR-SA" style="font-family:Latha;">வாசிக்கும்போது அதற்குள் உறைந்து கிடக்கும் வீரியம் இதற்கு முன்</span><span lang="AR-SA"> </span><span lang="AR-SA" style="font-family:Latha;">வெளிப்படாததாக இருக்கிறது. ஏற்கனவே இஸ்லாமிய எழுத்தாளர்களால்</span><span lang="AR-SA"> </span><span lang="AR-SA" style="font-family:Latha;">இட்டுக்கட்டப்பட்டதை அல்லது மறைக்கப்பட்டதை உடைத்து வீசுவதாகவும்</span><span lang="AR-SA"> </span><span lang="AR-SA" style="font-family:Latha;">இருக்கின்றன. ஒவ்வொன்றும் உடைய உடைய இதற்கு முன் உண்மை என்று நம்பப்பட்டு</span><span lang="AR-SA"> </span><span lang="AR-SA" style="font-family:Latha;">வந்த </span>'<span lang="AR-SA" style="font-family:Latha;">மூடாக்குகள்</span>' <span lang="AR-SA" style="font-family:Latha;">சிதறி முகத்தில் அறைகின்றன.</span><o:p></o:p></span></p> <p class="MsoNormal" style="text-align: justify; "><o:p><span > </span></o:p></p> <p class="MsoNormal" style="text-align: justify; "><span ><span lang="AR-SA" style="font-family:Latha;">முதல்</span><span lang="AR-SA"> </span><span lang="AR-SA" style="font-family:Latha;">சிறுகதையான வெம்மை லெளகீகத்தின் திசைகள் தோறும் விரிந்திருக்கும்</span><span lang="AR-SA"> </span><span lang="AR-SA" style="font-family:Latha;">பிடிக்குள் அடங்காமல் மனச் சுதந்திரத்துடன் அலைய விரும்பும் ஒருவன்</span><span lang="AR-SA"> </span><span lang="AR-SA" style="font-family:Latha;">சமூகத்தின் மறைமுக வாழ்வியல் மிரட்டல்களுக்கும் ஏளனப் பார்வைகளுக்கும்</span><span lang="AR-SA"> </span><span lang="AR-SA" style="font-family:Latha;">ஆட்பட்டு உள்ளுக்குள் குமுறும் வாழ்வற்ற அவஸ்தையை அப்பட்டமாக்குகிறது.</span><span lang="AR-SA"> </span><span lang="AR-SA" style="font-family:Latha;">பிறந்த கணத்திலிருந்து இல்லாத அதீதமான ஒரு வெம்மை கல்யாணமான நாள் முதல்</span><span lang="AR-SA"> </span><span lang="AR-SA" style="font-family:Latha;">உடலைக் கவ்விக் கொண்டு விடமாட் டேனென்கிறது என்று சொல்லும் துயர் அரசு</span><span lang="AR-SA"> </span><span lang="AR-SA" style="font-family:Latha;">பதவியோ முறையான வருமானமோ அல்லது அரசியல் சம்பாத்தியமோ இல்லாத எல்லா</span><span lang="AR-SA"> </span><span lang="AR-SA" style="font-family:Latha;">இளைஞர்களுக் கும் பொருந்திப் போகும் ஒன்று. ஒட்டுமொத்த உலக இளைஞர்களின்</span><span lang="AR-SA"> </span><span lang="AR-SA" style="font-family:Latha;">துயரம். மனைவியின் கிழிந்த துப்பட்டிக்குப் பதிலாக கறுப்பு வண்ண பர்தாவை</span><span lang="AR-SA"> </span><span lang="AR-SA" style="font-family:Latha;">வாங்கித்தர முடியாமல் வீட்டுக்குள் உருவாகும் அவலம் நிறைந்த சச்சரவு அவனை</span><span lang="AR-SA"> </span><span lang="AR-SA" style="font-family:Latha;">வெளிநாட்டுக்குத் தள்ளிக் கொண்டு போகிறது. துப்பட்டிக்கு மாற்றாக இங்கு</span><span lang="AR-SA"> </span><span lang="AR-SA" style="font-family:Latha;">கண்டறியப்படும் கறுப்பு வண்ண பர்தா தாய்மண்ணைப் பிரிந்துபோகின்ற மனத்தின்</span><span lang="AR-SA"> </span><span lang="AR-SA" style="font-family:Latha;">அடிவேரைக் கொத்தாகப் பிடுங்கிய இஸ்லாமிய இளைஞர்களின் ஜீவ உடல் உழைப்பு</span><span lang="AR-SA"> </span><span lang="AR-SA" style="font-family:Latha;">ரத்தமும் வியர்வையுமாக மணல் காட்டிலும் பொரிக்கும் வெயிலிலும்</span><span lang="AR-SA"> </span><span lang="AR-SA" style="font-family:Latha;">உறிஞ்சப்பட்டு அதற்கு மாற்றாக சாதாரணப் பண்டமாக இறக்குமதி செய்யப்படும்</span><span lang="AR-SA"> </span><span lang="AR-SA" style="font-family:Latha;">குறியீடு. கூடவே அதைக்கொண்டு பெண்ணைப் போர்த்தும் அடிமைத்தனத்தையும்</span><span lang="AR-SA"> </span><span lang="AR-SA" style="font-family:Latha;">இறக்குமதி செய்கிறது. இப்போது வெளியாகும் எந்த இஸ்லாமியப் பத்திரிகையை</span><span lang="AR-SA"> </span><span lang="AR-SA" style="font-family:Latha;">கையில் எடுத்தாலும் அதன் வண்ண மயமான அட்டையில் பர்தாக்களின் விளம்</span><span lang="AR-SA"> </span><span lang="AR-SA" style="font-family:Latha;">பரங்களைக் கண்ணாறக் காணலாம். அதனடியில் அரபு நாட்டிலிருந்து இறக்குமதி</span><span lang="AR-SA"> </span><span lang="AR-SA" style="font-family:Latha;">செய்யப்பட்டது என்று அடிக்கோடு குறிப்பு இடப்பட்டிருக்கும். மனைவி</span><span lang="AR-SA"> </span><span lang="AR-SA" style="font-family:Latha;">மக்களைப் பிரிந்து பணத்தின் மீதான வேட்கையுடன் புது நட்பு களுடன் ஒண்ட</span><span lang="AR-SA"> </span><span lang="AR-SA" style="font-family:Latha;">முடியாமல் முற்றிலும் மாறான இயற்கை அமைப்பில் உடல் உபாதைகளுக்கு ஆளாகி</span><span lang="AR-SA"> </span><span lang="AR-SA" style="font-family:Latha;">பொலிவிழந்து மன உலைச்சலுக்கு உள்ளாகி அவன் ஈட்டிக்கொண்டு வருவதை</span><span lang="AR-SA"> </span><span lang="AR-SA" style="font-family:Latha;">பெருஞ்செல்வமாகப் பார்க்கும் சமூகம் அதற்குள் பொதிந்து கிடக்கும் அவனது</span><span lang="AR-SA"> </span><span lang="AR-SA" style="font-family:Latha;">பேசா மொழியையும் மெளனமுமான உணர்வுகளையும் கண்டு கொள்வதில்லை. அதை அந்தஸ்து</span><span lang="AR-SA"> </span><span lang="AR-SA" style="font-family:Latha;">என்கிறது. அதில் அவன் தோல்வியடையும்போது அது வன்மமாக உருவெடுக்கவும்</span><span lang="AR-SA"> </span><span lang="AR-SA" style="font-family:Latha;">செய்யலாம். மனப்பிறழ்வுக்கும் வகை செய்யலாம். இஸ்லாமிய இளைஞர் களுக்கு</span><span lang="AR-SA"> </span><span lang="AR-SA" style="font-family:Latha;">துபாய் என்றால் மற்றவர்களுக்கு அமெரிக்கா. இதையெல்லாம் உணர்ந்து கொள்ளாமல்</span><span lang="AR-SA"> </span>'<span lang="AR-SA" style="font-family:Latha;">இன்னுமா பயணம் புறப்படவில்லை</span>?' <span lang="AR-SA" style="font-family:Latha;">எனும் குரல் இஸ்லாமியர்கள் வாழும்</span><span lang="AR-SA"> </span><span lang="AR-SA" style="font-family:Latha;">தெருக்களில் ஒலித்துக்கொண்டேதான் இருக்கின்றது.</span><o:p></o:p></span></p> <p class="MsoNormal" style="text-align: justify; "><o:p><span > </span></o:p></p> <p class="MsoNormal" style="text-align: justify; "><span ><span lang="AR-SA" style="font-family:Latha;">அப்படி</span><span lang="AR-SA"> </span><span lang="AR-SA" style="font-family:Latha;">ஈட்டிக்கொண்டு வரும் பொருட்கள் வாழ்க்கையை மட்டுமல்ல நகர்களின்</span><span lang="AR-SA"> </span><span lang="AR-SA" style="font-family:Latha;">புராதனங்களையும் மாற்றியமைத்து உயர்கோபுரக் கடைகளாகி மாட மாளிகைகளாகி</span><span lang="AR-SA"> </span><span lang="AR-SA" style="font-family:Latha;">தொன்மங்களை காவு வாங்கி விடுகின்றன. அப்படிக் காவுக்கு உள்ளான தஞ்சாவூரில்</span><span lang="AR-SA"> </span><span lang="AR-SA" style="font-family:Latha;">உறவுக்கார ஹனிபா மாமுவைத் தேடிக்கொண்டு போகும் </span>'<span lang="AR-SA" style="font-family:Latha;">ரெட்டை மஸ்தானருகில்</span>' <span lang="AR-SA" style="font-family:Latha;">சிறுகதை புதிய வேதனையைத் திறந்துகாட்டுவதாக இருக்கிறது. ரெட்டை மஸ்தான்</span><span lang="AR-SA"> </span><span lang="AR-SA" style="font-family:Latha;">என்பது அந்த ஊரிலிருக்கும் ஒரு தர்ஹா. இஸ்லாமிய மக்களுடன் பிற</span><span lang="AR-SA"> </span><span lang="AR-SA" style="font-family:Latha;">சமூகத்தினரும் ஆறுதலும் தேறுதலும் கொள்ளும் இடமாகும். அதனருகில் ஏதோ ஒரு</span><span lang="AR-SA"> </span><span lang="AR-SA" style="font-family:Latha;">அற்புதம் நடக்கப்போகிறது என்பதானத் தூண்டுதலை தலைப்பு கொண்டிருந்தாலும்</span><span lang="AR-SA"> </span><span lang="AR-SA" style="font-family:Latha;">அதுபேசும்பொருள் முற்றிலும் எதிர்பாராத அதிர்ச்சியைத் தருவதாக இருந்தது.</span><span lang="AR-SA"> </span><span lang="AR-SA" style="font-family:Latha;">புதிதாக அறிமுகமான ஒரு கால்குலேட்டர் எப்படி ஒரு கணக்குப் பிள்ளையின்</span><span lang="AR-SA"> </span><span lang="AR-SA" style="font-family:Latha;">வாழ்க்கையை முடக்கிவிட்டதோ அதே வேலையை கூடுதலாகக் கம்ப்யூட்டரும் செய்து</span><span lang="AR-SA"> </span><span lang="AR-SA" style="font-family:Latha;">ஹனிபா மாமுவின் தங்க நிற மூடியைக் கொண்ட பேனாவை மங்கலாக்கியதுடன்</span><span lang="AR-SA"> </span><span lang="AR-SA" style="font-family:Latha;">வாழ்தலுக்கான புதிய ஒப்பனையை - பெண்களின் பிரத்யேக ஒப்பனையை - அவரை</span><span lang="AR-SA"> </span><span lang="AR-SA" style="font-family:Latha;">ஏற்றுக் கொள்ளச் செய்திருப்பதை மனஅவசத்தோடு காணச் செய்கிறது. வாழ்தலுக்காக</span><span lang="AR-SA"> </span><span lang="AR-SA" style="font-family:Latha;">எதையெல்லாம் செய்ய வேண்டியிருக்கிறது என்று நோக்கும்போது அதிர்ச்சியைத்</span><span lang="AR-SA"> </span><span lang="AR-SA" style="font-family:Latha;">தாண்டிய நடுக்கம் தோன்றுகிறது.</span><o:p></o:p></span></p> <p class="MsoNormal" style="text-align: justify; "><o:p><span > </span></o:p></p> <p class="MsoNormal" style="text-align: justify; "><span ><span lang="AR-SA" style="font-family:Latha;">பிறரைக்</span><span lang="AR-SA"> </span><span lang="AR-SA" style="font-family:Latha;">காவுகொண்டு களிநடனம் ஆடுகின்றப் </span>'<span lang="AR-SA" style="font-family:Latha;">பெருநகரக் குறிப்புகள்</span>' <span lang="AR-SA" style="font-family:Latha;">கலையின்</span><span lang="AR-SA"> </span><span lang="AR-SA" style="font-family:Latha;">எவ்வகையைச் சார்ந்தவருக்கும் கட்டாயம் கிடைக்கின்ற அனுபவப் பேழை.</span><span lang="AR-SA"> </span><span lang="AR-SA" style="font-family:Latha;">வாசிக்கும் ஒவ்வொருவருக்கும் அவரவர் அனுபவம் அதனுள்ளிருந்து எழுந்துவந்து</span><span lang="AR-SA"> </span><span lang="AR-SA" style="font-family:Latha;">பொருந்திப் போகும். மனக்கிளர்ச்சியைத் தரும். முன்புபட்ட அவஸ்தைகளை மீள்</span><span lang="AR-SA"> </span><span lang="AR-SA" style="font-family:Latha;">உருவாக்கம் செய்து பார்க்கும்போது கடந்துவந்த திசைகள் மனசில் தவிப்பையும்</span><span lang="AR-SA"> </span><span lang="AR-SA" style="font-family:Latha;">முகத்தில் புன்சிரிப்பையும் அரும்பச் செய்யும். ஒருவேளைத் தேநீருக்காக...</span><span lang="AR-SA"> </span><span lang="AR-SA" style="font-family:Latha;">ஒருவேளை உணவுக்காக... தூங்கும் இடத்துக்காக... அவசரத்துக்குக் கைமாத்து</span><span lang="AR-SA"> </span><span lang="AR-SA" style="font-family:Latha;">கேட்பதற்காக... அலைந்து திரிந்ததை இப்போது பெருமுயற்சிகள்போல பேசச்</span><span lang="AR-SA"> </span><span lang="AR-SA" style="font-family:Latha;">சொல்லும். அதனூடே தொடர்ந்த பயணம் வெற்றி பெற்றிருந்தால் அவற்றுக்குப்</span><span lang="AR-SA"> </span><span lang="AR-SA" style="font-family:Latha;">பெயர் நான் நடந்து வந்த பாதை என்று மாறிப்போய்விடுகிறது. அதேவேளையில்</span><span lang="AR-SA"> </span><span lang="AR-SA" style="font-family:Latha;">தோல்விகள் அதனை காலந்தோறும் குறிப்புகளாக வைத்து பொக்கிஷமாகப் பார்க்கச்</span><span lang="AR-SA"> </span><span lang="AR-SA" style="font-family:Latha;">செய்கிறது. விஜயராஜின் டிரங்க் பெட்டி நிரம்பி வழிந்ததாகச் சொல்லப்படும்</span><span lang="AR-SA"> </span><span lang="AR-SA" style="font-family:Latha;">இடம் எப்படியும் வென்றுவிடுவோம் எனும் நம்பிக்கையின் ஆணிவேர். அதுதான்</span><span lang="AR-SA"> </span><span lang="AR-SA" style="font-family:Latha;">இன்னும் இன்னும் இளைஞர்களை பெருநகரம் நோக்கி நகர்த்திக் கொண்டிருக்கிறது.</span><span lang="AR-SA"> </span><span lang="AR-SA" style="font-family:Latha;">பெருநகர வீதிகளில் நடந்துபோகும் அத்தனைபேரிடமும் ஏதோ ஒரு கதை இருக்கிறது.</span><span lang="AR-SA"> </span><span lang="AR-SA" style="font-family:Latha;">நாளைய பெருநகரக் குறிப்புகள் அவர்களாலும் எழுதப்படும்.</span><o:p></o:p></span></p> <p class="MsoNormal" style="text-align: justify; "><o:p><span > </span></o:p></p> <p class="MsoNormal" style="text-align: justify; "><span ><span lang="AR-SA" style="font-family:Latha;">தொகுப்பின்</span><span lang="AR-SA"> </span><span lang="AR-SA" style="font-family:Latha;">மிக முக்கியமானக் கதையாக </span>'<span lang="AR-SA" style="font-family:Latha;">குடமுருட்டி ஆற்றின் கரையில்</span>' <span lang="AR-SA" style="font-family:Latha;">அமைந்து</span><span lang="AR-SA"> </span><span lang="AR-SA" style="font-family:Latha;">போயிருப்பது தற்செயலானது அல்ல. இஸ்லாமியக் குடும்பங் களில் வரன் தேடும்</span><span lang="AR-SA"> </span><span lang="AR-SA" style="font-family:Latha;">வைபவம் என்பது புவ்வா போன்றவர்களாலும் வீட்டுக்கு </span>'<span lang="AR-SA" style="font-family:Latha;">சபக்</span>' <span lang="AR-SA" style="font-family:Latha;">சொல்லிக் கொடுக்க</span><span lang="AR-SA"> </span><span lang="AR-SA" style="font-family:Latha;">வரும் உஸ்தாத்பீக்களாலும் நடத்தப்படுகிறது. இவர்கள்தான் நடமாடும்</span><span lang="AR-SA"> </span><span lang="AR-SA" style="font-family:Latha;">மேட்ரிமோனியல்கள். உள்நுணுக்கங்கள் தெரிந்தவர்கள். எல்லைகளைத்</span><span lang="AR-SA"> </span><span lang="AR-SA" style="font-family:Latha;">தொடுபவர்கள். உள் விளிம்புகளை வளைத்து எதை யும் சாதித்துக் காரியம்</span><span lang="AR-SA"> </span><span lang="AR-SA" style="font-family:Latha;">கைகூடிவரச் செய்யும் திறமை அவர்களுக்கு இயல்பாகவே அமைந்திருப்பது வியப்பு</span><span lang="AR-SA"> </span><span lang="AR-SA" style="font-family:Latha;">தருவதாக இருக்கிறது. இந்தக்கதையில் வரும் புவ்வா அதையும் தாண்டிய மனுஷியாக</span><span lang="AR-SA"> </span><span lang="AR-SA" style="font-family:Latha;">இருப்பது அவள் மீது பிரேமையை உருவாக்குகிறது. வாழ்க்கை இழந்து இரண்டு</span><span lang="AR-SA"> </span><span lang="AR-SA" style="font-family:Latha;">குழந்தைகளுடன் உழன்ற உம்மசல்மாவுக்கு இரண்டாவது நிக்காஹ் நடத்தி வைக்கவும்</span><span lang="AR-SA"> </span><span lang="AR-SA" style="font-family:Latha;">தெம்பிருந்தது புவ்வாவுக்கு என்ற வரிகள் அந்த பிரேமைக்கு வலுசேர்ப்பதாக</span><span lang="AR-SA"> </span><span lang="AR-SA" style="font-family:Latha;">இருக்கின்றது. அதே புவ்வாவுக்கு தனது காரியதரிசியான ஹைரூன்னிஸாவுக்கு</span><span lang="AR-SA"> </span><span lang="AR-SA" style="font-family:Latha;">ஓரிடத்தைக் கோர்த்து விடுவதில் மனமுரணும் இருக்கிறது. அவளிடமுள்ள</span><span lang="AR-SA"> </span><span lang="AR-SA" style="font-family:Latha;">மெல்லியதான இந்த மனவிலகல்... இந்த முரண்... யதார்த்தத்தைத் தூக்கிப்</span><span lang="AR-SA"> </span><span lang="AR-SA" style="font-family:Latha;">பிடிக்கிறது. அவளுக்குள் ஓடும் வாழ்வியல் அரசியல் கதைக்கு ஓர் அம்சத்தைத்</span><span lang="AR-SA"> </span><span lang="AR-SA" style="font-family:Latha;">தருகிறது. யதார்த்தத்துக்கும் மாயவாதத்துக்கும் இணைப்பாக சாயாக்கடை</span><span lang="AR-SA"> </span><span lang="AR-SA" style="font-family:Latha;">ஜக்கரியா இருக்கிறார். அப்துல் காதர் ஜீலானி ஆண்டகை மீரான் மைதீன்</span><span lang="AR-SA"> </span><span lang="AR-SA" style="font-family:Latha;">கதைகளிலும் எஸ். அர்ஷியாவின் கதைகளிலும் ஜாகிர்ராஜாவின் கதைகளிலும் இடம்</span><span lang="AR-SA"> </span><span lang="AR-SA" style="font-family:Latha;">பெறுவதில் ஒரு ஓர்மை இருப்பதாகவே படுகிறது. அவர் அற்புதங்களை நிகழ்த்தும்</span><span lang="AR-SA"> </span><span lang="AR-SA" style="font-family:Latha;">சாதாரண மனிதராகவே காட்சிக்கு வருவதும் அப்படித்தான். அதனாலேயே இந்தக்கதை</span><span lang="AR-SA"> </span><span lang="AR-SA" style="font-family:Latha;">மற்ற இஸ்லாமிய எழுத்தாளர்களின் கதைகளிலிருந்து ஓர் அங்குலம் முன்னுக்கு</span><span lang="AR-SA"> </span><span lang="AR-SA" style="font-family:Latha;">இருக்கிறது. யாருமறியாத ரகசியக் கொலுசொலிக்க ஹைரூன் குடத்தை</span><span lang="AR-SA"> </span><span lang="AR-SA" style="font-family:Latha;">எடுத்துக்கொண்டு அந்த இருளில் ஆற்றை நோக்கி நடந்தாள். நல்ல வியாபாரம்</span><span lang="AR-SA"> </span><span lang="AR-SA" style="font-family:Latha;">கொழிக்கிற நேரத்தில் சாயாக்கடையில் ஜக்கரியா இல்லாதது புவ்வாவுக்கு ஏமாற்ற</span><span lang="AR-SA"> </span><span lang="AR-SA" style="font-family:Latha;">மளித்தது என்பதுடன் கதை முடிந்து போகிறது. ஆனால் ஹைரூன்னிஸா வெறுமனே</span><span lang="AR-SA"> </span><span lang="AR-SA" style="font-family:Latha;">பருத்துப் பிதுங்கும் மார்புகளைக் கொண்ட சதைக்கோளம் அல்ல. உணர்வுகளாலும்</span><span lang="AR-SA"> </span><span lang="AR-SA" style="font-family:Latha;">உணர்ச்சிகளாலும் ஆன பெண் என்பதை உணர்த்தும் கதை அந்த இடத்திலிருந்துதான்</span><span lang="AR-SA"> </span><span lang="AR-SA" style="font-family:Latha;">கிளைக்கிறது. அதுவே தொகுப்பில் இந்தக்கதையை முக்கியமான இடத்துக்கு</span><span lang="AR-SA"> </span><span lang="AR-SA" style="font-family:Latha;">கொண்டுவந்து சேர்த்திருக்கிறது.</span><o:p></o:p></span></p> <p class="MsoNormal" style="text-align: justify; "><o:p><span > </span></o:p></p> <p class="MsoNormal" style="text-align: justify; "><span ><span lang="AR-SA" style="font-family:Latha;">உருவம்</span><span lang="AR-SA"> </span><span lang="AR-SA" style="font-family:Latha;">கதையில் வரும் மனைவியை இழந்த மெளலானா மெளலவி ஷையது ஷபியுதீன் அஹமது</span><span lang="AR-SA"> </span><span lang="AR-SA" style="font-family:Latha;">அடையாளங்களுக்குள் உலவும் ஓர் மனிதராகத்தான் தெரிகிறார். பயான் செய்யும்</span><span lang="AR-SA"> </span><span lang="AR-SA" style="font-family:Latha;">மெளலவிகளும் மிகச்சாதாரண மனிதர்கள்தாம். அவர்கள் மூக்கால்</span><span lang="AR-SA"> </span><span lang="AR-SA" style="font-family:Latha;">சுவாசிப்பவர்களாகவும் வாயால் உண்பவர்களாகவும் தான் இருக்கிறார்கள். ஆனால்</span><span lang="AR-SA"> </span><span lang="AR-SA" style="font-family:Latha;">அவர்கள் மனனம் செய்து துப்பும் வாசகங்கள் நம்மிலிருந்து அவர்களை தூரத்தில்</span><span lang="AR-SA"> </span><span lang="AR-SA" style="font-family:Latha;">நிறுத்தி அவர்களுக்கு அந்தஸ்தைக் கொடுத்து விடுகிறது. அவர் செய்யும்</span><span lang="AR-SA"> </span><span lang="AR-SA" style="font-family:Latha;">தொழில் உன்னதமாக்கப்பட்டதால் அவருக்கு அந்த அந்தஸ்து. அவ்வளவுதான். தாடி</span><span lang="AR-SA"> </span><span lang="AR-SA" style="font-family:Latha;">வளர்த்து குல்லா அணிந்து அத்தர் மணம் கமழ பயான் செய்பவர்களில் பலர் என்ன</span><span lang="AR-SA"> </span><span lang="AR-SA" style="font-family:Latha;">மாதிரியான வாழ்க்கை வாழ்கிறார்கள் என்பது சாதாரணமாகவே பார்க்கக்</span><span lang="AR-SA"> </span><span lang="AR-SA" style="font-family:Latha;">கிடைக்கும். மெளலானா மெளலவி ஷையது ஷபியுதீன் அஹமது கூட தன்னிலையை ஒப்புக்</span><span lang="AR-SA"> </span><span lang="AR-SA" style="font-family:Latha;">கொள்வதாக "வாஸ்தவத்தில் நான் இப்படிப்பட்ட ஆளல்ல. கொஞ்சம் நாளா மனசில</span><span lang="AR-SA"> </span><span lang="AR-SA" style="font-family:Latha;">கொழப்பம். இன்ஷா அல்லாஹ் அப்படி ஒரு படம் கெடச்சுட்டாப் போதும்னு இப்பத்</span><span lang="AR-SA"> </span><span lang="AR-SA" style="font-family:Latha;">தோணுது. ஏன்னு தெரியல... எல்லாம் அல்லாஹ் அறிவான்..." என்று சொல்கிறார்.</span><span lang="AR-SA"> </span><span lang="AR-SA" style="font-family:Latha;">இந்த இடம் மிக முக்கியமானது. எந்த மனிதனாலும் நினைவுகளைத் தாண்டிவிட்டுப்</span><span lang="AR-SA"> </span><span lang="AR-SA" style="font-family:Latha;">போகமுடியாது. அதுபோல இழப்புகளையும். மதம் செய்து வைத்திருக்கும்</span><span lang="AR-SA"> </span><span lang="AR-SA" style="font-family:Latha;">ஏற்பாடுகள் எல்லா இடத்திலும் ஒன்றாகவே இருக்கிறது.</span><o:p></o:p></span></p> <p class="MsoNormal" style="text-align: justify; "><o:p><span > </span></o:p></p> <p class="MsoNormal" style="text-align: justify; "><span ><span lang="AR-SA" style="font-family:Latha;">தமிழ்நாட்டில்</span><span lang="AR-SA"> </span><span lang="AR-SA" style="font-family:Latha;">செல்வாக்குடன் திகழும் இஸ்லாமியக் குடும்பங்கள் எத்தனையிருக்கும் என்பதை</span><span lang="AR-SA"> </span><span lang="AR-SA" style="font-family:Latha;">விரல்விட்டு எண்ணிவிடலாம். அவைகளும்கூட சிதைந்துகொண்டு வருகின்றன என்பது</span><span lang="AR-SA"> </span><span lang="AR-SA" style="font-family:Latha;">கண்கூடு. அனிபா ராவுத்தரின் ஆயிஷா மன்சில் அப்படிச் சிதைந்து போனவைகளில்</span><span lang="AR-SA"> </span><span lang="AR-SA" style="font-family:Latha;">ஒன்று. கடன்கூட பெற முடியாத நிலைக்கு உள்ளாகும் அனிபா ராவுத்தரின் கடந்த</span><span lang="AR-SA"> </span><span lang="AR-SA" style="font-family:Latha;">காலம் படாடோபமாகத்தான் இருந்திருக்கும். இன்று பள்ளிவாசல் ஹவுஜில்</span><span lang="AR-SA"> </span><span lang="AR-SA" style="font-family:Latha;">ராஜமீனைக் களவாடிய குற்றத்துக்கு உள்ளாகி நிற்கிறார். களவாடிய மீன்</span><span lang="AR-SA"> </span><span lang="AR-SA" style="font-family:Latha;">மருமகனுக்கு குழம்பாகியோ... பொறிக்கப்பட்டோ போயிருக்கும். ஆனால் அவமானம்</span>? <span lang="AR-SA" style="font-family:Latha;">ஹவுஜில் மீன்கள் வளர்க்கப்படுவது தொன்மம். அவற்றை பிடிக்கக்கூடாது என்று</span><span lang="AR-SA"> </span><span lang="AR-SA" style="font-family:Latha;">சொல்வதுண்டு. வளர்ந்து முதிர்ந்த மீன் என்னாகும் என்ற கேள்வி வேடிக்கைப்</span><span lang="AR-SA"> </span><span lang="AR-SA" style="font-family:Latha;">பார்க்க... பொறிபோட வரும் சிறுவர்களிடம் இருக்கவே செய்கிறது.</span><span lang="AR-SA"> </span><span lang="AR-SA" style="font-family:Latha;">திருப்பரங்குன்றம் சிக்கந்தர் பாதுஷா டாக்கிகளில் (நீர்க்குளங்கள்) மீ ன்</span><span lang="AR-SA"> </span><span lang="AR-SA" style="font-family:Latha;">பிடிக்கக்கூடாது என்று தகவல் பலகையே இருக்கிறது. ஆனால் அக்குளத்து மீன்கள்</span><span lang="AR-SA"> </span><span lang="AR-SA" style="font-family:Latha;">தொடர்ந்து காணாமல் போய்க்கொண்டேதான் இருக்கின்றன. வந்துபோகும்</span><span lang="AR-SA"> </span><span lang="AR-SA" style="font-family:Latha;">யாத்திரிகர்கள் யாரும் அதைத் திருடும் வாய்ப்பே இல்லை. ஆனால் இப்போது</span><span lang="AR-SA"> </span><span lang="AR-SA" style="font-family:Latha;">நகரின் முக்கியமான தொழுகைப் பள்ளிவாசல்களில் ஒலு செய்வதற்காகக் கட்டப்பட்ட</span><span lang="AR-SA"> </span><span lang="AR-SA" style="font-family:Latha;">ஹவுஜ்கள் அகற்றப்பட்டு வருகின்றன. அதற்கு மாற்றாக குழாய்கள்</span><span lang="AR-SA"> </span><span lang="AR-SA" style="font-family:Latha;">நிறுவப்படுகின்றன. ஹவுஜ் இருந்த இடங்கள் பத்துக்குப் பத்து கடைகளாகி</span><span lang="AR-SA"> </span><span lang="AR-SA" style="font-family:Latha;">நிர்வாகத்தின் வருமானத்துக்கும் ஊழலுக்கும் அடிகோலுகின்றன.</span><o:p></o:p></span></p> <p class="MsoNormal" style="text-align: justify; "><o:p><span > </span></o:p></p> <p class="MsoNormal" style="text-align: justify; "><span ><span lang="AR-SA" style="font-family:Latha;">அதுபோல</span><span lang="AR-SA"> </span><span lang="AR-SA" style="font-family:Latha;">செம்பருத்தி பூத்த வீடு யாரையும் வசீகரித்துவிடும் வல்லமை கொண்ட கதை.</span><span lang="AR-SA"> </span><span lang="AR-SA" style="font-family:Latha;">இளமையைத் தொடும் ஆண்பெண் இருபாலர் யாருக்குமே காதல் இல்லாமல் போகாது.</span><span lang="AR-SA"> </span><span lang="AR-SA" style="font-family:Latha;">குறைந்த பட்சம் மனசுக்குள்ளாவது இருந்திருக்கும். நீண்ட இடைவெளிக்குப்</span><span lang="AR-SA"> </span><span lang="AR-SA" style="font-family:Latha;">பின் ஊர் திரும்பும் நாயகன் தன் இளமைக் கால நாயகி எஸ். மயிலாத்தாவின்</span><span lang="AR-SA"> </span><span lang="AR-SA" style="font-family:Latha;">செம்பருத்தி பூத்த வீட்டைப் பார்க்கக் கிளம்புகிறான். அதில்தான் எத்தனை</span><span lang="AR-SA"> </span><span lang="AR-SA" style="font-family:Latha;">சுகம்</span>? <span lang="AR-SA" style="font-family:Latha;">எதிர்பார்ப்பு</span>? <span lang="AR-SA" style="font-family:Latha;">வீடு மாறாமல் அப்படியே இருப்பதில்தான்</span><span lang="AR-SA"> </span><span lang="AR-SA" style="font-family:Latha;">எத்தனையெத்தனை ஆனந்தம்! விட்டுப்போன இடைக்காலத்தை மீட்டெடுக்கும்</span><span lang="AR-SA"> </span><span lang="AR-SA" style="font-family:Latha;">நினைவுகளின் வழியே ஊடுருவும் மனசு. </span>'<span lang="AR-SA" style="font-family:Latha;">ஆத்தா</span>' - '<span lang="AR-SA" style="font-family:Latha;">ஆத்தா</span>' - '<span lang="AR-SA" style="font-family:Latha;">ஆத்தாவ்</span>' - <span lang="AR-SA" style="font-family:Latha;">ரொம்ப</span><span lang="AR-SA"> </span><span lang="AR-SA" style="font-family:Latha;">நாளாயிப் போச்சு இப்டியெல்லாங் கூப்புட்டு கொஞ்சம் வெட்கமாக்கூட</span><span lang="AR-SA"> </span><span lang="AR-SA" style="font-family:Latha;">இருந்துச்சு. திரும்பத் திரும்பக் கூப்புட்டுப் பாத்துக்கிட்டேன் எனும்</span><span lang="AR-SA"> </span><span lang="AR-SA" style="font-family:Latha;">வாசகங்களில் அந்த இளம்வயதுக்கே திரும்பிப்போய்விடும் சூத்திரம் ஒளிந்து</span><span lang="AR-SA"> </span><span lang="AR-SA" style="font-family:Latha;">கிடக்கிறது. வீட்டைப் பார்த்துவிட்ட வனுக்கு அந்தப் பெண்ணைப் பார்க்கும்</span><span lang="AR-SA"> </span><span lang="AR-SA" style="font-family:Latha;">ஆவலை மனம் கிளறுகிறது. "மாப்ள அந்தப் புள்ள செத்துப் போயி ஏழெட்டு</span><span lang="AR-SA"> </span><span lang="AR-SA" style="font-family:Latha;">வருஷமாசேடா" என்கிறான் நண்பன். அவன் மனசுக்குள் பாலாய்ப் பொங்கிக்</span><span lang="AR-SA"> </span><span lang="AR-SA" style="font-family:Latha;">கொண்டிருந்த அத்தனையும் அடங்கிப்போய்விடுகிறது. போதும் இங்கேயே கதையும்</span><span lang="AR-SA"> </span><span lang="AR-SA" style="font-family:Latha;">முடிந்துவிட்டதாக உணர முடிகிறது. அதன் பின்பு எதுவாக இருந்தாலும் அது</span><span lang="AR-SA"> </span><span lang="AR-SA" style="font-family:Latha;">கூடுதல்தான். மாயந்தான் என்றறிந்தாலும் இப்படியான விடலை நினைவுகள் இல்லாத</span><span lang="AR-SA"> </span><span lang="AR-SA" style="font-family:Latha;">யுவனும்யுவதியும் இந்த லோகத்தில் இல்லவே இல்லை. அந்த சுகமான வலிகள்தான்</span><span lang="AR-SA"> </span><span lang="AR-SA" style="font-family:Latha;">வாழ்க்கையை நகர்த்திக்கொண்டு போகின்றன. காதலும் அதை யொற்றி எழக்கூடிய</span><span lang="AR-SA"> </span><span lang="AR-SA" style="font-family:Latha;">நினைவுகளும் பசுமையானவை. அதற்குள் பயணம்செய்து எழுத்தாக மீட்டெடுக்கும்</span><span lang="AR-SA"> </span><span lang="AR-SA" style="font-family:Latha;">லாவகம் படைப்பாளியிடம் தெளிந்து கிடக்கிறது.</span><o:p></o:p></span></p> <p class="MsoNormal" style="text-align: justify; "><o:p><span > </span></o:p></p> <p class="MsoNormal" style="text-align: justify; "><span ><span lang="AR-SA" style="font-family:Latha;">ஊர்ஊராய்ச்</span><span lang="AR-SA"> </span><span lang="AR-SA" style="font-family:Latha;">சுற்றி யாசகம் வாங்கிப் பிழைக்கும் சலீமின் பார்வையிலிருந்து விரியும்</span><span lang="AR-SA"> </span><span lang="AR-SA" style="font-family:Latha;">சுவடுகள் கதை தருமம் என்ற சொல்லிலிருந்து கிளைந்து அதைப் பெற</span><span lang="AR-SA"> </span><span lang="AR-SA" style="font-family:Latha;">முயற்சிப்பவர்கள் படும் அவலத்தையும் அவசத்தையும் வெளிப்படுத்துவது.</span><span lang="AR-SA"> </span><span lang="AR-SA" style="font-family:Latha;">யாசகத்துக்கு பெண்களும் குழந்தைகளுமே முன்னிருத்தப்படுகின்ற னர். அதுதான்</span><span lang="AR-SA"> </span><span lang="AR-SA" style="font-family:Latha;">தொழிலில் கூடுதல் பொருளீட்டலைப் பெற்றுத் தருகிறது. அந்த</span><span lang="AR-SA"> </span><span lang="AR-SA" style="font-family:Latha;">முன்னிலைப்படுத்தல்தான் மகளின் அலறலை "உனக்கு பிரம்மையாக இருக்கலாம்"</span><span lang="AR-SA"> </span><span lang="AR-SA" style="font-family:Latha;">என்று அத்தாவை சொல்ல வைக்கிறது. யாசகம் கேட்டுப்பெறுதல் எனும் எளிய</span><span lang="AR-SA"> </span><span lang="AR-SA" style="font-family:Latha;">பார்வையைத் தாண்டி அதற்குள் உறைந்து கிடக்கும் மற்றவையான அவமானம்</span><span lang="AR-SA"> </span><span lang="AR-SA" style="font-family:Latha;">புறந்தள்ளல் கண்டுகொள்ளாமை யார் கண்ணிலும் படாமல் போய்விடுகிறது. கதையில்</span><span lang="AR-SA"> </span><span lang="AR-SA" style="font-family:Latha;">வரும் அக்காவின் அலறலை சமூகத்தின் அலறலாகக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.</span><o:p></o:p></span></p> <p class="MsoNormal" style="text-align: justify; "><o:p><span > </span></o:p></p> <p class="MsoNormal" style="text-align: justify; "><span ><span lang="AR-SA" style="font-family:Latha;">வேற்றுக்</span><span lang="AR-SA"> </span><span lang="AR-SA" style="font-family:Latha;">கிரக அவாந்திரப் பெருவெளியில் பொம்மையுடன் கைகோர்த்தவாறு திரியும் குழந்தை</span><span lang="AR-SA"> </span><span lang="AR-SA" style="font-family:Latha;">தெளபிக் இடம்பெறும் ஆண்பொம்மை ராட்சஸப் பறவையின் சிறகுகள் கதையில் வரும்</span><span lang="AR-SA"> </span><span lang="AR-SA" style="font-family:Latha;">சக்கரை முகமதுவின் மன உலைச்சல் ஆதிமை நீஸா என்றொரு சிநேகிதி போன்ற</span><span lang="AR-SA"> </span><span lang="AR-SA" style="font-family:Latha;">சிறுகதைகள் நிஜங்களுக்கு நெருக்கமானவையாக இருக்கின்றன. சடங்குக்காக</span><span lang="AR-SA"> </span><span lang="AR-SA" style="font-family:Latha;">செய்யப்பட்ட சைத்தானை அடிப்பதில் மக்கள் கொள்ளும் ஆர்வம்</span><span lang="AR-SA"> </span><span lang="AR-SA" style="font-family:Latha;">கடமையாக்கப்படுகிறது.</span><o:p></o:p></span></p> <p class="MsoNormal" style="text-align: justify; "><o:p><span > </span></o:p></p> <p class="MsoNormal" style="text-align: justify; "><span ><span lang="AR-SA" style="font-family:Latha;">அதேவேளையில்</span><span lang="AR-SA"> </span><span lang="AR-SA" style="font-family:Latha;">ஆடான நீஸாவின் சிநேகிதி ஆயிஷா </span>'<span lang="AR-SA" style="font-family:Latha;">சைத்தாம் புடிச்சவளாக</span>' <span lang="AR-SA" style="font-family:Latha;">ஆக்கப்படுவது ஆட்டை</span><span lang="AR-SA"> </span><span lang="AR-SA" style="font-family:Latha;">அறுப்பதுபோல நெஞ்சை அறுக்கிறது. கறுப்புக்கோட்டு பக்ரீத் ஆடுகள் எளிய</span><span lang="AR-SA"> </span><span lang="AR-SA" style="font-family:Latha;">விளிம்புநிலை மக்களின் பாடுகளை உரித்துக் காட்டுவனவாக இருக்கின்றன.</span><span lang="AR-SA"> </span><span lang="AR-SA" style="font-family:Latha;">சுவர்கள் சிரிக்கின்றன உள்வெளி போன்ற கதைகள் நிகழ்த்துதலைத் தாண்டிய</span><span lang="AR-SA"> </span><span lang="AR-SA" style="font-family:Latha;">பதிவுகளாக மட்டுமே இருக்கின்றன. நிழலின் சாயலும் சாயலின் நிழலும் </span>'<span lang="AR-SA" style="font-family:Latha;">சென்னை</span><span lang="AR-SA"> </span><span lang="AR-SA" style="font-family:Latha;">வாழ்க்கையைப் படம் பிடிக்கிறதா</span>?' <span lang="AR-SA" style="font-family:Latha;">என்றாலும் புல் ஓபன் நைட்டின் ஜிப்</span><span lang="AR-SA"> </span><span lang="AR-SA" style="font-family:Latha;">திடீரென கீழிறங்கி இருந்ததைக் கவனித்தான்."இதுதான் சர்ர்ர்ரியலிசம்..."</span><span lang="AR-SA"> </span><span lang="AR-SA" style="font-family:Latha;">என்றபடி சுதந்திரமானான் எனும் பகடி ரசிப்பதாக இருந்தது. வேறுகதைகளில்</span><span lang="AR-SA"> </span><span lang="AR-SA" style="font-family:Latha;">இல்லாதது.</span><o:p></o:p></span></p> <p class="MsoNormal" style="text-align: justify; "><o:p><span > </span></o:p></p> <p class="MsoNormal" style="text-align: justify; "><span ><span lang="AR-SA" style="font-family:Latha;">சிறந்த</span><span lang="AR-SA"> </span><span lang="AR-SA" style="font-family:Latha;">எழுத்து என்று வரையறுக்கப்படும் சமூகப் பொறுப்புணர்வு தார்மீக எழுச்சி</span><span lang="AR-SA"> </span><span lang="AR-SA" style="font-family:Latha;">சுதந்திரம் ஆழம்என சகல மேன்மைகளும் நிரம்பிய அந்தரங்க நிலை படைப்பாளியிடம்</span><span lang="AR-SA"> </span><span lang="AR-SA" style="font-family:Latha;">கொட்டிக்கிடக்கிறது. அதனாலேயே கோடை வெயிலில் ஈரக்காற்றை உணர்த்திய உன்னத</span><span lang="AR-SA"> </span><span lang="AR-SA" style="font-family:Latha;">தருணத்தைக் கொண்டவையாக அவரது கதைகள் இருக்கின்றன.</span><o:p></o:p></span></p> <p class="MsoNormal" style="text-align: justify; "><o:p><span > </span></o:p></p> <p class="MsoNormal" style="text-align: justify; "><span ><span lang="AR-SA" style="font-family:Latha;">இந்தப்பின்னணியில்</span><span lang="AR-SA"> </span><span lang="AR-SA" style="font-family:Latha;">உருவாகியிருக்கும் கதைகளை முன்னரே சொன்னதுபோல மூன்று வகைமைகளாகப்</span><span lang="AR-SA"> </span><span lang="AR-SA" style="font-family:Latha;">பகுத்தாலும் அதனுள் சூழல் ஜாகிர்ராஜாவை கீர னூர் தஞ்சாவூர் சென்னை என்று</span><span lang="AR-SA"> </span><span lang="AR-SA" style="font-family:Latha;">மூன்று இருப்பிடங்களில் இருத்தி உருவாக்கிப் பயணிக்கச் செய்திருக்கின்றது.</span><span lang="AR-SA"> </span><span lang="AR-SA" style="font-family:Latha;">அவற்றுள் சென்னையைக் காட்டிலும் முதலிரண்டு தளங்களில் பின்னப்பட்டக்</span><span lang="AR-SA"> </span><span lang="AR-SA" style="font-family:Latha;">கதைகள் நெஞ்சை நிறைக்கின்றன. ஆனாலும் கூட ஜாகிர்ராஜாவின் முன்னே இன்னும்</span><span lang="AR-SA"> </span><span lang="AR-SA" style="font-family:Latha;">இன்னும் விரிந்து பரந்த களம் ஆடப்படாமல் இருக்கவே செய்கிறது. அதில்</span><span lang="AR-SA"> </span><span lang="AR-SA" style="font-family:Latha;">நிகழ்த்துவதற்கான மூலங்களும் திறமும் அவரிடம் நிறையவே இருக்கின்றது.</span><span lang="AR-SA"> </span><o:p></o:p></span></p> <p class="MsoNormal" style="text-align: justify; "><o:p><span > </span></o:p></p> <p class="MsoNormal" style="text-align: justify; "><span ><span lang="AR-SA" style="font-family: Latha; ">நன்றி : உயிர் எழுத்து. நவம்பர் </span>2011.</span><span style="font-size: 100%;"><o:p></o:p></span></p> <p class="MsoNormal" style="font-size: 100%; "><o:p> </o:p></p>கீரனூர் ஜாகிர்ராஜாhttp://www.blogger.com/profile/16821172975494211862noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5325351298899765001.post-27644823547183862812012-04-03T06:36:00.001-07:002012-04-03T06:38:13.445-07:00வடக்கேமுறி அலிமா ம. மணிமாறன்<p style="font-weight: normal; margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 10px; padding-left: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 16px; text-align: -webkit-auto; background-color: rgb(255, 255, 255); "><a href="http://lh6.ggpht.com/_IEYubfMaOJM/TSFaGJagPlI/AAAAAAAACtk/PIylq-OdCCA/s1600-h/vadakke-muri-alima%5B4%5D.jpg" style="color: rgb(204, 0, 0); text-decoration: none; "><br class="Apple-interchange-newline"><img title="vadakke-muri-alima" border="0" alt="vadakke-muri-alima" src="http://lh5.ggpht.com/_IEYubfMaOJM/TSFaGwjsnwI/AAAAAAAACto/qRunQdO3aHE/vadakke-muri-alima_thumb%5B2%5D.jpg?imgmax=800" width="182" height="283" style="border-style: initial; border-color: initial; border-image: initial; border-top-style: initial; border-right-style: initial; border-bottom-style: initial; border-left-style: initial; border-width: initial; border-width: initial; max-width: 600px; max-height: 300px; background-image: none; border-bottom-width: 0px; border-bottom-color: initial; border-left-width: 0px; border-left-color: initial; padding-left: 0px; padding-right: 0px; display: inline; border-top-width: 0px; border-top-color: initial; border-right-width: 0px; border-right-color: initial; padding-top: 0px; " /></a></p><p style="font-weight: normal; margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 10px; padding-left: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 16px; text-align: -webkit-auto; background-color: rgb(255, 255, 255); "><strong><span ></span></strong></p><p style="font-weight: normal; margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 10px; padding-left: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 16px; text-align: -webkit-auto; background-color: rgb(255, 255, 255); "><strong><span >நா</span></strong>வல்களின் உள்ளுறையாக அமைந்திருப்பவை யாவும் தனிமனிதனின் புற உலக ஞாபகங்கள்தான். அகத்தினுள்ளும் ஞாபகங்கள் உறைந்து கிடக்கத்தான் செய்கின்றன. உலகெங்கும் தன் வரலாற்றையே நாவலாக்கிப் பார்த்தனர் எழுத்தாளர்கள். அதன் எல்லை தன் ஊர், தன் குடும்பம், தன் குலவழியின் பல்வேறு கிளைகள் என்ற அளவில்தான் பயணித்தது. எழுத்தாளர்களின் எழுத்துக்கான கச்சாப்பொருளை தன்னிலிருந்து உருவாக்கி அதனை அடுக்கி, அடுக்கி புனைவாக்கிடும் சக்கரவாட்டச் சுழற்சிக்கு உலகின் எந்த மொழியும் தப்பித்ததில்லை. மகத்தான படைப்புகளும் கூட எழுத்தாளனின் வாழ்விலிருந்து கிளைத்து வந்தவையாகத்தான் இருந்தன என்பதை நாம் அறிவோம். இப்பயணத்திலிருந்து விலகிச் செல்லும் படைப்புகள் மீது வாசக மனம் பெரும் விருப்பம் கொள்கிறது. அப்படியான வழமையிலிருந்து விலகிச் சென்ற இலக்கியப் படைப்பே கீரனூர் ஜாகிர் ராஜாவின் “வடக்கே முறி அலிமா எனும் அவரின் நான்காவது நாவல்.</p><p style="font-weight: normal; margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 10px; padding-left: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 16px; text-align: -webkit-auto; background-color: rgb(255, 255, 255); ">இரண்டாயிரத்துக்குப் பிறகான காலத்தின் மிக முக்கியமான எழுத்துலகப் பிரதிநிதித்துவம் ஜாகிரினுடையது. அவருடைய நான்கு நாவல்களுமே இந்தக்காலத்தில்தான் எழுதப்பட்டிருக்கிறது. மீன்காரத் தெரு, கருத்த லெப்பை, துருக்கித் தொப்பி எனும் மூன்று இலக்கியப் பிரதிகளும் எளிய மொழியில் தனித்த தமிழ் இஸ்லாமிய வாழ்வினைப் பதிவு செய்திருந்தன. ஒரு வகையில் அவை யாவும் கூட தன் ஊரின், தனித்த மனிதர்களின் அகலாத ஞாபகங்கள்தான். வேறு எந்த இஸ்லாமிய நாவல்களும் காட்டியிராத அல்லது காட்டத் தயங்கியவற்றின் மீது தன் எழுத்தென்னும் ஆயுதம் கொண்டு பெரும் ஒளிவெள்ளத்தைப் பாய்ச்சியவர் ஜாகிர். “அலிமா” முற்றிலும் வேறானதொரு படைப்பு. ஒரு நாவலுக்கான வெளிப்பாட்டு முறையை எழுத்தாளன்தான் முடிவு செய்கிறான் என்ற போதும் படைப்பு முன் வைக்கும் சவால்களை எதிர்கொள்ள எழுத்தாளன் எடுத்திடும் முயற்சியும் கூட நாவலுக்கான வடிவத்தை தீர்மானிக்கிறது.</p><p style="font-weight: normal; margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 10px; padding-left: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 16px; text-align: -webkit-auto; background-color: rgb(255, 255, 255); ">அலிமாவின் வாழ்க்கை ஒரே நேர் கோட்டில் அமைந்திருக்கவில்லை. தன் பால்யத் தோழனான கெபூருடனான கபுறுகளி ஆட்டத்தில் துவங்கி, முஸ்லியாருடன் உடன் போதல், மம்முதுடன் வெளியேறுதல், அக்கம்மாவான செய்யதலி பாத்திமாவுடனான நெருக்கம், எழுத்தாளர், நடிகை என வேறு வேறு அவதாரம் எடுத்தல் என்பது எல்லாப் பெண்களுக்கு என்று கட்டமைக்கப்பட்டிருக்கும் வாழ்க்கை ஒழுங்கிற்குள் சாத்தியமில்லை. அதுவும் வளமான இஸ்லாமியக் குடும்பத்துப் பெண்ணிற்கு இப்படியான வாழ்க்கை அமைந்திட வாய்ப்பே இல்லை. பள்ளிக்கு படிக்கப் போவது, குரான் ஓதிட மதரஸாவிற்குச் செல்வது, பிற ஆடவர் பார்வையில் படும்போது தலையில் முக்காடிட்டுக் கொள்வது, திருமண வயது நெருங்குவதற்கு முன்பாகவே நிக்காஹ் நடந்தேறுவது இவைதான் இஸ்லாமிய பெண்ணிற்கான வாழ்வியல் ஒழுக்கங்கள். இஸ்லாமிய பெண்களின் மீது விதிக்கப்பட்டிருக்கும் கற்பிதங்களை அலிமாவைக் கொண்டு கலைத்துப் போட்டிருக்கிறார் ஜாகிர். எனவேதான் வடக்கே முறி அலிமா நேர்கோட்டுத் தளத்திற்குள் இயக்கம் பெறவில்லை. மாறாக ஒரு பின் நவீனத்துவப் பிரதியாக வடிவம் பெற்றிருக்கிறது.</p><p style="font-weight: normal; margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 10px; padding-left: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 16px; text-align: -webkit-auto; background-color: rgb(255, 255, 255); ">வடக்கே முறி அலிமா இஸ்லாமியத் தளத்திற்குள் இயங்குகிற போதும் கூட அவள் நடிகை, எழுத்தாளர் என பரிணாமம் கொள்கிற போது முற்றிலும் வேறு ஒரு பிரதியாக வடிவம் கொள்கிறது. அதிலும் குறிப்பாக அவளுடைய எழுத்து என்பது கழிவறைச் சுவர்களில் இருந்துதான் பிரதியெடுத்து புத்தகமாக்கப்பட்டது என்பது உச்சபட்ச பகடியாகும். எழுத்தாளப் பெருந்தகைகளைப் பகடித்து கேள்விக்கு உள்ளாக்கிடும் எழுத்தே கழுதைக்கு (பத்திரிகை) அலிமா அளித்த பேட்டி என்பதை வாசகன் அறிந்திடுவான்.</p><p style="font-weight: normal; margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 10px; padding-left: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 16px; text-align: -webkit-auto; background-color: rgb(255, 255, 255); ">சாதாரணமானவர்களால் அசாத்தியமான பெரும் படைப்புகளை உருவாக்கிட முடியாது என வாசக மனங்களில் ஆழமாகப் பதிவு செய்யப்பட்டிருக்கும் கருத்து இயல்பானதல்ல. அவற்றை கட்டமைத்ததில் தமிழ் இலக்கியத்திற்குள் காலம் தோறும் இயங்கி வருகிற சிறு பத்திரிகைகளுக்கு பெரும் பங்கிருக்கிறது. பேட்டியில் அலிமா சொல்கிறாள் “என் கழிப்பறை எழுத்திற்கு ஆதர்சம் காசிம்” உடனே பேட்டி எடுக்க வந்தவர் - “யார் அந்த காசிம்? புகழ்பெற்ற அரபு யாத்திரிகர் போல இருக்கிறதே” - வாசகனுக்கு மிக நன்றாகத் தெரியும். காசிம், அலிமாவின் வீட்டுச் சமையல்காரன். அவனுடைய கழிவறைக் குறிப்புகளாக உருப்பெற்ற விதவிதமான மனிதர்களின் குறிகள் எதன் குறியீடு என்பதையும் வாசகன் அறிந்திடும் வகையிலேயே நாவல் இயக்கம் பெற்றிருக்கிறது. ஆனாலும் கூட எழுத்தாளன் ஆதர்சம் பெறுவதற்கான ஆளுமையாக சமையல்காரனான காசிம் இருப்பதை நவீன இலக்கிய உலகம் ஒத்துக்கொள்ளப் போவதில்லை.</p><p style="font-weight: normal; margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 10px; padding-left: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 16px; text-align: -webkit-auto; background-color: rgb(255, 255, 255); ">அமைப்பியல் வாதம் விவாதத்திற்குள்ளான நாட்களில் “பாலிம்ஸெஸ்ட் ரைட்டிங்” எனும் எழுதுதல் முறை உலகெங்கும் விவாதத்திற்குள்ளானது. தமிழிலும் கூட தமிழவன் “சரித்திரத்தின் மீது படிந்த நிழல்கள்” எனும் தன்னுடைய முழு நாவலையும் பாலிம் ஸெஸ்ட் பிரதியாகத்தான் உருவாக்கியிருந்தார். பாலிம்ஸெஸ்ட் ரைட்டிங் என்றால் நடந்திருக்கும் நிகழ்வுகளின் மீது எழுத்தாளர் தன்னுடைய புனைவை எழுதுகிறபோது நிஜமும், புனைவும் கலங்கி வேறு ஒன்றாக வெளிப்படும் என்பதுதான். அப்படியான புனைவுப் பிரதிகள் பகடியாக வெளிப்படுவதை ஒரு போதும் தவிர்க்கமுடியாது. அப்படியான பெரும் பகடிகளின் தொகுப்பாகவும் நாவல் வெளிப்படுகிறது. வாசகனின் கவனத்திற்கென ஒன்றிரண்டை ஞாபகமூட்டுவது சரியாக இருக்கும் என்று படுகிறது.</p><p style="font-weight: normal; margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 10px; padding-left: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 16px; text-align: -webkit-auto; background-color: rgb(255, 255, 255); ">பதிப்பகத்தினர் குறித்த பகடியென்றே நான் கோழிக்கோடனைக் கருதுகிறேன். ஆலப்புழை நகராட்சிக் கழிப்பறைச் சுவரினைக் கண்ணுற்ற பிறகு அவர் அலிமாவைப் பின் தொடர்கிறார். மொத்தம் 3800 கக்கூஸ்களில் அலிமாவால் எழுதப்பட்ட ‘என்டெ யாத்ரா’ நூலாக வரும் போது 300 பக்கமாக்கப்பட்டது. 50,000 பிரதிகள் விற்றுத் தீர்ந்திருக்கிறது. அவளின் காகிதம் கக்கூஸ் சுவர்; அவளின் பேனா விறகுக்கரி. இதைத் தொகுத்தே கோழிக்கோடன் “என்டெ யாத்ரா” - வாக்கிட அதற்கு “முட்டைச் சிம்னி” விருதும் கிடைக்கிறது. விருதின் பெயர்களைப் பாருங்கள் “கட்டஞ்சாயா”, “ஏத்தன் பழம்” இப்படிப் பலப்பல. தமிழில் தான் விரும்புகிற எழுத்துக்களுக்கெல்லாம் எந்த விதிமுறையும், வரைமுறையும் கைக்கொள்ளப்படாமல், அளிக்கப்படுகிற விருதுகளின் மீதான பகடியாகத்தான் நான் இதைப் பார்க்கிறேன். அதிலும் குறிப்பாக “முட்டைச் சிம்னி” - விருது நவீன இலக்கிய எழுத்தாளர்களுக்கு வழங்கப்படுகிற “விளக்கு”- விருதினை வாசகனுக்கு ஞாபகமூட்டத்தான் செய்கிறது.</p><p style="font-weight: normal; margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 10px; padding-left: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 16px; text-align: -webkit-auto; background-color: rgb(255, 255, 255); ">தவிர்க்கவியலாமல் யார் இந்த அலிமா என்று எனக்குள் நான் கேட்டுக் கொண்டேதானிருக்கிறேன். அலிமா ஒரு நடிகையாக இருப்பதால் அதுவும் இஸ்லாமியப் பெண்ணாக இருப்பதால், அதிலும் கற்பு, ஒழுக்கம் என கட்டமைக்கப்பட்டிருக்கிற பெண்ணிற்கு மட்டுமேயான பாலியல் ஒழுங்குகளை கேள்வி கேட்பவளாக இருப்ப தால் வைத்து அலிமாவை நடிகை குஷ்புவாக்கிப் பார்க்கலாமா? என்ற யோசனையை அவர் எழுத்தாளர் இல்லையே என்ற தர்க்கம் உடனே கலைத்தது. பிறகு யார்? கேரளத்தில் பிறந்து, நடிகையாகி, எழுத்தாளராகவும் இருக்கிற அருந்ததிராயின் சாயலை அலிமாவிற்குள் தேடித் தோற்றேன். அலிமா தன்னை கலாச்சாரப் போராளியாக காட்டிடவில்லையே. இப்படியே வாசகா நீயும் கூட உனக்குள் அலிமாவைத் தேடிக் கண்டடையாமல் தவிக்கப் போவது நிஜம்.</p><p style="font-weight: normal; margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 10px; padding-left: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 16px; text-align: -webkit-auto; background-color: rgb(255, 255, 255); ">அலிமா கமலாதாஸா, குஷ்புவா, அருந்ததிராயா என்கிற யாதொரு குழப்பமும் இல்லாமல் வடக்கே முறி அலிமாவாக மட்டுமே வெளிப்படுகிற இடங்கள் இரண்டு. ஒன்று அவள் ஆடும் கபுறுகளி ஆட்டம். மற்றொன்று சினிமா நடிகையானதால் ஏற்பட்டுள்ள விழுப்புண்ணிற்கு களிம்பு தடவியபடி லாட்ஜ் அறைச் சிறுவனின் முகத்தில் தன்னுடைய கபுறுகளி ஆட்டத் தோழனான “கெபூரைத் தேடிடும் இடத்திலும்தான். அதிலும் கபுறுகளி ஆட்டம் இந்த நாவலின் உச்சம்.</p><p style="font-weight: normal; margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 10px; padding-left: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 16px; text-align: -webkit-auto; background-color: rgb(255, 255, 255); ">எல்லா மதங்களும் மறுமை குறித்த பயத்தின் மூலமாகவே இம்மையை நிர்பந்திக்கின்றன. மனித வாழ்வில் கடைப்பிடிக்கப்படுவதாக நம்பப்படுகிற எல்லா நடவடிக்கைகளுக்குள்ளும் மைய இழையாக ஓடிக் கொண்டிருப்பது சொர்க்கம், நரகம் குறித்த கட்டமைப்புகளே. இம்மையில் நன்மை செய்ததாக நம்பி உறங்கிக் கொண்டிருக்கும் மனிதர்களை சாட்டையால் விளாசி அலிமா எழுப்பும் கேள்விகளும், அந்த கபர்ஸ்தான் காட்சிகளும் மிகுந்த செவ்வியல் தன்மையிலான பதிவாகும். “மய்யத்துகளின் அருகில் நின்று அலிமாவும், கபூரும் கேள்வி எழுப்புவார்கள். “கலிமா சொல்லுங்கோ”, தொழுதியளா? காசு உண்டாக்கினீங்கோ, ஷஜ் செஞ்சியளா?” “உங்க பாரியாளத் தலாக் கொடுத் தீங்களா”. வட்டி வாங்கினதுண்டா, இல்லங்கி இத்தன பைசா எங்கின வந்திச்சு?” . . . . ஹராமெனும் சொல் இஸ்லாமிய கலைச் சொற்களிலேயே மிகுந்த தனித்துவமான சொல். அது குறித்த தர்க்கத்தையே கபுறுகளி ஆட்டத்தின் போது அலிமா நிகழ்த்துகிறாள். இஸ்லாமியப் பெண்களுக்கு பொதுப்பள்ளி வாசலில் தொழுதிட ஜமாத்துகள் அனுமதிப்பதில்லை. இப்போது தான் பெண்களுக்குத் தனியான தொழுகையிடங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. கபர்ஸ்தானுக்குப் போகிற மரண ஊர்வலத்தில் பங்கேற்றிட தமிழ்ச்சாதிகளில் இருப்பதைப் போலவே பெண்களுக்கு இஸ்லாத்திலும் இடம் இல்லை. ஆனால் நம்முடைய அலிமா கபுறு குழிகளையே கேள்வி கேட்கிறாள். இறுகிய மத அடிப்படை வாதத்தின் மீது கேள்வி எழுப்புகிற வல்லமை கொண்ட எழுத்தாளனே ஜாகிர் என்பதற்கான பல சாட்சியங்களை வாசகன் கண்டடைவதற்கான சாத்தியம் கொண்டதாகவே வடக்கே முறி அலிமாவை மதிப்பிடத் தோன்றுகிறது.</p><p style="font-weight: normal; margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 10px; padding-left: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 16px; text-align: -webkit-auto; background-color: rgb(255, 255, 255); ">மனப்பிறழ்வு குறித்த தர்க்கங்களும், ஏர்வாடி மனப்பிறழ்வாளர்களின் வாழ்விடம் குறித்த காட்சித் சித்திரங்களும் “வதை முகாமிலிருந்து கேட்கும் குரல்” என்ற பகுதியிலும், அலிமாவின் பேட்டியிலும் மிக அழுத்தமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழில் கோபி கிருஷ்ணன் “உள்ளேயிருந்து சில குரல்கள்” - எனும் மனப்பிறழ்வின் துயரத்தை நுட்பமாகவும், ஆழமாகவும் பதிவு செய்த எழுத்துப் பிரதியாகும். அலிமாவிற்குள்ளும் ஆழமும், அழுத்தமுமாக தர்க்கித்து மனப்பிறழ்வு களின் நுட்பங்கள் பதிவு பெற்றிருக்கிறது. அதிலும் குறிப்பாக செய்யதலி பாத்திமா எனும் அக்கம்மாவிற்கு அலிமா எழுதும் கடிதம் கவித்துவ உச்சமாகும்.</p><p style="font-weight: normal; margin-top: 0px; margin-right: 0px; margin-bottom: 0px; margin-left: 0px; padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 10px; padding-left: 0px; font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 16px; text-align: -webkit-auto; background-color: rgb(255, 255, 255); ">சாதாரணர்களின் உலகில் அசாதாரணமானவளான அலிமா மனப்பிறழ்விற்கு உள்ளானவளாகத்தான் தென்படுவாள். எழுத்தாளச் சித்தப்பன் எழுதியபடியே நகர்கிறது. அலிமாவின் வாழ்க்கை என்கிற புனைவு வசீகரமான சோகமாக வாசக மனதினில் படிகிறது. எல்லாம் முடிந்தபிறகும் கூட கபூருடன் பட்டாம் பூச்சிகளை கபர்ஸ்தானில் துரத்தியலைகிற அலிமாவைக் கலைக்கிற பள்ளி வாசலின் வாங்குச் சத்தம் மட்டும் எனக்குள் கேட்டுக் கொண்டேயிருக்கிறது.</p>கீரனூர் ஜாகிர்ராஜாhttp://www.blogger.com/profile/16821172975494211862noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5325351298899765001.post-33840035012584367962012-03-10T01:17:00.008-08:002012-04-03T06:12:21.381-07:00ரோட்டரி கிங்ஸ் ஆப் தஞ்சாவூர் நடத்திய பாராட்டு விழாவின் சில காட்சிகள்<div><div><span >கடந்த இரண்டு மாதங்களில் முன்னர் ஒரு நாள் என் நண்பர் தஞ்சை இனியன் என்னை போனில் தொடர்பு கொண்டு ‘‘தஞ்சையில் நடக்கவுள்ள 3வது புத்தக கண்காட்சி நாள் ஒன்றில் உங்களுக்கு பாராட்டு விழா. ரோட்டரி கிங்ஸ் ஆப் தஞ்சாவூர் ஏற்பாடு’’ என்று சொன்னார். உண்மையில் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஏனெனில் நான் ஏற்கனவே ஒரு முறை குறிப்பிட்டிருந்ததைப் போல ‘நான் என்ன எழுதுகிறேன் என்றே என் தஞ்சை நண்பர்களுக்குத் தெரியாது.’ இது தான் உண்மையும்கூட. மேலும் தஞ்சையின் இளம் வணிகர்கள் குழுமியுள்ள ரோட்டரி கிங்ஸ் ஆப் தஞ்சாவூருக்கும், எனக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. அதில் அங்கம் வகிக்கின்ற இரா. செழியன் உள்ளிட்ட நண்பர்களை எனக்கு நீண்ட நாள் பரிச்சயம் உண்டு அவ்வளவுதான். மேலும் வசிக்கின்ற ஊரில் பாராட்டு விழா என்றால் கொஞ்சம் அசூயை தான்.</span></div><div><span ><br /></span></div><div><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj86wi3dK0KtzdtvlgeFfqQRP6AwRKPu77cvkq-MTg3HKCyosH5-DvrmfM4wgdjd6kd2ybwQG6_2xYy-7JgIv9N_NYgXwU2fei9hCGIBeMXNJZw9AHmezTtfPPpVO3JYBW9_4yIcEzSqPMz/s1600/jakir-1+copy.jpg" style="font-family: Georgia, serif; font-size: 100%; "><img src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj86wi3dK0KtzdtvlgeFfqQRP6AwRKPu77cvkq-MTg3HKCyosH5-DvrmfM4wgdjd6kd2ybwQG6_2xYy-7JgIv9N_NYgXwU2fei9hCGIBeMXNJZw9AHmezTtfPPpVO3JYBW9_4yIcEzSqPMz/s320/jakir-1+copy.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5718198665022879618" style="cursor: pointer; width: 320px; height: 212px; " /></a></div></div><div><br /></div><div><span >ஆனால் இனியனோ விடாப்பிடியாக இருந்து விழாவை நடத்திவிட்டார். முக்கியமாக என்னைக் குறித்து (என் படைப்புகளை குறித்துதான்) பேச வேண்டியவர்களை தேர்ந்துக் கொள்ள எனக்கு சுதந்திரமும் வழங்கினார்.</span></div><div><span > விழாவன்று மாலை பெசன்ட் இல்லத்தில் பெரிய பேனர் எல்லாம் வைத்திருந்தனர். பெசன்ட் இல்லம் எங்களுக்கு தாய் வீடுமாதிரி. இன்றளவும் தஞ்சையில் நடக்கக்கூடிய இலக்கிய விழாக்களுக்கு குறைந்த கட்டணத்துடன் இடமளிக்கக்கூடிய அரங்கம் அது.</span></div><div><span ><br /></span></div><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhbQZMKJN_VS3IOI6pKFGYq9fxRr1JUaiqdvsb-TTbs5yKdGqASplUZhS8lquWpI1uTWHPgH496hccNTw0tdK6V1KPGdeix6YNEj_Oz1FhYAQV0an82g2x5mxrE5nlRnYwPF-uCSVg1LgkX/s1600/jakir-1.jpg" style="font-family: Georgia, serif; font-size: 100%; font-style: normal; font-variant: normal; font-weight: normal; line-height: normal; "><img src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhbQZMKJN_VS3IOI6pKFGYq9fxRr1JUaiqdvsb-TTbs5yKdGqASplUZhS8lquWpI1uTWHPgH496hccNTw0tdK6V1KPGdeix6YNEj_Oz1FhYAQV0an82g2x5mxrE5nlRnYwPF-uCSVg1LgkX/s320/jakir-1.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5718198673846643586" style="cursor: pointer; width: 320px; height: 203px; " /></a> <div style="font-size: 100%; font-style: normal; font-variant: normal; font-weight: normal; line-height: normal; "><div style="font-family: 'Times New Roman'; font-size: medium; "><span >என்னுடைய முதல் புத்தக வெளியீட்டு விழாவும் இங்கே தான் நடந்தது என்பது குறிப்பிடத் தக்கது. தஞ்சை புத்தக காட்சியில் விற்பனை மிகவும் சிறப்பாக இருந்தது என்று சொல்ல முடியாது. ஆனாலும் புத்தகங்கள் விற்றன. பாரதி புத்தகாலயத்தில் எனது புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. கணிசமான அளவு பிரதிகள் விற்றிருந்தன.</span></div><div style="font-family: 'Times New Roman'; font-size: medium; "><span ><br /></span></div><div style="font-family: Georgia, serif; "><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj5u8jd7aAWe5yKa2UqwPS1HoDK_zJTCk2099CFd-jCalGDMMJ-HJBHxPQQh1COT_cDdFIYbdFEm0sdvWls1tXO5vN9SUvi4uhbjT-SATybrLCbZV8l9T2mOXNoMG7ncAwCqIz7aPNwBkwR/s1600/jakir-3+copy.jpg"><img style="cursor:pointer; cursor:hand;width: 320px; height: 213px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj5u8jd7aAWe5yKa2UqwPS1HoDK_zJTCk2099CFd-jCalGDMMJ-HJBHxPQQh1COT_cDdFIYbdFEm0sdvWls1tXO5vN9SUvi4uhbjT-SATybrLCbZV8l9T2mOXNoMG7ncAwCqIz7aPNwBkwR/s320/jakir-3+copy.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5718198691205128530" /></a></div><div><div style="font-size: medium; font-family: 'Times New Roman'; "><span > </span></div><div style="font-size: medium; font-family: 'Times New Roman'; "><span >விழா அன்று மாலை ‘ஆதாமின்ட மகன் அபு’ மலையாள திரைப்படத்தை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தஞ்சை மாவட்ட கிளை சார்பாக களம் திரைப்பட இயக்கம் திரையிட்டது. பார்வையாளர்கள் பொறுமையாக இருந்து அந்தப் படத்தைப் பார்த்தனர். </span></div><div style="font-size: medium; "><span ><br /></span></div><br class="Apple-interchange-newline"><div><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjI1cC7evCDN-uDBEi-nmbBb7CxztVcLeOUyjjI5cfnvf0TNBFAsr7mcGymkfCv5zyC2O8_7RB_jXRgFYDdKG9fnCWuJWicRTh8YZe9U13E-EqNsW2fBdX13E0gzv3t9TrigOHPzNKFu8kh/s1600/jakir-2+copy.jpg" style="font-family: Georgia, serif; "><img style="cursor:pointer; cursor:hand;width: 320px; height: 217px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjI1cC7evCDN-uDBEi-nmbBb7CxztVcLeOUyjjI5cfnvf0TNBFAsr7mcGymkfCv5zyC2O8_7RB_jXRgFYDdKG9fnCWuJWicRTh8YZe9U13E-EqNsW2fBdX13E0gzv3t9TrigOHPzNKFu8kh/s320/jakir-2+copy.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5718198681423204818" /></a><br /><div style="font-size: medium; font-family: 'Times New Roman'; "><span >ரோட்டரி களம் சார்பாக எனக்கு பாராட்டு பத்திரம் வழங்கி பொன்னாடை போர்த்தப்பட்டது. பல மேடைகள் பார்த்திருந்தாலும் அன்றைக்கு ஏனோ சற்று கூச்சமாகவே உணர்ந்தேன். </span></div><div style="font-size: medium; font-family: 'Times New Roman'; "><span >என்னைப் பாராட்டிப் பேச தமுஎகச மாநில தலைவரும், தமிழின் மிக முக்கியமான சிறுகதையாளரும், எனது அண்ணனுமான ச.தமிழ்ச்செல்வன் அவர்கள் வந்திருந்தார்கள். முன்னாள் அமைச்சர் இலக்கிய காவலர் சி.நா.மீ உபயதுல்லா, மகாராஜா ரெடிமேட் ஆசிப் அலி, யோகம் ரியல் எஸ்டேட் இரா. செழியன், என்.எஸ்.பி. விஜயகுமார், இலக்கிய நண்பர்கள் என் துணைவி, குழந்தைகள் உறவினர்கள் கீரனூரில் இருந்து என் பாலிய சினேகிதன் கூடலிங்கம் மற்றும் குடும்பத்தினர் செ.இராசன் (களப்பிரன்) பிம்பம் சாகுல், தமுஎகச தோழர்கள் புலியூர் முருகேசன் கவிஞர் நா. விச்வநாதன், முத்தமிழ் விரும்பி மணிச்சுடர் குப்பு வீரமணி, தஞ்சை அனார்கலி, இறை தாசன் என்று வந்திருந்தவர்களால் அரங்கம் நிரம்பியிருந்தது.</span></div><div style="font-size: medium; "><span ><br /></span></div><br /><div style="font-family: Georgia, serif; "><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh_lz6yjvAQxGpGOttHNujZdsRy9dK2YT1n3OQNqS-FGCTLhWxA6BjYKDAZvvTmeoOS7-4pKYGE4Qcegd8LON5yDylyN-9_lRj0BiYOo-PBTUchnEpKpW-QSlwYuqMZHFa8Y_qhb9J8T0B_/s1600/jakir-2.jpg"><img src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh_lz6yjvAQxGpGOttHNujZdsRy9dK2YT1n3OQNqS-FGCTLhWxA6BjYKDAZvvTmeoOS7-4pKYGE4Qcegd8LON5yDylyN-9_lRj0BiYOo-PBTUchnEpKpW-QSlwYuqMZHFa8Y_qhb9J8T0B_/s320/jakir-2.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5718198695329775330" style="cursor: pointer; width: 320px; height: 214px; " /></a></div><div><div style="font-size: medium; font-family: 'Times New Roman'; "><span >தமிழின் முக்கியமான மொழிபெயர்ப்பாளரும், விமர்சகருமான கோவை எஸ். பாலச்சந்திரன், எழுத்தாளர் எஸ். அர்ஷியா, ஆகியோர் வந்திருந்து தங்களுடைய மிகச் சிறந்த உரைகளை பதிவு செய்தனர்.</span></div><div style="font-size: medium; font-family: 'Times New Roman'; "><span > என்னுடைய குருநாதர் தஞ்சை ப்ரகாஷ் அவர்களின் துணைவியார் மங்கையர்கரசி அவர்கள் வந்து எனக்கு பொன்னாடைப் போர்த்தி வாழ்த்தியது மனநெகிழ்வை தந்தது. அண்ணன் ச.த. தனது உரையில் மதச்சார்பற்ற தன்மையில் நின்று என் படைப்புக் குரல் ஒலிப்பதையும் மீன் குகை வாசுகி நாவலில் பெண் கதா பாத்திரங்கள் பிரதானமாக எழுந்து நிற்பதையும் குறிப்பிட்டார். அர்ஷியா எனது எல்லா நாவல்களையும் தொட்டு அதிலுள்ள சிறப்பம்சங்களை பேசினார். பாலச்சந்திரன் தனது உரையில் உலக எழுத்தாளர்கள் பலரையும் மேற்கோள் காட்டினார். அவருடைய பரந்த வாசிப்பு வழியே என் எழுத்துக்களின் முக்கிய கூறுகளை பார்வையாளர்களுக்கு எடுத்து விளம்பினார். இம்மூவருமே என்னுடைய எல்லா எழுத்துக்களையும் வாசித்தவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது.</span></div><div style="font-size: medium; font-family: 'Times New Roman'; "><span style="font-family: Georgia, serif; ">ரோட்டரி கிங்ஸ் ஆப் தஞ்சாவூர் வழங்கிய விருதுக்கு பெயர் ‘சாதனை இளைஞர்.’ ஐந்து நாவல்களும் ஐம்பதுக்கும் அதிகமான சிறுகதைகளும் கட்டுரைகளும் எழுதியுள்ளதை சாதனை என்று வியக்கின்ற நேரத்தில் ‘உறங்குவதற்கு முன் நான் கடந்து செல்ல வேண்டிய தூரம் அதிகமிருக்கிறது’ என்கிற புகழ் பெற்ற வாசகம்ஒரு கணம் என் மனதில் வந்து போனது.</span></div></div><div style="font-family: Georgia, serif; "><br /></div><div style="font-family: Georgia, serif; "><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj66Q1M-IWsz4_yrLBtrM_qQ5c6thcUKAsYzxMpJMGYgVW8TCdq-3hXa-4BmwaAr7HmBp8HBEBX8AkQKKFM4OiVIJef0ORhLB2L1KeNyDHlXLSiO5E72sWbOPtNzHwSWDKZfUV_JSmdZhbe/s1600/jakir-3.jpg" style="font-size: 100%; "><img src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj66Q1M-IWsz4_yrLBtrM_qQ5c6thcUKAsYzxMpJMGYgVW8TCdq-3hXa-4BmwaAr7HmBp8HBEBX8AkQKKFM4OiVIJef0ORhLB2L1KeNyDHlXLSiO5E72sWbOPtNzHwSWDKZfUV_JSmdZhbe/s320/jakir-3.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5718199016946954258" style="cursor: pointer; width: 320px; height: 215px; " /></a><span style="font-size: 100%; "> </span></div><div style="font-family: Georgia, serif; "><br /></div></div></div></div>கீரனூர் ஜாகிர்ராஜாhttp://www.blogger.com/profile/16821172975494211862noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5325351298899765001.post-59656381532904878742012-01-09T04:47:00.001-08:002012-03-08T02:45:09.907-08:00சித்தி ஜூனைதா பேகம் (1917-1998)<div style="text-align: justify;"><span>இன்னுமொரு ஐந்தாண்டுகளில் சித்தி ஜுனைதா பேகம் என்னும் ஒரு பெண் எழுத்தாளரின் நூற்றாண்டு தொடங்குகிறது என்று நான் இப்போது சொல்லுவேனேயானால் நூற்றாண்டு விழாக்களைத் தாராளமாகச் சளைக்காமல் வெகு விமர்சையுடன் கொண்டாடிப் பழக்கப்பட்ட நம் தமிழ்ச்சமூகம் என்மேல் வியப்பானதொரு பார்வையை வீசக்கூடும். அவ்வை, ஆண்டாள் தொடங்கி இன்றைக்குப் பெரும் வீச்சுடன் உடலரசியலை எழுதிச் செல்லும் பெண் படைப்பாளிகள் வரை ஒரு பிரும்மாண்டமான பட்டியலொன்று கண்முன் விரிந்திருப்பினும், பெண் எழுதுவது ஏனோ நம்மவர்க்கு வியப்பளிக்கக் கூடிய சங்கதியாகவே இருக்கிறது.</span></div><div style="text-align: justify;"><span><br /></span></div><div style="text-align: justify;"><span>காலகாலமாகப் பெண்களை அகப்பையும் கையுமாக அடுக்களைக்குள் அடக்கி வைத்த ஆணாதிக்க மனோபாவத்தையுமே கூட நான் மேலே குறிப்பிட்ட வியப்புக்கு ஒரு காரணமாகக் கொள்ளலாம். என்னதான் கலை இலக்கியமும், பெண் விடுதலையும் பேசிக் களித்தாலும் பெண்ணை நாம் ஒரு எல்லைக்கோடு வரைக்கும்தான் அனுமதிக்கின்ற மன விசாலத்தைப் பெற்றிருக்கிறோம். வேலைக்குச் செல்லும் பெண்களை வேசைத்தனம் செய்பவர்கள் என்று நாக்கூசாமல் சொல்வதற்கு நம்முடைய ஆன்மீகவாதிகளை அனுமதித்திருக்கிறோம். கற்பு உள்ளிட்ட கலாச்சாரப் பண்பாட்டு வெளியில் பெண் மீதான அடக்குமுறைகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. </span></div><div style="text-align: justify;"><span>இஸ்லாம் மதம் ஒருபடி மேலேபோய் கோஷா, பர்தா, தலாக் என்று விதம் விதமாய்ப் பெண்களை முடக்கி வைப்பதில் நியாயம் கற்பிக்கிறது. சமுதாயக் காவலர்கள் இல்லையென்று மறுப்பர். இஸ்லாம் சமூகப் பெண்கள் வாழையடி வாழையாய் இந்தக் கட்டுப்பாடுகளுக்குப் பழக்கப்பட்டவர்களாகவே மாறிப்போய் மனம் மெய் மொழியால் தம்மை அடங்கிச் செல்பவர்களாகவும், அடிபணிந் தவர்களாகவுமே உணர்ந்திருக் கின்றனர்.</span></div><div style="text-align: justify;"><span>இந்த வாழ்வு அந்தச் சமூகப் பெண்களுக்கான முழுமையான வாழ்வாகாது என்பதை ஒரு சிலர் உணர்ந்திருக்கக்கூடும், ஆனால் மௌனம் தான் இப்போதைக்கு எதிர்வினை. இஸ்லாம் சமூகத்தில் பெண்ணுக்குக் கல்வி மறுக்கப்படுவதிலிருந்து இந்தத் திட்டமிட்ட வன்முறையானது தொடங்குகிறது. கல்வி மறுக்கப்பட்ட இரண்டு மூன்று தலைமுறையைச் சேர்ந்த இஸ்லாமியப் பெண்கள் இன்றைக்கு வாழ்க்கையை எதிர்கொள்வதில் எத்தனை சிக்கல்களுக்கு ஆளாகியுள்ளனர் என்பதை எழுத மனம் கூசுகின்றது. </span></div><div style="text-align: justify;"><span><br /></span></div><div style="text-align: justify;"><span>எல்லோரும் குறிப்பிடுவதுபோல ஒரு மூடுண்ட சமூகமாகவே தங்களை அடையாளப்படுத்திக் கொள்வதில் அம்மக்கள் ஒருவித மறைமுகமான பெருமிதம் கொண்டிருக்கின்றனரோ என்னும் சந்தேகமும் கூடவே எழுகிறது.</span></div><div style="text-align: justify;"><span>அத்தி பூத்தாற்போலவே அங்கிருந்து பெண்கள் எழுத வருகின்றனர். அவர்களும் மதம் வலியுறுத்துகின்ற அறக்கோட்பாடுகளுக்கு உட்பட்ட பேனாக்களோடும், மனநிலையுடனுமே வருகின்றனர். இவை அறிவுத்தளத்தில் என்ன விளைச்சலைத் தந்துவிடப் போகிறது? தமிழ் நவீன இலக்கியச் சூழலில் இஸ்லாம் சமூகத்தைப் பிரதிபலிப்பவர்களாகத் தோப்பில் முஹம்மது மீரான் தொடங்கி குறைந்தது ஐந்தாறு ஆளுமைகளை உடனடியாக நம்மால் அடையாளங் காட்ட முடியும். ஆனால் நானறிந்தவரை கடந்த 25 ஆண்டுகளில் சல்மா மட்டுமே எழுத்துக்கு வந்திருக்கிற இஸ்லாம் சமூகத்துப் பெண்ணாக இருக்கிறார். சல்மாவைத் தொடர்ந்து ஒரு பெண் கூட எழுத முன்வரவில்லை என்பது எத்தனை பெரிய சோகம்? இதன் பின்னணியில் நிலவுகின்ற நீண்டதொரு மௌனத்துக்கு எவர் பொறுப்பு?</span></div><div style="text-align: justify;"><span><br /></span></div><div style="text-align: justify;"><span>இது குறித்து விவாதிக்காமல் பெண்ணெழுத்தின் அடர்த்தி குறித்து சிலாகிப்பதில் பொருளில்லை என்றே கருதுகிறேன். தலித் சமூகம் சார்ந்து எழுத வல்ல பெண் பிரதிநிதிகள் உள்ளனர். பெண்களுக்கான சகல பிரச்சனைகள் குறித்தும் கேள்வி எழுப்ப இன்றைக்கு அவரவர் தரப்பில் பிரதிநிதித்துவங்களுக்குக் குறைவில்லாத நிலையில், பெண்கள் அறிவு சார்ந்த தளத்தில் இயங்குவதற்குக் கட்டுப்பாடுகளையும் கெடுபிடிகளையும் விதிக்கின்ற ஓரிடத்திலிருந்து போதுமான அளவு பதிவுகள் இல்லாமல் பெண் எழுத்து எவ்வாறு பூரணத்துவம் பெறும்? இஸ்லாம் சமூகத்துப் பெண்களை எழுதவிடாமல் தடுக்கின்ற கரங்கள் எவை? இதற்கு மாற்றாக நாம் என்ன எதிர்வினை நிகழ்த்தப் போகிறோம் என்கிற கேள்வியை இக்கட்டுரையின் வாயிலாக உங்களிடம் முன்வைக்கிறேன்.</span></div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;"><span>பெண் எழுதுவதா என்று பிற்போக்குத் தனத்துடன் கேள்வி எழும்பத் தோதான இந்திய சுதந்திரத்திற்கு முற்பட்ட காலத்தில், ஒரு தமிழ் முஸ்லிம் பெண் துணிச்சலாக எழுத வந்தது ஆச்சரியகரமானது. சித்தி ஜுனைதா பேகம் 1917ஆம் ஆண்டு ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தில் நாகூரில் பிறந்தவர். தந்தை ஷரீப் பெய்க் ஒரு பன்மொழி அறிஞராகவும், மேடைப் பேச்சாளராகவும் அறியப்பட்டவர். </span></div><div style="text-align: justify;"><span><br /></span></div><div style="text-align: justify;"><span>நாகூருக்கு ஒரு நிகழ்ச்சிக்காக வருகை தந்த அறிஞர் சி.என். அண்ணாதுரையின் முன்னிலையில் தைப்பொங் கலைக் குறித்து கவிதை மொழியில் பேசி அவரின் பாராட்டைப் பெற்றிருக்கிறார். மற்றொரு சகோதரரான முஜீன் பெய்க் ஒரு பத்திரிகை ஆசிரியர். காரைக்காலிலிருந்து ‘பால்யன்’ என்றொரு இதழைப் பதிப்பித்து பல்லாண்டுகள் நடத்தியிருக்கிறார். இவ்வாறு ஒரு இலக்கியப் பின்புலத்துடன் சித்தி ஜுனைதா பேகம் இயங்கி வந்ததையும், முனவ்வர் பெய்க் அவர் எழுதுவதற்கு உந்துதலாக இருந்தவர் என்பதையும் கவிஞர் நாகூர் ரூமியின் மூலமாக நாம் அறிகிறோம். ரூமிக்கு ஜுனைதா பேகம் உறவு முறையில் பெரியம்மா. ஆச்சிமா என்று அவரை ரூமி அன்புடன் விளிக்கிறார்.</span></div><div style="text-align: justify;"><span> ‘கன்னித் தமிழுக்கு இனிமை சேர்த்த</span></div><div style="text-align: justify;"><span> கவிஞர்களைத் தந்த நாகூராம்....’</span></div><div style="text-align: justify;"><span><br /></span></div><div style="text-align: justify;"><span>என்கிற வரிகளுள்ள காயல்பட்டினம் ஷேக்முகம்மது பாடிய இனிமையான பாடலைக் கேட்டிருக்கிறேன். நாகூருக்கு அப்படிப்பட்ட தனிச் சிறப்பு உண்டு. இஸ்லாம் சமூகத்தின் எண்ணற்ற புலவர்களையும் அறிஞர்களையும் வளர்த்தெடுத்த பூமி அது. நாகூரில் அடக்கம் பெற்றுள்ள சாகுல்ஹமீது வலியுல்லா நபிமுகம்மதுவின் வம்சாவழியைச் சேர்ந்தவர், மெய்ஞானச் சிறப்புள்ளவர் என்பது யாவரும் அறிந்த செய்தி. சாகுல்ஹமீது ஆண்டகையின் பிறந்தநாளை முன்னிட்டு நாகூரில் ஆண்டுதோறும் நடைபெறும் கலாச்சாரத் திருவிழாவில் உலகெங்கிலுமுள்ள இஸ்லாமியர்கள் மட்டுமல்லாமல் பிற சமயத்தினரும் கலந்து கொண்டு சிறப்பிக்கின்றனர். நவீனத் தமிழ் இலக்கியச் சூழலில் சிறுகதைத் தளத்தில் இயங்கி வரும் மற்றொரு எழுத்தாளரான ஆபிதீன் நாகூரைச் சேர்ந்தவர். தமிழில் நன்கறியப்பட்ட எழுத்தாளர் சாருநிவேதிதாவின் பூர்வீகமும் நாகூர்தான். இவற்றைச் சித்தி ஜுனைதாவின் பிறப்பிடம் குறித்த கூடுதல் தகவல்களாகக் கொள்ளலாம்.</span></div><div style="text-align: justify;"><span><br /></span></div><div style="text-align: justify;"><span>ஜுனைதா பேகத்தின் கல்வி குறித்து நாம் அவதானிக்கையில் அதிர்ச்சியும் ஆச்சரியமும் கொள்ள வேண்டியுள்ளது. மற்றெல்லா இஸ்லாமியப் பெண்களையும் போலவே ஜுனைதாவும் மூன்றாம் வகுப்புவரை மட்டுமே கல்வி பெற அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அந்தக் காலத்தில் மூன்றாம் வகுப்புவரை ஒரு பெண்ணுக்கு கல்வியறிவு கிடைத்தால் போதுமானது என்று சமூகம் தீர்மானித்திருக்கிறது. எட்டு வயதுக்குமேல் ஒரு பெண் கல்விச்சாலைக்குச் செல்வது தடுக்கப்பட்டதற்கான பின்னணியை நாம் உளவியல் ரீதியாக அணுகினால், பெண்ணின் ஒழுக்கம் சார்ந்து பெற்றோர் கொள்ளும் அச்சமும், திருமணம் முடிந்து கணவனைப் பராமரிக்கப் போகின்ற பெண்ணுக்குக் கல்வி அவசியமில்லை என்கிற பிற்போக்கு எண்ணமுமே காரணமாக இருக்கமுடியும். இத்தனைக்கும் ஜுனைதாவின் தகப்பனார் கல்வியின் முக்கியத்துவத்தை நன்குணர்ந்தவர்.</span></div><div style="text-align: justify;"><span><br /></span></div><div style="text-align: justify;"><span> மூன்றாம் வகுப்பு என்னும் ஆகக்குறைந்த கல்வித் தகுதியுடன் மட்டுமே 1930களில் ஒரு முஸ்லீம் பெண் புதினங்களும் கட்டுரைகளும் எழுதி, குறிப்பிடத்தக்க ஆளுமையாக உருவெடுத்ததற்குப் ‘பரம்பரை வித்து’ தான் காரணம். காலகாலமாகத் தொடர்ந்து ஊறிக் கொண்டிருந்த இலக்கிய மற்றும் ஆன்மீக வித்து அது என்கிறார் நாகூர் ரூமி. மேலும் பாவினங்களில் வண்ணம் அதிகமாகப் பாடிக் குவித்த வண்ணக்களஞ்சியப் புலவரின் பரம்பரை என்று தன்னை ஜுனைதா பேகம் கருதியதும் காரணமாக இருக்கலாம்.</span></div><div style="text-align: justify;"><span><br /></span></div><div style="text-align: justify;"><span> வாழ்ந்த காலத்தில் சமூகத்தால் புதுமைப் பெண்ணாகக் கருதப்பட்ட அவருக்குப் பால்ய விவாகம்தான் வாய்த்திருக்கிறது. பன்னிரண்டு வயதில் பகீர்மாலிமார் என்பவருடன் திருமணம் நடந்திருக்கிறது. ஆனால் பகீர் அவர் கற்பனை செய்து வைத்திருந்த மாதிரியான கணவரல்ல என்று தனது அதிருப்தியையும் அவர் வெளிப்படுத்தியதாகவே அறிகிறோம். பன்னிரண்டு வயதில் திருமணம் நடைபெற்று, நான்கு பெண் குழந்தைகளைப் பெற்று, பதினாறு வயதில் விதவைப் பட்டம் சுமந்த வாழ்வு சித்தி ஜுனைதா பேகத்தினுடையது.</span></div><div style="text-align: justify;"><span><br /></span></div><div style="text-align: justify;"><span> இன்றைக்குப் பெண்ணின் திருமண வயது 21 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 21 வயதை அடையும்போதுதான் ஒரு பெண் மன, உடல்ரீதியான வளர்ச்சியும் கர்ப்பத்தைத் தாங்குகின்ற சக்தியும் பெறுகிறாள் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். 1930களில் மட்டுமல்ல 21ஆம் நூற்றாண்டு தொடங்கிய பின்னும் இஸ்லாமியப் பெண்ணின் திருமண வயது 18க்கும் கீழேயே இருக்கிறது. அவள் பூப்பெய்திய நாளிலிருந்தே மாப்பிள்ளை தேடும் படலம் தொடங்கி, பதினாறே வயதிற்குள் முதல் குழந்தையைப் பெற்று முப்பது வயதுக்குள் பாட்டியாகி முதுமையை இளமையில் வரவேற்கும் அவலம் சபிக்கப்பட்டிருக்கிறது. அவளுடைய அறைக்குள் வெளிக்காற்று நுழைவதற்கான சாத்தியதைகளே இல்லை. உள்ளேறும் பத்திரிகைகள் எல்லாமும் இஸ்லாமிய அறநெறிக் கோட்பாடுகளை வலியுறுத்துவனவே. சிறுபத்திரிகைகள், நவீன இலக்கியம், மாற்றுசினிமா இத்யாதிகளை அவளறியாள்.</span></div><div style="text-align: justify;"><span><br /></span></div><div style="text-align: justify;"><span> முக்கால் நூற்றாண்டுக்கு முன்னால் சித்தி ஜுனைதா பேகம் தன் பிள்ளைகள் உயர்கல்வி (11ஆவது வகுப்பு வரை) பெறுவதற்காக நாகூரிலிருந்து நாகப்பட்டினத்திற்கு இடம் பெயர்கிறார். தனக்குக் கிடைக்காத கல்வியை, தன் பெண் பிள்ளைகள் பெற வேண்டுமென அவர் தீர்மானித்ததை முஸ்லீம் சமூகம் பின்பற்றியிருப்பின், மூடுண்ட சமூகம் என்னும் விமர்சனத்தை எளிதாகத் தவிர்த்திருக்க முடியும்.</span></div><div style="text-align: justify;"><span><br /></span></div><div style="text-align: justify;"><span> சித்தி ஜுனைதா பேகம் தனது கணவர் இறந்த பிறகு தீவிரமாக எழுதத் தொடங்கியிருக்கிறார். கணவனில்லாத வேதனையையும், தனிமையையும் அவர் தனது எழுத்தால் நிராகரித்தார் அல்லது கடந்து சென்றார் என்றும் கொள்ளலாம். பதினாறு வயதில் ஒருத்தி கைம்பெண்ணானது நினைத்துப் பார்க்கவும் கொடுமையான விஷயம். இதை சித்தி அடைந்திருக்கிறார். ஆனால் விதவையென வீட்டினொரு மூலைக்குள் முடங்காது துணிச்சலாக எழுத்துலகில் பிரவேசித்ததுதான் அவரை அக்காலப் பெண்களில் தனித்து மாறுபடுத்திக் காட்டுகிறது.</span></div><div style="text-align: justify;"><span><br /></span></div><div style="text-align: justify;"><span> ஜுனைதா பேகத்திற்கு அந்தக் காலத்திலேயே டைரி எழுதுகின்ற பழக்கம் இருந்திருக்கிறது. இன்றைக்கு யோசித்தாலும் எத்தனை இஸ்லாமியப் பெண்கள் டைரி எழுதும் பழக்கமுள்ளவர்களாக இருக்கிறார்கள். விரல்விட்டு எண்ணிவிட முடியும். டைரியில் தனது மனதைத் தினந்தோறும் பதிவு செய்பவர்கள் இந்தச் சமூகத்துடன் ஏதோ ஒரு விதத்தில் மனந்திறந்து உரையாடத் தயாராக இருக்கிறார்கள் என்பது உளவியல் பகுப்பாய்வு. ஜுனைதா, தான் சமூகத்துடன் பேச விரும்பியதை டைரிக் குறிப்புகளாகவும் கட்டுரை, புதினங்களாகவும் எழுதி வைத்தார். அவர் எழுதத் தொடங்கியதும் எடுத்த எடுப்பில் நாவலுக்குத் தாவிவிட்டதும் ஒரு பேராச்சரியந்தான்.</span></div><div style="text-align: justify;"><span><br /></span></div><div style="text-align: justify;"><span> இலக்கிய வடிவங்களில் நாவல் மிக முக்கியமானது. கவிதைகளும், கதைகளும் தராத வாழ்க்கையின் பக்கங்களை நாவல் தந்து நிற்கிறது. மையக் கதையும் அதன் விரிவும், அங்கிருந்து பிரிகின்ற கிளைக் கதைகளும் குவியலான கதாமாந்தர்களும், தத்துவ தரிசனமும் ஒற்றைத் தன்மையற்ற பன்முகத்தின் பிரதிபலிப்பும் நாவலை சாதாரணத் தன்மையிலிருந்து அசாதாரணத்திற்கு நகர்த்துகிறது. பேரனுபவத்தைத் தருகிற பேரிலக்கிய வடிவம் நாவல். ஆனால் ஜுனைதா பேகம் நாவல் வடிவத்தைக் கையாண்டிருக்கிற விதத்தில் நமக்குச் சில மாற்று அபிப்பிராயங்கள் இருக்கிறது. எனினும் விவாதிக்கும் அளவு அதில் பிரச்சனைகள் இல்லை. 1930களில் தமிழில் நாவல் வடிவம் வளர்ச்சியடைந்திருக்கவில்லை தான். அதே கால கட்டத்தில் ஆங்கில மொழிப் பரிச்சயமுள்ள தமிழ் இலக்கிய ஆர்வலர்களில் சிலர் ஒன்றுகூடி, ஆங்கில இலக்கியங்களைத் தீவிர வாசிப்பிற்குள்ளாக்கி தமிழ்ச் சிறுகதையில் வடிவப் பரீட்சார்த்தம் செய்து பார்க்கின்றனர். குறிப்பாகப் பி.எஸ்.இராமைய்யா பொறுப்பேற்று நடத்திய மணிக்கொடி இதழில் இது நிகழ்கிறது. மணிக்கொடியின் சிறுகதையாளர்கள் எவரும் நாவல் எழுதுவதில் அப்போதைக்கு ஆர்வம் காட்டவில்லை. நிலைமை இவ்வாறிருக்க, வெளியுலகத் தொடர்புகளற்று வீட்டிலிருந்தவாறே ஆர்வ மேலீட்டால் எழுதத் தொடங்கிய ஜுனைதா பேகம் இந்த அளவிற்கு இயங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.</span></div><div style="text-align: justify;"><span><br /></span></div><div style="text-align: justify;"><span><span class="Apple-tab-span" style="white-space:pre"> </span>‘‘நான் என் எழுத்துலக நுழைவிற்கு </span></div><div style="text-align: justify;"><span><span class="Apple-tab-span" style="white-space:pre"> </span>எனக்கு முன் மாதிரியாக</span></div><div style="text-align: justify;"><span><span class="Apple-tab-span" style="white-space:pre"> </span>யாரையும் பின்பற்றவில்லை. எனது </span></div><div style="text-align: justify;"><span><span class="Apple-tab-span" style="white-space:pre"> </span>சிறுகதை, நவீனம் </span></div><div style="text-align: justify;"><span><span class="Apple-tab-span" style="white-space:pre"> </span>எல்லாம் இயல்பாக எனக்கமைந்த சொந்த </span></div><div style="text-align: justify;"><span><span class="Apple-tab-span" style="white-space:pre"> </span>நடை என்றே</span></div><div style="text-align: justify;"><span><span class="Apple-tab-span" style="white-space:pre"> </span>நினைக்கிறேன். நான் முதன் முதலில் <span class="Apple-tab-span" style="white-space:pre"> </span>எழுதிய நெடுங்கதை காதலா? கடமையா? </span></div><div style="text-align: justify;"><span><span class="Apple-tab-span" style="white-space:pre"> </span>என்பது. இந்த நவீனத்தை நான் </span></div><div style="text-align: justify;"><span><span class="Apple-tab-span" style="white-space:pre"> </span>எழுத எந்தக் காரணமும் எனக்கில்லை. <span class="Apple-tab-span" style="white-space:pre"> </span>நான் எழுத வேண்டும் என்ற எனது <span class="Apple-tab-span" style="white-space:pre"> </span>சொந்த அவாதான்’’</span></div><div style="text-align: justify;"><span>என்பதாக 1999இல் வெளிவந்த ‘முஸ்லிம் முரசு பொன்விழா மலருக்கு’ அவரளித்த நேர்காணலில் குறிப்பிடுவதிலிருந்து அவர் தன் எழுத்துக்கு எவரையும் ஆதர்சமாகக் கொள்ளவில்லை என்பதும் புலனாகிறது.</span></div><div style="text-align: justify;"><span> சித்தி ஜுனைதா பேகம் தான் எழுதிய நாவலை நெடுங்கதை என்றே குறிப்பிடுகிறார். ஆயினும் தமிழில் நாவல் எழுதிய முதல் முஸ்லீம் பெண் என்னும் சிறப்பு அவரை இயல்பாகவே வந்தடைகிறது. மட்டுமல்ல; நாவல் எழுதிய முதல் தமிழ்ப் பெண்கள் இருவரில் ஒருவராக அவர் இருக்கக்கூடும். மற்றொருவர் ‘தாஸிகளின் மோசவலை அல்லது மதிபெற்ற மைனர்’ என்னும் நாவலை எழுதிய மூவலூர் இராமாமிருதம் அம்மாள்.</span></div><div style="text-align: justify;"><span>‘‘பெரியோர் தம் உயர்ந்த நூல்கள் </span></div><div style="text-align: justify;"><span>சிலவற்றை யான்<span class="Apple-tab-span" style="white-space:pre"> </span>படித்தபொழுது உரைநடையில் </span></div><div style="text-align: justify;"><span>ஒரு சிறு புதுக்கதை எழுத வேண்டும் என்னும் </span></div><div style="text-align: justify;"><span>விருப்பம் என்னை வெகுநாளாகத் தூண்டியது. யான் பத்திரிகைகட்குக் கட்டுரைகள் அடிக்கடி வரைந்து அனுப்பியதைக் கண்ட </span></div><div style="text-align: justify;"><span>என் பெற்றோர், உறவினர், என் சினேகிதிகள் அனைவருமே அங்ஙனமே யான் ஒரு புத்தகம் எழுதவேண்டும் என்று பெரிதும் விரும்பினர். அன்னார்தம் விருப்பத்தையும் எமது விழைவையும் நிறைவேற்றுவான் வேண்டி இச்சிறு புத்தகத்தை வெளியிடுகிறேன்’’ என்று ஜுனைதா எழுதுவதிலிருந்தும், மேலும் ‘‘நச்சுடை நாகங்கள் சிலவற்றைத் தன் குடிகளாய்க் கொண்ட இவ்வூரின் சிலர்தம் தூற்றுதலுக்கு அஞ்சிப் பத்திரிகைகளுக்குப் பெயர்போடாது கட்டுரைகள் அனுப்புமாறு என்னைத் தூண்டியவரும்...’’ என்று எழுதும் போதும் அவர் எழுத நேர்ந்த பின்னணியும் எழுதியதால் ஊரார் வெளிப்படுத்திய எதிர்ப்பும், அது போன்ற எதிர்ப்புகளைத் தொடர்ந்து பெயர் போடாது எழுதி வந்ததும் தெரியவருகிறது. </span></div><div style="text-align: justify;"><span><br /></span></div><div style="text-align: justify;"><span>‘‘நாவல் வெளிவந்த பிறகு கூட்டம் கூட்டமாக வெள்ளைத் துப்பட்டி அணிந்த பெண்கள் தெருப் பள்ளித் தெரு வீட்டுக்கு வந்து ஆச்சிமாவைப் பார்க்க வந்தார்களாம். சும்மா அல்ல; ஒரு கெட்டுப் போன நல்ல குடும்பத்துப் பெண்ணை விசாரிக்க வருவது போல’’</span></div><div style="text-align: justify;"><span><br /></span></div><div style="text-align: justify;"><span>இந்தத் தகவலை என்னிடம் ஆச்சிமாவே நேரடிப் பேச்சில் இதே வார்த்தைகளில் சொன்னது. அம்மாவும் இதை உறுதிப்படுத்தினார்கள். ஒரு முஸ்லிம் பெண்! நாவல் எழுதுவதா? அதுவும் ‘காதல்’ என்ற சொல்லுடன்! எவ்வளவு நெஞ்சழுத்தம் வேண்டும்?’’ என்று நாகூர் ரூமி விவரிப்பதிலிருந்து ஜுனைதா பேகம் தன் எழுத்துக்காக எதிர்கொண்ட இன்னல்களை மேலும் அவதானிக்கலாம். </span></div><div style="text-align: justify;"><span>‘‘இந்த எனது சிறு நவீனத்திற்கு ‘தாருல் இஸ்லாம்Õ ஆசிரியரும், நபிகள் நாயக மாண்பினை எழுதிய பெரியாருமான பா. தாவுத்ஷா சாகிபு அவர்களிடம் ஒரு மதிப்புரை கேட்டோம். ‘இது ஒரு பெரிய திறமையா? இதற்கு ஒரு மதிப்புரை தேவையா?’ என்று ஏளனமாகப் பேசியதாக என் சகோதரர் உசேன் முனவ்வர் பே சொல்லி வருத்தப்பட்டார். பின்னர் மகாமகோபாத்யாய தக்ஷிணாய கலாநிதி டாக்டர் உ..வே. சாமிநாதையர் அவர்கள் என்னை ஏத்திப் போற்றி ஒரு மதிப்புரை வழங்கினார்கள்’’.</span></div><div style="text-align: justify;"><span><br /></span></div><div style="text-align: justify;"><span>தனது சமூகத்தைச் சார்ந்த அறிவுலக வாதிகளாலேயே அவர் புறக்கணிப்பிற்கும் ஏளனத்துக்கும் உள்ளானதை மேற்கண்ட நிகழ்விலிருந்து தெரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் எந்த இதழாசிரியரால் மதிப்புரை தராமல் மறுக்கப்பட்டாரோ அதே தாருல் இஸ்லாம் இதழில் 1995இல் ‘முஸ்லிம் பெண்களும் விவாக விலக்கும்‘ என்றொரு கட்டுரையை சித்தி ஜுனைதா பேகம் எழுதியுள்ளார். இதன் மூலமாகக் காலமாறுதலையும் படைப்பாளியின் போராட்டக் குணத்தையும் வெகுவாகப் புரிந்து கொள்ளலாம்.</span></div><div style="text-align: justify;"><span><br /></span></div><div style="text-align: justify;"><span>‘‘சமீப காலத்தில் நாகூர் சித்தி ஜுனைதா பேகம் என்ற பெண்மணி எழுதிய காதலா? கடமையா? என்ற தலைப்புடன் கூடிய அபிநவ கதையை நான் பார்த்தபோது எனக்கு மிக்க மகிழ்ச்சியும் வியப்பும் உண்டாயின. மகம்மதியர்களுள்ளும் தமிழ் நூல்களைப் பயின்றுள்ள பெண்மக்கள் இருக்கிறார்கள் என்பதை இப்புத்தகம் நன்கு விளக்குகிறது. இதன் நடை யாவரும் படித்தறிந்து மகிழும்படி அமைந்திருக்கிறது. கதைப் போக்கும் நன்றாக உள்ளது. இடையிடையே பழைய நூல்களிலிருந்து மேற்கோள்கள் கொடுத்திருப்பது இந்நூலை எழுதியவருக்குத் தமிழ் இலக்கிய நூல்களில் நல்ல பயிற்சியுண்டென்பதைக் காட்டுகின்றது....’’</span></div><div style="text-align: justify;"><span><br /></span></div><div style="text-align: justify;"><span>இது டாக்டர் உ.வே.சா. 1938இல் சித்தி ஜுனைதா பேகத்தின் நாவலுக்கு எழுதிய முன்னுரையின் ஒரு பகுதி. ஊர் ஊராகச் சுற்றியலைந்து, ஓலைச்சுவடிகளைச் சேகரித்து எண்ணற்ற தமிழ் இலக்கியங்களைப் பதிப்பித்த உ.வே.சா.வின் முன்னுரையைப் பெற்றதும் அவரால் ஆசீர்வதிக்கப்பட்டதும் ஜுனைதா பேகத்தின் எழுத்து வாழ்க்கைக்குக் கிடைத்த பெரும் அங்கீகாரம். மட்டுமல்ல; தமிழ்ச்சிறுகதையின் ஒரு குறியீடாக மாறிவிட்ட புதுமைப்பித்தன் ‘‘முஸ்லீம் பெண்டிர் எழுத முன்வருவதை நாம் வரவேற்கிறோம்’’ என்று ஜுனைதா பேகத்தின் நாவல் குறித்து அபிப்ராயம் தெரிவித்திருப்பதும் கருத்தில் கொள்ளத்தக்கது.</span></div><div style="text-align: justify;"><span><br /></span></div><div style="text-align: justify;"><span> என் வாழ்வின் குறிக்கோளே எழுதுவதும் படிப்பதும்தான் என்று குறிப்பிடும் ஜுனைதா பேகத்திற்குப் பழந்தமிழ் இலக்கியங்களில் வளமான பயிற்சி இருந்திருக்கிறது. திருக்குறள், நாலடியார் நளவெண்பா, மணிமேகலை, சிலப்பதிகாரம், மாணிக்கவாசகர், திருமூலர், பாரதி பாடல்கள் வரை அவர் ஊன்றிக் கற்றிருப்பதற்கான வெளிப்பாடுகள் உள்ளன. இதுவரைக்குமான இஸ்லாமியப் பெண்கள் எவருக்கும் இம்மாதிரியான சுதந்திரம் கிடைத்திருப்பதாகத் தெரியவில்லை. ஏனெனில் அவர்களைப் பொறுத்தவரைக்கும் இலக்கிய நூல்கள் யாவும் தீண்டத்தகாத பிரதிகளே. “இடமும் இருப்பும் ஒரு மனிதனின் குணாம்சத்தைத் தீர்மானிக்கின்றது’’ என்று முன்பு எங்கோ ஒரு கட்டுரையில் நான் குறிப்பிட்டிருப்பேன். சித்தி ஜுனைதா பேகத்தின் சூழல் அவருக்குப் பலவிதங்களில் துணை புரிந்திருக்கிறது. பிறந்து வளர்ந்த ஊரும், பெற்றோரும், வாசிப்பிற்கான சுதந்திரமும் ஜுனைதாவைப் படைப்பாளியாக மலர்த்தியிருக்கிறது. இது அத்தனை எளிதாக எவருக்கும் வாய்த்துவிடாது.</span></div><div style="text-align: justify;"><span><br /></span></div><div style="text-align: justify;"><span> ‘காதலா? கடமையா?’வை வாசித்துப் பார்க்கையில் எல்லோரும் குறிப்பிடுவதுபோல, நாடோடி மன்னன் தமிழ்த் திரைப்படத்திற்கும் இந்த நாவலுக்கும் கதைப்போக்கில் உள்ள ஒற்றுமையைக் கிரஹித்துக் கொள்ள முடிகிறது. இதுவும் சித்தி ஜுனைதா பேகம் என்கிற படைப்பாளுமையின் வெற்றிகரமான பக்கம்தான். “படம் ஓடினால் நான் மன்னன், இல்லையேல் நாடோடி’’ என்று படத்தின் கதாநாயகன் அந்தத் திரைப்படத்தைப் பற்றி கருத்துரைத்ததாகச் சொல்வார் உண்டு. பெரும் வெற்றிபெற்ற ஒரு திரைப்படம் _ அதுவே அந்த திரைக் கலைஞர் அரசியலில் தனித்து இயங்குவதற்கான அடித்தளம் அமைத்துத் தந்தது என்றெல்லாம் கூட அப்போது பரபரப்பாகப் பேசப்பட்டது. காதலா? கடமையா? நாவலில், மன்னன் நிறைவேற்றும் மக்கள் நலத்திட்டங்கள் அப்படியே திரைப்படத்தில் எடுத்தாளப்பட்டிருப்பதும், திரைக்கதைக்கும் நாவலுக்குமான ஒற்றுமை அம்சங்கள் வெளிப்படையாகத் தெரிவதும் நம்முடைய நம்பகத் தன்மையை அதிகரிப்பனவாக உள்ளன. பிறகு ஏன் சித்தி ஜுனைதா பேகம் இதற்கு உரிமை கோரவில்லை என்று யோசிக்கையில், ஒரு பெண்ணாக இருந்து அந்தக் காலகட்டத்தில் எதிர்கொள்ள வேண்டிய சங்கடங்கள் பிரச்சனைகள் என்று நாம் இதைப் புரிந்து கொள்ளலாம். மேலும் அந்தத் திரைப்படத்திற்கு வசனம் எழுதியவர்களுள் ஒருவரான காஜாமைதீன் என்கிற இரவீந்தர் நாகூரைச் சேர்ந்தவர் என்பதும் ஜுனைதாபேகம் இது விஷயத்தில் மௌனம் காத்ததற்கான காரணம் என்றும் யூகிக்கமுடிகிறது. அல்லது சித்தியின் கவனத்திற்கு இது செல்லவில்லையோ என்பதும் விளங்கிக் கொள்ள முடியாத ஒரு புதிராக நீடிக்கிறது.</span></div><div style="text-align: justify;"><span><br /></span></div><div style="text-align: justify;"><span> ‘சித்தி ஜுனைதா பேகம் _ பன்னூலாசிரியை’ என்று தனது வீட்டின் முகப்பில் பெயர்ப்பலகை மாட்டி வைத்துக்கொண்டு இயங்கியிருப்பவரை இன்றைக்கு நினைத்தாலும் ஆச்சரியங்கொள்ள முடிகிறது. கருத்துக்களை முன்வைப்பதில் அவருக்கு எவ்வித மனத்தடையும் இருந்ததாகத் தெரியவில்லை. 1935களில் தந்தை பெரியார் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை முடுக்கிவிட்ட காலகட்டத்தில் சித்தி தாம் எழுதிய காதலா? கடமையா? நாவலில், “தமிழுக்கோர் தாயகமாய் விளங்கும் என் தாய் நாட்டை மீட்பதற்காக உடல் பொருள் ஆவியைத் தத்தஞ் செய்து பெரியாரைப் பின்பற்றுவேன்’’ என்று எழுதியிருப்பது இவரது தமிழினப் பற்றைக் காட்டுகிறது _ என்று கம்பம் சாகுல் அமீது என்பார் ‘இஸ்லாமிய முதல் புரட்சிப் பெண் படைப்பாளி’ என்கிற தனது கட்டுரையில் குறிப்பிடுகிறார்.</span></div><div style="text-align: justify;"><span><br /></span></div><div style="text-align: justify;"><span> இன்றைக்கு மத அடிப்படைவாதிகளால் புறக்கணிக்கப்படும் தர்கா நேர்ச்சைகளைப் பற்றிச் சித்தி ஜுனைதா பேகம் ‘‘நாகூர் கந்தூரி இதோ கதவைத் தட்டுகிறது பக்தி, நம்பிக்கை, வேடிக்கை இது மாதிரி பல்வேறு காரணங்களுக்காக நாகூரைத் தேடிக் கூட்டங் கூட்டமாக மக்கள் இதோ வரமுயன்று கொண்டிருக்கின்றார்கள். ஊரே கோலாகலமாகத் திருவிழாக் கோலம் பூணுகின்றது.’’ என்று மகிழ்ச்சி பொங்கக் குறிப்பிடுகிறார். மற்றொரு இடத்தில் ‘‘இஸ்லாத்தில் தெளிவாய் வற்புறுத்திப் பெண் கல்வி அனுமதிக்கப்பட்டிருப்பினும் முஸ்லிம் பெண்கள் கல்வியில் மிகவும் பிற்போக் கடைந்திருக்கவும், மற்றைப் பெண்கள் கல்வியில் சிறந்து விளங்கவும் காரணம் என்ன? தந்நலப் பேய் பிடித்த பலர் பொருள் தெரியாது குர்ஆன் ஓதிவிடுதலே அறிவையளிக்குமெனப் பல ஆண்டுகளாய்க் கூறி, இஸ்லாமியப் பெண்களை ஏமாற்றி அவர்களை விலங்குகட்குச் சமமாய் ஆக்கி வைத்திருப்பதே காரணமென்றால் மிகையாமோ?’’ என்று கேட்கிறார். அவர் தனது கட்டுரைகளில் வெளிப்படுத்தியுள்ள புரட்சிகரக் கருத்துகளில் சிலவற்றையேனும் இந்த இடத்தில் குறிப்பிட்டாக வேண்டியுள்ள கட்டாயம் உள்ளது என்றே நான் கருதுகிறேன்.</span></div><div style="text-align: justify;"><span><br /></span></div><div style="text-align: justify;"><span>பெண்கள் தமக்குப் பிடித்தவரையே மணஞ் செய்து கொள்ள இஸ்லாம் அனுமதியளிக்கின்றது. ஒத்த நலனும், ஒத்த குணமும், ஒத்த பண்பும் அமையாத இருவரை ஆடுமாடுகளைப் பிணைப்பதைப் போல் பிணைத்து விடுவதை வன்மையாகக் கண்டிக்கிறது.</span></div><div style="text-align: justify;"><span><br /></span></div><div style="text-align: justify;"><span>இஸ்லாமியப் பெண் தன் கணவனின் பெயரோடு தன்னை இணைத்துக் கொள்ளத் தேவையில்லை. ஜபீரா, ஷேக் பரீதை மணந்து கொண்டால் ஜபீராதான். அவள் மிஸஸ். ஷேக் பரீதாக மாறிவிடுவதில்லை. ஒரு முஸ்லிம் பெண் தன்னில் தானே ஒளி வீசுகின்றாள். அவள் பெயருக்கு அவளே உரிமை பெற்றவள்.</span></div><div style="text-align: justify;"><span>-<span class="Apple-tab-span" style="white-space:pre"> </span>இஸ்லாம் பலதார மணத்தை ஆதரிக்கின்றது எனக் கூறி உலகை ஏமாற்றப் புகுவது அறியாமை. ஒருவன் ஒருத்தியுடன் வாழ்வதே அறம். பல பெண்களை ஒருவன் மணக்கலாம் என்னும் கட்டுக்கள் நீக்கப்படல் நியாயம்.</span></div><div style="text-align: justify;"><span>-<span class="Apple-tab-span" style="white-space:pre"> </span>இஸ்லாமியப் பெண்கள் பொம்மைகளல்ல.</span></div><div style="text-align: justify;"><span><br /></span></div><div style="text-align: justify;"><span>-<span class="Apple-tab-span" style="white-space:pre"> </span>பெண்கள் சினிமா பார்த்தால் ஆகுமா என்றால் ஆகும் என்றுதான் நான் கூறுவேன். ஆணுக்கு ஒரு நீதியும் பெண்ணுக்கு ஒரு நீதியுமன்று. ஆணுக்கு ஆகும் என்றால் பெண்ணுக்கு ஆகும் என்பதுதான் என் கருத்து.</span></div><div style="text-align: justify;"><span>தமிழகத்து முஸ்லீம் பெண்களுக்கு ஒரு முன்மாதிரியே போல, எழுதியும் பேசியும் வாழ்ந்தும் காட்டிய சித்தி ஜுனைதா பேகம் தனது 82ஆவது வயதில் 19.3.1998 அன்று மரணமடைந்தார். மரிப்பதற்கு முன்பு வரை அவர் எழுதிக்கொண்டும், வாசித்துக்கொண்டும் இருந்தார் என்றறிகிறோம். இலக்கியப் பணியில் அவர் ஒருபோதும் சலிப்புற்றதில்லை என்றே </span></div><div style="text-align: justify;"><span>அவரைக் குறித்து எழுதியுள்ள பலரும் குறிப்பிட்டுள்ளனர். </span></div><div style="text-align: justify;"><span><br /></span></div><div style="text-align: justify;"><span> பெண் கல்வி, பெண் விடுதலை என்றெல்லாம் நினைத்துப் பார்க்க முடியாத ஒரு காலகட்டத்தில், இஸ்லாமிய சமூகத்தில் பிறந்த சித்தி ஜுனைதா பேகம் ஒரு எதிர்க்குரலாக வரலாற்றில் பதிவாகியுள்ளார். ஆனால் அவரைக் குறித்த இலக்கியப் பதிவுகள் சொற்பமே. நாகூர் ரூமியின் முயற்சியில் காதலா? கடமையா? நூல் வெளிவந்தது ஒரு முக்கியப்பணி. எனினும் சித்தி ஜுனைதாவின் பிற எழுத்துக்கள் பதிவாகியதாகத் தெரியவில்லை. அதற்கான அவசியமும் தேவையும் உள்ளது என்றே நம்புகிறோம். </span></div><div style="text-align: justify;"><span><br /></span></div><div style="text-align: justify;"><span>நானறிந்தவரை அ. வெண்ணிலா ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். ஆபிதீனின் வலைப்பதிவில் ஜுனைதா இடம் பெற்றிருக்கிறார். தமிழ் இலக்கியச் சூழலில் இனியேனும் அவரைக் குறித்த உரையாடல்களைத் துவக்கலாம். மேதைமைகள் எல்லாக் காலங்களிலும் தோன்றிவிடுவதில்லை. அதற்காக நாம் காத்திருக்க வேண்டியிருக்கிறது. இஸ்லாமியப் பெண்கள் தீவிர இலக்கியத்திற்கு வர வேண்டும். இலக்கியத்துள் அவர்கள் பிரவேசிக்கையில் அவர்களைச் சுற்றியுள்ள எல்லாத் தடைகளும் நீங்கிவிடும் என்றொரு நம்பிக்கை என்னுள் எப்போதும் நீடிக்கிறது. சித்தி ஜுனைதா பேகம் இஸ்லாமியப் பெண்கள் முன்மாதிரியாகக் கொள்ள வேண்டிய ஆளுமை என்று மீண்டுமொருமுறை அழுத்தம் கொடுக்கிறேன்.</span></div><div style="text-align: justify;"><span><br /></span></div><div style="text-align: justify;"><span>சித்தி ஜுனைதா பேகத்தின் பிற படைப்புகள்</span></div><div style="text-align: justify;"><span>1. <span class="Apple-tab-span" style="white-space:pre"> </span>செண்பகவல்லி தேவி (அ) தென்னாடு போந்த அப்பாஸிய குலத் தோன்றல் _வரலாற்று நாவல்.</span></div><div style="text-align: justify;"><span>2. <span class="Apple-tab-span" style="white-space:pre"> </span>மகிழம்பூ _ நாவல்</span></div><div style="text-align: justify;"><span>3. இஸ்லாமும் பெண்களும் _ கட்டுரைத் தொகுப்பு</span></div><div style="text-align: justify;"><span>4. <span class="Apple-tab-span" style="white-space:pre"> </span>மலை நாட்டு மன்னன் __ தொடர்கதை.</span></div><div style="text-align: justify;"><span>5. <span class="Apple-tab-span" style="white-space:pre"> </span>ஹலிமா (அ) கற்பின் மாண்பு</span></div><div style="text-align: justify;"><span>6. <span class="Apple-tab-span" style="white-space:pre"> </span>பெண் உள்ளம்</span></div><div style="text-align: justify;"><span>7. <span class="Apple-tab-span" style="white-space:pre"> </span>திருநாகூர் அண்ணலின் திவ்ய மாண்பு</span></div><div style="text-align: justify;"><span>8. <span class="Apple-tab-span" style="white-space:pre"> </span>காஜா ஹஸன் பசரீ: முஸ்லீம் பெருமக்கள் வரலாறு</span></div><div style="text-align: justify;"><span>துணைநூற்பட்டியல்</span></div><div style="text-align: justify;"><span>காதலா? கடமையா?, ஸ்நேகா, 2003</span></div><div style="text-align: justify;"><span><br /></span></div><div style="text-align: justify;"><span><br /></span></div><div style="text-align: justify;"><br /></div>கீரனூர் ஜாகிர்ராஜாhttp://www.blogger.com/profile/16821172975494211862noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-5325351298899765001.post-51271117378073578742012-01-09T01:44:00.000-08:002012-01-09T01:50:52.797-08:00உதயசங்கர்: ரயில்நிலையக் கலைஞன்<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjB8IOmJq5PGij2pWsgyfwLQnUgUw3G_w-1vcBlYAab7evjbzRs3i2SMR2ky69nVWEFMjpbYDun9rP_VH60xXv8DyR0AfWnfMkBA3qIU0LQPwp5FsWTz99baYJVmWk9vdvAwmngE8MUsJ8A/s1600/91923622-e780-47b6-9b4e-64147fb4c081.tif"><img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 312px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjB8IOmJq5PGij2pWsgyfwLQnUgUw3G_w-1vcBlYAab7evjbzRs3i2SMR2ky69nVWEFMjpbYDun9rP_VH60xXv8DyR0AfWnfMkBA3qIU0LQPwp5FsWTz99baYJVmWk9vdvAwmngE8MUsJ8A/s320/91923622-e780-47b6-9b4e-64147fb4c081.tif" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5695566948969120642" /></a><br /><div style="text-align: justify;"><i><br /></i></div><div style="text-align: justify;">உதயசங்கரின் எழுத்துக்கள் என்னுள் இறங்கிப் பல வருஷங்கள் கழித்துதான் அவரை நேரில் நான் சந்தித்தது. எப்போதும்போல பெரிய கோவில் புல்வெளியில்தான் அவருடைய பெயரை முதலில் கேட்டறிந்ததும். நண்பர்களிடையே சமகாலத் தமிழ்ச் சிறுகதைகளைக் குறித்த பேச்சு எழும்போது குறிப்பாகக் கரிசல் எழுத்துக்களைப் பற்றிய சம்பாஷனைகளில் கி.ராஜநாராயணன், கு.அழகிரிசாமி, பா.செயப்பிரகாசம், பூமணி,</div><div style="text-align: justify;"><span>ச.தமிழ்ச்செல்வன், கோணங்கி ஆகிய பெயர்களுடன் தவறாமல் இடம் பெறும் பெயராக உதயசங்கருமிருந்தது. </span></div><div style="text-align: justify;"><span>கோவில்பட்டி குறிப்பிடத்தக்க இலக்கிய மையமாக விளங்கியது, அப்போது நானறியாத செய்தி. தஞ்சாவூர்தான், தமிழுக்குப் பெரிய இலக்கிய பிதாமகர்களைத் தந்திருப்பதாக ஒரு பிரம்மை இருந்தது. கி.ரா.வையும், தமிழ்ச்செல்வனையும், கோணங்கியின் மதினிமார்கள் கதை, கொல்லனின் ஆறு பெண் மக்களையும் படித்த பிறகு கரிசல் இலக்கியத்தின் மேல் என் கவனம் திரும்பியது. எப்போதும் வெயில் கொளுத்தியபடி இருக்கும் கந்தக பூமியும், பிழைப்புக்கு தீப்பெட்டி ஆபீஸ்களை நம்பிய பெண்மணிகளும், குழந்தைகளும் வறட்சியும், வறுமையிலும் அன்பை ஒருவருக்கொருவர் நேர்ந்து பரிமாறிக் கொள்ளுகிற அழகும் அடடா... தமிழிலக்கியத்தின் இன்னொரு அசலான பக்கத்தை இதுவரை பார்க்கத் தவறியிருக்கிறோமே என்னும் பதைபதைப்பை என்னுள் ஏற்படுத்திய எழுத்து கரிசல் எழுத்து.</span></div><div style="text-align: justify;"><span> நுங்கும் நுரையுமாய்ப் பொங்கி, சுழித்துக் கொண்டோடிய காவிரிக்கரை எழுத்து கூதிர்காலக் காற்றின் சுகானுபவமென்றால், கரிசல் எழுத்துக்கு அதற்கு நேர்மாறான உறைப்பான, சுளீரென்று தவறுக்குத் தண்டனையாய்ப் பெறும் தீச்சூட்டின் தன்மை உண்டு. கரிசல் இலக்கியம் காட்டும் அழகியல் தமிழர்களின் யதார்த்த வாழ்க்கையுடன் ரத்தமும் சதையுமாகப் பின்னிப் பிணைந்தது. அதேபோன்று புதுமைப்பித்தனுக்கு நிகரான ஆளுமையாக </span></div><div style="text-align: justify;"><span>கு.அழகிரிசாமியை என் வாசிப்பனுபவத்தினூடாகக் கண்டதும் சற்றுப் பிறகுதான். வாழ்க்கை எல்லோருக்கும் ஒரே மாதிரியாகத் தரிசனம் தருவதில்லை. தந்தால் மாறுபட்ட ரசனைகளுக்கு வாய்ப்பில்லாமலே போய்விடும். அபூர்வமான அனுபவங்கள் எதுவும் ஆரம்பத்திலேயே நமக்கு வாய்ப்பதில்லை. அப்படி வாய்த்தால் அபூர்வம் என்று அதற்குப் பெயரில்லை.</span></div><div style="text-align: justify;"><span>உதயசங்கரை ஒரு ரயில் பயணத்தின்போதுதான் முதன் முதலாக சந்தித்தேன். பாரதி புத்தகாலயம் மேலாளர் தோழர் நாகராஜனுடன் நானும் 2010 திருவனந்தபுரம் புத்தகக் காட்சிக்குச் பயணமானபோது வழியில் கோவில்பட்டி சந்திப்பில் ஏறி எங்களுடன் உதயசங்கர் இணைந்து கொண்டார். அன்று முதல் அவர் என் சஹிருதயனாகிவிட்டார் என்றும் கூறலாம். உதயசங்கர் ‘ரயில் மனிதன்’ என்றொரு பிம்பம் என்னுள் இருந்தது. அதற்கான காரணங்களும்தான். ரயில்வேயில் வேலை செய்யும் அவர் தற்போது குமாரபுரம் ஸ்டேஷனில் பணியைத் தொடர்கிறார். மாமேதை கு. அழகிரிசாமியின் கதைக் களம் அது. ‘‘சின்ன ஸ்டேஷன். அங்கே ரயில்கள் நிற்காமல் கடந்து செல்ல, விசேஷமாய் ஏதோ ஒரு ரயில் மட்டும் நிற்கும்’’ குமாரபுரம் ரயில்வே ஸ்டேஷனைக் குறித்து இப்படி நிறையப் பேர் சொல்லக் கேட்டிருக்கிறேன். உதயசங்கரை நேரில் பார்த்தபிறகு ‘ரயில்வே அதிகாரிகளுக்கான கருப்புக் கோட்டு வெள்ளைச் சீருடையில்’ அவரைக் கற்பனை செய்து பார்த்தாலும் அவ்வளவாகப் பொருந்தவில்லை.</span></div><div style="text-align: justify;"><span> ஒடிசலான தேகமும், வெள்ளந்தியான சிரிப்புமாய் அவரைப் பார்க்கிற எவரும் ஒரு நெருக்கத்தை உணர்வர். கண்ணாடிக்குள்ளிருந்து தெறிக்காமல் அமுங்கிப் புன்னகைக்கும் சிவந்த வெளிச்சமான கண்கள். அந்தரங்கமாய் அவருடன் உரையாடக் கிடைத்த சில சந்தர்ப்பங்களில் (பாண்டிச்சேரி பிரெஞ்சு இன்ஸ்டிட்யூட் ஆப் இந்தியா நடத்திய வரலாறும் புனைவும் - மூன்று நாள் கருத்தரங்கில் நானும் அண்ணன் ச. தமிழ்ச் செல்வன், தோழர்கள் சு.வெங்கடேசன், பிரளயன், மணிமாறனுடன் உதயசங்கருடன் பேசிக் கழித்த சில இரவுகள்) அவருடைய அங்கதம் ததும்புகிற உரையாடல் கேட்டுக் களித்திருக்கிறேன். உண்மையில் மணிமாறனுடனும் உதயசங்கருடனும் ஒரு இருபத்தைந்து ஆண்டுகள் பழகிய நெருக்கத்தைக் கொஞ்சம் நாட்களில் உணர்ந்தேன். அது என்ன மாயமோ தெரியவில்லை. </span></div><div style="text-align: justify;"><span>இலக்கியத்தில் நான் அகரம் எழுதிப் பழகத் தொடங்கிய காலத்திலிருந்து உதயசங்கர் கதைகள் எழுதி வருகிறார். இலக்கிய உலகம் ஏன் இப்படி ஒரு நல்ல கலைஞனைக் கண்டு கொள்ளாமல் இருந்திருக்கிறது என்று நான் பல இரவுகள் சிந்தித்திருக்கிறேன். முப்பதாண்டு காலத்திற்கும் மேலாகத் தீவிரமாய் இயங்கி வந்திருக்கிற இந்த எழுத்தாளனின் வீட்டுக் கதவுகளை விருதுகள் தேடி வந்து தட்டியிருக்க வேண்டாமா? நாம் வாசித்தவரை ஒவ்வொரு கதையிலும் தேர்ந்த கலைப் படைப்பிற்கேயுரிய வடிவமைதியும், மொழியும் இயைந்திருக்கின்றதே? ஒரு முற்போக்கு அமைப்பிலிருந்து செயல்பட்டவாறு பிரச்சாரமும் பேருணர்ச்சியும் தவிர்த்த கதைகளைத்தானே இவர் முன்வைக்கிறார்? பிறகு ஏன் உதயசங்கரைக் கொண்டாடத் தயக்கம்? இப்படியான கேள்விகள் எனக்கு மட்டுமல்ல அவரை வாசிக்கிற ஒவ்வொருவருக்கும் வந்துதான் தீர வேண்டும். வராவிடில் அவருடைய இலக்கிய நேர்மை குறித்து நான் சந்தேகிப்பேன்.</span></div><div style="text-align: justify;"><span> உதயசங்கர் தன்னை முன்னிறுத்திக் கொள்ளாதவர். வரிசையில் நிற்கையில் முண்டியடித்துக் கொண்டு முன் செல்லும் வழக்கமில்லாதவர். எங்கும் எதிலும் ஒதுங்கியிருந்து வேடிக்கை பார்ப்பவர். இவை இன்றைய பரபரப்பான இலக்கியச் சூழலுக்குப் பொருந்தி வருமா, தெரியவில்லை. ஒரு முறை நான் நவீனத் தமிழ் எழுத்துக்களில் புதுமைப் பித்தனிலிருந்து இன்றைய தலைமுறை வரைக்குமுள்ளவர்கள் எழுதிய காதல் கதைகளைத் தொகுக்கிறேன் என்று அவரிடம் சொன்னேன். ‘‘நான் எழுதிய கதைகள்கூட இருக்கிறது ஜாகிர்’’ என்று அவர் எனக்குச் சொல்லவேயில்லை. நானாகத் தேடி ‘பால்ய சினேகிதி’ கதையைத் தொகுப்பில் சேர்த்துக் கொண்டேன். இன்னும் சொல்லப்போனால் அவருடைய கதை ஒன்றை நான் என்னுடைய ‘காஃபிர்களின் கதைகள்’ தொகுப்பிலேயே சேர்த்திருக்க வேண்டும். தவறிப்போனது.</span></div><div style="text-align: justify;"><span> அப்படி ஒரு தொகுப்பைச் செய்கிறேன் என்பதும் அவர் முன்பே அறிந்தது தான். இப்படிப்பட்டவர் ஒரு சந்திப்பில் ‘‘என்னுடைய தேர்ந்தெடுத்த கதைகள் சிலவற்றை பாரதி புத்தகாலயத்திற்காக தொகுத்துக் கொடுங்கள் ஜாகிர்’’ என்று கேட்டபோது, லேசான தயக்கத்துடன் சம்மதித்தேன். அந்தத் தயக்கத்துக்கும் அவர் படைப்பின் மீதான என் அபிப்ராயத்துக்கும் துளியளவும் சம்பந்தம் கிடையாது. அவருடைய படைப்புலகில் மீண்டும் பிரவேசிக்க இதை ஒரு வாய்ப்பாகத்தான் பயன்படுத்திக் கொண்டேன். அவருடைய நாற்பத்தெட்டுக் கதைகளிலிருந்து இருபத்திரண்டு கதைகளை என் ரசனை அடிப்படையில் தேர்வு செய்தேன். ‘‘குமாரபுரம் ரயில்வே ஸ்டேஷனில் ஓரிரவு’’ என்கிற பொருத்தமான தலைப்பைத் தீர்மானம் செய்துகொண்டு முன்னுரையாக என்ன எழுதலாம் என யோசித்தபோது தவறியும் அதில் அவருடைய கதைகளைப் பற்றி அதிகம் சொல்லிவிடக்கூடாது என்று முடிவெடுத்தேன். இப்படி ஒரு முன்னுரை எழுத வாய்த்தது. கதை வரிசையையும் முன் பின்னாக மாற்றிக் கலைத்துப் போட்டு அடுக்கியிருக்கிறேன். </span></div><div style="text-align: justify;"><span> இந்த 22 கதைகளில் எது ஒன்றையும் வாசகன் புறக்கணித்து விட முடியாது. ‘நான் தேர்ந்தெடுத்தவையாக்கும்’ என்கிற அழுத்தம் தந்து இதைச் சொல்லவில்லை. உதயசங்கர் கதைகளின் இயல்பும் அதுதான். புறக்கணிக்க முடியாத எழுத்து. கரிசல் இலக்கியத்துக்கேயுரிய சில கதைகளுடன் இன்றைக்கு எழுதிவரும் தீவிரமான படைப்பாளிகளைக் கடந்து செல்லும் நவீன அம்சம் சரிவரப் பொருந்திய கதைகளுமாக இத்தொகுப்பு உருவாகியிருக்கிறது. </span></div><div style="text-align: justify;"><span> உதயசங்கர் கதைகள் வெவ்வேறு தளங்களில் இயங்குகின்றன. ஒட்டுமொத்தமாய்ப் பார்க்கையில் மனித வாழ்க்கையின் பல்வேறு கூறுகளை குணாம்சங்களை எள்ளலுடன் விமர்சிக்கின்றன. கலையின் உன்னதமறிந்த டேனியல் பெரிய நாயகம் கடைசியில் மகனிடம் ‘இதெல்லாம் நமக்கு வேண்டாம்‘ என்று புத்திமதி சொல்கிறார். இப்படித்தான் நிறைய அப்பாமார்கள் இருந்திருக்கிறார்கள். மகன்களும் தலையசைத்துக் கலை மீதான காதலை உதறித் தள்ளியிருக்கின்றனர். இது தான் யதார்த்தம் என்கிறது பொதுப்புத்தி. இதை மீறி வந்தவர்கள் கலைஞர்களாகியிருக்கின்றனர். இதுவும்கூட யதார்த்தமில்லையா?</span></div><div style="text-align: justify;"><span> சக மனிதனிடம் கொள்ளும் அவநம்பிக்கையை மட்டுமே வேறொரு கதையில் உள்ளடக்கமாய் வைக்கிறார் உதயசங்கர். குடும்ப அமைப்பின் வன்முறைகளை அங்கதத்துடனும், பொட்டிலறைந்தாற்போன்றும் பல பாணிகளில் எழுதிப் பார்த்திருக்கிறார். இளம் பருவத்தின் ரம்மியங்கள், அபிலாஷைகள் இவரது படைப்புகளில் அதே த்வனியுடன் பதிவாகத் தவறவில்லை. </span></div><div style="text-align: justify;"><span>வெயில், மறதியின் புதைசேறு, சோமையாவின் பாட்டு போன்ற கதைகள் அவருடைய படைப்பெழுச்சியின் உன்னத விளைச்சல் என்றே கூறலாம். உதயசங்கர் கதைகளில் பெயிண்டர் பிள்ளை, ஆவுடையப்ப பிள்ளை என்று நிறையப் பிள்ளைமார்கள் வருகிறார்கள். அவர்களின் கதாபாத்திரச் சித்தரிப்பும் அபாரமாக இருக்கிறது. இந்த இடத்தில் நான் ஜாதி குறித்துப் பேசவரவில்லை. உதயசங்கரும் அப்படிப்பட்டவரில்லை. தான் சார்ந்திருக்கும் அல்லது அவ்வாறு கருதப்படும் சமூகத்தை உள்வாங்கிக் கொண்டு படைப்பில் வெளிப்படுத்துவது பாவமும் இல்லை. இன்னும் சொல்லப்போனால் ஒரு படைப்பாளியின் கடமை இதுவாகவே இருக்க முடியும். எந்த வாழ்க்கைப் பின்னணியிலிருந்து ஒருவனுக்கு இயங்க வாய்த்திருக்கிறதோ அந்த வாழ்க்கையைப் படைப்புகளில் பிரதிபலிப்பது அவனுடைய சமூகத்தைக் குறித்த விமர்சனங்களை அவன் செய்வதாகவே பொருள் கொள்ள முடியும். புதுமைப்பித்தன், தி.ஜானகிராமன், தோப்பில் முஹம்மது மீரான் இன்னும் பலரும் இதையே செய்தனர்.</span></div><div style="text-align: justify;"><span>குறுநாவல்கள் எழுதியிருக்கின்ற உதயசங்கரை நாவல் எழுதச் சொல்லி அவரை சந்திக்கின்ற நேரங்களிலெல்லாம் வற்புறுத்துகிறேன். அவருடைய உத்தியோகம் சார்ந்த ரயில்வே துறையின் பின்னணியில் ஒரு நாவலை எழுதிவிட வேண்டுமெனும் முனைப்பிலிருப்பதாகவும் விரைவில் அது நிறைவேறும் என்றும் என்னிடம் உறுதி கூறியிருக்கிறார். பார்ப்போம். ‘குமாரபுரம் ரயில்வே ஸ்டேஷனில் ஓரிரவு’ கதையை அவர் விரித்திருந்தால் முக்கியமான நாவலாக அது மாறியிருக்கும். அதே போன்று, ‘ஒரு விளக்கும் இரண்டு கண்களும்’ கதைக்கும் ஒரு சர்வதேசியத் தன்மை உண்டு. அக்கதையின் ஓரிடத்தில் கீழ்க்கண்ட விவரணையை அவர் எழுதியிருப்பார்.</span></div><div style="text-align: justify;"><span> ‘‘1947-ம் ஆண்டில் சர்சிரில் ராட்கிளிஃப் இந்திய பாகிஸ்தான் எல்லைக்கோடுகளைக் கிழித்துக் கொண்டிருந்தார். இந்தியாவைப் பற்றி எதுவுமே தெரியாத இந்த பருத்த ஆங்கிலேய வழக்கறிஞர், தான் வரையும் கோடு இந்திய நிலப்பரப்பில் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் என்று உணர முடியாதவராக இருந்தார். அவரது பென்சில் கூறுபோட்டது நிலப்பரப்பை மட்டுமல்ல என்பதை மிகமிகத் தாமதமாகவே தெரிந்து கொண்டார். அப்போது யாராலும் எதுவும் செய்ய முடியவில்லை’’</span></div><div style="text-align: justify;"><span> இந்த வரிகளைப் படித்தபோது என்னையுமறியாமல் மனம் கலங்கிப் போனது. சதத்ஹஸன் மன்ட்டோவின் கதைகளில் வெளிப்படும் தேசப் பிரிவினையின் துயரார்ந்த அதே வெளிப்பாடாக இதை நான் உணர்ந்தேன். இப்படியெல்லாம் எழுத உதயசங்கரைவிட்டால் தமிழில் ஆள் கிடையாது. தேசப்பிரிவினை நடந்து முடிந்து அறுபது ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. இன்றைக்கும் அது தரும் வலியும் ரணமும் நம்மைப் பற்றித் தொடர்கிறது. மிக எளிதாக, வெற்றிலைக் காம்பைக் கிள்ளி எறிவதுபோல நடந்தது, இரண்டு தேசிய இனத்தின் பிரதான பிரச்சனையாக உருவெடுத்து இன்றைக்கும் வேதாளம்போல் நின்று நம் மக்களின் நிம்மதியைக் குலைக்கிறது. எல்லோரும் மறந்துவிட்ட விஷயத்தை எழுதிப் பார்க்க இப்படி ஒருவர் இருக்கத்தான் செய்வார்.</span></div><div style="text-align: justify;"><span> உதயசங்கரைக் குறித்துச் சொல்ல இன்னும் நிறைய இருக்கிறது. ஆனால் சம்பிரதாயமான முன்னுரையை அந்தச் சம்பிரதாயத்துக்குள்ளிருந்து எவ்வாறு விடுவிப்பது என்பதே எனது நோக்கமாக இருந்து ஓரளவு தப்பித்தும் இருக்கிறேன் என்று மனம் சமாதானம் கொள்கிறது. உதயசங்கர் என்னும் என் முன்னோடிக் கலைஞனை, நண்பனை, காலம் தான் கௌரவிக்க வேண்டும் என்று மட்டும் சொல்லி இப்போதைக்கு முடிக்கிறேன்.</span></div><div style="text-align: right;"><span><i>-கீரனூர் ஜாகிர்ராஜா</i> </span></div>கீரனூர் ஜாகிர்ராஜாhttp://www.blogger.com/profile/16821172975494211862noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-5325351298899765001.post-81863640478024395642011-12-13T20:54:00.000-08:002011-12-13T20:58:18.900-08:00எழுத்தாளர் இரா.நடராசன் நூல்கள் வெளியீட்டு விழா -கடலூர்<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEimkAr0Ml7FCLpU0bMIh1ZbV0Jw4EX_A-0z2KA09aZ1PyWuJFpacZiA4h80DjzhghZqxoOkwWAmqw2_ekXxJ46M_5gy5rqIvJzqPVDd7-m2bBVFioD1DEzK6LYfS3DglFqqsrlvmEjt-q7e/s1600/Principal+Naval.jpg" onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}"><span class="Apple-style-span" ><img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 224px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEimkAr0Ml7FCLpU0bMIh1ZbV0Jw4EX_A-0z2KA09aZ1PyWuJFpacZiA4h80DjzhghZqxoOkwWAmqw2_ekXxJ46M_5gy5rqIvJzqPVDd7-m2bBVFioD1DEzK6LYfS3DglFqqsrlvmEjt-q7e/s320/Principal+Naval.jpg" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5685843396557907010" /></span></a>கீரனூர் ஜாகிர்ராஜாhttp://www.blogger.com/profile/16821172975494211862noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5325351298899765001.post-77118490653805775782011-11-28T03:51:00.000-08:002011-11-28T22:54:55.940-08:00விளிம்பு நிலை இஸ்லாமிய வாழ்வுலகம் கீரனூர் ஜாகிர்ராஜா நாவல் கருத்தரங்கம் -பாஸ்கரன்<div style="text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi6082mmf1SagnfZ73Sap8eskPuAfocRkkNlOvATKr2arUGc3egy7xCLOQjrWcokgBG5x74H3qT0smvXni6HavOaRxVa-OuqlGPFgbSeG939fBo0hten6deCJKMLOn8a_J-T13CchaUykU/s1600/IMG_0008.JPG" style="text-align: left; " onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi6082mmf1SagnfZ73Sap8eskPuAfocRkkNlOvATKr2arUGc3egy7xCLOQjrWcokgBG5x74H3qT0smvXni6HavOaRxVa-OuqlGPFgbSeG939fBo0hten6deCJKMLOn8a_J-T13CchaUykU/s320/IMG_0008.JPG" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5680016466873607762" /></a></div><br /><p class="MsoNormal"><span lang="TA" style="font-family: Latha; ">எழுத்தாளர் கீரனூர் ஜாகிர்ராஜா எழுதியுள்ள ஐந்து நாவல்களில் மூன்று நாவல்களை மையமிட்டு நெல்லை மாவட்ட தமுஎகச </span>7.11.11<span lang="TA" style="font-family: Latha; "> அன்று திருநெல்வேலியில் மூன்று அமர்வுகள் கொண்ட கருத்தரங்கம் ஒன்றை நடத்தியது. கரிசல் கிருஷ்ணசாமியின் இசையோடு நிகழ்வு தொடங்கியது. தமுஎகச நெல்லை மாவட்டச் செயலாளர் பாஸ்கரன் தனது வரவேற்புரையில்</span>, “<span lang="TA" style="font-family: Latha; ">மிகச்சிறந்த நாவல்களின் பட்டியலை எவ்வளவு சுருக்கினாலும் அதில் ஜாகிர்ராஜா நாவல்கள் இடம்பெறும். வடக்கேமுறி அலிமா பல இரவுகளைக் கடந்து வானில் மின்னும் நட்சத்திரமாக ஒளிர்கிறது. இவருடைய வெம்மை</span>, <span lang="TA" style="font-family: Latha; ">பௌர்ணமிக் கிணறு உள்ளிட்ட சிறுகதைகளும் வாசிப்பின் பேரனுபவத்தை நமக்கு உணர்த்துகிறது. ஒவ்வொரு நகரத்தை நோக்கியும் இவருடைய படைப்புகளைக் குறித்த உரையாடலை நகர்த்த வேண்டும்</span>” <span lang="TA" style="font-family: Latha; ">என்றார்.</span></p><p class="MsoNormal"><span lang="TA" style="font-family: Latha; "><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh-CLTPjmKntP4aG0fO2nkfFeywADzFe2ElgpaxHtDV6BQnmCZuoBHm7ed4SxTGnDoTU1sDST36bafjDKwCBAFeyfTagT3XGQxkEXenOwBac0AKwKLZlSpezOdocXkDTklTNzg6-rRuMNo/s1600/IMG_0001.JPG" style="font-family: Georgia, serif; " onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}"><img src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh-CLTPjmKntP4aG0fO2nkfFeywADzFe2ElgpaxHtDV6BQnmCZuoBHm7ed4SxTGnDoTU1sDST36bafjDKwCBAFeyfTagT3XGQxkEXenOwBac0AKwKLZlSpezOdocXkDTklTNzg6-rRuMNo/s320/IMG_0001.JPG" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5680015317850111410" style="display: block; margin-top: 0px; margin-right: auto; margin-bottom: 10px; margin-left: auto; text-align: center; cursor: pointer; width: 320px; height: 240px; " /></a></span></p><div><br /></div><p class="MsoNormal"><span lang="TA" style="font-family: Latha; "> துவக்க உரை நிகழ</span>¢<span lang="TA" style="font-family: Latha; ">த்திய எழுத்தாளர் ச. தமிழ்ச்செல்வன் ஜாகிர்ராஜா படைப்புகள் முன் வைக்கும் அரசியல் குறித்து விரிவாகப் பேசினார். </span>“<span lang="TA" style="font-family: Latha; ">விளிம்பு நிலை இஸ்லாமிய மக்களைக் குறித்த பதிவுகள் குறைவான தமிழ்ச் சூழலில் ஜாகிரின் படைப்புகள் அந்த வெற்றிடத்தை நிரப்புவதுடன் மிகுந்த கலா நேர்த்தியோடு வாசகனை வந்தடைகிறது. இஸ்லாமியர்களுடன் பழகியுள்ளபோதும் அவர்களின் மூடுண்ட வாழ்க்கை குறித்து அதிகம் உணராமலே இருந்திருக்கிறோம் என்னும் குற்ற உணர்வை இவரின் படைப்புகள் ஏற்படுத்துகின்றன. எழுத்தின் வாயிலாக இவர் முன் வைக்கும் அரசியல் முக்கியமானது.விளிம்பு நிலை இஸ்லாமிய வாழ்வை இவரைப்போல வேறு எவரும் துணிச்சலாகப் பதிவு செய்ததில்லை</span>” <span lang="TA" style="font-family: Latha; ">என்று ச.த. குறிப்பிட்டார்.</span></p><p class="MsoNormal"><span lang="TA" style="font-family: Latha; "><br /></span></p><p class="MsoNormal"><span lang="TA" style="font-family: Latha; "><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgNizEpB04v8KdaMAmYDwwRteC062925BE6iAZSvc3-umOWD6wqqYCsNqDtntde3KxLKNLVkNmrjRz6ROhSTzyskx49T6MCpwmFWtHq1m2B39oRE8n4FaeGVbBMBiifT4CqzM_5M6p5GY0/s1600/IMG_0005.JPG" style="font-family: Georgia, serif; " onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}"><img src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgNizEpB04v8KdaMAmYDwwRteC062925BE6iAZSvc3-umOWD6wqqYCsNqDtntde3KxLKNLVkNmrjRz6ROhSTzyskx49T6MCpwmFWtHq1m2B39oRE8n4FaeGVbBMBiifT4CqzM_5M6p5GY0/s320/IMG_0005.JPG" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5680015567865498914" style="display: block; margin-top: 0px; margin-right: auto; margin-bottom: 10px; margin-left: auto; text-align: center; cursor: pointer; width: 320px; height: 240px; " /></a></span></p><div><br /></div> <p class="MsoNormal"><span lang="TA" style="font-family:Latha;mso-bidi-language: TA"> மீன்காரத் தெரு முதல் அமர்வுக்கு கவிஞர் கிருஷி தலைமை வகித்துப் பேசுகையில் </span>2006<span lang="TA" style="font-family:Latha;mso-bidi-language:TA"> தமுஎகச நாவல் போட்டிக்குத் தான் நடுவராக இருந்து மீன்காரத் தெரு நாவலை பரிசுக்குத் தேர்ந்தெடுத்ததை நினைவுகூர்ந்தார். ஜாகிர்ராஜா எழுத்துகளில் வெளிப்படும் லாஹிரி வாசகனுக்கு உவப்பானது என்றும் அவர் கூறினார். சாகித்திய அகாடமி விருதுபெற்ற மூத்த எழுத்தாளர் தோப்பில் முஹம்மது மீரான் தனது சிறப்புரையில் </span>“<span lang="TA" style="font-family:Latha;mso-bidi-language:TA">ஜாகிர்ராஜாவின் ஐந்து நாவல்களையும் வாசித்தவன் என்கிற முறையில் சொல்கிறேன் யாருக்கும் எளிதில் வசப்படாத நதியின் வெள்ளமெனப் பிரவாஹிக்கும் அபூர்வமான மொழி நடை அவருக்கு வாய்த்திருக்கிறது. நான் இறைநம்பிக்கை உள்ளவன் என்பதால்</span>, <span lang="TA" style="font-family:Latha;mso-bidi-language:TA">இது இறைவன் அவருக்கு அளித்த வரம் என்றே கருதுகிறேன். நானே பொறாமைப்படும்படியான படைப்புகளை அவர் தமிழுக்கு வழங்கியிருக்கிறார். மீன்காரத் தெருவை வாசித்தால் நாவல் நெடுக மீன் கவுச்சி அடித்துக் கொண்டேயிருக்கிறது இதுதான் அவர் எழுத்தின் பலம். நான் எழுதும்போது பல நேரங்களில் வார்த்தைகள் கிடைக்காமல் அவற்றின் பின்னே ஓடியிருக்கிறேன். ஆனால் ஜாகிர்ராஜாவை துரத்திக்கொண்டு வார்த்தைகள் ஓடி வருவதை நான் அனேக இடங்களில் பார்த்து வியக்கிறேன்</span>” <span lang="TA" style="font-family: Latha;mso-bidi-language:TA">என்று மனம் திறந்து பேசினார். </span></p> <p class="MsoNormal"><span lang="TA" style="font-family:Latha;mso-bidi-language: TA">வடக்கேமுறி அலிமா இரண்டாம் அமர்வுக்குத் தலைமைதாங்கிய செந்தில்</span>, <span lang="TA" style="font-family:Latha;mso-bidi-language:TA">ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வைப் பிரதிபலிக்கிற உலக இலக்கிய வரிசையில் ஜாகிர்ராஜாவின் படைப்புகள் நிற்பதாகக் குறிப்பிட்டார். சிறப்புரையாற்றிய இலக்கிய விமர்சகர் ம. மண</span>¤<span lang="TA" style="font-family:Latha;mso-bidi-language:TA">மாறன் </span>“<span lang="TA" style="font-family: Latha;mso-bidi-language:TA">ஜாகிரின் மற்றெல்லா நாவல்களை விடவும் அலிமா மிகவும் மாறுபட்ட நாவல். </span>2000-<span lang="TA" style="font-family:Latha;mso-bidi-language: TA">க்குப் பிறகு வெளிவந்த தமிழ் நாவல்களில் வடக்கேமுறி அலிமாவுக்குத் தனிச்சிறப்பான இடம் உண்டு. நாவலின் வடிவமும்</span>, <span lang="TA" style="font-family:Latha;mso-bidi-language:TA">போக்கும்</span>, <span lang="TA" style="font-family:Latha;mso-bidi-language:TA">மொழி நடையும் இதுவரைக்குமான தமிழ் நாவல்களின் கட்டமைப்பைத் தகர்த்தெறிந்துள்ளது</span>” <span lang="TA" style="font-family:Latha;mso-bidi-language:TA">என்று குறிப்பிட்டார்.</span></p><p class="MsoNormal"><span lang="TA" style="font-family:Latha;mso-bidi-language:TA"><br /></span></p><p class="MsoNormal"><span lang="TA" style="font-family:Latha;mso-bidi-language:TA"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjRsHhID76bwv3R5T5PvPfiy_4UJUG-BD1YK_NzT0dwdUGEFW2kCSZcJHtVa2_WoJRzswsUe6f2x6vCpNFNpQ0m_KlG8q5XHYE6mgIQlSt6OW-6mRiWLxBZiYjlDLxSYr3N7sF3tu4qJCI/s1600/IMG_0006.JPG" style="font-family: Georgia, serif; " onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}"><img src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjRsHhID76bwv3R5T5PvPfiy_4UJUG-BD1YK_NzT0dwdUGEFW2kCSZcJHtVa2_WoJRzswsUe6f2x6vCpNFNpQ0m_KlG8q5XHYE6mgIQlSt6OW-6mRiWLxBZiYjlDLxSYr3N7sF3tu4qJCI/s320/IMG_0006.JPG" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5680015969952801362" style="display: block; margin-top: 0px; margin-right: auto; margin-bottom: 10px; margin-left: auto; text-align: center; cursor: pointer; width: 320px; height: 240px; " /></a></span></p><div><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgaa6Hfi1Mqh7f1PL24AnKq-Snrte6v3eKP2F0hrQSI64ugsMgVldNemacaWHBxYoTw4HqKPNtjIvipGwbBP0wzMMpBhCEgNrCPMQyHh3naxD15udWRRFv2GINBMWXAdHZsAl7vp7ex0T4/s1600/IMG_0007.JPG" onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}"><img src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgaa6Hfi1Mqh7f1PL24AnKq-Snrte6v3eKP2F0hrQSI64ugsMgVldNemacaWHBxYoTw4HqKPNtjIvipGwbBP0wzMMpBhCEgNrCPMQyHh3naxD15udWRRFv2GINBMWXAdHZsAl7vp7ex0T4/s320/IMG_0007.JPG" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5680016228996861314" style="display: block; margin-top: 0px; margin-right: auto; margin-bottom: 10px; margin-left: auto; text-align: center; cursor: pointer; width: 320px; height: 240px; " /></a></div><div><br /></div> <p class="MsoNormal"><span lang="TA" style="font-family:Latha;mso-bidi-language: TA"> மீன்குகை வாசிகள் அமர்வுக்குப் பேராசிரியர் கோமதிநாயகம் தலைமை வகிக்க எழுத்தாளர் நாறும்பூநாதன் சிறப்புரையாற்றினார். நாறும்பூ தனது உரையில் </span>“<span lang="TA" style="font-family:Latha;mso-bidi-language:TA">மனித உறவுகளை மிக விரிவாகப் பேசும் படைப்புகள் ஜாகிர்ராஜாவுடையது. மீன்குகை வாசிகளில் ஷேக்கா தாத்தாவிற்கும் ஆஜாத் என்கிற பேரனுக்கும் நடக்கின்ற உரையாடல் காவியத்தன்மை கொண்டது. மனித விழுமியங்களின் உயர்ந்த தளத்தில் நின்று கதாபாத்திரங்களை அணுகும் தன்மை இவருடையது. இந்நாவலில் இடம் பெறும் பெண்கள் மிக முக்கியமானவர்கள். இவர்களைக் கூர்ந்து அவதானிக்கும் கடமை நமக்கு இருக்கிறது. இந்த நாவலின் தொடர்ச்சியை நான் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்</span>” <span lang="TA" style="font-family:Latha; mso-bidi-language:TA">என்றார். </span></p><p class="MsoNormal"><span lang="TA" style="font-family:Latha; mso-bidi-language:TA"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjsnlq2RtUgxDK5Tri-kHECiE8JpCbI9l6Zlf1IdZSaqWts-rP75p4uBtIN0CWYG0YJRkEKtGEcqcaf8XcbYrjZnROl7KmBP9tMs-Lirm-4YkJFgqDYwwWecRVu9LTtQhjv1RZ1SBi0TwI/s1600/IMG_0011.JPG" style="font-family: Georgia, serif; " onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}"><img src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjsnlq2RtUgxDK5Tri-kHECiE8JpCbI9l6Zlf1IdZSaqWts-rP75p4uBtIN0CWYG0YJRkEKtGEcqcaf8XcbYrjZnROl7KmBP9tMs-Lirm-4YkJFgqDYwwWecRVu9LTtQhjv1RZ1SBi0TwI/s320/IMG_0011.JPG" border="0" alt="" id="BLOGGER_PHOTO_ID_5680017062141346610" style="display: block; margin-top: 0px; margin-right: auto; margin-bottom: 10px; margin-left: auto; text-align: center; cursor: pointer; width: 320px; height: 179px; " /></a></span></p><div><br /></div> <p class="MsoNormal"><span lang="TA" style="font-family:Latha;mso-bidi-language: TA"> நெல்லை சந்திப்பு கிளைச் செயலாளர் சண்முகம் நன்றி கூறினார். எழுத்தாளர்கள் முஜிபுர் ரகுமான்</span>, </p> <p class="MsoNormal"><span lang="TA" style="font-family:Latha;mso-bidi-language: TA">எஸ். அர்ஷியா</span>, <span lang="TA" style="font-family:Latha;mso-bidi-language: TA">ஓவியர் வள்ளி</span>, <span lang="TA" style="font-family:Latha;mso-bidi-language: TA">முனைவர் கண்ணா. கருப்பையா</span>, <span lang="TA" style="font-family:Latha; mso-bidi-language:TA">சண்முகசுந்தரம்</span>, <span lang="TA" style="font-family: Latha;mso-bidi-language:TA">ஆய்வு மாணவ மாணவியர்</span>, <span lang="TA" style="font-family:Latha;mso-bidi-language:TA">வாசகர்கள் மற்றும் பல தமுஎகச தோழர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வு மௌனமான உரையாடலின் வழியே நிறைவடைந்தது.</span></p>கீரனூர் ஜாகிர்ராஜாhttp://www.blogger.com/profile/16821172975494211862noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-5325351298899765001.post-50332307447827439922011-10-19T21:38:00.000-07:002011-10-21T04:16:14.470-07:00கேட்டுக்கொண்டேயிருக்கும் யாசகக் குரலும் ரத்தப் பெருக்கோடு அலையும் அவளின் துயரமும்... தேய்பிறை இரவுகளின் கதைகளை முன் வைத்து...<div style="text-align: justify;"><div style="text-align: justify;">ம. மணிமாறன்</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">வாழ்க்கை ‘அ’வில் துவங்கி ‘ஃ’ல் முடியாத போது வாழ்க்கையைச் சொல்கிற கதைகளின் மீதான வாசிப்பு மட்டும் எப்படி ஒரே நேர்கோட்டில் நிகழ சாத்தியம். கதைகள்-நாவல்கள்-கதைகள் என்று அமைந்திருக்கும் கீரனூர் ஜாகிர்ராஜா வின் படைப்புலகிற்குள் என்னைப் போலவே பலரும் நாவல்கள் - சிறுகதைகள் என்றே பயணித்திருப்பார்கள். மீன்காரத் தெருவின் வழியாகத்தான் வாசகர்களில் பலர் ஜாகிரின் கதைப் பரப்பிற்குள் பிரவேசித்திருப்பார்கள். நானும் கூட அப்படித்தான்.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">மீன்காரத் தெருவிற்கு முந்தைய ஜாகிர்ராஜாவின் சிறுகதைகள், அதற்குப் பிறகான கதைகள் என யாவற்றையும் தொகுத்து பாரதி புத்தகாலயம் ‘தேய்பிறை இரவுகளின் கதைகள்’ - என வெளியிட்டிருக் கிறது. தமிழில் இன்று வரையிலும் எட்கர் ஆலன்போவையும், ஓஹென்றியையும், மாப்பசானையும் எழுத்தாளர்கள் எழுதிக்கொண்டுதான் இருக்கிறார்கள். வேறு எந்த இலக்கிய வகைமையை விடவும் தமிழ்ச் சிறுகதை வளர்ந்து ஒரு செவ்வியல் தன்மையை அடைந்திருப்பதை எவரும் மறுக்க முடியாது.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">கதை அது தோன்றிய நாளில் இருந்து விதி விலக்குகளையும், மீறல்களையும் நிகழ்த்திடும் கலைஞர்களைக் கண்டடைந்தே வளர்ந்து கொண்டு இருக்கிறது. மௌனி, ந.பிச்சமூர்த்தி, கோணங்கி, சுரேஷ்குமார இந்திரஜித், ரமேஷ்-பிரேம் என அந்தப் பட்டியல் நீண்டு செல்லும் தன்மையிலானது. அந்த வரிசையில் ஜாகிருக்கும் இடமுண்டு என்பதை அவரின் தேய்பிறை இரவுகளின் கதைகள் நமக்கு உணர்த்துகின்றன</div><div style="text-align: justify;">.</div><div style="text-align: justify;">பித்தனும், கு.ப.ரா.வும் ஜாகிருக்குள் குழைந்து வெளிப்படுவதை அவரின் கதைகளுக்குள் கரைகிற எவராலும் அறிய முடியும். தொகுப்பிற்குள் உறைந்திருக்கும் 39 கதைகளும் மூன்று வேறு வேறான புள்ளிகளில் துவங்கி விதவிதமாக விரிவு கொள்கிறது. தமிழ் சினிமாவிற்குள் இயங்கிடத் தவித்தலைகிற யுவன்களின் பெருநகரத்துக் குறிப்புகள் ஒரு புள்ளி. ஜாகிரின் படைப்புலகின் தனித்த அடையாளமாக இன்று நிலைபெற்றுள்ள மத அடிப்படைவாதத்தின் மீது எழுப்பப்படும் கேள்விகள் மற்றொரு புள்ளி. இவ்விரண்டையும் தாண்டி இத்தொகுப்பிற்குள் என்னை ஈர்ப்பதாக இருந்தது; வாழ்க்கை முன் வைக்கும் சவால்களை அதன் போக்கிலேயே எதிர்கொள்ளும் கதைகள். இம் மூன்றாவது கதைகளுக்குள் ததும்பி நிற்கும் தஞ்சை நிலப்பரப்பும், கீரனூரும் வாழ்க்கையின் சகல முடிச்சுக்களையும் அவிழ்த்துப் பார்க்கிறது. </div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">வாசிப்பின் அரசியல் மிகத் தீவிரமாக விவாதிக்கப்பட வேண்டிய காலமிது. எல்லாவற்றையும் கச்சிதமாக சொல்லி முடித்திடும் கதைகளால் வாசகன் ஈர்க்கப்படுவதில்லை. வாசகன் தனக்கான இடத்தை கதைகளில் கண்டடைகிற போதுதான் அவனுடைய வாசிப்பு செயல்பாடு ஆழ்ந்த அர்த்தம் பெறுகிறது </div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;"><div style="text-align: justify;">இப்படியான வாசக இடைவெளிகளால் நிறைந்திருக் கிறது ஜாகிரின் கதைகள். ஒவ்வொரு கதையும் முடிந்த பிறகு வேறு ஒரு கதையாக வாசகனுக்குள் துவங்கி வளர்கிறது. ஒரு கதையை வாசித்து முடித்தவுடன் எவரும் அடுத்த கதைக்குள் நுழைந்திட முடியாது. வாசித்த கதைகள் முன் வைத்திடும் சவால்களை எதிர்கொண்டு தனக்குள் பதில் சொல்லிப் பார்த்தபிறகே அடுத்த கட்டத்திற்குள் நுழைவது சாத்தியம்.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">வெகுஜன சினிமாவின் மீது ஏற்றப்பட்டிருக்கும் வசீகரத்தில் தன்னைத் தொலைத்து கொத்துக் கொத்தான கதைகளைச் சுமந்தபடி பெருநகரை முற்றுகையிட்டு அலைந்து கொண்டிருக்கும் இளைஞர்களைப் பற்றியதே ‘பெருநகரக் குறிப்புகள்’. சினிமாக் கனவில் அன்பு, நட்பு என ஒன்றையும் மிச்சமில்லாது அழித்திடும் கொடுங்கனவின் துயரத்தை மிக நுட்பமாக பதிவு செய்த படைப்பிது. கேட்பதைத் தவிர வேறு எந்த மார்க்கமும் அற்றவர்களிடம் கதைகளின் சொற்கள் ஏற்படுத்திடும் பீதி இந்த நிமிடம் வரை என்னை வதைத்துக் கொண்டுதான் இருக்கிறது. கதை கேட்க யாரும் வாய்க்காத போது தனியே கதை சொல்லியபடிதான் அலைவார்கள். பெருநகரெங்கும் ஆயிரக் கணக்கான இளைஞர்கள் தன்னந்தனியே கதை சொல்லிக் கொண்டலைவதான கோட்டுச் சித்திரம்தான் பெருநகரக் குறிப்புகளாக வடிவம் பெற்றிருக்கிறது.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">கனவுகளைச் சுமந்தலையும் படைப்பாளியை வீடு எப்படி எதிர்கொள்ளும். அதிலும் இஸ்லாமானவன் சினிமா எடுக்கப் போகிறேன் என ஊரைவிட்டுக் கிளம்பினால் அவனை சுற்றத்தார் எந்த இடத்தில் வைத்து மதிப்பிடுவார்கள் என்பதை சொல்லிப்பார்த்த கதை ‘மழை’. மழைக்குள் கொட்டித் தீர்க்கும் அப்பாவின் கொடூரமான வார்த்தைகளை எப்படி எதிர் கொண்டானோ அந்தக் கலைஞன். வாசிக்கும் எவரையும் புரட்டிப் போடும் சி.ஏ.சர்புதீனின் கடிதம் நமக்குள் முகமறியாத அவரின் மகனுக்காக வருத்தம் மிகச் செய்கிறது.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">முதற்புள்ளியின் இரண்டு கதைகளை மட்டுமே பேசிப் பார்த்திருக்கிறேன். இன்னும் இத்தொகுப்பிற்குள் ‘நிழலின் சாயலுக்குள்’ படைப்பாளிக்குத் தன்னையே தந்தவள், சினிமாக் கனவில் எதையும் இழக்கத் தயாராகிற ‘பரகத் நிஷா’ ஓடிக் கொண்டேயிருக்கிற ஓராயிரம் இளைஞர்களின் ஒற்றைத் துளியான ‘சீனு, ஜீ ’ என கதைப் பக்கங்களில் சினிமாக் கனவைத் தொலைக்க முடியாமல் பலரும் அலைவுறுகிறார்கள்.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">பேஸ்ட் இல்லாமல் குத்திட்டு நிற்கும் பிரஸ், கலைந்து கிடக்கும் வசீகரமான அறைகள், உடலைப் புரட்டி எடுக்கும் பசி என வதைக்கும் மனநிலையிலும் அவர்களுக்குள் படைப்பு மனம் வற்றாமல் தான் இருக்கிறது. எனவே கொல்லும் பசியும் கூட பின்னணி இசையுடன் பசியின் வாதையைச் சொல்லும் குறும்படமாக அவனுக்குள் ரூபம் கொள்கிறது. பிரம்மாண்டமான மாபெரும் சினிமாவிற்குள் தன் இடத்தை அடைவதற்காக நண்பர்களை காவு கொள்ளத் துடிக்கும் குரூரமனநிலையும் தான் வாய்க்கிறது என்பதையும் ஜாகிர் மிக அழுத்தமாகப் பல கதைகளில் காட்சிப்படுத்தியிருக்கிறார்.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">‘வெம்மை’- இந்த தொகுப்பின் கனத்தை உறுதி செய்திடும் கதை. ‘இந்தியாவில் அதுவும் </div><div style="text-align: justify;">தஞ்சாவூரிலிந்து கொண்டு பிழைப்புக்காக வெளிநாடு செல்வதைத் தவிரவும் வேறென்ன பெரிதாகச் சாதித்திட முடியும்’. இந்த வரிகளை எளிதாக எவராலும் வாசித்துக் கடக்க முடியாது. தஞ்சை நெல்விளையும் சொர்க்கபூமி என்று நமக்குள் உருவாகியிருக்கும் பிரம்மையின் மீது தாக்குதலை நிகழ்த்துகிற வரிகள் இவை. தஞ்சை இஸ்லாமியர்கள் பிழைப்புக்காக வெளிநாடு செல்வதைத் தவிர வேறு எந்த வழியும் அற்றவர்கள் என்பதை ஏற்க மனம் தடுமாறத்தான் செய்கிறது.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">வளைகுடா நாடுகளுக்குச் சென்று உழைப்பை விற்றுப் பிழைப்பதைத் தவிர வேறு எந்த வழியுமில்லை இஸ்லாமிய இளைஞர்களுக்கு என்பதை ஜாகிரின் பலகதைகள் வெம்மையைப் போலவே மிக அழுத்த மாகப் பதிவு செய்திருக்கின்றன. நாட்குறிப்பிற்குள் தகித்துக் கிடக்கிறது வெம்மை. நாட்குறிப்புகளையும் கூட கலைத்துப் போட்டிருக்கிறார் ஜாகிர். கத்தியைப் போல மிகக் கூரான வார்த்தைகளால் கதையாடியிருக் கிறார் ஜாகிர். ‘வன்மம் முளைக்காத வரை பரிசுத்தம். அது தளைக்கத் தொடங்கினால் அவஸ்தை’. ‘வியாதிக்காரன் கையோடு வைத்திருக்கிற மருந்துப் பொதியைப் போல புத்தகங்கள்’ என வெம்மையில் துவங்கி வழி நெடுக 39 கதைகளுக்குள்ளும் வாழ்க்கையின் சிக்கல்களை விசாரித்துப் பார்க்கும் வரிகள் நிறைந்திருக்கிறது.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">உருவ வழிபாட்டை ஏற்பதில்லை என்கிற அசைக்க முடியாத நம்பிக்கை இஸ்லாமியர்களுக்கு உண்டு. ‘உருவம்’ எனும் கதைக்குள் இவற்றின் மீதான விசாரணையை நிகழ்த்திப் பார்க்கிறார். மௌலவி உருவ வழிபாடு கூடாது என்பதைக் கடுமையாக பின்பற்றச் சொல்கிறவர். பிரியமானவர்களின் புகைப்படங்களுக்குக் கூட வீட்டில் இடமில்லை. ஆனாலும் மௌலவிக்கு ப்பிரியமான அவரின் மனைவியின் புகைப்படத்தை எப்படியும் வைத்திருப்பார் என்பதைத் தேடியலைவதும், கண்டடைவதுமாக கடக்கிறது கதை. விதிகளை மீறி நிற்கும் யதார்த்தங்களை சொல்லிப் பார்க்கிறது கதை.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">‘சைத்தான் மீது எறிந்த கல்’- கதை புனித ஹஜ் பயணத்தின் மிக முக்கியமான சைத்தானின் மீது கல்லெறியும் சம்பவத்திற்குள் உறைந்திருக்கும் மனதையும், அவற்றின் மீதான கேள்விகளையும் எழுப்புகிறது.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">“பாவம் போலிருந்தது வட்ட வடிவிலான அந்தத் தொட்டி. சைத்தானை விரட்டிய இடத்தில் சைத்தானாக உருவம் கொடுக்கப்பட்ட தொட்டி. ஆண்டுதோறும் லட்சோப லட்சம் ஹாஜிகளிடம் செருப்படியும், கல்லடியும் வாங்கி நிற்கிறது அந்தத் தொட்டி. ‘இதுவல்ல சைத்தான் - இது ஒரு ஏற்பாடு அவ்வளவுதான்’ என நாயகம் திருமேனியே வந்து சொன்னாலும் இந்த ஆவேசம் அடங்குமா? சடங்குக் காக செய்யப்பட்ட சைத்தானை அடிப்பதில்தான் எத்தனை விதமான ஆக்ரோஷம். அலைமோதல். விவாதத்தின் மையப்புள்ளி இதுதான். சடங்குகளையும், நம்பிக்கைகளையும் காலத்தோடு பொருத்திப் பார்க்காமல் பின்பற்றுகிற போதுதான் அடிப்படை வாதம் மனதிற்குள் துளிர் விடுகிறது.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">இதையே வேறு ஒரு கோணத்தில் சொல்லிப் பார்க்கிறது ‘பக்ரீத் ஆடுகள்’ கதை. தமிழ்நாட்டில் மேல்தட்டு இஸ்லாமியர் பலருக்கும் தாங்கள் ஏதோ அரேபிய பாலைவனத்தில் இருந்து ஒட்டகத்தின் மீதேறி தமிழ்நாட்டிற்கு வந்தவர்கள் என்கிற நினைப்பிருக்கிறது. தமிழ் இஸ்லாத்தின் அடையாளங்கள் அழிக்கப்பட்டுக் கொண்டே வருகிறது. தவ்ஹீதுகளுக்குள் துளிர் விடும் அரபு மனம் தர்ஹாக்களையும், சந்தனக்கூடு திருவிழாக்களையும் ஹராம் என்கிறது. எனவே தான் காலம் காலமாக தமிழ்நாட்டில் பக்ரீத் அன்று கொடுக்கப்படும் குர்பானியில் ஆடுகளும், மாடுகளும் அகற்றப்பட்டு ஓட்டகங்கள் இடம் பிடிக்கின்றன. ஒட்டகத்தைக் குர்பானி தருவது மிகப் பெரிய கௌரவம் என்பதாக தமிழ் இஸ்லாமியர்கள் பேசத் துவங்கியிருப்பது அவர்களுக்குள் துளிர் விடத்துவங்கியிருக்கும் அரபு மனத்தின் வெளிப்பாடு தான்.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">இன்னும் கதைத் தொகுப்பிற்குள் ‘காபிர்’ ‘ரெட்டைமஸ்தானருகில்’, ‘அற்ற நாளின் விஷேசம்’, ‘ராஜமீன்’ ஆகிய கதைகள் குறித்தும் அவை முன் வைக்கும் கேள்விகள் குறித்தும் பேசிப்பார்க்க வேண்டும். அதிலும் ஜவுளிக்கடையில் சேலை உடுத்திக் காட்டும் மாமுவும் அவரின் மீசையற்ற முகமும் எவரையும் நிலைகுலையச் செய்கிறது. வாழ்வு குறித்த அச்சம் மேலிடும் போது மனிதர்கள் கைக்கொள்ளும் தந்திரங்களற்றிருக்கும் உத்திகளையும் ஜாகிரின் கதைமாந்தர்கள் தொகுப்பெங்கும் நிகழ்த்திக் கொண்டேயிருக்கிறார்கள். வாழ்ந்து கெட்ட குடும்பத்தின் தலைவனுக்கு பள்ளிவாசலின் ஹவுஸிற்குள் வாழும் ராஜமீனைக் களவாடுவதைத் தவிர வேறு என்ன வழியிருக்கிறது?</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">கதைக் கலைஞர்களுக்குள் நிகழும் அறம் குறித்த தர்க்கங்களும், மதிப்பீடுகளும் சமூகத்தின் மதிப்பீடுகளுக்கு நேர் எதிராகத்தான் அமையும். அனீபா எப்படியும் ராஜமீனைக் களவு கொண்டு செல்ல வேண்டும் மோதினார் எதிர்ப்படக்கூடாது என்றுதானே கலைஞன் நினைப்பான். அடையாளம் கதைக்குள் வருகிற மாரிக்கு ரம்ஜான் கஞ்சி கிடைக்காமல் போன துக்கம் இந்த நிமிடம் வரை என்னை வாட்டத்தான் செய்கிறது. வாழ்க்கையை எதிர் கொள்ள இந்துச் சாமிப் படங்களுக்கு பூப்போடுவதால் ஒன்றும் பிழையில்லை. அதற்காகவெல்லாம் காபிர் என ஒதுக்கினால் வட்டிக்குப் பணம் தருபவர்கள், பிறர் மனைவியின் மீது காமம் கொண்டலைபவர்களை யெல்லாம் என்ன பெயர் சொல்லி அழைப்பது </div><div style="text-align: justify;">கா... பிர்கள் என்றா? என வாசக மனதில் விதவிதமான கேள்வியலைகளை எழுப்பிடும் தன்மையில் அமைந்தவையே ஜாகிரின் ‘தேய்பிறை இரவுகளின் கதைகள்’.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">தேய்பிறை இரவுகளின் கதைகள் மூன்று புள்ளிகள் கொண்டமைக்கப்பட்ட வாழ்வின் கோலம் என்ற போதும் இவற்றிற்குள் அடங்காத வர்ணத் தீற்றலயும் வாசகன் கண்டடைவான். அதிலும் தஞ்சாவூரில் வீடுகள் தோறும் முற்றத்தில் வளர்ந்திருக்கும் மரங்கள் குறித்த விசித்திரத் தன்மையில் அமைந்த ‘காட்டு வண்டுகளின் வீடு’, ஆதிக் காதலை அழித்திட முடியாது யாவரும் தான் துன்புறுகிறோம் என்பதைச் சொல்லிப் பார்த்த ‘செம்பருத்தி பூத்த வீடு’. அன்பின் வலியெதுவென உரைத்திட்ட ‘நீஸா என்றொரு சிநேகிதி’ போன்ற கதைகளும் தனித்தன்மையில் அமைந்த கதைகள். ‘எரவானம்’ ‘எடுப்பு’, ‘சக்கிலி மந்தை’ போன்ற கதைகளுக்குள் தலித் உளச் சிக்கல், தலித் இஸ்லாத்தின் கூறுகள் தென்படுகின்றன.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">39 கதைகளையும் பற்றிய ஒற்றைவரிக் குறிப்புகள் வாசக நேர்மையாகாது. விரிவாகவும், ஆழமாகவும் எழுதப்பட்டுள்ள மனித வாழ்வின் துயரங்களை இப்படிக் கடந்து செல்வது நியாயமில்லை. இருந்த போதும் வாசகன் கண்டுணரத் தந்த குறிப்புகளே இவை. இதுவரை ஜாகிர் எழுதியிருக்கும் புனைவுப் பரப்பில் வேறு எங்கும் தென்படாத தனித் தன்மையிலமைந்த கதைகள் என ‘குடமுருட்டி ஆற்றின் கரையில்’ ‘சுவடுகள்’, ‘ஆதிமை’, ‘லவ்கீஹா’ ஆகியவற்றை எனக்கு மதிப்பிடத் தோன்றுகிறது.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">குடமுருட்டி ஆற்றின் கரையில் வாழும் புவ்வா, ஜக்கரியா, ஹைரூன் ஆகியோர் இதுவரையிலான தமிழ் இஸ்லாமியப் பிரதிகள் எங்கும் தென்படாதவர்கள். ஒரு தேர்ந்த இலக்கியப் பிரதியின் தன்மையில் அமைந்த கதை. வெறும் மேரேஜ் அஸெம்ப்ளர் இல்லை புவ்வா என்பதை கதையை வாசித்துக் கடக்கும் போதுதான் உணர முடியும். சுவடுகளுக்குள் கேட்டுக் கொண்டேயிருக்கும் யாசகக் குரலும், ரத்தப்பெருக்கோடு அலைந்து கொண்டிருக்கும் அவளின் துயரமும் வாசித்துக் கடக்க முடியாதவை. ஆதிமைக்குள் பெருகும் அன்பும். லவ்கீஹாவால் துன்புறும் கலைஞர்களின் துயரமும் தனித் தன்மையிலானது.</div><div style="text-align: justify;"><br /></div><div style="text-align: justify;">ஒட்டுமொத்தமாக ‘தேய்பிறை இரவுகளின் கதைகளை வாசித்து முடித்த பிறகும் கூட சுவடுகளின் அக்காவின் குரலும், அவளின் துயரமும் வாசகனை வாதையுறச் செய்துகொண்டே தான் இருக்கும். ஒவ்வொரு வாசகனுக்குள்ளும் இச்சமூகம் குறித்த பெரும் குற்ற உணர்ச்சியை ஏற்படுத்திடப் போகும் கதைகள் இவை.</div></div></div>கீரனூர் ஜாகிர்ராஜாhttp://www.blogger.com/profile/16821172975494211862noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5325351298899765001.post-63724059421624087352011-01-26T20:49:00.000-08:002011-01-26T20:51:52.920-08:00ஹரிகிருஷ்ணனின் பேரண்டச்சி வேஷம்தமிழ்ச் சிறுகதைகளைக் குறித்துப் பேச வருவோர் அது சில நூற்றாண்டுப் பராம்பர்யம் கொண்டதெனச் சொல்லி மகிழ்வர். நம்முடைய பழந்தமிழ்ச் செய்யுள்கள், சங்ககாலக் கவிதைகள் காப்பியங்களினூடே இடம் பிடித்துள்ள கிளைக்கதைகள் - காய சண்டிகை, ஆபுத்திரன் கதைகள், சிலப்பதிகாரத்தில் தேவந்தி மற்றும் பராசரன் கதைகள் போன்றவற்றில் சிறுகதைக் கூறுகள் வெளிப்பட்டுள்ளன. ‘பரமார்த்த குரு’ கதைகளை எழுதிய வீரமாமுனிவரின் உரைநடை வெளிப்பாடுகளில் நாம் கதைகளுக்குரிய சில லட்சணங்களைக் கண்டடைய முடிகிறது. எஸ். எம். நடேச சாஸ்திரியார் 1800 களின் இறுதியில் வெளியிட்ட ‘திராவிட மத்திய காலக் கதைகள்’, அதே நூற்றாண்டில் வாழ்ந்த தாண்டவராய முதலியார் எழுதிய பஞ்சதந்திரக் கதைகள், கதாமஞ்சரி போன்ற கதைக் கொத்துகளும், 20-ம் நூற்றாண்டின் கால்பகுதி வரை வாழ்ந்து மறைந்த செல்வக் கேசவராய முதலியார் எழுதிய ‘அபிநவக் கதைகளும்’ தமிழ்ச்சிறுகதைத் தளத்திற்கு அஸ்திவாரங்களென்று குறிப்பிடலாம். விடுதலை உணர்வு வலுப்பட்டிருந்த காலத்தில் பாரதியும், மாதவையாவும், வ.வே.சு. அய்யரும் சுதேசமித்ரன் போன்ற இதழ்களில் கதைகளை எழுதியுள்ளனர்.<br />1930-களுக்குப் பிறகு தொடங்கப்பட்ட மணிக்கொடி’ இதழ், சிறுகதை வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றியுள்ளது. பி.எஸ். ராமய்யா, ந.பிச்சமூர்த்தி போன்றோரும், தமிழ்ச் சிறுகதையின் சிகரம் தொட்டவரெனக் கருதப்படும் புதுமைப்பித்தனும், ந.சிதம்பர சுப்ரமணியன், எம்.வி. வெங்கட்ராம், ஆர். சண்முக சுந்தரம், க.நா.சு., கு.ப.ரா., சி.சு. செல்லப்பா, மௌனி போன்றவர்களும் பயணம் செய்த தடமாக அது இருந்தது.<br />இந்தியக் கதை மரபை எடுத்துக்கொண்டால் கதைகளின் பிறப்பிடமாக இந்திய நாடே இருந்திருக்கிறது என்பதை வரலாற்றின் அடிப்படையில் வைத்து நம்மால் உணர்ந்து கொள்ள முடிகிறது. பாரசீகனும், அராபியனும் இங்கிருந்து கற்றுக்கொண்ட கதைக்கலைதான் மத்திய கிழக்கு நாடுகளெங்கும் வியாபித்து வேர்விட்டுக் கிளை பரப்பியதாகச் சொல்கிறவர்கள் உண்டு.<br />பல லட்சம் அத்தியாயங்களில் மாந்த்ரீக மொழியில் சொல்லப்பட்ட ‘பிருகத்’ என்னும் நீண்ட கதைப்படைப்பு கி.பி. 6ம் நூற்றாண்டுகளில் விளங்கியுள்ளது.<br />தமிழ்ச் சூழலில் கதைகள் நம்முடைய பாரம்பர்யமான பண்பாட்டு வெளிப்பாடுகளிலிருந்தே பிறப்பெடுக்கின்றன. ஒரு பூம்பூம் மாட்டுக்காரனும், குடுகுடுப்பைக்காரனும், குறிசொல்லியும், ஜோதிடக் கலைஞனும் கதைசொல்லிகளே, வில்லுப்பாட்டு, கதாகாலட்சேபம், புராணக்கதைகளை வெளிப்படுத்துகின்ற தெருக்கூத்து, பொம்மலாட்டம், பாவைக்கூத்து போன்ற யாவும் கதைமரபின் கண்ணிகளே.<br />இன்றைக்குப் பல்வேறு உத்திகளாலும் வெளிப்பாட்டு த்வனிகளாலும் மொழியின் உபயோகங்களாலும் ஒருவித உன்னத நவீன நிலைமை அடைந்து விட்டதாகக் கருதப்படும் தமிழ்ச்சிறுகதைப் பரப்பிலே ஹரிகிருஷ்ணனின் கதைகள் எவ்விதமாய் இயங்குகின்றன இவருடைய உலகம் எது, உள்ளடக்கம் எது; எதுமாதிரியான அரசியலை இவை முன்வைக்கின்றன என்பது குறித்து நாம் சிந்திக்க அவசியமிருக்கிறது.<br />இலக்கணம் வகுப்போர் சிறுகதைக்கு எடுப்பும் தொடுப்பும் முடிப்பும் வேண்டி நிற்பர். நல்லது ஙீ கெட்டது என்னும் மோதலைக் கேட்பர். சிறுகதைக்கு மையத்தை நோக்கிய நீச்சல் அவசியம் என்கிறவர்கள் உண்டு. திருப்பமும் தேவையாம். மௌனம், ஒருமை, தீவிரத்தன்மை, ஒற்றைப் படையான நகர்வு எல்லாமும் இங்கே சிறுகதைக்குரிய இயல்புகளென வகுக்கப்பட்டுள்ளது.<br />‘நாயி வாயிச் சீல’ தொகுப்பிலுள்ள எல்லாக் கதைகளும், மேற்கண்ட சிறுகதைப்பண்புகளை ஒருவித முரட்டு தைரியத்துடன் நிராகரித்தபடி அதனதன் எல்லையற்ற இலக்குகளை நோக்கிப் பிரயாணிக்கின்ற தன்மை கொண்டுள்ளவையாக அனுமானிக்க முடிகிறது.<br />வாழ்க்கை கற்றுத் தருகின்ற அல்லது நிர்பந்திக்கின்ற எண்ணிலடங்காத விஷயங்கள் அனுபவச் சேகரங்களாகி, ஒரு சமயத்தில் புனைவின் நுட்பத்துடன் சிருஷ்டியாக வெளிப்படுவது இயல்பெனினும்; அவ்வகை அனுபவங்களுக்கும் படைப்புக்கும் தொடர்பில்லையெனக் கூறுவோர் உண்டு. நாயி வாயிச் சீல தொகுப்பின் எல்லாக் கதைகளும் ஹரியின் அனுபவங்களின் தொகுப்பாகத்தான் எனக்குப் படுகிறது ‘‘இவை ரத்தமும் சதையுமான என்வாழ்விலிருந்து நான் உங்களுக்குத் தருவது’’ - என்னும் வாக்கு மூலம் ஒவ்வொரு கதையையும் வாசித்து முடிக்கும்போது நம்மை எட்டி விடுகிறது.<br />இலக்கியத்தின் மேல் போலியாகவும் பாவனைகளாகவும் படிந்துள்ள மரபானவற்றின் மேல், படைப்பாளிக்கு நியாயமாக எழுகின்ற கோபங்கள்தான் இக்கதைகளின் தலைப்பு, உள்ளடக்கம், மொழிவெளிப்பாடு இத்யாதி விஷயங்களில் ஒருவித மீறலாக நாம் அடையாளங் காண்பது. ஏற்கனவே உள்ள நியமங்கள் மீது இக்கதைகள் எழுப்புகின்ற கேள்விகள் நியாயமானவை. இவ்வகை மீறல்கள்தான் புதிய வடிவங்களை நிர்மாணிக்க வல்லவை. நம்முடைய முன்முடிவுகளும் நம்முடைய அளவுகோல்களும் நம்மைப் பற்றியுள்ள கற்பிதங்களும் இவ்வகைப் புதிய வடிவ எழுச்சியின் முன் சரணடைகின்றன.<br />இக்கதைகளில் பிரயோகிக்கப்பட்டுள்ள வட்டாரமொழி இக்கதைகளின் வெற்றியைத் தீர்மானிக்கிற சக்தியாக உள்ளது. விவரணைகளுக்கு நவீன மொழியையும் உரையாடல்களுக்கு வட்டார வழக்கையும் கையாளுகின்ற என்னிடம் அவை ஓயாமல் கேள்விகளை எழுப்புகின்றன. முதல் சொல்லாடலிலிருந்து முடிவு வரை, கொச்சையானதென நம்மால் நம்பப்பட்டுள்ள வட்டார மொழி பொங்கும் இசை வெள்ளமெனப் பாய்ந்தோடுகின்ற அதிசயத்தை இக்கதைகள் முதன்முதலாக நமக்கு உணர்த்துகின்றன.<br />‘‘கொங்கநாக் குட்டிப்போட்டு குப்பங்கொசவஞ்சூள வெச்சாப்பிடி அனாமுத்தாப் பிள்ளைங்களப் பெத்துட்டுட்டு அப்பங்காரந்தான் புளுக்க மண்டிப் போட்டுட்டானே. அம்மாக்காரியாச்சிம் பொழப்பு மேல கருத்தா இருக்கணுமா வேண்டாமா’’<br />‘‘மூணு தரத்துக்கு மேல மூத்தரத்துக்குப் போனாவே இந்த வாச்சிமேனு கெழுவாடி பேரெழுதிக்கொண்டு சூப்ரேசருப் பசுங்கக்கிட்ட குடுத்துர்றான்’’ ‘‘சின்னப்பட்ட கழுதைக்கி செனக்கழுத கூத்தியாளாம். சேட்டு பன்ற கோளாறுக்கெல்லாஞ் செலுவராசி உள்ளொளவுக்காரான்’’<br />‘‘ஒட்னக்கால எட்ட வெக்கறதுக்கில்லாமப் பட்டுக்கிட்டிருந்த சித்தரவதயில பிள்ளைக்கிப் பேச நாவே எந்திரிக்கல’’<br />“பொழப்புப் போயி பொடக்காலியில நின்னுக்கிட்டு போவுட்டுமா வருட்டுமாங்குது. வவுசி வந்து வாசல்ல நின்னுக்கிட்டு வருட்டுமா போவுட்டுமாங்குது’’<br />“அஞ்சி உருவா பச்ச நோட்ட கண்ல பாக்கறதுக்குள்ள குண்டியில சீக்கட்டிக்கிது’’ ‘‘தவுசு நாடகத்துல வர்றபேரண்டச்சி வேசமாட்டம் எம்பொண்டாட்டியோட அக்காக்காரி நல்லாப் பெருஞ்சாதிப் பொம்பள. கரும்புக்காட்டுக்கு நெருப்பு வச்சமாதிரி நெறம். தண்ணியக் கழுவி நெவுலப் பூமியிலப் பொதைக்கிற ரகம்’’<br />‘‘ ஆர்ரா புண்டவாயா உனுக்கென்றா கேடுகாலம்? வவுத்துக்கு சோறு திங்கிறியே, உனக்கு அறுவு இல்ல? நெனவு இல்ல? தாயோட ஒண்ணுடா இந்த கேனச்சி, இவள வந்து இந்நேரத்துக்கு கூப்டுறியே ங்கோயா உன்ன என்னான்னுடாப் பெத்தா? ஈனப்பானங் கெட்டத் தாயோலி! தம்பி எந்திரிச்சிக்கிட்டுத் தாளம்போட்டா கல்லு மேல வெச்சி நைநைன்னு கொட்றது. இல்ல காராம்முள்ள வெச்சி தேய்க்கிறது?’’<br />‘‘நெருப்பூரு நாவமரைக்கி சீருக்கு போயிட்டு தகோலு தெரிஞ்சி வரதுக்குள்ள எடுத்துக்கொண்டி எரிச்சுப்புட்டாங்க, எளம்பிள்ளி சுடுகாட்டுல. மவ மூஞ்சியப்பாக்கக்கூட ரொணமில்ல. ஆவுசந்தாங்காம குழிமேட்டுக்குப் போயி சாம்பல நவ்வாலு வாயி அள்ளித் தின்னுப்புட்டு வந்தம். நாங்க ஆருக்கு என்னா தீம்புச் செஞ்சம்? தாயப் பழிச்சமா? தண்ணிய தடுத்தமா? ஏழுய அடிச்சமா? எளஞ்சாதம் உண்டமா? எனத்துக்கிந்த ஆண்டவனுக்கு எங்கமேல இத்தன கூரியம்? கூனுக்குருடு, மொண்டி, மொடம் இப்படி ஒடம்புலவொரு ஒச்சமின்னாக் கூட மயிராச்சி, அதப்பத்தி காரியமில்ல. பாழாப்போன பொறப்புல கோளாறு பண்டிவேடிக்கப் பாக்குதேயந்த நொள்ளக் கண்ணுச் சாமி!’’<br />_ இவ்வாறு தொகுப்பெங்கும் ஹரிகிருஷ்ணன் முன்வைக்கின்ற சொல்லாடல்கள் கொங்கு மண்டலத்தின் வால் முனையான சேலம் ஏர்வாடி வட்டார வழக்கைத் தோண்டித் தோண்டி நமக்குத் தருகிறது. இவ்வழக்கு பல சமயங்களில், எங்க ஊர் ஆயா ஒருத்தி காரை தூர்ந்த திண்ணையில் கால் நீட்டியமர்ந்து இழந்த தன் வாழ்வின் எச்சங்களை வெற்றிலையாய் உரலில் இடித்துச் சவைக்கிற மாதிரியும், அவளே, காணாத தன் சனஞ்சாதியைக் கண்டு விடும்போது ‘‘இப்புடியெல்லாம் ஆயிப்போச்சே சாமீ...’’ என்று உரத்த குரலெடுத்து ஒப்பாரி வைப்பது போன்றும் பிரம்மைகளை எனக்குத் தருகின்றன.<br />ஹரிகிருஷ்ணனின் மொழி எனக்க மிக நெருக்கமாக நான் உணர்ந்த மொழி. என் மண்ணின் மொழி. பெயருக்கு முன்னால் ஒரு அடையாளம் போல ஊர்ப் பெயரையும் சுமந்து திரியும் நான் பெருநகரத்து இரைச்சலில், நெரிசலில் என்னை அன்னியமாய் உணர்ந்த சந்தர்ப்பங்கள் தான் அனேகம். இக் கதைகளின் வழியே என் வேர்களை நான் எட்டநின்று தரிசித்த திருப்திகொண்டேன். ஆனால் வேறொருவிதத்தில் இக்கதைகள் என் குற்ற உணர்ச்சிகளைத் திருகித் தூண்டிவிடுகின்றன. மற்றொரு விதத்தில் பெருமிதமும் கொள்ள வைக்கின்றன.<br />நாட்டார் வழக்கை கதை மொழியாகக் கொண்டு ஒரு சிலர்தான் வெற்றி பெற்றுள்ளனர். கி. ராஜாநாராயணன் அதற்கொரு சிறந்த உதாரணம். ஆனால் இத் தொகுப்பிலுள்ள கதைகளைப் போன்ற உள்ளடக்கம் கொண்டவற்றை கி.ரா., பாலியல் கதைகளென்றே தனியாக அடையாளப்படுத்துகிறார். ஹரி ‘‘என் படைப்புலகமே இவை தான்’’ என்று முன் வைக்கிறார். இதற்கொரு துணிச்சல் தேவைப்படுகிறது.<br />வாழ்வில் எதிர் கொள்ளும் குரூரங்களின் போதும், அவற்றைப் பதிவு செய்கிறபோதும், பிறிதொருவர் வழியே அவற்றை வாசக அனுபவமாக உணரும் தருணங்களிலும் நம் மனதின் சமநிலை குலைந்து தகர்ந்து விடுகிறது. நாயி வாயிச் சீல’ வாசிப்பனுபவம் எனக்கு அதைத் தந்தது. இந்தத் திக்கத்த சனத்துடன் நானும் ஒருவனாகக் கரைந்து போனபோது நிம்மதியாக உணர்ந்தேன்.<br />ஒவ்வொருவர் உலகமும் தனித்தனியானது. விசித்ரமானது. அவ்வகையில் கூத்துக்கலையை ஏற்றுக்கொண்ட விளிம்பு நிலைப் பிரஜைகளின் உலகம் அசாதாரணமானது. நம்மால் உன்னதம் என்று கொண்டாடப்படுகின்ற யாவும் அங்கே அர்த்தமிழந்து போகின்றன. அவர்களுடைய கனவுகள் எல்லாம் நமக்கு அன்னியமாகவும் நம்முடைய எதிர்பார்ப்புகளெல்லாம் அவர்களுக்கு சாதாரணமானவையாகவும் இருப்பது கண்கூடு. இந்த இடைவெளி நீளமானது. இதைக் குறைக்கவல்ல அதிசயம் ஒரு போதும் நிகழ்ந்துவிடாது. இதுதான் நம்முடைய இயலாமை.<br />ஹரிகிருஷ்ணனின் கதைகளில் சமகால சிறுகதைக் கூறுகள் எதுவும் இல்லை. அகமன சஞ்சாரமில்லை. பக்கம் பக்கமான விவரணைகள், வலிந்து திணிக்கின்ற பாலியல் சித்தரிப்புகள் இல்லை. இக்காரணங்களினாலேயே இவை தனித்துவம் பெறுகின்றன. இதே காரணங்களுக்காக நம்முடைய இலக்கிய மேதைமைகள் இவற்றைப் புறக்கணிக்கின்ற சந்தர்ப்பங்களையும் உருவாக்கித் தருகிறார் ஹரி.<br />இக்கதைகளின் நெடுந்தடமெங்கும் குருதியும் வியர்வையுங் கலந்த நறுமணம் கமழ்கிறது. வழக்கொழிந்த வசவுச் சொற்கள் கூத்துங் கும்மாளமுமாய் கொடியேறிப் படபடக்கின்றன. இதுகாறும் அழகியலோடு சித்தரிப்பைப் பெற்ற திருநங்கையரின் வாழ்வு அசலான முறையில் காட்சிப்பட்டுள்ளது. காலச்சூழலில் தமிழ்ச் சிறுகதையுலகம் தவிர்த்தும் தவறவும் விட்ட நாட்டார் தன்மைகள் மீண்டும் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.<br />ஹரிகிருஷ்ணன் புதுவிதமான எதிர்பார்ப்புகளை உருவாக்குகிறார். கூத்துக்கலைஞர்களிடமிருந்து பெற்று அவர் தமிழுக்குத் தர நிறைய இருக்கிறது என்பது நம்பிக்கையளிக்கிறது.கீரனூர் ஜாகிர்ராஜாhttp://www.blogger.com/profile/16821172975494211862noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-5325351298899765001.post-61398044236314015322011-01-13T23:09:00.000-08:002011-01-13T23:11:37.122-08:00தஞ்சை பெரிய கோவில் – ஒரு பொதுப் பார்வை - கீரனூர் ஜாகீர் ராஜா<p style="margin-top: 1em; margin-right: 0px; margin-bottom: 1em; margin-left: 0px; padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; text-align: justify; color: rgb(51, 51, 51); font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; ">கல்லிலே உருவான இந்த அதிசயத்தைக் காணத்தான் கொங்கு மண்டலத்திலிருந்து 16 வருடங்களுக்கு முன்னால் நான் வீட்டில் சொல்லிக் கொள்ளாமல் புறப்பட்டு வந்தது. கரையேறி மீன் விளையாடும் காவிரிக்கரையை இலக்கியங்களில் படித்துவிட்டு வற்றிய காவிரியைக் கண்டபோது எனக்கு மனம் திடுக்கிடத்தான் செய்தது. நுங்கும் நுரையுமாய்ப் பொங்கி வரும் காவிரியை மோகமுள்ளிலும் அம்மா வந்தாளிலும் வாசித்துவிட்டு ஒரு மணல் காட்டை தரிசித்தபோது திசைமாறி வந்துவிட்டோமோ என்னும் அன்றைய என் தவிப்பு, தவிப்பின் வடு இன்றளவும் மாறாமலிருக்கிறது. ஜானகிராமனின் கதைமாந்தனைப்போல படித்துறையில் ஆற அமர உட்கார்ந்து அகண்ட காவிரியில் லயிக்க முடியவில்லையே என்கிற ஆதங்கம்தான் என் ஆதி நம்பிக்கை வறட்சி குதிரைகளின் குளம்படி ஓசை அசரீரியாய் கேட்க, ஒரு புராதன நகரத்துக்குள் புழங்கித் திரிபவனாயிருக்க வேண்டுமென்பதுதான் அன்றைய என் கனவாயிருந்தது. அதுதான் என்னைத் தஞ்சாவூருக்கு இழுத்து வந்தது.</p><p style="margin-top: 1em; margin-right: 0px; margin-bottom: 1em; margin-left: 0px; padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; text-align: justify; color: rgb(51, 51, 51); font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; ">தஞ்சாவூரின் எந்தப் புள்ளியிலிருந்து பார்த்தாலும் ராஜராஜேச்வரம் எனப்படும் பெரியகோவில் நம் கண்களுக்கு காட்சியளிக்குமென எனக்குச் சொல்லப்பட்டிருந்தது. நானும் பஸ்ஸை விட்டு இறங்கி பெட்டியும் கையுமாக அண்ணாந்து பார்த்தபடி நடக்கிறேன். வணிக வளாகங்களால் சூழப்பட்ட நகர்மயமாகியிருந்த சற்று படாடோபமான தஞ்சாவூரைத்தான் அன்றைக்கு என்னால் காண முடிந்தது. பிறகொரு கிடைத்ததற்கரிய சந்தர்ப்பம் வாய்த்தது. தஞ்சாவூரின் பல நூற்றாண்டு கால வரலாற்றையும், பெரியகோவிலின் உன்னதங்களையும், அவலங்களையும், அகண்ட காவிரியின் சுழிப்புகளையும் அதன் வற்றிய சோகச் சரிதத்தையும் தன் நெஞ்சிலே புதைத்து வைத்துத் திரிந்த ஒரு ஆன்மாவைச் சந்திக்க வாய்த்தது. அவர் பெயர் தஞ்சைப் பிரகாஷ். இலக்கியத்திலேயே இது ஒரு இருட்டடிக்கப்பட்ட பெயர். ஆனால் நான் அறிந்து கொள்ள துடித்த புராதனத் தஞ்சையின் வளம்மிக்க பக்கங்களை மட்டுமல்ல பெரியகோவிலின் நிஜமான பிம்பத்தை குறிப்பாக, ராஜராஜசோழனால் சிவதுரோகியாக்கப்பட்ட பாவப்பட்ட ஏழைக் கூட்டத்தை பிரகாஷ்தான் எங்களுக்குச் சொன்னார். அவர்களின் வழியே உடலில் சூடு போடப்பட்டு சோழ மண்டலத்தின் பல பாகங்களிலிருந்தும் இழுத்து வரப்பட்ட 400 பெண்கள் தளிச்சேரிப் பெண்டுகளாக தேவரடியார்களாக தாசிகளாக்கப்பட்ட வரலாற்றின் கறைபடிந்த இருள்பக்கங்களையும் கதைசொல்லி ரூபமெடுத்த அவருடைய வாய் வழியாகத்தான் கேட்க நேர்ந்தது.</p><p style="margin-top: 1em; margin-right: 0px; margin-bottom: 1em; margin-left: 0px; padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; text-align: justify; color: rgb(51, 51, 51); font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; ">பிரகாஷ் கடைசியாகத் தொடங்கி நடத்திய இலக்கிய அமைப்புக்குப் பெயர் தளி. தளி அமைப்பின் கூட்டங்கள் நடந்த இடம் அசல் தளிச்சேரி. இன்றைக்குப் பெரிய கோவிலின் உள்ளே நுழைகிறவர்களுக்கு அந்த தளிச்சேரி பசுமையான புல்வெளியாகக் காட்சியளிக்கலாம். ஆனால் பத்து நூற்றாண்டுகளுக்கு முன்பு அந்த இடத்தில்தான் தளிச்சேரிப் பெண்டுகளின் வதைபடும் வாழ்க்கை நடந்திருக்கிறது. தளி என்றால் கோவில், சேரி என்றால் சேர்ந்து வாழுமிடம். தஞ்சாவூரிலிருந்த எரியூர் அரிகுலகேசரி ஈச்வரம், கடம்பூருக்கருகில் திவிலன்கோவில், திருவாரூரிலிருந்த பெரியதளி, பிரமீச்வரம், திருவாழனேரி, ஒலோகம மகாதேவீச்வரம், அருமொழி ஈச்வரம், உலகீச்வரம் போன்ற ஆலயங்களிலிருந்தும் அந்தப் பெண்கள் தஞ்சாவூருக்கு கட்டாயமாக அழைத்து வரப்பட்டனர். இவர்கள் ஒரு பாதி. மறுபாதியினர் ராஜராஜனால் விதிக்கப்பட்ட வரியைக் கட்ட முடியாமல் சிவதுரோகியாக்கப்பட்டவர்களின் குடும்பத்துப் பெண்கள் மற்றும் ராஜராஜனால் போர்க்களத்தில் தோற்கடிக்கப்பட்டவர்களின் குடும்பத்துப் பெண்கள் . இவர்களில் அரசகுடும்பத்தினரும் அடக்கம். அலகிடுபவர்களாக, மெழுகிடுபவர்களாக, விளக்கேற்றுபவர்களாக, ஆடுமகளிராக அதற்கும் அப்பால் பாலியல் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள மேய்ச்சல் நிலமாகவும் அவர்கள் பாவிக்கப்பட்டுள்ளனர். ஒரு வகையில் இந்த தளிச்சேரியிலிருந்து தான் என்னுடைய இலக்கியப் பயணம் தொடங்கியது. இன்றைக்கு நவீனமான புல்வெளியாக்கப்பட்ட அந்த இடத்தில்தான் எங்கள் படைப்பரங்கம் நடைபெற்றது.</p><p style="margin-top: 1em; margin-right: 0px; margin-bottom: 1em; margin-left: 0px; padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; text-align: justify; color: rgb(51, 51, 51); font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; ">தஞ்சைப் பெரியகோவில் தன் விதானங்களை அகண்ட ஆகிருதியை படைப்பாளிகளுக்குத் திறந்து வைக்கிறது. இங்கே வழிபாட்டுக்காக வருகிறவர்களை விட தங்கள் மன அவசங்களுக்கு வடிகால் தேடி வருகிறவர்களே அதிகம். திறந்த வெளியும் செதுக்கப்பட்டுள்ள கலைச்சிற் பங்களும், பசும்புல் வெளியும், நெடிதுயர்ந்த கோபுரமும் நெஞ்சிலே பாரஞ்சுமந்து வருகிறவர்களை ஆசுவாசப்படுத்த ஆற்றுப்படுத்த வல்லவை என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். இந்த ஆகிருதியைச் சுற்றிவரும் பொழுது பத்தாம் நூற்றாண்டுப் புராதன நிழல் நம்மேல் கவிகிறது. கீழைச் சாளுக்கியரின் நிலமாயிருந்த வேங்கி நாடென்றழைக்கப்பட்ட இன்றைய ஆந்திரம், கங்கபாடி என்றழைக்கப்பட்ட இன்றைய மைசூர், நுளம்பர்களின் பிரதேசமாகயிருந்த பெங்களூர், பெல்லாரி உள்ளிட்ட பகுதிகள், குடகுநாடு, கேரளத்துக் கொல்லம், கலிங்கம், தென் இலங்கைத் தீவிலுள்ள ஈழம், மேலைச் சாளுக்கியர்களின் இரட்டபாடி என்னும் வடகர் நாடகம், மராட்டியம், லட்சத்தீவு, மாலத்தீவு, தென் தமிழகத்தின் பாண்டியநாடு யாவற்றையும் வெற்றிகண்டு அபய குலசேகரன், அரிதுர்க்கலங்கன், அருள் மொழி, அழகிய சோழன், ரணமுகபீமன், ராஜாச்ரயன், ரவிகுல மாணிக்கன், ராஜ கண்டியன், ராஜ சர்வக்ஞன், ராஜகேசரி வர்மன், ராஜமார்த்தாண்டன், ராஜேந்திர சிம்மன், ராஜவிநோதன், உத்தமசோழன், உத்துங்கதுங் கன், உய்யக்கொண்டான், உலகளந்தான், கேரளாந்தகன், சண்டபராக்ரமன், சத்ருபுஜங்கன், சிங்களாந்தகன், சிவபாதசேகரன், தெலிங்ககுல காலன், நிகரிலிசோழன், நித்யவினோதன், பண்டித சோழன், பாண்டிய குலாசனி, பெரிய பெருமாள், மும்முடிச்சோழன், மூர்த்த விக்கரமா பரணன், ஜனநாதன், ஜெயங்கொண்ட சோழன், சத்திரிய சிகாமணி, கீர்த்தி பராக்கிரமன், சோழ நாராயணன், தைலகுல காலன் என்று மூச்சுவாங்குமளவு தனக்கு நூற்றுக்கணக்கான பெயர்களைச் சூடிக்கொண்ட ராஜராஜனின் படைகளையும் போர்ப் பரணிகளையும் வரலாற்றுப் பரிச்சயமுள்ள படைப்பாளிகளால் உள்வாங்கிக் கொள்ள முடியும். நம்முடைய அரசியல்வாதிகள், சினிமா கலைஞர்கள், இலக்கியப் பீடங்கள் காரணமில்லாத புனைப்பெயர்களைச் சூடிக்கொள்வர். ராஜராஜன் சூடிக் கொண்டவை காரணப்பெயர்கள். பிறகு ஆன்மீகம் என்கிற பரவச நிலையை விடுத்து சற்றே நம் பகுத்தறிவின் சாளரத்தை மூடிவைத்துவிட்டு இங்குள்ள கலையழகை யெல்லாம் அதனதன் தொன்மத்துடன் பொருத்திப் பார்ப்போமானால் இன்னொரு மாறுபட்ட லோகத்துக்குள் நம்மால் சஞ்சரிக்க முடியும்.</p><p style="margin-top: 1em; margin-right: 0px; margin-bottom: 1em; margin-left: 0px; padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; text-align: justify; color: rgb(51, 51, 51); font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; ">மேம்போக்காக நுனிப்புல் மேய்கிற தன்மையுடன் கலைப்ரக்ஞையற்ற கண்களால் பெரியகோவிலைப் பார்க்கிறவர்களுக்கு எதுவும் அனுபவித்தறிய முடியாது. பெரியகோவில் கோபுரத்தின் குறுகிய படிக்கட்டுகளின் வழியே கருவறைக்கு மேலே உள்ள திருச்சுற்றில் சிவனின் 108 விதமான நடனத்தோற்றங்கள் சிற்பங்களாகச் செதுக்கப்பட்டுள்ளன. 81 தோற்றங்கள் வரை செதுக்கப்பட்டு என்ன காரணத்தினாலோ 27 நிலைகள் செதுக்கத் தோதான நிலையில் விடப்பட்டுள்ளது. சிற்பங்கள் செதுக்கப்பட்ட பிறகு சிற்பிகளின் கண்களை ராஜராஜன் குருடாக்கி விட்ட தாகவும் ஒரு வதந்தி உண்டு.</p><p style="margin-top: 1em; margin-right: 0px; margin-bottom: 1em; margin-left: 0px; padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; text-align: justify; color: rgb(51, 51, 51); font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; "> பெரிய கோயிலில் வரையப்பட்டுள்ள அபூர்வமான ஓவியங்கள் குறித்தும் பேச வேண்டியிருக்கிறது. 1930ஆம் ஆண்டுவரை உட்பிரகாரம் சுவர் வைத்து மூடப்பட்டிருந்த கோவில் இது. அந்த இருண்ட வழிகளுக்குள் யாரும் பயணித்துப் பார்க்க நினைத்த தில்லை. 1931ஆம் ஆண்டு பெரியகோவிலுக்கு யாத்திரை வந்த பேராசிரியர் எஸ்.கே.கோவிந்தசாமி என்பவர் உட்பிரகாரச்சுவரின் ஓட்டையிலிருந்து பறவை ஒன்று பறந்து சென்றதைக் கவனிக்கிறார். அந்தப்பேராசிரியரின் ஆய்வுமனம் அந்த க்ஷணத்தில் சிறகடித்துக் கிளம்புகிறது. பறவையின் வழிகாட்டுதலுடன் அவர் உட்பிரகாரத்தினுள் பிரவேசிக்க ஆயிரமாண்டு காலத்தொன்மை வாய்ந்த அரிய ஓவியங்கள் குறித்து உலகத்துக்குத் தெரிய வருகிறது. இன்றைக்கும் ஒப்பற்ற கலை வெளிப்பாடுகளை உலகுக்கு வெளிப்படுத்திய அந்தப் பெயர் தெரியாத சிறு பறவைக்குத்தான் காலம் நன்றி சொல்லிக் கொண்டி ருக்கிறது. பேராசிரியர் அடையாளப்படுத்தியபிறகு இந்திய தொல்லியல் துறை உள்ளே நுழைகிறது. சோழர்கால ஓவியங்களுக்கு மேல் நாயக்கர் கால ஓவியங்கள் படிந்திருக்கின்றன. இவையும் 400 ஆண்டுகாலப் பழமைவாய்ந்தவை. ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பதைப் போல 1000 ஆண்டு பழமைவாய்ந்த சோழர்கால ஓவியங்கள் தனியாகவும் 400 ஆண்டுகாலப் பழமை வாய்ந்த நாயக்கர்கால ஓவியங்கள் தனியாகவும் பிரித்தெடுக்கப்படுகின்றன.</p><p style="margin-top: 1em; margin-right: 0px; margin-bottom: 1em; margin-left: 0px; padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; text-align: justify; color: rgb(51, 51, 51); font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; ">சோழர்கால ஓவியங்களை ஆய்வு செய்தவர்கள் அவை ‘ப்ரெஸ்கோ ப்யூனோ’ அரிய வகையைச் சேர்ந்த அரிய ஓவியங்கள் என்று மதிப்பிட்டிருக்கின்றனர். இன்றைக்குப் பிரசித்தி பெற்ற அஜந்தா, எல்லோரா குகை ஓவியங்களை விட வரையப்பட்ட பாணிகளால் இந்த ஓவியங்கள் உயர்தரமானவை என்று இதற்குப் பொருள். பத்து நூற்றாண்டுகளுக்கு முன்னால் அரிய மூலிகைச் சாறுகளுடன் மரப்பிசின் கலந்து தயாரிக்கப்பட்ட வர்ணக்கலவைகளை இந்த ஓவியங்களுக்காகப் பயன்படுத்தியிருக்கிறார்கள். மட்டுமல்ல புராணக் காட்சிகள், போர்க்கோலங்கள், கடவுளர்கள், மன்னன் ராஜராஜன், அவனது மனைவியர், ராஜராஜனின் குருமார்கள், நடனமாதர்கள், சோழர்கால ஆண்கள், பெண்கள், கடல்வாழ் உயிரினங்கள் என்று பத்தாம் நூற்றாண்டு காலகட்டத்தை இந்த ஓவியங்கள் துல்லிய மாகச் சித்தரிக்கின்றன.</p><p style="margin-top: 1em; margin-right: 0px; margin-bottom: 1em; margin-left: 0px; padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; text-align: justify; color: rgb(51, 51, 51); font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; ">ஆடல் மகளிர்களை அதற்குரிய வனப்புடன் தீட்டியிருக்கிற அதே தூரிகைகள் குடும்பப் பெண்கள் சமையலறையில் சமைப்பது உள்ளிட்ட பல காட்சிக்கோணங்களையும் பதிவு செய்திருப்பதும் சாமானிய மாந்தர்களும் இக்காட்சிப் புலத்துள் இடம் பெற்றிருப்பதும் குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டிய தாகும். ஆனால் இந்த ஓவிய மேளாவை நிகழ்த்திக்காட்டிய எந்த ஓவியனின் பெயரும் பதிவாகவில்லை என்பதுதான் ஆகத்துயரமாகும். ஓட்டைச் சுவரிலிருந்து வெளிப்பட்டு ஓவியங்களைக் காட்டித்தந்து சிறகடித்த அந்தப் பெயர் தெரியாச் சிறுபறவைக்கு காலம் நன்றி கூறுவதைப் போல, ஒரு காலகட்டத்தையே தங்கள் தூரிகைக் கரங்களால் வார்த்துத் தந்திருக்கிற அந்த ஓவியக் கலைஞர்களுக்கும் நாம் இந்த நேரத்தில் நன்றியறிவிக்கக் கடமைப்பட்டுள்ளோம்.</p><p style="margin-top: 1em; margin-right: 0px; margin-bottom: 1em; margin-left: 0px; padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; text-align: justify; color: rgb(51, 51, 51); font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; ">ராஜசிம்மன் என்கிற பல்லவ மன்னனால் காஞ்சிபுரத்தில் உருவாக்கப்பட்ட கச்சிப்பேட்டுப் பெரிய கோவிலைப் பார்த்த பிறகுதான் ராஜராஜன் தஞ்சைப் பெரிய கோவிலைக் கட்ட நினைத்ததாகக் கூறுகிறவர்கள் உண்டு. இலங்கையை வெற்றிகொண்ட ராஜராஜன் அங்கிருந்த பௌத்தவிஹார்களின் காட்சிப் பொலிவில் மயங்கி, இவற்றையெல்லாங் கடந்த ஒரு கலைக் கோட்டத்தை உருவாக்க எண்ணிப் பல காலங்கள் பலவிதமாய் மனதில் அசைபோட்டு செயல்வடிவம் தந்தது தான் ராஜராஜேச்வரம் என்று அபிப்ராயப்படுகிறவர்களும் உண்டு.</p><p style="margin-top: 1em; margin-right: 0px; margin-bottom: 1em; margin-left: 0px; padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; text-align: justify; color: rgb(51, 51, 51); font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; ">எதிர்காலத்தில் உன் புகழ் போர்களின் மூலமாக மட்டுமே அறியப்படாமல் நீதிமான்களும், கல்வியாளர் களும், கலை விற்பன்னர்களும், மதியூக அரசியல் மேதாவிகளும் மட்டும் உன்னைப் பாராட்டாமல் சைவ சமயத்தாரும் உன்னைப் போற்றிப் பாட ‘தளிக்குளம்’ கோவில் பெரியகோவிலாக வேண்டும் என்று தமக்கை குந்தவை வேண்டிக்கேட்டுக் கொண்டதன் பேரில்தான் ராஜராஜன் பெரியகோவிலை நிறுவினான் என்று நிறுவுகிறவர்களும் உண்டு.</p><p style="margin-top: 1em; margin-right: 0px; margin-bottom: 1em; margin-left: 0px; padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; text-align: justify; color: rgb(51, 51, 51); font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; ">கட்டடக் கலை என்று பார்க்கும்போது பத்தாம் நூற்றாண்டில் கற்பனை செய்து பார்க்க முடியாத சாதனைதான் பெரியகோவில். இதற்கு சில நூற்றாண்டு களுக்குப் பிறகு மொகலாயர்களின் கட்டடக்கலை வியப்பூட்டும் நுட்பமான வேலைப்பாடுகள் கொண்டதாக இருந்திருக்கிறது. ஆனால் உருவங்களைப் புறக்கணிக் கின்ற இஸ்லாமிய வேத அடிப்படையில் சிற்பம் போன்ற நுண்கலைகளுக்கு இடமில்லாமல், அவை சலவைக்கற் களால் எழுப்பப்பட்ட சன்னிதானங்களாகவே காட்சியளிக் கின்றன. என் பிள்ளைகளுக்கு எங்கோ தொலைவில் யமுனா நதி தீரத்திலிருக்கின்ற தாஜ்மஹாலைக் காட்டு வதைவிடவும் அருகிலிருக்கின்ற பெரியகோவில் என்கிற இந்த அதிசயத்தைக் காட்டுவதில் தான் மனம் மகிழ்ச்சி கொள்கிறது. நண்பர்களே! ராஜராஜனின் கலாரீதியான செயல்பாடுகளைக் கொண்டாடத்தான் வேண்டியிருக்கிறது. நட்டுவக்காரர்கள், பாட்டுக்காரர்கள், கானபாடிகள், வங்கியக்காரர்கள், பாடவியக்காரர்கள், வாத்தியக்காரர்கள், உடுக்கை வாசிப்போர், வீணை வாசிப்போர், ஆரியம்பாடுவோர், தமிழ் பாடுவோர், கூத்தர், கெட்டி மத்தளம் வாசிப்போர், கந்தர்வத் துறையார், சங்கு ஊதுவோர், பக்கவாத்தியர், உவச்சர்கள் என்று 17வகை யான கலைஞர்களை பெரியகோவிலுக்காக வென்றே பராமரித்துக் காபந்து செய்தவன் ராஜராஜன். சரி; கலை இவனாட்சியில் உச்சத்திலிருந்தது! ஒப்புக் கொள்வோம்! ஆனால் ஜனங்கள் என்ன நிலையிலிருந்தார்கள். மக்கள் எப்படிப்பட்ட வாழ்க்கை வாழ்ந்தார்களென நாம் ஆய்ந்து பார்க்கையில் ராஜராஜனுக்குப் பின்னடைவுதான் என்கிற முடிவுக்கே வர வேண்டியிருக்கிறது. இது ஒரு வரலாற்றுச் சோகம்தான்! ஒரு கோயிலுக்காக தன் சாம்ராஜ்யத்தின் பெரும் பகுதிச் செல்வமனைத்தையும் தாரைவார்த்த இந்தத் தஞ்சை மன்னன் தனதாட்சிக் காலத்தில் உழைக்கும் மக்களை, பாட்டாளி வர்க்கத்தை, கடைநிலைச் சமூகத்தை எந்த லட்சணத்தில் நடத்தினான் என்றும் நாம் பார்க்க வேண்டியிருக்கிறது. கலைகள் தேவைதான். கலைஞர்கள் போற்றி ஆராதிக்கப்பட வேண்டியவர்கள் தான். ஆனால் கற்களால் எழுப்பப்பட்ட கனவுக்கோட்டத்துக்குக் கீழே உழைப்பாளிகளின் உதிரம் சிந்தப்பட்டிருக்கிறது. ஆட்டுக்கறை, நல்லெருது, ஓடக்கூலி, ஈழம் பூட்சி, தரகுப்பட்டம், தறி உறை, மீன்பாட்டம், வட்டி நாழி, கண்ணாலக் காணம், வண்ணாரப்பாறை, குசக்காணம் என்று மீனவர்கள், உழவர்கள், சலவைத் தொழிலாளிகள், நெசவாளர்கள், தரகர்கள், ஆட்டிடையவர்கள், ஓடக்காரர்கள், கள் இறக்குவோர் உள்ளிட்ட உதிரிப்பாட்டாளி வர்க்கத்தினர் மேல் வரிச்சுமையை ஏற்றி வைத்தவன் ராஜ ராஜசோழன். சனாதன தருமம் வேர்பிடிக்கவென்றே திட்டமிட்டு பார்ப்பனர் களுக்கு பொன்னையும் பொருளையும் அள்ளி வழங்கிவிட்டு குடிமக்களில் ஒருவன் திருமணம் செய்து கொண்டால் அதற்குரிய ‘கண்ணாலக் காணம்’ என்கிற வரியைப் பேரரசுக்குச் செலுத்த வேண்டுமென்று தீர்மானம் போட்டவன் ராஜராஜன். அவனுடைய கல்வி நிறுவனங் களிலே கற்பிக்கப்பட்டவை எல்லாம். மீமாமிசை, வியா கரணம், இதிகாசம், சிவதருமம் என்று வடமொழிக்குரிய இலக்கண இலக்கியங்கள்தான்! தமிழக வரலாற்றின் கரும்புள்ளிகளாகத் தேங்கிவிட்ட வலங்கை, இடங்கைக் குலங்களின் போராட்டங்கள் ராஜராஜன் காலத்து எச்சம்தான்!</p><p style="margin-top: 1em; margin-right: 0px; margin-bottom: 1em; margin-left: 0px; padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; text-align: justify; color: rgb(51, 51, 51); font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; ">இந்த அகண்ட ராஜேச்வரத்தின் கல்வெட்டுகளில்தான் தமிழகத்திலேயே முதன் முதலாக சமஸ்கிருத அட்சரங்கள் பொறிக்கப்பட்டன. ஏற்கெனவே குறிப்பிட்டதைப் போல வரிசெலுத்த முடியாதவர்களை சிவதுரோகியாக்கி, அவர் களுடைய நிலங்களை விற்று, கோவில் நிர்வாகத்திடம் சேர்ப்பித்தது ராஜராஜனின் ஊர்சபை! பிறகு அந்த நிலங்கள் பிராமணர்களுக்குச் சொந்தமான பிரம்மதேயங்களாக, சமஸ்கிருத மொழி வளர்ச்சிக்கான சதுர்வேதி மங்கலங் களாக மாற்றம் பெறுகின்றன. இந்த ஊர்சபை நிர்வாகம் குறித்து பெரிய பாராட்டுகளை ராஜராஜனுக்கு வழங்குகின்ற இன்றைய நண்பர்கள், அந்த ஊர்சபையில் நிலம் வைத்திருப்பவன் மட்டுமே அங்கம் வகிக்க முடிந்தது என்கிற சங்கதியை வசதியாக மறந்துவிடுகின்றனர் அல்லது மறைக்கின்றனர்.</p><p style="margin-top: 1em; margin-right: 0px; margin-bottom: 1em; margin-left: 0px; padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; text-align: justify; color: rgb(51, 51, 51); font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; ">செழிப்பான தஞ்சாவூர் கிராமங்கள் ஒவ்வொன்றின் வளத்தையும் வாழ்வையும் உறிஞ்சித்தான் பெரிய கோவில் கோபுரம் நிமிர்ந்திருக்கிறது. ரூபாய்க்கு 10 வட்டி என்பது இந்தக் காலத்திலேயே கொடுமையாக இருக்கும் போது 12 சதவிகித வட்டிக்குப் பணம்கொடுத்து, அதை வசூலிக்க ஒரு குண்டர் படையையும் வைத்திருந்து லேவாதேவி வேலைபார்த்தவனாக ராஜராஜனுக்கு இன்னொரு மங்கிய முகம் உண்டு. நிலப்பிரபுத்துவம் என்கிறபொருளியியல் ஏற்பாடு ராஜராஜன் காலத்தில்தான் முழுவடிவம் பெற்றது. சொந்த நிலமுள்ளவனுக்குத்தான் அவன் காலத்தில் மதிப்பு. ஒருவன் கோவில் பண்டாரமாக விரும்பினால்கூட அவனிடம் குறிப்பிட்டளவு நிலம் வேண்டும்.</p><p style="margin-top: 1em; margin-right: 0px; margin-bottom: 1em; margin-left: 0px; padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; text-align: justify; color: rgb(51, 51, 51); font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; ">இன்னொரு விஷயம்; தளிச்சேரிப் பெண்களுக்கு ராஜராஜன் வீடு கொடுத்தான், நிலம் கொடுத்தான், ஊதியம் கொடுத்தான், எல்லாம் தந்து பராமரித்தான் என்கிற நண்பர்களிடம் நம்மால் கேட்க முடியும். அந்த 400 பெண்டுகளிடமும் உயர்சாதிப் பெண்களுக்கு விசேஷ சலுகைகளும், சிவதுரோகியாக்கப்பட்ட குடும்பங்களி லிருந்து வந்த ஏழைப்பெண்களுக்கு வேறுவிதமாகவும் பாரபட்சமான முறையையும்தான் காட்டினான்! மேலும் பார்ப்பனர்களுக்கு வழங்கப்பட்ட நிலங்கள் யாவும் வளமான பூமி. தளிச்சேரிப் பெண்டுகளுக்கு தரிசு நிலம் இப்படியான பாகுபாடும் காட்டப்பட்டி ருக்கிறது.</p><p style="margin-top: 1em; margin-right: 0px; margin-bottom: 1em; margin-left: 0px; padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; text-align: justify; color: rgb(51, 51, 51); font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; ">ராஜராஜனைப் பொறுத்தவரையில் இந்த கோயில் கட்டுவது அவனுடைய இலக்காக இருந்திருக்கிறது. அதற்கான பொன்னையும் பொருளையும் தன்னுடைய கஜானாவிலிருந்து தாரை வார்த்ததுபோக மீதியை எப்படியெல்லாம் தேற்றுவது என்று யோசிக்கிறபோதுதான் அவனுடைய பொருளாதார மூளை குடிமக்களைச் சுரண்டு கின்ற யோசனையைச் சொல்லி யிருக்கிறது. அந்தக் கால கட்டத்துப் பெண் களின் கோபுர தற்கொலைகளும், மக்கள் கிளர்ச்சிகளும் பொற்கால ஆட்சியின் புகழ் பாடுகையில் மறைக்கப்படுகிறது.</p><p style="margin-top: 1em; margin-right: 0px; margin-bottom: 1em; margin-left: 0px; padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; text-align: justify; color: rgb(51, 51, 51); font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; ">குடவோலை முறை ஜனநாயகத்தைப் பற்றி பாடபுத்தகங்களில் எழுதி எழுதி மாய்ந்துவிட்டனர். ஆனால் சொத்து இருந்தவனுக்குத்தான் குடவோலையும் ஊர்சபையும் என்று நம் குழந்தைகளுக்கு யார் மறு கற்பித்தல் செய்வது? பண்பாடும் இலக்கியமும் வளர்க்கப்பட்ட சிந்தனை யாளர்கள் தோன்றியிருந்த களப்பிரர்களின் ஆட்சிக்காலம் ‘இருண்ட காலம்’ என்றுதான் நமக்கு கற்பிக்கப்பட்டிருக்கிறது. இதேபோன்றுதான் வருணாசிரமம் வளர்க்கப்பட்ட சோழர்காலம் பொற்காலம் என்று நமக்கு கற்பிக்கப்பட்டு வருகிறது.</p><p style="margin-top: 1em; margin-right: 0px; margin-bottom: 1em; margin-left: 0px; padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; text-align: justify; color: rgb(51, 51, 51); font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; ">ராஜராஜன் தன் குடிமக்கள் மீது விதிக்காத வரியே இல்லை. ஏழை விவசாயி ஒரு பயிருக்கு ஊடுபயிராக இன்னொரு பயிரை வளர்த்தால் கூட ‘ஊடு போக்கு வரி’ என்கிற பெயரில் வசூலித்த அந்த மன்னனை நாம் எப்படிக் கொண்டாடுவது? வரிக்கொடுமை தாங்கமாட்டாமல் தங்களை கோயிலுக்கு விற்றுக் கொண்ட 12 குடும்பங்களின் கதை செங்கல்பட்டு மாவட்ட கல்வெட்டுகளில் இன்றளவும் கண்ணீர்க்கதை போல காணக்கிடைக்கிறது.</p><p style="margin-top: 1em; margin-right: 0px; margin-bottom: 1em; margin-left: 0px; padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; text-align: justify; color: rgb(51, 51, 51); font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; ">எங்களடியாள் அங்காடியும் இவள் மகள்</p><p style="margin-top: 1em; margin-right: 0px; margin-bottom: 1em; margin-left: 0px; padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; text-align: justify; color: rgb(51, 51, 51); font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; ">பெருங்காடியும் இவள் மக்களும்</p><p style="margin-top: 1em; margin-right: 0px; margin-bottom: 1em; margin-left: 0px; padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; text-align: justify; color: rgb(51, 51, 51); font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; ">திருவக்கரை உடைய மாதேவர்க்கு தேவரடியாராக</p><p style="margin-top: 1em; margin-right: 0px; margin-bottom: 1em; margin-left: 0px; padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; text-align: justify; color: rgb(51, 51, 51); font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; ">நீர் வார்த்துக் கொடுத்தோம்</p><p style="margin-top: 1em; margin-right: 0px; margin-bottom: 1em; margin-left: 0px; padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; text-align: justify; color: rgb(51, 51, 51); font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; ">என்கிற வரிகள் ஒப்புதலுக்குக் கொடுக்கப்பட்டவை. ஆனால் இதில் அவர்களுடைய துக்கமும் துயரமும் கையறு நிலையும் பேரோலமும் அடங்கியுள்ளதாகவே உணர முடிகிறது.</p><p style="margin-top: 1em; margin-right: 0px; margin-bottom: 1em; margin-left: 0px; padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; text-align: justify; color: rgb(51, 51, 51); font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; ">ஏழை, எளிய மக்களின் வாழ்விடங்களை பறைச்சேரி, கம்மாளச்சேரி, வண்ணாரச்சேரி என்றெல்லாம் பிரித்து உருவாக்கியதும் பறைச்சுடுகாடு, கம்மாளச்சுடுகாடு என்றெல்லாம் பிரித்ததும் ராஜராஜன் காலத்து கைங்கரியங்கள்தான். ஊடுபயிர் வளர்த்த ஏழை விவசாயிகளை ஊடுபோக்கு வரியால் பழிவாங்கிய மாமன்னன், நிலங்களை பிராமணர்களுக்குத் தாரை வார்க்கிறான். பிராமணர் குழுக்களுக்கு மொத்தமாக நிலம் வழங்கப்பட்டால் அது பிரமதேயம். தனியொரு பிராமணனுக்குத் தரப்பட்டால் அது ஏகபோக பிரமதேயம். இப்படி வேலிக்கணக்கில் ஏகபோக பிரமதேயம் பெற்ற பிராமணக் கதைமாந்தர்களை நீங்கள் கல்கி எழுதிய “பொன்னியின் செல்வன்” போன்ற நாவல்களில்கூட வாசித்துணரலாம். மேலும் இதற்கான கூடுதல் ஆதாரங்களை கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி, கே.கே.பிள்ளை போன்றவர்கள் சோழர்களைக் குறித்து எழுதிய நூல்களிலிருந்தும் கண்டடையலாம். சம்புவரை யர்கள், பழு வேட்டரையர்கள், மலையமான் களெனப் பல சிறு மன்னர்கள் சேர்ந்து செய்த ஆட்சியே சோழர் ஆட்சி என்றும் ‘பொன்னியின் செல்வன்’ நாவல் மூலமாக நமக்கு கூடுதல் தகவல் கிடைக்கிறது. ராஜராஜன் செய்தது இவர்களை எல்லாம் திறம்பட இணைத்ததுதான்.</p><p style="margin-top: 1em; margin-right: 0px; margin-bottom: 1em; margin-left: 0px; padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; text-align: justify; color: rgb(51, 51, 51); font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; ">ராஜராஜன் நிர்மாணித்த பெரிய கோவிலின் பெருமையெல்லாம் அதைக்கட்டிய கல் தச்சர்கள், சிற்பிகள், கடுமையான உடல் உழைப்பாளிகள் இவர்களுடைய வியர்வை யிலும், குருதியிலும், மதிநுட்பத்திலும் அடங்கி யிருக்கிறது.</p><p style="margin-top: 1em; margin-right: 0px; margin-bottom: 1em; margin-left: 0px; padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; text-align: justify; color: rgb(51, 51, 51); font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; ">இன்றைக்குப் ‘பொற்காலம்’ என்று புகழ் பாடுகின்ற இதே நம்முடைய மாநில அரசுதான் 1976-களிலும் இயங்கியது. மாநில அரசு நிறுவனமான தமிழ்நாடு பாடநூல் நிறு வனத்தின் சார்பில் கோ.தங்கவேலு என்பவரைப் பதிப்பாசிரியராகக் கொண்டு தயாரிக்கப்பட்ட “தமிழ் நில வரலாறு” என்னும் நூலில் சோழர்கால ஆட்சி ஏழை விவசாய, உழைக்கும் விளிம்புநிலை மக்களுக்கு எப்படியெல்லாம் பொல்லாத ஆட்சிக்காலமாக விளங்கியது என்று துல்லியமாக ஆராய்ந்து எழுதப்பட்டிருந்தது. அன்றைய திமுக ஆட்சி கலைக்கப்பட்ட பிறகு பிறிதொரு சனாதன ஆலோசகர் குழுவினரால் அந்த நூல் தடை செய்யப்பட்டது. பொல்லாத ஆட்சி பொற்காலம் ஆட்சியாவதும், பொற்காலம் இருண்ட காலமாவதும் இன்றைக்கு வரலாற்றைத் திரிக்கிறவர்களின் கைகளிலே இருக்கிறது. ஆனால் இன்றைக்குள்ள நம்முடைய ஆய்வாளர்கள் இந்த இருட்டடிப்புகளை வெளிச்சப்படுத்து கிறவர்களாகத் துணிச்சலுடன் இயங்கிக் கொண்டிருக் கிறார்கள். கலை போற்றி ஆராதிக்கப்பட்ட காலத்தை நாம் மதிப்புடன் பதிவு செய்கின்ற அதே நேரத்தில் ; ஏழை மக்களும், உழைப்பாளிகளும், பெண்களும் வதைபடும் வாழ்வில் உழன்ற காலத்தை பொற்காலம் என்று மதிப்பிடுவதும், உயரத் தூக்கிக் கொண்டாடி உண்மைக ளை மறைப்பதும் தமிழனின் உண்மையான வரலாறுக்கு, வருங்கால சந்ததியினருக்கு நாம் செய்கின்ற துரோகமாகும்!</p><p style="margin-top: 1em; margin-right: 0px; margin-bottom: 1em; margin-left: 0px; padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; text-align: justify; color: rgb(51, 51, 51); font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; "> (அக்டோபர் 31 - தஞ்சையில் தமுஎகச நடத்திய ஆய்வரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரை)</p><p style="margin-top: 1em; margin-right: 0px; margin-bottom: 1em; margin-left: 0px; padding-top: 0px; padding-right: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; text-align: justify; color: rgb(51, 51, 51); font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; "><span class="Apple-style-span" style="color: rgb(0, 0, 0); font-family: arial; line-height: 25px; font-size: 14px; ">நன்றி - செம்மலர்</span></p><div style="color: rgb(51, 51, 51); font-family: Arial, Helvetica, sans-serif; font-size: 12px; line-height: 18px; "><span class="Apple-style-span" style="color: rgb(0, 0, 0); font-family: arial; line-height: 25px; font-size: 14px; "><br /></span></div>கீரனூர் ஜாகிர்ராஜாhttp://www.blogger.com/profile/16821172975494211862noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5325351298899765001.post-83962390221599711902011-01-13T23:04:00.000-08:002011-01-22T01:03:30.159-08:00படித்ததில் பிடித்தது – துருக்கித் தொப்பி- லக்ஷ்மி பாலகிருஷ்ணன்<span style="LINE-HEIGHT: 24px; COLOR: rgb(51,51,51)font-family:Georgia, 'Bitstream Charter', serif;" class="Apple-style-span" > <p style="PADDING-BOTTOM: 0px; BORDER-RIGHT-WIDTH: 0px; PADDING-LEFT: 0px; PADDING-RIGHT: 0px; BORDER-TOP-WIDTH: 0px; BORDER-BOTTOM-WIDTH: 0px; VERTICAL-ALIGN: baseline; BORDER-LEFT-WIDTH: 0px; PADDING-TOP: 0px; background-origin: initial; background-clip: initial; BACKGROUND-: 0px 0px 24px" color="transparent">முப்பது வருடம் வாழ்ந்தவனும் இல்லை, முப்பது வருடம் தாழ்ந்தவனும் இல்லை என்பது சொலவடை. முப்பது வருடங்கள் என்பது ஒரு தலைமுறை தலையெடுக்கும் கணக்கு. அதில் ஒரு குடும்பம் எழவும் செய்யலாம், விழவும் செய்யலாம் என்பது முன்னோர்களின் கணிப்பு. நம் கண் முன்னால் தலையெடுத்து வளர்ந்து விடுபவர்கள் மேல் சிலருக்கு மதிப்பும், வியப்பும் தோன்றும். சிலருக்கோ பொறாமையும் தோன்றலாம். அதே போல் கண் முன்னால் பாழ்பட்டு போகும் குடும்பத்தைப் பார்த்து சிலருக்கு வேதனை மிகலாம். அல்லது சிலருக்கோ “எனக்கு அப்பவே தெரியும், இப்படி தல கால் புரியாம ஆடினா இப்படித்தான் ஆகும்னு” என்ற கொடூரமான திருப்தியாகவும் இருக்கலாம்.</p><p style="PADDING-BOTTOM: 0px; BORDER-RIGHT-WIDTH: 0px; PADDING-LEFT: 0px; PADDING-RIGHT: 0px; BORDER-TOP-WIDTH: 0px; BORDER-BOTTOM-WIDTH: 0px; VERTICAL-ALIGN: baseline; BORDER-LEFT-WIDTH: 0px; PADDING-TOP: 0px; background-origin: initial; background-clip: initial; BACKGROUND-: 0px 0px 24px" color="transparent">ஜாகிர் ராஜாவின் துருக்கித் தொப்பி எட்டுக்கல் பதித்த வீட்டின் வீழ்ச்சியைப் பற்றிப் பேசும் ஒரு நாவல். துருக்கித் தொப்பியணிந்து செல்வாக்குடன் நடமாடிய எட்டுக்கல் பதித்த வீட்டின் தலைவர் கேபிஷே தன் தொப்பியைத் துறந்து, தன் பரந்த வழுக்கைத் தலைக்கு சற்றும் பொருந்தாத துண்டைத் தலையில் போர்த்திக் கொண்டு, ஊரை விட்டே செல்வதைப் பற்றி பேசுகிறது.</p><p style="PADDING-BOTTOM: 0px; BORDER-RIGHT-WIDTH: 0px; PADDING-LEFT: 0px; PADDING-RIGHT: 0px; BORDER-TOP-WIDTH: 0px; BORDER-BOTTOM-WIDTH: 0px; VERTICAL-ALIGN: baseline; BORDER-LEFT-WIDTH: 0px; PADDING-TOP: 0px; background-origin: initial; background-clip: initial; BACKGROUND-: 0px 0px 24px" color="transparent">கவுரவத்தின் அடையாளமாகப் போற்றப்பட்ட அந்தத் துருக்கித் தொப்பி, தன் நிறமிழந்து வெளிறி, புறக்கணிக்கப் பட்டு, வேம்பின் கிளையில் தூக்கி வீசப் படுகிறது.</p><p style="PADDING-BOTTOM: 0px; BORDER-RIGHT-WIDTH: 0px; PADDING-LEFT: 0px; PADDING-RIGHT: 0px; BORDER-TOP-WIDTH: 0px; BORDER-BOTTOM-WIDTH: 0px; VERTICAL-ALIGN: baseline; BORDER-LEFT-WIDTH: 0px; PADDING-TOP: 0px; background-origin: initial; background-clip: initial; BACKGROUND-: 0px 0px 24px" color="transparent">எந்த குழந்தைக்கு பெரியம்மை போட்டதால் தன்னால் பால் கொடுக்க முடியாமல் போனதே என்று கதறித் தவித்தாளோ, எந்தக் குழந்தைக்காக மாமியாரோடு பெரும் சண்டையிட்டு பித்துப் பிடித்தவள் போல் தெருவிலிறங்கி நடந்தாளோ அதே ரகமத்துல்லாவை கடும் வெறுப்புடனும், குரோதத்துடனும் பெற்ற தாயான நூர்ஜஹானே தூஷிக்க நேர்கிறது.</p><p style="PADDING-BOTTOM: 0px; BORDER-RIGHT-WIDTH: 0px; BACKGROUND-COLOR: transparent; MARGIN: 0px 0px 24px; PADDING-LEFT: 0px; PADDING-RIGHT: 0px; BORDER-TOP-WIDTH: 0px; BORDER-BOTTOM-WIDTH: 0px; VERTICAL-ALIGN: baseline; BORDER-LEFT-WIDTH: 0px; PADDING-TOP: 0px; background-origin: initial; background-clip: initial">எட்டுக்கல் பதித்த வீட்டின் மூத்த வேம்பில் கட்டி வைத்து கேபிஷேவால் அடிக்கப்பட்ட மரம் வெட்டி சாம்பானின் பேரனே வந்து அந்த மூத்த வேம்பை வெட்டிச் சாய்க்கிறான்.</p><p style="PADDING-BOTTOM: 0px; BORDER-RIGHT-WIDTH: 0px; BACKGROUND-COLOR: transparent; MARGIN: 0px 0px 24px; PADDING-LEFT: 0px; PADDING-RIGHT: 0px; BORDER-TOP-WIDTH: 0px; BORDER-BOTTOM-WIDTH: 0px; VERTICAL-ALIGN: baseline; BORDER-LEFT-WIDTH: 0px; PADDING-TOP: 0px; background-origin: initial; background-clip: initial">பள்ளிக் கூடத்து மணிக்கட்டைக்கு வேலுக்குட்டி ஜோசியனிடம் போய் ஜோசியம் கேட்குமளவு வெகுளியாகவும், ஒட்டைக் கால்பந்தை பாகிஸ்தானாக உருவகித்து உதைத்து தள்ளுமளவு புத்திசாலியாகவும் இருக்கும் ரகமத்துல்லா பதின்ம வயதிலேயே காமக் குரோத அபிலாஷைகளோடு அலைவதும், வயதுக்கு மீறிய பக்குவத்தோடு ரூபன் தன் தாயை வட்டமிடுவதைப் புரிந்து கொள்வதும், அதை அப்பாவுக்குத் தெரிவிக்க தவிப்பதுமாக தன் பால்யத்தை இழப்பதைப் பற்றி பேசுகிறது.<br />சொந்தப் பேரனுடனேயே ஓரினச் சேர்க்கை கொள்ள விழையும் கேபிஷே, பதின்மத்தின் சிடுக்கான மனநிலையில் பெற்ற தாயையே காமக் கண் கொண்டு பார்க்கும் ரகமத்துல்லா இரண்டு குழந்தைகளுக்குத் தாயான பின்னும் ரூபனின் போலியான புகழ்சிகளை நோக்கமுணர்ந்தும் கூட அனுமதிக்கும் நூர்ஜஹான் என மனித மனத்தின் அழுக்கான பக்கங்களைப் பற்றியும் மிக இயல்பாக, யாரையும் கொடூரமாகக் காண்பிக்காமல், துளியும் மிகையாகப் போய்விடாமல் தேவையான விவரணைகளுக்கு மேல் போகாமல் கோட்டோவியமாய் தீட்டிக் கொண்டே போய் விடுகிறார் ஜாகிர் ராஜா.<br />ரகமத்ததுல்லா <span style="LINE-HEIGHT: 25px; COLOR: rgb(0,0,0)font-family:arial;font-size:14;" class="Apple-style-span" ></span>தன் தாத்தாவோடு பழனிக்குப் போகையில் இரவின் மயக்கத்தில் வண்ண விளக்குகளின் அலங்காரத்தில் ஜொலிக்கும் சர்ச்சுக்குள்ளிருக்கும் இயேசுவோடு நடத்தும் உரையாடல் ஒரு அற்புதமான கவிதை போல விரிகிறது.</p><p style="PADDING-BOTTOM: 0px; BORDER-RIGHT-WIDTH: 0px; BACKGROUND-COLOR: transparent; MARGIN: 0px 0px 24px; PADDING-LEFT: 0px; PADDING-RIGHT: 0px; BORDER-TOP-WIDTH: 0px; BORDER-BOTTOM-WIDTH: 0px; VERTICAL-ALIGN: baseline; BORDER-LEFT-WIDTH: 0px; PADDING-TOP: 0px; background-origin: initial; background-clip: initial">அவனது பாரங்களை இறக்கி வைத்ததும் தேவகுமாரனே அயர்ந்து போய் தன் ஆட்டுக் குட்டியை தொலைத்துவிடும் அளவுக்கு அவை மலை போல் குவிகிறது. பின்னிரவின் பனிப் போர்வைக்குள் இயேசுவுடன் ரகமத்துல்லா <span style="LINE-HEIGHT: 25px; COLOR: rgb(0,0,0)font-family:arial;font-size:14;" class="Apple-style-span" ></span>பகிர்ந்து கொள்ளும் சோகங்கள் எல்லோருக்கும் தன்னால் இளைப்பாறுதல் தந்துவிட முடியுமென்று உலகுக்கே அறைகூவல் விடுத்த இயேசுவையே மலைக்க வைக்கிறது.</p><p style="PADDING-BOTTOM: 0px; BORDER-RIGHT-WIDTH: 0px; BACKGROUND-COLOR: transparent; MARGIN: 0px 0px 24px; PADDING-LEFT: 0px; PADDING-RIGHT: 0px; BORDER-TOP-WIDTH: 0px; BORDER-BOTTOM-WIDTH: 0px; VERTICAL-ALIGN: baseline; BORDER-LEFT-WIDTH: 0px; PADDING-TOP: 0px; background-origin: initial; background-clip: initial">எனக்கு இந்நாவலில் குறைகள் என்று படும் சில உண்டு. தி.மு.கவின் வரலாற்றை எட்டுக்கல் பதித்த வீட்டு வாரிசான அத்தாவுல்லாவின் வரலாற்றோடு சேர்த்துச் சொல்லும் முயற்சி ஒட்டாமல் நிற்கிறது. வரலாற்றுத் தகவல்கள் ஆங்காங்கே தூவினாற்ப் போல துருத்திக் கொண்டு தெரிகிறது. அத்தாவுல்லாவின் கட்சிப் பற்று அவனது சொத்தை அழிப்பதோடு நூர்ஜஹானின் கருகமணி தவிர்த்து நகைகள் அனைத்தையும் முழுங்குவது பற்றிய சித்திரத்தை ஏற்படுத்த திமுகவின் வருட வாரியான வரலாற்றுத் தகவல்கள் தேவையே இல்லை என்றே நம்புகிறேன். வருடம், பெயர் போன்ற விவரங்கள் தேவைக்கு அதிகமாகப் பயன்படுத்தப் பட்டிருக்கிறது. அது போலவே தென்னாடு ஹோட்டல் பற்றிய விவரணைகளில் அதில் அத்தாவுல்லாவின் பங்கு என்ன என்றே புரியவில்லை.</p><p style="PADDING-BOTTOM: 0px; BORDER-RIGHT-WIDTH: 0px; BACKGROUND-COLOR: transparent; MARGIN: 0px 0px 24px; PADDING-LEFT: 0px; PADDING-RIGHT: 0px; BORDER-TOP-WIDTH: 0px; BORDER-BOTTOM-WIDTH: 0px; VERTICAL-ALIGN: baseline; BORDER-LEFT-WIDTH: 0px; PADDING-TOP: 0px; background-origin: initial; background-clip: initial">இது வரை அதிகம் பேசப்பட்டிராத இஸ்லாமிய பேச்சு வழக்கும், வாழ்கை முறையும் துளியும் மிகையின்றி சித்தரிக்கப் பட்டிருப்பது இந்த நாவலின் பெரும் பலம். அன்ன முகம்மதுவை பல்லால் மெல்லக் கூடாது. அப்படியே விழுங்க வேண்டும் என்பது போன்ற வினோதமான நம்பிக்கைகளும், மார்க்க கல்யாணம் என்று சொல்லப்படும் சுன்னத் சடங்கின் நடைமுறைகளும் என வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்குத் தெரியாத ஒரு உலகை தன் எழுத்தினால் அழகாக கட்டியமைக்கிறார் ஜாகிர் ராஜா. ஆனால் இவரது வெளிப்படையான எழுத்து முறையே நிச்சயம் மூடிய சமூகமான இஸ்லாமிய சமூகத்தில் பல எதிர்ப்புகளை பெற்றுத் தரும் என்பதுதான் யதார்த்தம். ஆனால் அதற்காகவெல்லாம் அஞ்சாமல் நேர்மையான முறையில் தான் மிக நெருக்கமாக இருந்து அவதானித்த ஒரு குடும்பத்தின் கதையை உள்ளது உள்ளபடி பதிவு செய்திருக்கிறார்.</p><p style="PADDING-BOTTOM: 0px; BORDER-RIGHT-WIDTH: 0px; BACKGROUND-COLOR: transparent; MARGIN: 0px 0px 24px; PADDING-LEFT: 0px; PADDING-RIGHT: 0px; BORDER-TOP-WIDTH: 0px; BORDER-BOTTOM-WIDTH: 0px; VERTICAL-ALIGN: baseline; BORDER-LEFT-WIDTH: 0px; PADDING-TOP: 0px; background-origin: initial; background-clip: initial">கோலம் போடுகையில் பெரிய அளவு புள்ளி வைத்துப் போடும் போது ஒரே கோணத்தில் மொத்தக் கோலத்தையும் போட்டு முடித்துவிட முடியாது. முதலில் புள்ளிகளை அடுக்கிக் கொண்டு பின் ஒவ்வொரு திசையிலிருந்தும் கையெட்டும் வரை போட்டுக் கொண்டே வந்தால் கோலம் விறுவிறுவென முற்றுப் பெற்றுவிடும். குறைந்தது பத்து மார்கழியாவது பார்த்த அக்காக்கள் தங்கள் கைவண்ணத்தை காண்பிக்கும் பொழுதுகளில், ஒவ்வொரு திசையிலிருந்தும் கோலத்தின் கோடுகள் வந்து இணையும் நேர்த்தி பார்க்கக் கண் கொள்ளாக் காட்சியாக இருக்கும். அந்த பனிபோர்த்திய விடிகாலைப் பொழுதுகளை நினைவூட்டுவது போலவே வெவ்வேறு திசைகளில் ஆரம்பித்து மெல்ல மெல்ல கதை சொல்லும் பாங்கில் நாவலின் அத்தியாயங்கள் தொகுக்கப் பட்டிருக்கும் விதம் அருமையாய் இருக்கிறது.</p><p style="PADDING-BOTTOM: 0px; BORDER-RIGHT-WIDTH: 0px; BACKGROUND-COLOR: transparent; MARGIN: 0px 0px 24px; PADDING-LEFT: 0px; PADDING-RIGHT: 0px; BORDER-TOP-WIDTH: 0px; BORDER-BOTTOM-WIDTH: 0px; VERTICAL-ALIGN: baseline; BORDER-LEFT-WIDTH: 0px; PADDING-TOP: 0px; background-origin: initial; background-clip: initial">இந்நூலுக்கு முன்னுரை எழுதியிருக்கும் நாஞ்சில் நாடனின் கூற்றுப் படி ‘ஒரு வசமான கை’ என்ற நம்பிக்கையை ஏற்படுத்துவதாகவே இது வரை வாசித்த இவரின் எல்லா எழுத்துக்களும் உள்ளன. எழுதுவதற்கான நியாயம் இருக்கிறதென்று தீர்மானமாக அறிந்து கொண்டபின் எழுதுவதைத் தவிர மனதில் எதுவுமே இல்லாமல் போய் விடுகிறது என்று தன் முன்னுரையில் சொல்கிறார் ஜாகிர் ராஜா. அவரது எழுத்திற்கான நியாயம் அவரது அனுபவங்களில் இருந்து ஊற்றெடுக்கிறது.. அது காயாத வரை இது போன்ற அருமையான பல படைப்புகளை அவரிடமிருந்து எதிர்பார்க்கலாம். எதிர் காலத்தில் மிகவும் நம்பிக்கையளிக்கக்கூடியவராகவும் தெரிகிறார்.</p><p style="PADDING-BOTTOM: 0px; BORDER-RIGHT-WIDTH: 0px; BACKGROUND-COLOR: transparent; MARGIN: 0px 0px 24px; PADDING-LEFT: 0px; PADDING-RIGHT: 0px; BORDER-TOP-WIDTH: 0px; BORDER-BOTTOM-WIDTH: 0px; VERTICAL-ALIGN: baseline; BORDER-LEFT-WIDTH: 0px; PADDING-TOP: 0px; background-origin: initial; background-clip: initial">-<span style="LINE-HEIGHT: 25px; COLOR: rgb(0,0,0)font-family:arial;font-size:14;" class="Apple-style-span" >நன்றி - மலர்வனம்.காம்</span></p></span>கீரனூர் ஜாகிர்ராஜாhttp://www.blogger.com/profile/16821172975494211862noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5325351298899765001.post-10595474924255572122011-01-13T22:58:00.000-08:002011-01-13T23:02:45.524-08:00தேய்பிறை இரவுகளின் கதை - கீரனூர் ஜாகிர் ராஜாவின் ’துருக்கி தொப்பி’ நாவல் விமர்சனம் - இளங்கோ கிருஷ்ணன்<span class="Apple-style-span" style="font-family: 'Times New Roman'; font-size: small; -webkit-border-horizontal-spacing: 6px; -webkit-border-vertical-spacing: 6px; "><p><b>எதார்த்தவாத நாவல்கள் ஒரு பார்<span lang="ta">வை</span></b></p><p align="justify">தமிழில் நாவல் என்ற கலைவடிவம் தோன்றி ஒன்றேகால் நூற்றாண்டுகள் கடந்து விட்டதாக நாம் பேசிக் கொண்டாலும் நாவல் என்பது குறித்து பொதுவாக ஒப்புக் கொள்ளப்பட்ட வரையறைகளின்படி பார்க்கும் போது க.நா.சுவினுடைய ’பொய்த்தேவு’ நாவலையே நாம் தமிழின் முதல் செவ்வியல் நாவல் எனக் கொள்ளமுடியும். இது நடந்தது 1940களுக்குப்பிறகு இந்த காலகட்டமானது மேற்கில் நவீன நாவல்களின் காலமாக மாறத் துவங்கியிருந்த காலம் ஆகும். சுமார் 200 ஆண்டுகாலம் நாவல் வடிவத்தில் இயங்கி தன்னியல்பாக நவீன நாவல்களுக்குள் மேற்குலகம் சென்றிருந்த சூழலில்தான் நம்முடைய முதல் செவ்வியல் நாவல் எழுதப்பட்டது.உண்மையில் அதுவும் கூட ஒருவகை எதார்த்தவாத நாவல் என்றே கொள்ளமுடியும்.<br /><br />செவ்வியல் நாவல் என்பதும் எதார்த்தவாத நாவல் என்பதும் வேறு வேறு அல்ல என்பதைப்போன்ற கருத்தியல் ஒன்று தமிழ்ச்சூழலில் உண்டு. ஒரு மேலோட்டமான பார்வைக்கு அப்படித் தோன்றினாலும் இரண்டும் வேறு வேறே. எவ்வாறு நவீன நாவல் என்பது செவ்வியல் நாவலில் இருந்து பிரிந்து போன கலைவடிவமோ அப்படியே எதார்த்தவாத நாவல் என்பதும் செவ்வியல் நாவலில் இருந்து மலர்ந்த ஒரு வடிவமே. வடிவமைப்பிலும் மொழிதலிலும் எதார்த்தவாத நாவல்களுக்கும் செவ்வியல் நாவல்களுக்கும் சில ஒற்றுமைகள் உண்டு. ஆனால் ஆன்மாவில் இரண்டும் வேறுபட்டன.ஒரு செவ்வியல் நாவல் என்பதன் இயங்குதளமானது ஒப்பீட்டளவில் எதார்த்தவாத நாவலை விடவும் விரிந்தது. உலக அளவில் மிக பரந்துபட்ட செவ்வியல் நாவல் வடிவங்களை உருவாகியதில் ரஷ்ய இலக்கியக்கங்களுக்கு ஒரு பெரும் பங்கு உண்டு. டால்ஸ்டாய்,தாஸ்தாயெவ்ஸ்கி, தாமஸ் மன், விக்டர் ஹீயூகோ போன்ற பெயர்களை நாம் இன்றளவும் பேசக்காரணம் அவர்கள் படைப்புகளில் இயங்கும் செவ்வியல்வாத பண்பே. அவர்கள் நாவல் என்பதை ஒட்டுமொத்த வாழ்வினுடைய சாரம் என்பதாக பார்த்தார்கள். தங்கள் படைப்புகளின் வழியாக வாழ்வை மொத்தமாக அள்ள முயன்றவர்கள் செவ்வியல் நாவல்காரகள் எனலாம். மாறாக எதார்த்தவாத நாவல்களோ அந்த எல்லையிலிருந்து சற்று குறுகியதாகவே இருந்தது. குறிப்பாக ரஷ்ய எதார்த்தவாத நாவல்கள்.மார்க்சிய அழகியல் என்ற கோட்பாடு பின் நாட்களில் எதார்த்தவாத நாவல்களின் எல்லையை மேலும் சுருக்கி நாவல் என்பது மார்க்சியக்கோட்பாடுகளை கதைக்களனில் நிறுத்தி நிகழும் எல்லா விஷயங்களுக்கும் வர்க்க சாயல் பூச முயன்றது. இந்த வகை நாவல்களானது செவ்வியல் நாவல்களிலிருந்து மேலும் சுருங்கிய எல்லைகளைக் கொண்டதாகவே இருந்தது.<br /><br />நாவல் வரலாறு என்பது மொழிக்கு மொழி வேறானதே என்பதை சொல்லத்தேவை இல்லை. ஆனால் பொதுவாக இந்திய மொழிகளின் துவக்ககால நாவல்களுக்கு ரஷ்ய நாவல்கள் பெரும் ஆதர்சமாக இருந்தன.க.நா.சு வைத் தவிர துவக்ககால தமிழ் நாவலாசிரியர்கள் ரஷ்ய நாவல்களின் தாக்கம் கொண்டவர்களே. குறிப்பாக ஜெயகாந்தன், சுந்தரராமசாமி போன்றவர்களைச் சொல்லலாம். இந்த போக்கானது தமிழில் நாவல் என்ற வடிவத்தை எதார்த்தவாத நாவல் என்ற வடிவமாக ஊன்றச் செய்தது.இவ்வாறாக செவ்வியல் நாவல் என்ற வடிவத்தில் போதிய பரிச்சயம் நிகழாமலேயே நாம் எதார்த்தவாத நாவல்களை எழுதத் துவங்கினோம்.அதுவும் குறிப்பாக ரஷ்ய வகை எதார்த்தவாத நாவல்களை எழுதத்துவங்கினோம். எதார்த்தவாத நாவல்கள் ஒரு மொழியில் தொடர்ந்து வினையாற்றும் போது ஏற்படுகிற முக்கியமான விளைவுகளில் ஒன்று. அவைகள் அம்மொழியின் நாட்டார் கலை வடிவங்களில் இருந்து தனக்கான சாரத்தை எடுத்து கொள்கிற முறைமை ஆகும். தமிழில் அது கதை சொல்லி மரபை கிரகித்துக் கொண்டது முக்கியமான அம்சம் எனலாம். கி.ராஜநராயணன், சண்முக சுந்தரம்,பூமணி, நாஞ்சில் நாடன் முதல் இமையம், அ.முத்துலிங்கம், மேலாண்மை பொன்னுச்சாமி, ஜாகிர்ராஜா வரை எண்ணற்ற உதாரணங்கள் இதற்கு உண்டு.மேற்குறிப்பிட்ட பட்டியல் முழுமையானது அல்ல என்பதைச் சொல்லத் தேவையில்லை.<br /><br />முன்னர் சொன்னது போல் செவ்வியல் நாவல் மரபு ஆழமாக ஊன்றாமல் எதார்த்தவாத நாவல்களுக்குள் நாம் ஈடுபட்டதென்பது சில சிக்கல்களை ஏற்படுத்தியது. தொடர்ந்து எதார்த்தவாத நாவல்களிலிருந்து நவீன நாவல்களை நாம் உருவாக்க முற்பட்டது சூழலை மேலும் சிக்கலாக்கியது.அவற்றில் பிரதானமானது என்னவெனில் எதார்த்தவாத நாவல்காரகள் எளிய கதை சொல்லிகளாக குறுகிக் கொண்டதுதான். இந்த நூலின் முன்னுரையில் எதார்த்தவாத நாவல்கள் என்றாலே நவீன நாவல்காரகளுக்கு இளக்காரம்தான் என்பதைப் போன்ற சொற்களை நாஞ்சில் நாடன் எழுதுவதற்கு இதுவே காரணம்.<br /><br />நவீன நாவல்காரன் நாட்டார் மரபோடோ, எதார்த்தவாத மரபோடோ எந்த தொடர்பும் அற்றவன். அவன் செவ்வியல் நாவல்களின் வடிவப்போதாமை மற்றும் கருத்தியல் போதாமைகளின் வழி தனக்கான அழகியலை உருவாக்கிக் கொண்டவன் என்பதை போன்ற சூழல் ஒன்று நிகழ்ந்ததுவே இப்படி ஒரு உரையாடலுக்கான காரணம் என நாம் அவதானிக்கலாம். மேலும் கதைசொல்லி என்பவன் எழுத்தாளனை விடவும் உயர்ந்தவன் அல்ல என்பதை போன்ற கருத்தியல் ஒன்றும் நமது சூழலில் நிலவுகிறது. இதற்கும் இந்த அடிப்படைக் கோளாறே காரணம் என நாம் கருத வேண்டியிருக்கிறது. நவீன நாவலின் பிதாமகன்கள் எனக் கருதப்படும் காப்ரியல் கார்சியா மார்க்வெஸ், மிலரோட் பாவிச், ஓரான் பாமுக் போன்றவர்கள் தங்களை ஒரு கதை சொல்லி எனக் கூறிக் கொள்வதை நாம் இங்கு நினைவு கூர வேண்டும்.பின் நவீன காலத்தின் செல்வாக்கு மிக்க கருத்தியல்களில் ஒன்று வேர்களை தேடிப்போதல் என்பதாகும். மேலும் நவீன கால கருத்தியல்களை மறுப்பது என்பதும் அதன் பண்புகளில் ஒன்று. அந்த வகையில் நம் சமகாலத்திய நாவலாசிரியன் ஒருவன் தன்னை கதைசொல்லி எனக் கூறிக்கொள்வதில் எந்த ஆச்சர்யமும் கிடையாதுதான். ஆனால் எழுத்தாளனையும் கதைசொல்லியையும் சமமாக பாவிக்கும் பண்பு ஒன்று மேற்கூறியவர்களிடம் காணப்படுவதையும் நாம் கவனிக்கவேண்டும். இந்த எழுத்தாளன் என்பவன் செவ்வியல் நாவலாசிரியனின் தொகுத்துக்கூறும் பண்பை பெற்றிருப்பவன். ஆனால் எதையும் நிறுவி விட முயலாத பின் நவீன மனம் உடையவன். நம்முடைய சமகால எழுத்தாளர்களிடம் அரிதாக காணப்படும் இந்த பண்பே இந்த பரஸ்பர பிளவுக்குக் காரணமாக இருக்க கூடும்.<br /><br /><b>துருக்கித் தொப்பி </b><br /><br />ஒரு விமர்சகனின் வேலை நாவலின் கதைச்சுருக்கத்தைச் சொல்வதல்ல உண்மையில் நாவல் என்பதும் வெறும் கதை மட்டுமல்ல. துருக்கித் தொப்பி எல்லா அசாதாரண நாவல்களையும் போலவே சீரழிவைப் பேசும் நாவல்.வாழ்ந்து கெட்ட குடும்பம் ஒன்றின் துயரமான கதை. கே.பி.ஷே என்ற துருக்கித் தொப்பிக்காரர் குடும்பம் ஒன்று எப்படி வாழ்க்கையின் கோரப்பிடியில் சிக்கி வக்கற்றுப் போனது என்பதைப் பேசும் கதை. கே.பி.ஷே குடும்பம் என்கிற ஒரு குறியீட்டின் வழியாக எண்ணற்ற நவீன இஸ்லாமிய குடும்ப வாழ்வை, இன்னும் சொல்லப்போனால் தமிழ் வாழ்வை அவர்களின் உணர்வுகளைப் பேசும் நாவல். மிகவும் கட்டுக்கோப்போடும் ரசனையோடும் வலியோடும் எழுதப்பட்டிருக்கிறது இந்நாவல். இறுதியில் நிறமிழந்து போன துருக்கித் தொப்பி ஒன்று வேம்பின் கிளைகளில் ஆடும் சித்திரத்தை நாவலாசிரியர் நம் கண்முன் விரித்துக் காட்டும் போது நாம் மனம் பொங்கி போகிறோம். கனத்த மனதுடன் நாம் நன்றாக வாழ்ந்த காலத்தின் நாஸ்டால்ஜியாவுக்குள் மூழ்குகிறோம். கே.பி.ஷேவின் மனைவியான பட்டாமாளுக்கு தான் எட்டுக்கல் பதிச்ச வீட்டுக்காரி என்பதிலும் ஆட்டுக்கறி சாப்பிடும் மேலான இனம் என்பதிலும் பெருமை அதிகம். தன் மருமகள் மேற்கு தெருவை சார்ந்தவளென்றும் அவர்கள் மாட்டுக்கறி சாப்பிடுபவர்கள் என்றும் இளக்காரம் பேசுகிறாள்.நாவல் முழுவதும் வேறு வேறு சந்தர்ப்பங்களில் சமூகத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வுகள் மிக நுட்பமாக பதிவு செய்யப்படுகிறது. தன் மருமகள் அயலான் ஒருவனோடு தன் வீட்டிற்குள் பேசிக்கொண்டிருப்பதைக் கூட அனர்த்தமாகவே பார்க்கிறாள் பட்டம்மாள். உண்மையில் பட்டாமாள் இந்த சமூகத்தின் சராசரி மனிதர்களில் ஒருத்தி என்று பார்க்கும் போது இச்சமூகம் பெண் உடல் மீதான கண்காணிப்புக்கு எவ்வளவு முக்கியத்துவம் தருகிறது என்பதை நாம் உணர்கிறோம். நம்முடைய பண்பாடு கலாச்சாரம் என்பதெல்லாம் பெண் உடலை மையமாக வைத்தல்லவா வரையறுக்கப்பட்டிருக்கிறது! மருமகள் பேரனுக்குப் பால் கொடுப்பதை மறைந்து நின்று பார்க்கும் கே.பி.ஷே, தன்னை விட இளைய ரகமத்துல்லாவை யாருமற்ற போது முத்தமிடும் மல்லிகா, குளிக்கும்,உடைமாற்றும் தாயை ரசிக்கும் ரகமத்துல்லா, கணவன் ஊரில் இல்லை எனத் தெரிந்து கொண்டு நூர்ஜகானிடம் பேச்சு வளர்க்கும் ரூபன், அதை அனுமதிக்கும் நூர்ஜகான். என காமம் பற்றிய நுட்பமான காட்சிப்படுத்தல்கள் நாவல் முழுதும் உள்ளது. இது குறித்து இன்னும் கூட விரிவாக ஜாகிர் எழுதியிருக்கலாம் என்று படுகிறது. ரகமத்துல்லாவின் வழியாக குழந்தைகளின் உளவியல் அழகாகப் பதிவாகிறது. தன் தாய் தன் மீது அன்பு செலுத்தாமல் போனதற்கு தன் தம்பிதான் காரணம் என நினைத்து ஒரு செங்கல்லை தம்பியென பாவித்து வன்மம் வளர்ப்பது. அந்த தம்பி காணாமல் போய்விட்ட போது தன் மீது சந்தேகப்படும் அம்மாவை நினைத்து மனம் வெம்புவது என ரகமத்துல்லாவின் உணர்வுகள் அழகாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது.<br /><br />சமூகத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வுகள், குடும்ப வன்முறை, பாலியல் சிக்கல்கள், குழந்தைகளின் உளவியல், உறவுச் சிக்கல்கள் போன்றவற்றை நுட்பமான மானுட உணர்வுகளின் வழியாக மிகுந்த வலியோடு பேசுகிறார் ஜாகிர் ராஜா. இந்த நாவலில் பயன்படுத்தப்பட்டிருக்கும் வட்டார மொழி இந்நாவலின் ஆகப்பெரிய பலம் எனலாம். நாவலோடு சேர்ந்து தமிழகத்தின் அரசியல் வரலாறு பேசப்படுகிறது. சுதந்திர காலம் துவங்கி தி.மு.க அதிகாரத்தை கைப்பற்றுவது வரையான அக்கட்சியின் வளர்ச்சி முகமும் தீவிர தி.மு.க காரனான அத்தாவுல்லா குடும்பம் நன்றாக வாழ்வதில் துவங்கி பிழைப்பு தேடி அவன் எங்கோ போவது வரை அவன் குடும்பத்தின் இறங்கு முகமும். எதிர் முரண்களாக கட்டமைந்து எதையோ உணர்த்த முயல்கின்றன. இதில் காட்டப்படும் உலகம் தமிழ்ச் சூழலுக்கு மிகவும் புதிது. இதில் சொல்லப்படும் தகவல்கள் வெகுமக்கள் நம்பிக்கைகள், பழமொழிகள்,சொலவடைகள் போன்றவைகள் தமிழ் இலக்கிய உலகம் இது வரை அறியாதது. அன்னமுகம்மதுவ பழிக்காதடா எனச் சொல்வது,பிறைபார்த்ததும் மனதுக்கு பிடித்தமானவரை பார்க்க வேண்டும் என்ற நம்பிக்கை, மாட்டுக்கறியை பெரியாட்டுக் கறி என்பது போன்றவற்றை உதரணமாக சொல்லலாம். ‘Novel is an art of data’ என மார்க்வெஸ் சொல்வதை இங்கு நான் நினைத்துக் கொள்கிறேன். அப்படிப் பார்க்கும் போது எண்ணற்ற நுட்பமான தகவல்களோடு எழுதப்பட்டிருக்கும் ஒரு சமூக ஆவணம் என நாம் இந்த நாவலை தாராளமாகச் சொல்ல முடியும்.<br /><br /><b>துருக்கித் தொப்பி எனும் நாவல- ஓர் உரையாடல்</b><br /><br />இந்த நாவல் மூன்று விதங்களில் எழுதப்பட்டிருக்கிறது. கதைசொல்லி கதையைச் சொல்வது போலவும் எழுத்தாளன் விவரிப்பது போலவும் கதாபாத்திரங்கள் தங்கள் மன உணர்வுகளைப் பேசுவது போலவுமாக மூன்று முனைகளில் இக்கதைகளின் சம்பவங்கள் மாறி மாறி கட்டமைக்கப்பட்டிருக்கின்றன. இந்த கட்டமைப்பு நாவலுக்கு ஒரு சரளத்தன்மையை வழங்கியிருக்கிறது. எந்த ஒரு முறை வாசிப்பில் தொய்வு ஏற்படுத்த துவங்குகிறதோ அந்த முறை கைவிடப்பட்டு வேறொரு முறை கையாளப்படுவதன் மூலம் நாவல் தன்னை வேகமாக முன்னகர்த்திக் கொண்டே போகிறது. தன் முன்னுரையில் நாஞ்சில் நாடன் ஜாகிர் ஏன் இவ்வளவு சுருக்கமாக எழுதுகிறார் என ஆதங்கப்பட்டிருப்பதோடு எனக்கும் உடன்பாடு உண்டு.என்னுடைய இரண்டாம் வாசிப்பில் மிக விரிவாக எழுத வேண்டிய இடங்களை கூட சுருக்கமாக எழுதுகிறாரே என ஆதங்கத்தோடேயே வாசித்தேன்.ஒவ்வொரு கலைவடிவத்திலும் உள்ள அடிப்படையான சிக்கல் என்பது அதில் மெளனத்தை எங்கு ஒளித்து வைப்பது என்பதுதான். இசையில் ஒவ்வொரு துடிப்புக்கும் அதாவது ஒவ்வொரு பல்ஸக்கும் இடையில் அதன் மெளனம் உள்ளது. கவிதையில் மெளனம் என்பது சொற்களின் இடையில் உள்ளது.சிறுகதையில் கதை முடிந்ததும் உள்ளது. உண்மையில் நவீன சிறுகதைகளில் மெளனம் சொற்களின் இடையேயும் உள்ளது.அப்படிப்பார்க்கும் போது நாவல்களில் மெளனம் இரண்டு அத்தியாங்களுக்கான இடைவெளியில் அல்லது இரண்டு சம்பவத்துணுக்குகளுக்கான இடைவெளியில் உள்ளது எனலாம்.மெளனத்தைக் கட்டமைப்பதிலும் காலத்தை தரிசனப்படுத்துவதிலும் வெற்றியடைந்த நாவல்களே மிகச்சிற்ந்த நாவல்களாக உள்ளன.<br /><br />துருக்கித் தொப்பி நாவலின் பலவீனமான பகுதி ஏதாவது இருக்குமானால் அது மெளனத்தை கட்டமைப்பதில் ஏற்பட்டிருக்கும் சிறு சரிவே ஆகும். ஏற்கனவே சொல்லி விட்டதை மீண்டும் சொல்வதை போன்ற நினைவுதரும் சொற்றொடர்கள். போதிய இடைவெளியின்றியும், அளவுக்கதிகமான இடைவெளிகளோடும் கோர்க்கப்பட்டிருக்கும் சம்பவக் கோர்வைகள் போன்றவை ஒரு தேர்ந்த வாசகனுக்கு சலிப்பு தருபவை. ஆனால் கதையைச்சில இடங்களில் முன்னுக்குப் பின்னாக மாற்றி மாற்றி சொல்வதன் மூலம் தான் சொல்லவந்த காலத்தை மிகச் சரியாக தரிசனப்படுத்தி நாவலின் மையமான உணர்ச்சியை வாசக மனதில் அழுத்தமாக பதிய வைத்ததன் மூலம் நாவல் வெறும் சம்பவக் கோர்வையாக மாறிப்போகிற ஒரு பெரும் விபத்திலிருந்து தப்பியிருக்கிறது எனலாம்.<br /><br /><b>ஜாகிர்ராஜா எனும் கதைசொல்லி</b><br /><br />கி.ராஜநாராயணனை ஒரு கதைசொல்லி எனச் சொல்ல நமக்கு எந்த தயக்கமும் கிடையாது. அதுபோலவே சுந்தரராமசாமியை ஒரு எழுத்தாளர் என்று நாம் துணிந்து கூறலாம். ஆனால் ஜாகிர்ராஜாவை கதைசொல்லி என்றோ எழுத்தாளர் என்றோ எளிய சட்டகங்களுக்குள் அடக்கி விட முடியாது.இது அவரின் மிக முக்கியமான பலம் மற்றும் பலவீனம் எனலாம்.உண்மையில் ஜாகிருக்கும் முந்தைய தலைமுறையை சேர்ந்த எதார்த்தவாத நாவலாசிரியர்கள் பலருக்கும் இந்த எடுகோள் பொருந்தும். ஆனால் எந்த ஒரு நாவலாசிரியனுக்குள்ளும் கதைசொல்லி, எழுத்தாளன் என்கிற இரண்டு ஆளுமைகளில் யாரேனும் ஒருவரே அழுத்தம் பெற்று இருக்க முடியும்.அப்படிப் பார்க்கும் போது ஜாகிரை நாம் கதைசொல்லி என்றே கொள்ளமுடியும். துருக்கி தொப்பி நாவலை விடவும் முதலிரண்டு நாவல்களை பார்த்தால் இது உண்மை எனப்புரியும். ஆனால் அப்படியான எளிய தர்க்கப்படுத்தல்களுக்கெல்லாம் அடங்காத வீச்சு அவரின் எழுத்துகளுக்கு உண்டு என்பதற்கு துருக்கி தொப்பி நாவலே சாட்சி. இந்த நாவலில் எழுத்தாளனும் கதைசொல்லியும் நுட்பமாக இணைந்தும் முரண்பட்டும் ஒருவரோடு ஒருவர் போட்டியிட்டும் ஒரு அழகான நாவலை உருவாக்கிகாட்டியிருக்கிறார்கள். இந்த நாவலின் முன்னுரையில் இந்த நாவல் என்னுடைய முதல் இரண்டு நாவல்களில் இருந்து வேறுபட்டது என அவர் கூறுவதற்கு வடிவமைப்பில் செய்திருக்கும் இந்த மாற்றமே காரணம்.<br /><br />ஜாகிர் ராஜா கதை சொல்லும் போது நாம் அந்த சொல்லலின் அழகில் மயங்கி அதை பின் தொடர்கிறோம். ஒரு கதை சொல்லிக்கு சொல்லப்படுவதின் முக்கியத்தை போலவே சொல்லும் முறையும் முக்கியமானது அல்லவா.எட்டுகல் பதிச்ச வீட்டின் அத்தாவுல்லா நூர்ஜஹான் திருமணம் பற்றி சொல்லும் விதமே மிக சிறந்த உதாரணம். அவ்வளவு ரசித்து ஒரு கதையை சொல்லிச்செல்ல சொல்லின் ருசியறிந்த ஒரு மனதாலேயே முடியும்.ஆனால் அவரின் முதலிரண்டு நாவல்களோடு ஒப்பிடும் போது இதில் ஜாகிர் என்கிற கதை சொல்லியை அல்லது அவரது ஆளுமையை சற்று குறைவாகவே காண நேர்கிறது. உண்மையில் இதை நான் ஒரு சரிவாக பார்க்கவில்லை மாறாக மிக சரியான ஒரு ஆரோக்கியமான பயணமாகவே பார்க்கிறேன். ஒரு கதை சொல்லியாக இருந்து கொண்டு ஜாகிர்ராஜாவின் அளவிற்கு எழுத்தாள ஆளுமையை வளர்த்துக் கொண்டவர்கள் நாஞ்சில் நாடன், இமையம் போன்ற ஒரு சிலரே. ஜாகிர் அதில் வெற்றி பெற்றிருக்கிறார் என்றே சொல்வேன்.<br /><br /><b>ஜாகிர்ராஜா எனும் ஓர் எழுத்தாளன </b><br /><br />மேற்கின் நாவல் ரசனை மரபில் ஒரு நாவல் எப்படி துவங்கப்படுகிறது அல்லது எப்படி முடிகிறது என்பதை சிலாகித்துப் பேசும் வழக்கம் உண்டு. மகிழ்ச்சியான குடும்பங்களின் கதை ஒன்று போலவே இருக்கும். ஆனால் மகிழ்ச்சியற்ற குடும்பங்களின் கதை ஒவ்வொன்றும் வேறு வேறு எனத் துவங்கும் அன்னாகரினீனாவின் துவக்கமும், நாளை மற்றுமொரு நாளே என முடியும் கான் வித் தி விண்ட் நாவலின் முடிவும். காலங்களில் அதுவே மிகச்சிறந்ததாக இருந்தது, காலங்களில் அதுவே மோசமாக இருந்தது என துவங்கும் டேல் ஆப் டூ சிட்டிஸ் நாவலின் துவக்கமும் ரசனை மரபை சேர்ந்த விமர்சகர்களால் இன்றும் கொண்டாடப்படுவது.<br /><br />நல்ல முறையில் துவங்கப்பட்ட ஒரு நாவலானது வாசகனை காந்தம் போல் உள் இழுக்கும் தன்மை கொண்டது. நல்ல முறையில் ஒரு நாவலை துவங்குவதற்கு ஒரு நாவலாசிரியன் வெறும் கதை சொல்லியாய் இருந்தால் போதாது அவன் ஒரு நல்ல எழுத்தாளனாக இருக்க வேண்டும்.<br /><br />எட்டுகல் பதிச்ச வீட்டுக்கு குட்டி லெவை மகள் நூர்ஜஹான் பேகம் வாக்கப்பட்டு வந்த நாளில் தலைவாசலில் நின்றிருந்த வேம்புகள் இரண்டும் பூப்பூக்கத் துவங்கியிருந்தன’ என கச்சிதமாக, அழகாக துவங்குகிறது இந்நாவல். முதல் அத்தியாயத்தின் முதல் வரியில் பூப்பூக்க துவங்கிய அந்த வேப்பமரத்தில் ஒன்று இறுதி அத்தியாயத்தில் உதிரும் இலை கூட்டிப்பெருக்க மாட்டாமல் வெட்டி எறியப்படுகிறது. இந்த இரண்டு காட்சிகளும் நாவலின் மையத்திற்கு அழகான குறியீடாக மாறுகின்றன. அது போலவே நாவலின் துவக்கப்பகுதியில் கம்பீரமாக தொப்பி மாட்டியில் காட்டப்படும் துருக்கித்தொப்பி இறுதி பகுதியில் நிறம் வெளுத்து நைந்து இளைய வேம்பின் கிளைகளில் ஆடிக்கொண்டிருப்பதாக காட்டப்படுகிறது. இது போன்ற அம்சங்களே ஜாகிரை ஒரு தேர்ந்த எழுத்தாளராக மாற்றுகிறது. தான் உணர்ந்த சமூகம் சார்ந்த சிக்கல்களை, உறவுச்சிக்கல்களை வலிந்து திணிப்பதாகத் தெரியாமல் கதையின் போக்கில் நிகழ்வுகளின் போக்கில் வாசகனாக வந்தடையும்படி செய்திருப்பது இன்னொரு உதாரணம்.<br /><br /><b>ஜாகிர்ராஜா எனும் ஆளுமை </b><br /><br />எழுத்தின் எந்த வடிவத்தச் சேர்ந்த கலைஞனாக இருந்தாலும் ஒரு ஆளுமையாக அவன் மலர வேண்டும். ஆளுமையாக மலர்தல் என்பது இலக்கிய பொதுப்புத்தியால் அங்கீகரிக்கப்பட்ட படைப்புகளை தொடர்ந்து வழங்குதல் அல்ல. அது, ஒரு கலைஞன் தனது தொடர்ந்த தேடல்கள் வழியாக வாழ்வு பற்றிய தனது அவதானங்கள், தரிசனங்கள், தர்க்கங்கள் ஆகியவற்றை தன் மொழிக்குள் கொண்டுவருவதன் மூலம் அம் மொழியின் ஒட்டு மொத்த மானுட அறிவை மேம்படுத்துவது அல்லது விரிவுபடுத்துவது ஆகும்.<br /><br />ஜாகிர்ராஜாவிடம் ஒரு ஆளுமைக்கான எல்லா பண்புகளும் உண்டு. இப்படிச் சொல்வதால் அவர் அனைத்தையும் சாதித்துவிட்டார் என்பதாக நாம் புரிந்து கொள்ள வேண்டியதில்லை. நாம் முன்பே சொன்னது போல எழுத்தாளனையும் கதை சொல்லியையும் சரியான விகிதத்தில் இணைக்கிற ஆளுமைத்திறன் அவரிடம் உண்டு. தொப்பம்பட்டி புளியம்பட்டித் தங்கமணலில் முளைத்த வேகவைத்த சுவைமிக்க பிஞ்சுக் கத்திரிக்காயும் நீலகிரிப் பனியில் தோண்டியெடுத்த உருளைக்கிழங்கும் சண்முக நதித்தீரத்தில் சொந்த தோப்பில் பறித்த நாட்டு மாங்காயும் மனுஷாளின் உயரத்துக்கு போட்டியாக வளர்ந்த சதைப்பற்றுள்ள முருங்கைகளுடன் குறும்பாட்டுக் கறியும் மசாலாக் குழுமமும் இணைத்துச் செய்கிற ஊர்குழம்பென்றால் அத்தனை இஷ்டம் பட்டமாளுக்கு என்ற வரிகளில் மேற்சொன்ன அந்த சரியான சேர்மானத்தை நாம் பார்க்கலாம். இந்த அசாதாரண சேர்மானமே மார்க்வெஸ் எனும் கலைஞனைத் தந்தது. பாமுக் எனும் ரஸவாதியைத் தந்தது. உலகின் மிகச்சிறந்த கதைசொல்லி என பாவிச்சை பெருமையடையச் செய்தது.<br /><br />இறுதியாக சொல்வதெனில், சில போதாமைகள் இருந்தாலும் துருக்கித் தொப்பி ஒரு நல்ல நாவல். அதை விட முக்கியமான விஷயம் ஜாகிர்ராஜா துருக்கி தொப்பியை விட மிகச்சிறந்த நாவல்களை எல்லாம் எழுதும் அளவுக்கு ஆளுமை நிறைந்தவர். இதற்கு இவரது முதலிரண்டு நாவல்களுக்கும் இந்த நாவலுக்கும் உள்ள வித்தியாசமே சாட்சி.</p><p align="justify"><br /></p></span>கீரனூர் ஜாகிர்ராஜாhttp://www.blogger.com/profile/16821172975494211862noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-5325351298899765001.post-21931848548398975862009-07-29T01:59:00.000-07:002009-07-29T04:17:58.150-07:00செம்பருத்தி பூத்த வீடு - வெங்கட் சாமிநாதன் விமர்சனம்<h2 style="font-weight: bold;"><span style="font-size:100%;"><span style="font-size:85%;">ஜாகிர் ராஜாவின் ‘செம்பருத்தி பூத்த வீடு’</span></span></h2><span style="font-size:100%;">தமிழில் இப்போது நிறையப் பேர் நன்றாக எழுதுகிறார்கள்தான். ஆரம்ப காலங்களில், முப்பது நாற்பதுக்களில் இப்படி ஒரு எழுத்துத் திறன், சிலருக்கு வரப்பிரசாதம் போல் வந்தடைந்தது. அனேகருக்கு பயிற்சியினால்தான் கிடைக்கவிருந்தது. இப்போது கிட்டத்தட்ட இரண்டு தலைமுறைக் <a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjpqS5yJk29ay3dy24l4EKZtyIaAw3KnK0-eloPPmG1vzcbxigOnvQxQoYyluUZqyjzIcZJlH2k0N-E59nTHiGvVbY2eMwBtCGruv4bnFggYWf6im15JgcXuRmNNTWb3M0vNLb82vKcZFzj/s1600-h/vesa-150x150.jpg"><img tooltip="linkalert-tip" style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 150px; height: 150px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjpqS5yJk29ay3dy24l4EKZtyIaAw3KnK0-eloPPmG1vzcbxigOnvQxQoYyluUZqyjzIcZJlH2k0N-E59nTHiGvVbY2eMwBtCGruv4bnFggYWf6im15JgcXuRmNNTWb3M0vNLb82vKcZFzj/s320/vesa-150x150.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5363805052993382466" border="0" /></a></span><span style="font-size:100%;">காலத்திற்குப் பிறகு, எழுத ஆரம்பிக்கும்போதே ஏதோ பிதுரார்ஜித சொத்துக்கு வாரிசானது போலத்தான் எழுத்துத்திறன் தானாகவே சித்தித்து விடுகிறது. இருந்தாலும், ஒரு புதிய திறனைப் பார்க்கும்போது சந்தோஷமாகத்தான் இருக்கிறது. எழுத்துத்திறன் மாத்திரம் இல்லை. தன்னைச் சுற்றியுள்ள மனிதர்களையும், வாழ்க்கையையும் சொல்லிவிட முடிகிறது சரி. அதிலும் எழுதுபவனின் தனித்துவத்தை அடையாளம் காட்டும் எழுத்தாகவும் இருந்து விட்டால் இன்னமும் சிறப்புத்தான். சாதாரணமாகச் சொல்லிவிடலாம். எழுதுகிறவனின் தனித்துவம் இல்லாத எழுத்து என்ன எழுத்து என்று. வாஸ்தவம்தான்.</span> <p><span style="font-size:100%;">ஆனால், இன்று அப்படி எல்லோராலும் இருந்துவிட முடிகிறதில்லை. ஸ்தாபனம் சார்ந்து, கட்சி சார்ந்து, வரித்துக் கொண்ட சித்தாந்தம் சார்ந்து, எல்லைக்கோடுகள் வரையப்பட்டுவிடுகின்றன. அததற்கான சித்தரிப்புகள், மனித குணாம்சங்கள், ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டுவிடுகின்றன. அவற்றை மீறுவது இயலாத ஒன்றாகிவிடுகிறது. முதலில் மீறும் எண்ணம் இருப்பதில்லை. ஒரு முற்போக்கு எழுத்தாளன் அவனே ஒரு ஆட்டோ ரிக்ஷாக்காரனின் அடாவடித்தனத்திர்கு இரையாகியிருந்தாலும், அப்படி ஒரு சித்தரிப்பைக் கொடுத்து விடமுடியாது. ரிக்ஷாக்காரன் ஒரு பாட்டாளி. அவன் சுரண்டலுக்கு இரையாகிறவன் என்று ஒரு வாய்ப்பாடு தரப்பட்டிருக்கிறது. பணம் படைத்தவன் இரக்கமற்றவனாகத்தான் இருப்பான். அதெப்படியோ அந்தப் பணக்காரனின் பெண்ணைத்தான் ஒரு ஏழைத் தொழிலாளி காதலித்துத் தொலைப்பான். (ரகுநாதனின் பஞ்சும் பசியும்.) இப்படி ஒவ்வொரு வகைக்குமான குணச்சித்தரிப்பு வாய்பாடு இருக்கிறது.</span></p> <p><span style="font-size:100%;">இதையெல்லாம் இப்போது நாம் சீரியஸாக எடுத்துக் கொள்வது கிடையாது. வியட்நாமில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அட்டகாசங்களைப் பற்றி இப்போது எந்த முற்போக்கும் கவிதையும் எழுதுவது கிடையாது. அவர்களில் பலரை இப்போது கோடம்பாக்கம் ஸ்டுடியோக்களில், அல்லது கலைஞரைப் பாராட்டும் விழா மேடைகளில் பார்க்கலாம். இப்படி ஒவ்வொரு கட்சிக் கொள்கை, சித்தாந்தம் சார்ந்த எழுத்தாளர்களுக்கு அததற்கான வரையரைகள், பார்வைக் கோணங்கள் உண்டு. ஒரு காலகட்டம் வரை இந்த வரையறைகள் பொதுவாக நமக்குத் தெளிவாகத் தெரிந்ததில்லை. கழகத்தாரின் எழுத்துக்களும் முற்போக்குகளின் எழுத்துக்களும் அனேகமாக வரும் வழியிலேயே பின்தங்கி விட்டன. வானம்பாடிகளை, பாரதிதாசனை, சிதம்பர ரகுநாதனை, கழக எழுத்துச் சிற்பிகளை ஓவியர்களைப் பற்றி யாருக்கு இப்போது கவலை? தலித் எழுத்தாளர்கள் தான் எந்த எல்லை விதிப்புக்கும் கட்டுப் படாமல் தம் அனுபவம் சார்ந்து எழுதுகின்றனர். அந்த அனுபவங்களும் எழுத்துக்களும் சித்தாந்திகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் சிரமம் தருகின்றன.</span></p> <p><span style="font-size:100%;">ஆனால் இதையெல்லாம் பார்க்க, இப்போது அதிகம் கெடுபிடிகளுக்கு உள்ளாவது முஸ்லிம் சமுதாயத்திலிருந்து எழும் எழுத்தாளர்கள்தான். இது தமிழ்நாட்டில் மட்டுமல்ல உலகம் முழுதும் நிலவும் கெடுபிடி. இந்த விதிமுறைகளும், மீறுவோர்க்கான கண்டனங்களும், எழுத்துலகத்திலிருந்து வருவதில்லை. மதத்தலைவர்களிடமிருந்து வருகின்றன. மதத்தலைவர்களின் தாக்கீதுகளுக்கு பயந்து வாழும் முஸ்லிம் எழுத்துலக பிரகிருதிகளிடமிருந்து வருகின்றன. இந்தக் கெடுபிடிகள், முற்போக்குகளும் தலித் எழுத்தாளர்களும் எதிர்கொள்வதைவிட மிகக் கடுமையானவை. சமூகத்திலிருந்து ஒதுக்கப்படும் அளவுக்கு அவை கடுமையானவை. இதற்கு மேலும் கடுமை கொள்வது தமிழ்நாட்டில் இதுவரை நிகழவில்லை என்பதில் நாம் ஆசுவாசம் கொள்ளலாம்.</span></p> <p><span style="font-size:100%;">சமீப காலங்களில் முஸ்லிம் சமுதாயக் கவிஞர், கதைக்காரர்கள் தம் சமுதாயத்தைப் பற்றிய சித்தரிப்பில் தம் அனுபவ உண்மையையே எழுதி வருகிறார்கள். அவர்கள் தம் சமுதாயத்திற்கு எதிராக எழுத வேண்டும், ஏதும் புரட்சி செய்யவேண்டும் என்ற எண்ணத்தில் எழுதவில்லை தான். எந்த சமுதாயத்திலும் காணும் காட்சிகளைத் தான் அவர்கள் தம் அனுபவத்திலும் கண்டு எழுதியுள்ளார்கள். ஆனால், அவர்கள் முஸ்லிம்களாதலால், அவர்கள் வாழும் உலகைப் பற்றி எழுதியிருக்கிறார்கள். ஒவ்வொரு சமூகத்திலும் உள்ள தனிமனிதர்களின் குணக்கேடு தனி மனிதக் குணக்கேடேயல்லாது, மதம் சார்ந்ததல்ல என்பதை மதத் தலைவர்கள் புரிந்து கொள்வதில்லை. பாதகமான ஒரு செயலோ நிகழ்வோ ஒரு முஸ்லிமோடு சம்பந்தப்பட்டிருந்தால் அது இஸ்லாமையே குறித்ததாக எடுத்துக்கொள்கிறார்கள். இது அவர்கள் பார்வைக் குறுகலையே வெளிப்படுத்துகிறது என்பது அவர்களுக்குப் புரிவதில்லை.</span></p><p><span style="font-size:100%;">‘செம்பருத்தி பூத்த வீடு’ என்று ஒரு சிறுகதைத் தொகுதி, கீரனூர் ஜாகிர் ராஜா எழுதியது. ஐந்து வருடங்களுக்கு முன் வெளிவந்தது, இப்போதுதான் என் பார்வையில் பட்டது. காலதாமதமானாலும் இப்போதாவது எனக்குப் படிக்கக் கிடைத்ததே என்று சந்தோஷப்படவைக்கும் எழுத்து கீரனூர் ஜாகிர் ராஜாவினது. முஸ்லிம் சமூகத்திலிருந்து வரும் எழுத்தாளர்கள் எழுத உட்காரும்போதே மிகுந்த தயக்கத்தோடேயேதான், தான் ஒரு முஸ்லிம், தனக்குத் தெரிந்த உலகைப் பற்றிய அனுபவங்களைத்தான் எழுதினாலும் யார் என்ன சொல்வார்களோ, என்னென்ன பாதக விளைவுகளைச் சந்திக்க வேண்டுமோ என்ற பயத்தோடும் எச்சரிக்கையோடும்தான் எழுதுவார்களோ என்று எண்ணத் தோன்றுவது, மதவாதிகளின் கெடுபிடிகள் அதிகமாகிக்கொண்டிருக்கும் இன்றைய சூழலில், இயல்புதான். ஹெச்.ஜி. ரசூல் படும்பாடு நமக்குத் தெரியும். இன்னம் இங்கு யாரும் எந்த மதத் தலைவரும் அயதொல்லா கொமீனியாகவில்லை.</span></p><p><span style="font-size:100%;">ஆனால் இம்மாதிரியான தயக்கங்களுக்கோ பயங்களுக்கோ ஜாகிர் ராஜாவின் கதைகளில் இடமில்லை. எச்சரிக்கையோடு எழுதுகிறார் என்று அர்த்தமில்லை. யாரும் எந்த சமூகத்திலிருந்தாலும், தன் அனுபவங்களை எழுதுவது போலத்தான் இவரும் தன் உலகின் மனிதர்களையும் நடந்த சம்பவங்களையும் எழுதுகிறார். இவர் ஒரு ஜாகிர் ராஜாவாக இல்லாது ஒரு சிவராமனாக, பழனிச்சாமியாக இருந்திருந்தால் மேலே எழுதியது எதுவும் எழுதவேண்டியிராது.</span></p> <p><span style="font-size:100%;">தலைப்புக் கதையையே எடுத்துக் கொள்ளலாமே. படித்துக்கொண்டிருந்த காலத்தில் ஏற்பட்ட ஒரு பெண்ணிடம் கொண்டிருந்த ஒரு கிறக்கம். அப்பா இறந்ததும் பெரியப்பாவோடு வியாபாரத்தில் இறங்கி கேரளம் போய் பத்துப் பதினைந்து வருடங்களாயிற்று. பின் வியாபாரம் படுத்துவிடவே ஊர் திரும்பும்போது சின்ன வயசுக் காதலி பற்றிய நினைப்பு வருகிறது. பழைய செம்பருத்தி பூத்த வீடு இருக்கிறது. ஆனால் அந்த கவுண்டப் பொண்ணு மயிலாத்தா எப்பவோ இறந்துவிட்டதாக செய்தி சொல்வது சின்ன வயசிலிருந்து மிக நெருக்காமாகப் பழகிய கூடலிங்கம்தான். “மாப்ள, அந்தப் புள்ளே செத்துப் போயி ஏழெட்டு வருஷமாச்சேடா…” என்கிறான் கூடலிங்கம். அந்த ஊர் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள ஊர் என்று தெரிகிறது. அப்படியிருந்தும், மைதீனுக்குப் பிடித்த ஒரே நண்பன் கூடலிங்கம்தான். இந்த கூடலிங்கம் இன்னும் அனேகக் கதைகளில் நண்பனாக வருகிறான். வேறு எந்த பெயரும் இவ்வளவு நெருக்கத்தில் பேசப்படவில்லை.</span></p> <p><span style="font-size:100%;">மயிலாத்தா இருக்கும் கவுண்டரோட வீடு … “<em>எப்பண்ணாலும், யாருண்ணாலும் போகலாம்….எங்க வீடு மாதிரி ஜென்னலுக்கு மறைப்பு, கதவுக்கு மறைப்பு, கதவுக்கு அங்கிட்டு ஒரு மறைப்புன்னல்லாம் இருக்காது. தொறந்த வீடு. வாசல்பூராவும் பூச்செடிங்க ….</em>” இது ஒருவாறாக ஜாகிரின் மனநிலையைச் சொல்கிறது என்று சொல்லத் தோன்றுகிறது.</span></p> <p><span style="font-size:100%;">அனீஃபா ராவுத்தர் தன் பெண் பரீதாவை தன் சொத்தெல்லாம் வித்து கட்டிக்கொடுத்துவிட்டார். மாப்பிள்ளை மஜீத் தை நாலு நாள் மீனும் கறியுமாக உபசாரம் செய்ய வழி தெரியாது, பள்ளிவாசல் குளத்தில் இருக்கும் ராஜ மீனைத் திருடிவிடுகிறார். “இந்த வாழ்க்கை வாழறதுக்கு பதிலா கபர்ஸ்தான் வந்து குழிவெட்டி படுத்துக்கலாம்” என்று சொல்கிறார் இபுராஹீம் லெப்பை.</span></p> <p><span style="font-size:100%;">எங்கும் காணும் ஏழ்மையின் கொடுமைதான். அதை உணர மறுக்கும் பணத்தின் மூர்க்கம்தான். ஆனால் ஒரு முஸ்லிம் குடும்பத்தில் ஆயிஷா என்னும் சிறுபெண் இருப்பது அதிசயம் தான். ஆயிஷாவின் உயிருக்குயிரான நூரின்னிசா இறந்து விடுகிறாள். பின்னால் ஆயிஷா பாசம் கொள்ளும் ஆட்டுக்குட்டியே நூரின்னிசாவாகத் தோன்றுகிறது ஆயிஷாவுக்கு. நூரின்னிசாவின் பாத்திஹாவின்போது ஐம்பது பேருக்கு சாப்பாடு போட பணம் சேர்க்கிறாள் ஆயிஷா. சித்தப்பா வீட்டுக்குக் கொஞ்ச நாள் போய்விட்டுத் திரும்பியபோது ஆட்டுக்குட்டியைக் காணோம். பக்ரீது செலவுக்குப் பணம் வேண்டுமே விற்றாயிற்று. இது தெரிந்ததும் உண்டியலை உடைத்து பணத்தை எடுத்துக்கொண்டு நூரின்னிசாவை வாங்க ஓடுகிறாள் ஆயிஷா. ஆயிஷா ஒரு தனிப் பிறவிதான். “இந்த துனியாவில் மாமிசம் மறுத்த முதல் முஸ்லிம் பெண்ணல்லவா அவள். அவளை ஏர்வாடிக்குக் கூட்டிட்டுப்போயி ஓதிப்பார்த்து ஒரு தாயத்து கட்டி இழுத்துட்டு வரவேண்டிய கேஸ்,” என்றுதான் அம்மாவுக்கு அத்தாவுக்கும் அபிப்ராயம். இப்படி ஒரு சிறு பெண் ஒரு முஸ்லிம் குடும்பத்தில் காண்பது ஆச்சரியம்தான். ஆனால், அப்துல் கலாம் இருக்கிறாரே என்று சொல்லலாம். ஆச்சரியம்தான். ஆயிஷாவின் ஆத்தா நோயாளி. இருந்தாலும் நோன்பிருக்கிறாள். ‘நோன்பு திறக்க’ பள்ளி வாசலிலிருந்து அறிவுப்புக்காகக் காத்திருக்கிறாள், ஆத்தா. அவள் முன்பு கஞ்சியும் கொட்டை நீக்கப்பட்ட பேரீச்சம் பழங்களும். கஞ்சி சரி. பேரீச்சம்பழங்கள்? வேறு பழங்கள் உதவாது போலும்.</span></p> <p><span style="font-size:100%;">பக்ரீது ஆடுகள் என்று ஒரு கதை. பல கதைகளில் பேசப்படும் சுலைமான் ராவுத்தர்தான் ஆடுகளை பல ஊர்களிலிருந்து வாங்கி வந்து உள்ளூரில், பல கதைகளில் பேசப்படும், ஏ.எம்.எஸ் முதலாளிக்கும் இன்னும் மற்ற வேண்டுபவர்களுக்கும் பக்ரீத் குர்பானிக்காக சப்ளை செய்பவர். இப்படித்தான் அவர் பிழைப்பு நடந்து வருகிறது. சுலைமான் ராவுத்தரும் அவர் உதவியாள் ஜின்னாவும் இந்த வருஷமும் வெளியூர்களிலிருந்து ஆடு பத்திக்கொண்டு வந்து முதல் நாள் இரவே ஊரில் எல்லோருக்கும் செய்தி சொல்லியும் ஆயிற்று. ஆனாலும் ஆடு கேட்டு யாரும் கதவைத் தட்டவில்லை. என்னவென்று விசாரிக்கப் போன இடத்தில் ஒரே கூட்டம். யாரும் ராவுத்தரைக் கண்டு கொள்ளவில்லை. கடைசியாக எல்லோரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்த ஏ.எம்.எஸ் முதலாளி ப்ளஷர் காரில் வந்து இறங்குகிறார். அவர் பின்னால் ஒரு லாரியில் வந்து இறங்குவது ஒட்டகம். “வக்காலி, சுத்து வட்டாரத்திலே நம்ம சனத்திலே எவனாச்சி ஒட்டகம் அறுத்து குர்பானி குடுத்ததா கதையாச்சிம் உண்டா?” என்று பெருமிதத்துடன் தன் செயலை சொல்லிக் கொள்கிறார். மாறி வரும் வாழ்க்கைச் சூழல் மதிப்புகள்! இனி சுலைமான் ராவுத்தருக்கு அடுத்த ஊர் சந்தைக்குப் போனால் பத்தாது. ராஜஸ்தானுக்குப் போகவேண்டும். இல்லை, ஹஜ் போய்த் திரும்பும்போது ஆளுக்கொரு ஒட்டகத்தையும் ஓட்டிக்கொண்டு வரவேண்டும்.</span></p> <p><span style="font-size:100%;">அமானுஷியில் ஒரு அமானுஷ்ய நிகழ்வையும் அமானுஷ்யப் பெண்ணையும் சந்திக்கிறோம். ரஜியா நிக்காஹ்-க்காகக் காத்திருக்கும் பெண். அவளுக்கு “கனவில் நாகூர் ஆண்டவரும் இன்னும் நானூத்தி நாலு பேரும் வந்து அவளுக்கு ஏதோ ரகசியமாகச் சொல்லி” விட்டுப் போகிறார்கள். ரஜியா அந்த ரகசியம் என்னவென்று சொல்வதில்லை. ஆத்தா, பெத்தம்மா, அம்மா, முஜி, யாருக்குமே. ஒவ்வொரு சமயம் பூடகமாக ஏதோ சொல்வாள். “வாய் தவிக்கும், நாக்கு வறளும், கிணறு…” என்று போய்ப்பார்த்தல், கிணற்றில் ஒரு ஆண் பிணம். இப்படிப் பல. நாகூர் தர்காவுக்கே போகாத ரஜியா நாகூரைப் பற்றி விலாவாரியாகச் சொல்கிறாள். ஆக, அவள் ஏதும் புது ரகசியம் இருப்பதாகச் சொல்லும்போதெல்லாம், எல்லோருக்கும் என்ன நடக்குமோ என்று பயம். அவள் ஏர்வாடி கேஸ் இல்லை, அது போலத் தோன்றினாலும். ஒரு முறை பேஷ் இமாமை அழைத்து வந்து என்ன ரகசியம் என்று அவளைக் கேட்கச் சொல்கிறார்கள். ரஜியா ஒரு அறையில் அடுத்த அறையில் பேஷ் இமாம். அறைகளுக்கு வெளியே ஊரே திரண்டு ஒரே கூட்டம். பேஷ் இமாம் நடுச்சுவரில் காதை வைத்து என்ன ரகசியம் சொல் என்கிறார். ரஜியா சொல்கிறாள், “பேஷ் இமாம் அவர்களே, குரானின் முப்பது ஜூஸ்களையும் நீங்கள் மனப்பாடமாக ஓதிக் காட்டினால், அந்த ரகசியத்தைச் சொல்கிறேன்” என்கிறாள். இமாம் திடுக்கிட்டு வெலவெலத்துப் போகிறார். அந்த சமயத்தில் பள்ளிவாசல் பாங்கு கேட்கிறது. தொழுகைக்கு நேரமாகிறது என்று சொல்லிக் கொண்டே பள்ளிவாசலுக்கு ஓடி விடுகிறார், இமாம்.</span></p> <p><span style="font-size:100%;">“சொடலை வந்திருக்கேன், சாமி” என்று நாணாவின் வீட்டு முன் வந்து கத்துவான் சக்கிலியன் சொடலை. மிஞ்சிப் போன சோறு, கறி ஆணம் என்று கொண்டு போடுவாள் ஆமினா. சக்கிலியன் சொடலையிடம் இந்தக் கருணை காட்டுவது நாணா மாத்திரமே அந்த ஊரில். மற்ற எல்லா இடத்திலும் கிடைப்பது அவமானம்தான். சொடலையின் பெண்டாட்டிக்கும் நாணாவுக்கும் ஒரு ஒட்டுதல். சக்கிலிப் பெண் என்றெல்லாம் அவர் பார்ப்பதில்லை. “இஸ்லாத்தில் சேந்து விடு. ஒத்தரும் ஒதுக்கமாட்டான். எல்லோரும் ஒண்ணா நிண்டு தொழலாம், சொடலை இல்லை. உம்பேரு சுலைமான். எப்படி இருக்கு!” என்று ஆசை காட்டுகிறார். அவனுக்கும் ஆசைதான். மீன் தூண்டிலில் சிக்கிவிட்டது என்று நாணாவுக்கும் சந்தோஷம். புது கைலி, சட்டை, தொப்பி எல்லாம் வருகிறது. நூறு ரூபாய் நோட்டு ஒன்றும் அவன் கையில். நாளைக்கு குளிச்சிட்டு புது சட்டை கைலி கட்டீட்டு வந்துரு பள்ளி வாசலுக்கு என்கிறார் நாணா. ஊரில் ஒரே பரபரப்பு. சுடலை சுலைமானாகப் போகிறான் என்று.</span></p> <p><span style="font-size:100%;">இரண்டு நாள் கழித்து நாணா வீட்டுத் திண்ணையில் ஒரு பையில் கைலி, சட்டையெல்லாம் திணிக்கப்பட்டுக் கிடக்கிறது. சுடலை பழைய காக்கி உடையில் பட்டை பட்டையாக விபூதி பூசிக்கொண்டு நிற்கிறான், வாசலில்.</span></p> <p><span style="font-size:100%;">மார்க்க விஷயத்தில் ‘கெடுபிடியான’ ஆளான காசிம் ராவுத்தரின் ஏழ்மையில் அவர் மகன் அப்துல்லா ராமசாமி கடையில் வேலைக்குச் சேர்கிறான். ஒரு ஸ்டூல் மேல் ஏறி, கடையில் இருக்கும் சாமி படங்களுக்கெல்லாம் பூ சார்த்துவான் அப்துல்லா. இந்த சமாசாரம் காசிம் ராவுத்தருக்கு ஒருநாள் தெரிந்ததும், “ஒரு காஃபிரை எனக்குப் புள்ளையா தந்துட்டியேடா, யா அல்லாஹ்” என்று புலம்புகிறார். “அப்படியானால் இந்த நாட்டில் எத்தனை லட்சம் காஃபிர்கள்” என்று அப்துல்லாவின் மனதில் கேள்விகள். அத்தா அவனை மன்னிக்க மறுத்துவிடுகிறார். அப்துல்லாவின் கனவில் கதீஜா ஒரு பொட்டலம் பூவைக்கொடுத்து அனுப்புகிறாள் கடைக்கு. அத்தா அவனை ஆதுரத்துடன் பார்க்கிறார். ஆனால் அது அவன் கனவுதான். வீடு என்னவோ வெறிச்சிட்டிருக்கிறது. இந்தக் கதை ‘காஃபிர்.’</span></p> <p><span style="font-size:100%;">குஜராத் போன்ற இடங்களுக்கு ஆட்கள் அனுப்ப கறுப்புக்கோட்டுக்கு புரோக்கராக தொழில் செய்து கமிஷனில் வாழ்பவர் முத்தலீப். இப்போது நிலைமை மாறிவிட்டது. பூகம்பம், குஜராத் கலவரம் எல்லாம் சேர்ந்து ஆள் கிடைப்பது துர்லபமாகிக்கொண்டு வருகிறது. நம்ம கமிஷன்லேதானே இவன் நாலு குமருகளுக்கு நிக்காஹ் செஞ்சு வச்சான், இப்போ இப்படி காலை வாறுகிறானே என்று கருப்புக் கோட்டுக்குக் குமுறல். இன்னம் ஒரு பொண்ணைக் கரையேத்தணுமே என்று முத்தலீபுக்கு கவலை. வெளியூர்லே ஒருத்தருக்கும் காட்டாமே படிக்க வச்சிட்டிருக்கியே உன் மவன். அவனை சேர்த்து மூணு பேரை நாளைக்கு அனுப்பிடு என்று கட்டளை பிறக்கிறது கறுப்புக்கோட்டிடமிருந்து. எவன் எக்கேடு கெட்டால் என்ன, தன் வியாபாரம் தொடரணும் கறுப்புக் கோட்டுக்கு.</span></p> <p><span style="font-size:100%;">சஃபியா தன் கணவன் இக்பாலால் கைவிடப்பட்டவள். மூன்று வயதுக் குழந்தை வேறு. மதரசாவில் கற்ற இஸ்லாம் மார்க்க கல்வி அவளுக்கு உதவுகிறது. மேலும் மௌல்வியின் பெண் என்ற காரணத்தாலும் மதரஸாவில் அவளுக்கு வேலை கிடைக்கிறது. இக்பால் தலாக் கொடுத்தால் அதை ஏற்றுக்கொள்ளத் தயாராகத்தான் இருக்கிறாள் சஃபியா. ஆனால் அவன் கொடுப்பதாக இல்லை. “அல்லாஹ் மிகவும் மனம் வெறுத்துத் தான் இதற்கான அனுமைதியைத் தந்திருக்கிறான். தலாக்கின் மூன்று நிலைகள், அந்த அவகாசங்கள் மிக முக்கியமானவை. அதை எவரும் லட்சியப்படுத்துவதில்லை” என்றும் ஜாகிர் ராஜா கதையில் சொல்கிறார். பள்ளி வாசலில் சஃபியாவின் மனதைச் சஞ்சலப்படுத்துவது பிலால். “அவன் கவிதை ‘ஆதம் ஹவ்வா’ காலம், ஷாபானு, சல்மான் ருஷ்டி, தஸ்லீமா நஸ்ரீன் வரை பேசி, ஒரு வழக்கமான முஸ்லிம் குரலாய் பாபரி மஸ்ஜித், பொதுச் சிவில் சட்டம் வரை அலசி ஒய்ந்து..” என்று இக்பாலைப் பற்றிச் சொல்கிறது கதை.</span></p> <p><span style="font-size:100%;">‘செம்பருத்தி பூத்த வீடு’ தொகுப்பில் 19 கதைகள். இக்கதைகளினூடே, இன்றைய தமிழ்நாட்டு முஸ்லிம் சமூகம், அதன் பல வண்ணங்கள் மாத்திரமல்ல, ஜாகிர் ராஜாவையும் கூட சந்திக்கலாம். இனி ஜாகிர் ராஜாவின் எழுத்துக்களைத் தேடிப் படிக்க வேண்டும் என்று தோன்றுகிறது.</span></p><p><span style="font-size:100%;"><em>செம்பருத்தி பூத்த வீடு - ஜாகிர் ராஜாவின் சிறுகதைகள். </em></span></p> <p><span style="font-size:100%;">வெளியீடு:</span></p> <p><span style="font-size:100%;">அனன்யா பதிப்பகம்<br />8/37, பி.ஏ.ஒய். நகர் (குழந்தை இயேசு கோயில் அருகில்)<br />புதுக்கோட்டை சாலை, தஞ்சாவூர் - 613005</span></p><p><span style="font-size:100%;">நன்றி: தமிழ்இந்து.காம்</span></p><p><span style="font-size:100%;">தமிழ்இந்து.காம்-ல் வாசிக்க: <a tooltip="linkalert-tip" href="http://www.tamilhindu.com/2009/07/jakir_raja_book_review/">http://www.tamilhindu.com/2009/07/jakir_raja_book_review/</a><br /></span></p>கீரனூர் ஜாகிர்ராஜாhttp://www.blogger.com/profile/16821172975494211862noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-5325351298899765001.post-30601037595363479702009-07-13T22:35:00.000-07:002009-07-13T22:36:28.806-07:00ஜெகநாதன் said...அன்பு ஜாகிர்ராஜா,<br />பாங்கு ஒலியை காலை அலராமாக கொண்டிருந்தாலும், கறி பிரியாணியாக நோன்பு நாளை அடையாளங்கண்டிருந்தாலும், மாமா மாப்ளேன்னு வாயார குசலம் விசாரித்துக் கொண்டாலும், துலுக்கத் திமிரு என்று தள்ளியே வாழும் சாமானியனாகவே இருந்தேன் - உங்கள் எழுத்தை வாசிக்கும் முன். நம்மூரு (ஐம் ப்ரம்<br />தாராபுரம்) ஸைடுல எழுதுறவங்கன்னா சுப்ரபாரதிமணியன், க.சீ. சிவக்குமார், என். ஸ்ரீராம் இப்படி கொஞ்சம் பேர தான் தெரியும். 2000-ல் தருமபுரி நூலகத்தில் உங்க சிறுகதை தொகுதி செம்பருத்தி பூத்த வீடு கிடைச்சது (அப்ப அங்க பொறியியல் படிச்சுக்கிட்டு இருந்தேன்) படிச்சு முடிச்சதும் கீரனூர் கிளம்பி உங்களப் பாக்கணும்னு தோணுச்சு. விசாரிச்சதுல நீங்க தஞ்சாவூர் பக்கமா ஸெட்டில் ஆயிட்டதா சொன்னாங்க. அப்ப இருந்து புத்தகத்துக்கு நடுவுல வெச்சிருக்கிற மயிலிறகு மாதிரி இருக்கு உங்க எழுத்து. இப்ப இந்த மாதிரி பிளாக்கில உங்கள சந்திக்கிறது ஒரு சைபர்த்தனமான சந்தோஷமா இருக்கு.<br />உங்கள் கதைங்கள் கொங்கு நிலப்பரப்பை ஒட்டிய இஸ்லாமிய வாழ்வுமுறையை யதார்த்தமாக உணர்த்துகிறது. பாங்கு ஒலி, பர்தா மறைத்த அழகு, உருது பாஷை, பிற சம்பிரதாயங்கள் என பாகுபாடுகள் அனைத்தும் ஒரே தள்ளலில் தள்ளி அந்த எளிய உலகத்தினுள் பிரவேசிக்க முடிகிறது. இவ்வளவு எளிமையாய் முஸ்லீம்<br />சமுதாயத்தை படித்துணர முடியும் என எப்போதும் நினைக்கவில்லை. சொல்லப்போனால் உங்கள் எழுத்து ஒரு யாத்ரீகன் எழுதியது போல் நேர்மையாகவும் யதார்த்தமாகவும் உள்ளது.<br />தற்போது என்னிடம் உங்கள் புத்தகம் எதுவும் இல்லை. சரியான வரிகளை நினைவு கூற முடியவில்லை. இருப்பினும் மசூதி குளத்தின் மீனைத் திருடும் மாமனார், குளத்துக்குள் குசு விட்டால் குமிழிகள் வரும் எனும் கஞ்சா தோழன், மதினாவுக்கு யாத்திரை சென்ற தம்பதியினர், மதம் மாற்றப்படுபவன், ஒட்டக வரவால் ஆட்டு வியாபாரத்தை இழக்கும் கசாப்புக் கடைக்காரர், லப்பை-ராவுத்தர் வேற்றுமை என இந்த உலகம், பக்கத்திலேயே இருந்தாலும் பார்வைக்கு தட்டுபட்டதேயில்லை.<br />எல்லா மதத்திலும் பொதுவான விஷயம் - வறுமையை ஒண்ணும் செய்ய முடியாதுங்கிறதுதான் போலிருக்கிறது. என்ன செய்ய வறுமைதானே மதத்தையே தோற்றுவித்திருக்கிறது.<br /><br />வாழ்த்துக்களுடன்..<br /><br />க. ஜெகநாதன்<br />http://jaganathank.blogspot.com/கீரனூர் ஜாகிர்ராஜாhttp://www.blogger.com/profile/16821172975494211862noreply@blogger.com1