Wednesday, March 27, 2013

கந்தாடை நாராயணசாமி சுப்ரமணியம்



ஊருக்கு உவக்காததைச் சொல்ல
ஒருவனுக்குத் தனிநரகம் உண்டென்றால்
அங்குதான் ஜீவிப்பேன் நான்...                                                                            
−க.நா.சு.

  மறைந்த எழுத்தாளர் க.நா.சு.வின் நூற்றாண்டு இது என்பதால் தமிழின் பெரும்பாலான சிறு பத்திரிகைகள் அவரைக்குறித்த கட்டுரைகளைக் கேட்டு எழுதி வாங்கி வெளியிட்டு ஓய்ந்திருக்கின்றன.  ஒரு எழுத்தாளரின்   நூற்றாண்டை இப்படி எல்லாம் விமர்சையாக கௌரவிக்க வேண்டும்தான். இயன்றால் இன்னும் அதிகமாகக் கொண்டாட வேண்டும்தான். க.நா.சு.வும் இந்தப் புகழுரைகளுக்குத் தகுதியானவரே. எனக்கும் கூட கா.ந.சு.வை எழுதவேண்டும் எனத் தோன்றியதில் ஒருவித நியாயம் இருக்கிறதுதான். ஓரளவு அவருடைய எழுத்துக்களை வாசித்தவனாக, அவருடைய இலக்கியப் பங்களிப்பைக் குறித்து அறிந்தவனாக, அவருடன் நீண்டகாலம் பழகி நிழல்போல் தொடர்ந்து சென்றதால் அவருடைய Ôவால்Õ என்று வர்ணிக்கப்பட்ட தஞ்சை ப்ரகாஷ் என்பவருடன் இருந்து, அவர் வாய்ஓயாமல் க.நா.சு.வைக் குறித்துப் பேசியதை எல்லாம் காதுகொடுத்துக் கேட்டவனாக இருந்ததால் நெருடல்கள் எதுவுமின்றி இதை எழுத முடிந்தது.
 எனது பிராயத்தில், கலை கலைக்காகவா, கலை மக்களுக்காகவா என்கிற இரண்டு முக்கியமான கேள்விகளுக்கு முன், நான் சிறிதுகாலம் கலை கலைக்காகவே என்கிற வீராப்புடனும், (எனக்குப் போதித்தவர்களின் பாதிப்புகளால்) பிறகு ÔÔகலை கலைக்காகவும், கலை மக்களுக்காகவும்ÕÕ  என நானே உருவாக்கிக் கொண்ட ஒருவித இரண்டும் கெட்டான் நிலைப்பாட்டுடனும், (இது Ôவிசித்ரன்Õ என்கிற பெயரில் ஆர்வக்கோளாறுடன் கையெழுத்துப் பத்திரிகை நடத்தியபோது, அதன் முகப்புக்கென நான் உருவாக்கிய ஸ்லோகம்.)  பிறகு தெளிந்து, கலை இலக்கியம் யாவும் மக்களுக்கானதே என்னும் இறுதியான கொள்கைப்பிடிப்பிற்கும் வந்துசேர்ந்தவன். இம்மூன்று நிலைகளிலும் க.நா.சுவை என்னால் வேறுவேறு மாதிரியாக அணுகமுடிந்ததில்லை. என்பதுதான் ஆச்சரியம். அவர் எனக்கு எப்போதும் ஒரே மாதிரிதான் இருந்திருக்கிறார். க.நா.சு.வை குறித்த உச்சபட்ச சிலாகிப்புகளையும், காட்டமான விமர்சனங்களையும், ஒருங்கே கேட்டு வளர்ந்தவனாக நான் இருந்திருக்கிறேன்.
க.நா.சு. விமர்சனமாக எதையும் அணுகவில்லை. அவர் சிக்ஷீவீtவீநீ  கிடையாது. தனது ஆழ்ந்த வாசிப்பின் வழியே ரசனை வெளிப்பாடாகத்தான் தன் கருத்துக்களை முன்வைத்தார் என்று இப்போது தமிழ்ச் சூழலில் எல்லோரும் பேசிக் கொள்கின்றோம். ஆனால் ப்ரகாஷ் எழுதுவதைப்போல் அவரை சிம்மசொப்பனமாகக் கருதியவர்கள் இங்கே இருக்கவே செய்தனர் என்பதும் உண்மைதான்.
ÔÔக.நா.சு.விற்கு கவிதை வராது. க.நா.சு.விற்கு விமர் சனம் தெரியாது. க.நா.சு. எழுதுவது இலக்கியம் அல்ல...  அது சரி... அந்த என் கவிதையைப் பற்றி க.நா.சு. என்ன சொல்லியிருக்கிறார்?ÕÕ இப்படித்தான் பலரும் அப்போது அவரை வெறுத்தபடி அவருடைய அபிப்பிராயத்தை அறிந்து கொள்ளத் துடித்தனர்.
 தனது எழுத்து வாழ்க்கையில்  அவர் விடாது கடைப்பிடித்த சில நல்லனவற்றை, இளம் எழுத்தாளர்கள் தங்களுக்கு சாதகமாக எவ்வாறெல்லாம் உள்வாங்கிக்கொள்ளலாம் என்பதுதான் இந்தத் தொடரில் நான் க.நா.சு.வைப் பேச வந்ததன் நோக்கம். நீயோ கலை இலக்கியம் யாவும் மக்களுக்கானது என்கிறாய். அவரோ அதற்கு மாறான பாதையில் வாழ்ந்து காட்டிச் சென்றிருக்கிறார். முரணாக இருக்கிறதே? இதில் என்ன நல்லது கெட்டது?ÕÕ என்றும் ஒரு சிலர் வாதிக்கலாம். இப்படித்தான் ஒருமுறை  ஒரு பெரிய எழுத்தாளரின் படைப்புகள்  குறித்து நான் வியந்து பேசப்போக, நண்பர் ஒருவர் வெகுண்டு ÔÔகழிப்பறைப் பீங்கானில் சோறுண்ண முடியாது தம்பிÕÕ என்று உக்கிரமான மறுமொழி தந்தார். எல்லோருடைய ரசனையும் ஒன்றுபோல இருப்பதில்லை, இருக்காது. எதிரியானாலும்  அவரிடமுள்ள நல்லவற்றை வியக்கத் தோன்றும். இது என் குணம்.
  க.நா.சு.வைக் குறித்து எழுத அவருடைய பிரதான சிஷ்யரான ப்ரகாஷ் இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசையில் சாகித்திய அகாதமிக்காக எழுதிய Ôக.நா.சுப்ரமண்யம்Õ என்னும் புத்தகத்தையே தேர்ந்து கொண்டிருக்கிறேன். இது ஒரு வசதிக்காக, அவ்வளவுதான். இந்த புத்தகத்தில் ப்ரகாஷ் க.நா.சு.வைக் குறித்து பல பக்கங்களில் வியந்து வியந்து எழுதியிருக்கிறார்.  கூர்மையாக சீவப்பட்ட ஒரு பென்சில் முனையைக் கண்டால் கூட எத்தனை நறுவிசாக சீவியிருக்கிறான் பார்  என்று பாராட்டும் உள்ளம் ப்ரகாஷடையது. அதுவே க.நா.சு. ஆனால் கேட்கத் தேவையில்லை. தமிழில் இதுவரை க.நா.சு.வைக் குறித்து எழுதப்பட்டுள்ள பல்வேறு கட்டுரைகளில் பதிவுபெறாத சில பூடகமான, அந்தரங்கமான விஷயங்கள் இந்த புத்தகத்தில் இடம் பெற்றுள்ளதாக நான் கருதுகிறேன்.
 க.நா.சு. வாழ்வில் நிகழ்ந்த பல ருசிகரமான சம்பவங்களை, அவருடைய இலக்கியப் பயணம் நெடுகப் பதித்த சுவடுகளை, வறுமையை, வைராக்கியத்தை, விடாமுயற்சியை ஒவ்வொன்றையும் ஆதாரங்களைத் திரட்டி வைத்துக் கொண்டு ஒப்பிக்கிற மாணவன் போலல்லாது, ஒரு கதைசொல்லிக்குரிய தோரணையில், உணர்ச்சி மேலிட்டுக் குரல்கம்ம  சொல்லிச் செல்கிறார் ப்ரகாஷ். இப்படி வேறொருவரால் சொல்லிவிட முடியாது. அறிவின்வழி நின்றும், மொழியின் துணை கொண்டும், உணர்ச்சியற்றும், வறட்டுத் தொனியிலுமே  பிறரால்   இதை எழுதியிருக்கமுடியும்.  ப்ரகாஷ் இதை எழுதவில்லை, பேசியிருக்கிறார்.
 நம் எல்லோரையும் போலத்தான் பால்ய காலத்தில் நட்சத்திரங்கள் இறைந்து கிடக்கும் பின்னிரவுக் காலங்களில் ஜானுப்பாட்டியிடம் கதை கேட்பவராக க.நா.சு. வளர்ந்திருக்கிறார். கதைகேட்டு வளர்ந்தவர்களால்தான்   தங்களுக்கானதொரு கற்பனா லோகத்தையும் சிருஷ்டித்துக் கொள்ள முடியும் என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம்.
 ஆங்கிலத்தில் எழுதி உலகப்புகழ் பெற்று இலக்கியத்தின் கொடுமுடிகளை எட்டிவிட ஆசை கொண்டிருந்தவர்தான் அவருடைய அப்பா நாராயணசாமி அய்யர். எனவே ÔÔதமிழில் எழுதி நீ உருப்படாமல் போகாதே. ஆங்கிலமே உலகாளும் மொழி. ஆங்கிலத்தில் தான் உலக இலக்கியம் என்று ஒன்று இருக்கிறதுÕÕ என்று தன் பிள்ளைக்கு புத்திமதிகள் சொல்கிறார்.
 எல்லா எழுத்தாளர்களும் பிராயத்தில் தம் பெற்றோரிடம் ஏதோ ஒரு இடத்தில் முரண் பட்டவர்கள்தாம். ÔÔஎழுத்தாளர்கள் பெற்றோர் இட்ட பெயரைத் துறந்து புனைப் பெயர் சூட்டிக்கொள்வது ஏன் தெரியுமா? தங்கள் தனித்த ஆளுமையை வெளிப்படுத்திக் கொள்ளும் பொருட்டுதான்ÕÕ என்று எனக்குச் சொல்லப்பட்டிருந்தது. நானும் இதுகுறித்து சிந்தித்துள்ளேன். ஓரளவு இந்தக் கருத்தில் உடன்பட்டும்  இருக்கிறேன். ஆனால்  க.நா.சு., க.நா.சுப்ரமணியம் என தூய தமிழில் தன்னுடைய முழுப் பெயருடனும், பிறகு அதன் சுருக்கமான க.நா.சு. எனவும், பின்பு ஆங்கிலத்தில் எழுத நேர்ந்தபோதுகூட ரிணீ.ழிணீணீ.su.  என்றும் தான் எழுதி வந்திருக்கிறார். அதற்கு முன்புவரை கே.என். சுப்ரமணியம், கே.என்.எஸ்., என்று எழுதிக் கொண்டிருந்தவரை இப்படி மாற்றிக் காட்டியவர் Ôஅக்ரஹாரத்து அதிசயம்Õ வ.ரா.
 திருமணம் எல்லாம் நடந்து முடிந்திருந்த நிலையில் Ôஎழுதிப் பிழைப்பது; அதுவும் தமிழில்Õ என்று முடிவு செய்துகொண்ட க.நா.சு., தன் அப்பாவின் முன் சென்று நிற்கிறார். இருவருக்குமான உரையாடல் தொடங்குகிறது. 
என்ன?
சென்னைக்குப் போகிறேன்?
பொண்டாட்டி
அவளை பிறந்தாத்தில், சிதம்பரத்தில் விட்டு விட்டுப் போவேன்?
நான் சொன்னதைக் கேட்க மாட்டாயா?
தமிழில் எழுதப் போகிறேன்?
எழுதி சம்பாதிக்க முடியாது?
அதையும் பார்ப்போம்? 
 முடிவில் கையில் ஒரு டைப் ரைட்டர், கத்தைகத்தையாகக் காகிதங்கள், மொழிபெயர்ப்புகள் இவற்றோடு சென்னைக்கு ரயிலேறினார் க.நா.சு. ஆனால் க.நா.சு.வின் 76வது வயதில் தகழி சிவசங்கரன் பிள்ளை இவரை சந்தித்தபோது இப்போது எழுத்துக்கு எவ்வளவு ரூபாய் வாங்குகிறீர்ÕÕ என்று கேட்க, அவர் அளித்த பதில்  ÔÔஅய்ம்பது ரூபாய்!ÕÕ
   ஒரு நாளைக்கு குறைந்தது 10 பக்கங்கள் தமிழில் சுயமாக எழுதுவது, 15 பக்கங்களேனும் தமிழுக்கு மொழிபெயர்ப்பது...  இது க.நா.சு. தனக்குத்தானே வரித்துக்கொண்ட விரதம். இதை வாழ்நாள் முழுக்க அவர் கடைப்பிடித்திருக்கிறார் என்பதுதான் அதிசயம். இளம் எழுத்தாளர்கள் அவருடைய இந்த உறுதியை  நடைமுறைப்படுத்திப் பார்ப்பதில், நஷ்டம் எதுவும் ஏற்படப் போவதில்லை என்று எனக்குத் தோன்றுகிறது.
 க.நா.சு.வின் பத்திரிகையாசிரியர் அவதாரமும் தோல்வியில்தான் முடிந்தது. அந்தக் காலத்தில் கு.ப.ரா. நடத்திய Ôகிராம ஊழியன்Õ, சாலிவாஹனின் ÔகலாமோஹினிÕ, எம்.வி. வெங்கட்ராமின் ÔதேனீÕ, சீத்தாராமனின் ÔசிவாஜிÕ ஆகிய இதழ்களுக்கு மத்தியில்,  தனது தீராத வறுமைக்கிடையில் க.நா.சு. துணிச்சலாகப் பத்திரிகை நடத்திப் பார்த்திருக்கிறார். ÔசூறாவளிÕ Ôசந்திரோதயம்Õ ஆகிய பெயர்களில் இதழ்களை நடத்தி பொருள் இழப்பைத்தான் சந்தித்துள்ளார். இது அப்போதைய  அவருடைய கஷ்ட  ஜீவிதத்திற்கு ஒவ்வாத காரியமே! ஆனாலும்,  இதழ் நடத்த வேண்டும் என ஆசைப்படாவிட்டால் இலக்கியவாதியாய் வாழ்ந்து என்ன புண்ணியம்? இதழ் நடத்தி காயம்பட்டு பின்னாட்களில் அந்த வீரத் தழும்புகளைத் தடவிப் பார்த்துக் கொள்வதில்தான் எத்தனை சுகம்? 
 தீவிரமான மொழிபெயர்ப்பாளரான க.நா.சு. தான் வியர்வை சிந்தி தமிழ்ப்படுத்தியதை எல்லாம் தூக்கிக்கொண்டு ஒவ்வொரு பதிப்பகமாக ஏறிஇறங்கித் திரிந்ததை வாசிக்கும்போது மனம் கனக்கிறது. ÔÔநான்கு திசைகளிலும் எதிர்ப்பு எனும் காலாக்னி.   காலூன்றி நிற்கும் பூமிக்கடியிலோ எரியும் தணல். நிரந்தரமான பணியின்மை. ஒழுங்கான  மாதச்  சம்பளமின்மை. கையில் முதலின்மை,  வானத்திலோ எரிக்கும் வறுமைச் சூரியன். இந்த ஷடாக்னியில் எரிந்து பொசுங்கியபடியே தன் குடும்பத்தைப் பற்றி பிரக்ஞையே இல்லாது நண்பர்கள் என்னும் எதிரிகளோடும் ஆதரவாளர்கள் என்னும்  அயோக்கியர்களோடும் க.நா.சு. வாழ்ந்து வந்தார்ÕÕ என்று ப்ரகாஷ் மேலும் எழுதுகிறார்.
  ÔÔநான் எழுதுவது விமர்சனமல்ல, எனக்கு விமர்சனத்தின் மேல் நம்பிக்கை இல்லைÕÕ என்று சொன்னவர்தான்  க.நா.சு.! அவர் எப்படி விமர்சகர் ஆக நேர்ந்தது?
   அவர் கம்யூனிச எதிரியாகப் பார்க்கப்பட்டாலும் தொ.மு.சி. ரகுநாதன் என்னும் ஒரு கம்யூனிஸ்ட் எழுதிய Ôஇலக்கிய  விமர்சனம்Õ என்னும் நூல்தான் முதன் முதலில் அவரை உலுக்கியிருக்கிறது. ÔÔதமிழில் வந்த முதல் அடிப்படை விமர்சன நூல்ÕÕ என்று க.நா.சு. அதைப் பாராட்டி எழுதுகிறார். அதற்குப் பிறகுதான் தனது பிரபலமான Ôவிமர்சனக் கலைÕ என்ற நூலையும் எழுதி முடிக்கிறார்.
  வ.விஜயபாஸ்கரன் நடத்திய  கம்யூனிச இதழான Ôசமரன்Õ அவரே நடத்திய இலக்கிய இதழான Ôசரஸ்வதிÕ ஆகியவற்றில் க.நா.சு. வின் கட்டுரைகள் விமர்சனங்கள் தொடர்ந்து வெளியாகியுள்ளன. ÔÔமாற்றுக்கருத்தை மதிக்கிற மனப்பண்பு  இலக்கியப் பண்பாடு கம்யூனிஸ்டுகளிடம்தான்  உருவாகி இருந்ததுÕÕ என்று ப்ரகாஷ் இதைப்பற்றி எழுதுகிறார். 
Ôஇலக்கிய வட்டம்Õ அமைப்பின் மூலமாக Ôஎதற்காக எழுதுகிறேன்Õ, Ôஎன்ன படிக்கிறேன்Õ போன்ற தலைப்புக்களில் இலக்கியக் கூட்டங்களை ஆரோக்கியமான வழியிலே நிகழ்த்திக் காட்டியதும் அவருடைய பணிகளுள் குறிப்பிடத் தக்கது.
  ÔÔஎல்லாவற்றையும் ஒரே வெட்டில்  வெட்டி வீழ்த்தி,  தான் மட்டுமே அவதாரம் எடுத்திருப்பதாக ஒரு மாயையை உருவாக்கி, தமிழ் இலக்கியப் போக்கை சவுக்கடி கொண்டு வீசிச்சுழற்றி 1950களில் வெளிவந்த சுதேசமித்திரன் தீபாவளி மலரில் அவர் எழுதிய நவீனத் தமிழ் இலக்கியத்தின் தாக்கம், தேக்கம், வீக்கம் என்ற மகத்தான கட்டுரை...ÕÕ என்று ப்ரகாஷ் ஓரிடத்தில் எழுதுவதை நாம் கூர்ந்து கவனிக்க வேண்டியுள்ளது. ÔÔஎல்லாவற்றையும் ஒரேவெட்டில் வெட்டி வீழ்த்தி தான் மட்டுமே அவதாரம் எடுத்திருப்பதாக ஒரு மாயையை உருவாக்கி...ÕÕ
  தமிழில் சுமார் 20 நேரடி நாவல்களை க.நா.சு. எழுதியிருக்கிறார். ஒரு நாள், அசுரகணம், பொய்த்தேவு, கோதை சிரித்தாள், தாமஸ் வந்தார், அவதூதர், பித்தப்பூ போன்றவை நுட்பமான வாசகர்களின் தேடலுக்குக் கிடைத்தவை. பித்தப்பூ நாவலை ப்ரகாஷே தன் சொந்த செலவில் வழக்கமான பாணியில் அச்சுப் பிழைகளுடன் வெளியிட்டார்.
  இவற்றுள் எல்லாம் தலையாய பணி என்று நான் கருதுவது, நோபல்பரிசு பெற்ற நாவல்களாகத் தேடிப்பிடித்து க.நா.சு.  தமிழில் மொழிபெயர்த்துத் தந்ததுதான்.  இதை அவரைத்தவிர வேறெவரும் செய்ததில்லை. நிலவளம், மதகுரு, பாரபஸ், தாசியும்  தபசியும் போன்ற அயல்மொழி நாவல்கள் இப்பட்டியலில் அடங்கும். மயன் என்கிற தனது புனைப்பெயரில் க.நா.சு. எழுதிய கவிதைகள் Ôமயன் கவிதைகள்Õ எனப் பதிப்பிக்கப்பட்டுள்ளன.
 அழகி, தெய்வஜனனம், மணிக்கூண்டு என அவருடைய சிறுகதைத் தொகுப்புகளும் அடுத்தடுத்து வெளிவந்திருக்கின்றன. பின்னாளில் இவை ÔÔக.நா.சு. கதைகள்ÕÕ என தொகுக்கப்பட்டுள்ளது.
  ÔÔபல கதைகள் கதைகளாகவே தோன்றாது. நிகழ்ச்சிகளாகவும்,செய்திகளாகவுமே தோற்ற மளிக்கும். அவைகளுக்கு ஒன்றுமில்லாதது போன்ற தோற்றமுண்டு. ஆனால் மிக ஆழமான முக்குளிப்பில்தான் இது தெள்ளத் தெளியவரும்?ÕÕ என்று அபிப்ராயம் எழுதும் ப்ரகாஷ் சில கதைகளைக் கோடிட்டுக்காட்டி அதன் உள்ளடக்கத்தைச் சிலவரிகளிலேயே கூறும்போது நமக்கும் முக்குளிக்கத்தான் தோன்றுகிறது.

க.நா.சு.வின் இலக்கியப் படைப்புகள் குறித்து முழுமையாக ஆய்வு செய்து ஒரு விமர்சன நூல் எழுதுவதும்கூட முக்கியமானதுதான்.
  புதிய நூல்கள் வெளிவந்தவுடன் அதை வெளியிட்ட பதிப்பகத்துக்கே சென்று, வாங்கிவந்து, விமர்சனமும் எழுதுவார் க.நா.சு. என்றறியும்போது, கிணற்றில் போட்ட கற்களாகத் தூங்கும்.. சமகாலத் தமிழ்நூல்களின் கையறு நிலையை நான் நினைத்துப் பார்த்துக் கொண்டேன்.  பெருமூச்சொன்று வெளிவந்தது.
  ÔÔஅவர் எழுதிய பல்லாயிரக்கணக்கான பக்கங்கள் இன்னும் அச்சேறவில்லை.ÕÕ என்று ப்ரகாஷ் ஆதங்கப்பட்டிருக்கிறார். க.நா.சு.வின் நூல்கள் நாட்டுடமையாக்கப்பட்டவுடன் இடதுசாரிப் பதிப்பகங்கள் நீங்கலாக பல பதிப்பகங்கள் ஏற்கெனவே வெளிவந்த அவருடைய பல நூல்களையும் ரொட்டியைத் திருப்பிப்போடுவதுபோல திருப்பிப் போட்டனவே தவிர, புதிய அச்சேறாத அவருடைய எழுத்துக்களைத் தேடிப் பயணிக்கவில்லை என்பது வேதனைக்குரிய சங்கதி. தமிழின் துர்ப்பாக்கியம் இதுதான். 
 க.நா.சு கடைசிவரை வெளிப்படையாகக் கம்யூனிச எதிர்ப்பைக்  காட்டியவர். இந்தப் புத்தகம் முழுக்க இது சாகித்ய அகாடமி வெளியீட்டிற்காக எழுதுவது என்பதையும் கடந்து ப்ரகாஷ§ம்  கம்யூனிஸ்ட்கள் கம்யூனிஸ்ட்கள் என்று பக்கத்துக்கு பக்கம் எழுதித் தள்ளியிருக்கிறார். க.நா.சு. மீது  நமக்கு முழுக்க விமர்சனங்கள் உண்டு. ஆனால் அதைப் பேசுவதற்கான இடம் இதுவல்ல.
 நான் ஏற்கெனவே  குறிப்பிட்டதைப் போல, இந்த இடத்தில் தமிழ் இலக்கியத்திற்கு அவர் ஆற்றியுள்ள நல்லனவற்றை மட்டுமே  கருத்தில் கொள்வோம். 
  ÔÔஏறத்தாழ 40 ஆண்டுகள் அவருடன் பழகிய உங்களை, உங்கள் படைப்புகளை ஏன் க.நா.சு. பாராட்டவில்லை?ÕÕ என்று ஒரு சந்தர்ப்பத்தில் தஞ்சை ப்ரகாஷிடம் ஒரு எழுத்தாளர் கேட்க நேர்ந்தது. ப்ரகாஷ் அதற்கு  ÔÔஅப்படிப் பாராட்டும் விதமாக என் எழுத்தில் எந்தவிதமான சிறப்பையும் க.நா.சு. காணவில்லை என்பதுதான் உண்மையாக இருக்கும்ÕÕ என்று சொல்கிறார்.
 அவர்தான் க.நா.சு.!
 ***

க.நா.சுப்ரமண்யம்/ தஞ்சை ப்ரகாஷ்
சாகித்திய அக்காதெமி, சென்னை- 600 018.

No comments:

Post a Comment