Thursday, November 13, 2008

'கருத்த லெப்பை' க்கு விருது


நாகை மாவட்ட தமுஎச 6வது மாநாடும் 2007-ஆம் ஆண்டுக்கான மாநில இலக்கியப் பரிசளிப்பு விழாவும் ஏ.ஜே.சி பள்ளி அரங்கில் 18.10.2008 சனிக்கிழமை மாலை நடைபெற்றது. கடந்த ஆண்டு 'மீன்காரத் தெரு' நாவலுக்காக தமுஎச விருது பெற்றேன். தொடர்ந்து இந்த ஆண்டும் எழுத்தாளர் கு. சின்னப்ப பாரதியின் பெற்றோர் பெருமாயி - குப்பணன் நினைவு மாநில விருது 'கருத்த லெப்பை' நாவலுக்காக எனக்குக் கிடைத்தது. என்னுடன் யூமா வாசுகி, தமிழ்முருகன், வே. பெருமாள்சாமி, ஹரிகிருஷ்ணன் ஆகியோரும் வெவ்வேறு துறை பங்களிப்புக்காக விருது பெற்றனர். நாகை சட்டமன்ற உறுப்பினர் வி. மாரிமுத்து, எழுத்தாளர் ச. தமிழ்செல்வன் கலந்துகொண்டனர். கவிஞர் சு. வெங்கடேசன் தலைமையிலான தேர்வுக்குழு 'கருத்த லெப்பை'யைத் தேர்வு செய்தது. போடி மாலன் கருத்த லெப்பை நாவல் குறித்து சிறப்பான உரை ஒன்றை வாசித்தார்.

No comments:

Post a Comment